வியாழன், 30 ஜூலை, 2015

கருப்பையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு ஆலோசனை

Image result for கருப்பை
Image result for கருப்பைமாதவிலக்காவது, அதைத் தொடர்ந்து திருமணமாகி குழந்தை பெறுவது என இந்த இரண்டுமே கருப்பையின் மாபெரும் வேலைகள் என்பது பெரும்பாலான பெண் களின் நினைப்பு. அதனால்தான் முன்பெல்லாம் கர்ப்பப் பையில் சின்ன பிரச்னை என்றால்கூட சர்வசாதாரணமாக அறுவை சிகிச்சையில் அதை வெட்டி எறிந்து விட்டு வேறு வேலையைப் பார்க்கிற மனோபாவம் அவர்களிடம் இருந்தது.
விஞ்ஞானமும், மருத்துவமும் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில் கருப்பையை அகற்றாமலேயே பிரச்சினைகளை மட்டும் குணப்படுத்த முடியும். கருப்பையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கான அதை நீக்காமல் செய்யக்கூடிய தீர்வுகள் பற்றியும், தவிர்க்க முடியாமல் கருப்பை அறுவை சிகிச்சை  செய்கிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். கருப்பையில் உண்டாகிற அனேகப் பிரச்சினைகளை இன்று கர்ப்பப்பையை அகற்றாமலேயே சரிசெய்ய முடியும்.
உதாரணத்துக்கு ஃபைப்ராயிடு கட்டி என்றால் அதை மட்டும் நீக்கும் சிகிச்சைகள் வந்து விட்டன. அதீத ரத்தப் போக்கு தொடர்பான  பிரச்சினைகளுக்கும் பிரத்யேக ஊசிகள், மெரீனா என்கிற கருத்தடைச் சாதனம் போன்றவை உதவும்.  ஹார்மோன் கோளாறு காரணமாக உண்டாகிற அளவுக்கதிக ரத்தப் போக்கை சரி செய்ய, கருப் பையின் உள்ளே உள்ள சவ்வுப் பகுதியை பொசுக்கி, அதை மெலிதாக்கும் எண்டோமெட்ரியல் அப்லேஷன் சிகிச்சை பலனளிக்கும். கர்ப்பப் பையில் கட்டியோ, சதையோ இருந்தாலும் ஹிஸ்ட்ரோஸ்கோப் மூலம் சரி செய்து விட முடியும்.
இவற்றையெல்லாம் மீறி, கருப்பையில் வேறு ஏதேனும் பெரிய பிரச்சினைகள் இருந்து, கருப்பையை நீக்குவது மட்டுமே தீர்வு என்கிற நிலையில்,  லேப்ராஸ்கோப்பி முறையில் அதை நீக்குவது தான் பாதுகாப்பானது. ஓப்பன் சர்ஜரி என்கிற வயிற்றைக் கிழித்துச் செய்கிற அறுவை சிகிச்சை  செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையிலும் இரண்டு வகைகள் உள்ளன.
ஒன்று  டிஎல்ஹெச் எனப்படுகிற டோட்டல் லேப்ராஸ் கோப்பிக் ஹிஸ்ட்டரெக்டமி.  இதில் முழுக்க முழுக்க லேப்ராஸ் கோப்பிக் முறையில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப் படும். இன்னொன்று எல்ஏவிஹெச் எனப்படுகிற லேப்ராஸ் கோப்பிக் அசிஸ்ட் டெட் வெஜைனல் ஹிஸ்ட்ட ரெக்டமி. இதில் பாதி அறுவை சிகிச்சை லேப்ராஸ்கோப்பி முறை யிலும், மீதி பிறப்புறுப்பின் வழியேவும் செய்யப்படும்.
முதல் வகையில் இடுப்பெலும்புத் தசைகள் பாதிக்கப்படாது. பின்னாளில் ஏற்படுகிற சிறுநீர் கசிவு, சிறுநீரை அடக்க முடியாத நிலை, அடி இறக்கம் போன்றவை இதில் இருக் காது. இரண்டாவது வகையில் இந்தப் பிரச்சினைகளைத் தவிர்ப்பது சிரமம்.கருப்பையை அகற்றச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்தினால், அதற்கு முன் உங்கள் சினைப்பையை ஸ்கேன் செய்து பார்த்து, அவற்றின் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.
-விடுதலை,20.1.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக