திங்கள், 30 ஜனவரி, 2017

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டு முதல் பெண் நீதிபதி




உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றதன் மூலம் தமிழகத்திலிருந்து அந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார் ஆர்.பானுமதி. தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் பிறந்த இவர், சென்னை சட்டக் கல்லூரி யில் சட்டம் பயின்றவர். 1981ஆம் ஆண்டு வழக்குரை ஞராகப் பதிவுசெய்துகொண்டார்.

இந்தியா சுதந்திரம்பெற்ற பின்னர் உச்சநீதிமன்றத்தின் ஆறாவது பெண் நீதிபதியாகப் பதவி ஏற்றுள்ள பானுமதி யின் பதவிக் காலம் ஆறாண்டுகள். முப்பது நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தில் இவர் உள்பட இப்போது இரண்டு பெண் நீதிபதிகள் உள்ளனர்.

கோயம்புத்தூர், சென்னை, வேலூர், புதுக்கோட்டை, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இவர் நீதிபதி யாகப் பணியாற்றியிருக்கிறார். புதுக்கோட்டை மாவட் டத்தில் நீதிபதியாகப் பணியாற்றியபோதுதான், பிரேமானந்தா வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கினார். பிரபல வழக்குரைஞர் ராம்ஜெத்மலானி அந்த வழக்கில் பிரேமானந்தாவுக்கு ஆதரவாக வழக்காடியது குறிப்பிடத்தக்கது. பானுமதி வழங்கிய திட்டவட்டமான தீர்ப்பை, உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த போது, கல்விக் கட்டண நிர்ணய வழக்கு, சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சுட்டுக்கொன்ற சிறப்பு காவல் படையி னருக்கு வழங்கப்பட்ட இரட்டைப் பதவி உயர்வு ஆகிய வழக்குகளில் பானுமதி தீர்க்கமான தீர்ப்புகளை வழங்கி னார். இரண்டு வயதிலேயே, தம் தந்தையை இழந்துவிட்டார். இவருடைய கணவர் கிருஷ்ணகிரியில் வழக்குரைஞராகப் பணிபுரிகிறார்.

இவர் உடன்பிறந்த சகோதரிகள் மூவர்.

தொழில்ரீதியில் குற்றம் குறையற்றவர். சட்டத்துறை சார்ந்த அனைத்து வழிமுறைகளையும், ஒழுங்குக் கட்டுக் கோப்பையும் கொஞ்சமும் பிறழாமல் கடைப்பிடிப்பவர். நேர்மைக்கும், பாரபட்சமற்ற தன்மைக்கும் பெயர் போனவர்.

அடிப்படையில் ஒரு சாமானிய குடும்பத்தைச் சேர்ந்தவர், எளிமையானவர். முழுக்க முழுக்க கடுமையான உழைப்பு, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம், இன்று இந்த உயரிய பதவிக்கு முன்னேறியிருக்கிறார். உண்மையிலேயே பகட்டற்ற, தன்னடக்கம் கொண்ட வாழ்க்கை நெறிமுறைக்கு இலக்கணமாக விளங்குகிறார்.

-விடுதலை,9.9.14

சனி, 7 ஜனவரி, 2017

தாலியை அறுத்தெறிய வேண்டும்


13-7-1930, குடிஅரசிலிருந்து...
பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள்  பெண்களைப் படிக்க வைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்யவேண்டுமென்று  சொல்லுவேன்.
நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ  என்பது மண மக்கள் நிறைய அதாவது 16 பிள்ளைகள் பெற்க வேண்டுமென்று சொல்லுவார்கள்.
ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லு வதென்ன வென்றால் அவர்கள் தயவு செய்து பிள்ளைகள் பெறக்கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றி னால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் அய்ந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின் றேன்.
அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளையும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள்போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங்களுக் கெல்லாம் அழைத்துப் போய் அழ வைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங் களுக்கும் திருப்தியில்லாமல் சபையோருக் கும் வெறுப்புத் தோன்றும் படியாய் செய் யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அவைகளுக்கு ஒழுங்கும் அவசிய மான  கட்டுப்பாடும்  பழக்கிக் கொடுக்க வேண்டும்.  இந்தக் கூட்டத்தில் நான் பேசமுடியாதபடி எத்தனைக் குழந்தைகள் அழுகின்றது பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத்துடன் வெட்கப்படுகின்றது பாருங்கள்.
அந்தத் தாய்மாரும் தகப்பன்மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர்களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமே அல்லாது நிபந்தனையோடும் தனக்கு இஷ்டமில்லாத சவுகரியமில்லாத  கஷ்டத் தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக் கவே முடியாது.
ஆகவே இப்போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும். தவிர அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகி விடாது.
பெண்ணின் பெற்றோர் இப்பெண் ணுக்குத் தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர் களைப் போலவே பெண்களுக்கும் சொத் துரிமை உண்டு; தொழில் உரிமை உண்டு, என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடைய வர்களாவார்கள்? ஆகையால் அவர் களுக்குச் சொத்துரிமையும் அவசியமான தாகும். தவிர பெண் களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ் வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.
தவிர பெண்களும் புருஷர்களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ  ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய்  பேசி விளை யாட வேண்டும். பத்திரிக்கைகளைப் படிக்க வேண்டும். படிக்காத பெண்களுக்குப் படித்த வர்கள் படித்துக் காட்ட வேண்டும்.
வீட்டு வேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்குத் தலைவியாய் இருப்பதும் குடும்பத்துக்கு எஜமானியாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்து அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.
-விடுதலை25.11.16