ஞாயிறு, 20 நவம்பர், 2016

பெண் விடுதலைக்காக... தடம் பதித்த நூல்கள்:

ம.சுசித்ரா
நாட்டின் வளர்ச்சிக்குக் கல்வி இன்றியமையாதது எனத் தொடர்ந்து சொல்லப்படுகிறது. கல்வி முக்கியம் என்பது பொதுவான கூற்று. எத்தகைய கல்வி அவசியம் என்பது குறித்த தெளிவு வேண்டாமா? வேலைக்கான படிப்பை மட்டும் கற்றால், கற்றுக் கொடுத்தால் போதுமா? தனிமனித ஒழுக்கமும், சமூகப் பொறுப்பும் வேண் டாமா? ஆங்கிலத்தில் கல்வி என்பதற்கு “Education means to change the behaviour of human nature” என்னும் விளக்கம் உள்ளது.
தன்னையும் தன்னைச் சுற்றி நிகழ்வனவற்றையும் உற்றுக் கவனித்து, கேள்விக்குள்ளாக்கி, தன்னைத் தானே புரட்டிப்போட்டு, சமூக நீதியை நோக்கி வீறுநடைபோடச்செய்வதே உண்மை யான கல்வி என்பதே அதற்கான விளக்கம். இதை நம்முடைய மரபார்ந்த கல்வி தரவல்லதா? மனித உரிமை, சமூக- பொருளாதார வரலாறு, பெண் கல்வி, சூழலியல் உள்ளிட்டவை சமூக அறி வியல் வகுப்புகளில் கற்றுத் தரப்படு கின்றன.
அதிலும் பெரும்பாலான நேரங் களில் பரிந்துரைக்கப்பட்ட பாட நூல் களிலிருந்து தேர்வுக்கான பாடமாகப் புகட்டப்படுகின்றனவே தவிர சமூக அவலங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் விமர்சனப் பட்டறைகளாக அவை திகழ்கின்றனவா? சமூக, தனிமனித பொறுப்பு சார்ந்த கல்வியில் இன்றி யமையாதது பெண்களின் நிலை குறித்த வரலாற்றுக் கல்வியாகும். இதை அழுத்த மாகப் பதிவு செய்திருக்கும் நூல்களில் ஒன்றுதான், தந்தை பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?”.
பெண்கள் எந்தெந்தக் காரணங் களால் அடிமைப்படுத்தப்பட்டார்கள், அடிமையானார்கள், அடிமைகளாக இருந்து வருகிறார்கள் என்பதை ‘கற்பு’, ‘காதல்’, ’சொத்துரிமை’, ‘பெண்கள் விடு தலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ உள்ளிட்ட 10 அத்தியாயங்களில் விவா திக்கிறார் பெரியார். இதைப் படித்து பெண்கள் எந்தக் காரண காரியங்களால் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக வாழ முடியும் என்பதை விளக்குகிறார்.
கற்பு எனும் கற்பிதம்
கற்பு என்னும் சொல்லுக்குத் தவ றாமை, நாணயம், சத்தியம் உள்ளிட்ட பொதுவான அர்த்தங்கள் இருப்பதைப் பகுப்பாய்ந்து விளக்குகிறார் பெரியார். இதன் மூலம் அது பெண்களுக்கு மட்டுமே உரித்தான வார்த்தை அல்ல என நிரூபிக்கிறார்.
மேலும் ஆங்கிலச் சொற்களான சேஸ்டிடி, வர்ஜினிட்டி ஆகியவையும் பொதுவாக மனித சமூகத்துக்குச் சொல்லும் அர்த்தம் கொண்டவையாகத்தான் இருக்கின்றன எனக் காட்டுகிறார். இப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒன்றை ஆரிய மொழி பெண்ணுக்குரியதாக மாற்றி அடிமைத்தனத்தைப் புகுத்தி யதை மேற்கோள் காட்டி விளக்குகிறார். இதற்கு வள்ளுவரும், தர்மசாஸ்திரங் களும் துணைபோனதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.
“கற்பு என்பதற்கு ‘பதிவிரதம்’ என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண் களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல் வலிவு கொண்டவர்களாக ஆக்கப்பட்டுவிட்டதனாலும், பெண்கள் அடிமையாவதற்கு, புருஷர் மூர்க்கர் களாகி கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை.”
காதலின் பெயரால்
தெய்வீகமானது, புனிதமானது, ஆதலால் ஒரு தடவை காதல் ஏற்பட்டு விட்டால் எந்தக் காரணத்தைக் கொண் டும் பிறகு அதை மாற்றிக்கொள்ளக் கூடாது, முதல் காதல் மட்டுமே உண் மையானது, நிரந்தரமானது இப்படிக் காதலைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் மாய வலையைக் கிழித்து எறிகிறார் பெரியார்.
“காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு, அறிவீனம், அனுபவ மின்மை, ஏமாற்றம் என்பவைகளை விடச் சிறிதுகூட சிறந்தது அல்ல.”
அன்பும், ஆசையும், நட்பும் போல காதலும் மன இன்பத்தையும் திருப்தி யையும் பொறுத்ததே. அதைவிடுத்து ‘இது காதலல்ல’, ‘அது காதலுக்கு விரோதம்’, ‘இது காம இச்சை’ போன்ற பிதற்றல்களையும், பெண்களுக்கு எதிரான கருத்தியல்களையும் தகுந்த எதிர் வாதங்கள் கொண்டு கட்டுடைக்கிறார்.
பேதமின்றி சுதந்திரம்
‘கல்யாண விடுதலை, ‘மறுமணம் தவ றல்ல’, ‘விதவைகள் நிலைமை’, ‘சொத் துரிமை’, ‘கர்ப்பத்தடை’ ஆகிய தலைப்பு களில் பெண்களுக்கான உரிமைகளை ஆணித்தரமாக முன்வைக்கிறார். அவர் வைத்த பெண்ணுரிமைக் கோரிக்கைகள் இன்று சட்டங்களாகவே உள்ளன. நிச்சயமாகப் பெண் உரிமைகளுக்கு இடம் தரும் வகையில் சமூக வெளி விரி வடைந்துள்ளது. ஆனால் காலங்கால மாகப் புகுத்தப்பட்ட கற்பிதங்களி லிருந்து விடுதலை அடைய வேண்டிய தேவை இன்றும் உள்ளது.
ஆண், பெண் பேதமின்றி சுதந்திரத் தையும், அடிமைத்தனத்தையும் அணுக வேண்டும்; விடுதலை வேண்டும் என் றால் பெண்கள் தாங்களே போராட வேண்டும், ஆண்களை எதிர்பார்த்திருக் கக் கூடாது; தங்களுடைய உரிமைகளை உணரும் பெண்கள் அந்தச் சுதந்திரத்தை வென்றெடுத்து சமூக நலனுக்காகப் பாடு பட வேண்டும் உள்ளிட்டவை இந்நூல் முழுக்க விரவிக் கிடக்கும் பெரியாரியச் சிந்தனையாகும்.
அடிமையாக்கப்பட்டவள்
பெண் விடுதலை வேண்டும் எனப் பொத்தாம்பொதுவாகப் பேசுவதில் பயனில்லை. பெண் ஏன் ஒடுக்கப்படு கிறார், அதன் மூலகாரணம் என்ன என் பதைக் கண்டறியும் நோக்கில் 1942-லேயே தமிழ்ச் சூழலில் இப்படியொரு சமூக ஆய்வறிக்கை எழுதப்பட்டிருப்பது வியக்க வைக்கிறது.
அதிலும் ஆக்ரோஷ மான அறைகூவல்களோ, ஆர்ப்பரிப்புக் கூற்றுகளோ இன்றி நுட்பமான, ஆய்வின் அடிப்படையில் பெண்ணின் வலிமையை வெளிக்கொணர்ந்திருக் கிறார் பெரியார். பெண் தன் இயல் பிலேயே பலவீனமானவள் அல்ல, பல வீனமாக்கப்பட்டாள்; பெண் அடிமை அல்ல, அடிமையாக்கப்பட்டாள் என் பதை இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இது பெண்கள் மட்டுமே படிக்க வேண்டிய புத்தகம் அல்ல. முக்கியமாக ஆண்கள் படித்துப் பெண்கள் மீது சமத் துவ உணர்வை வளர்த்துக் கொள்ளும் படி முகவுரையிலேயே பெரியார் குறிப்பிடுகிறார். பெண் விடுதலைக்கான சமூக விடுதலைக்கான பாதையில் இந்நூலை வாசிப்பதும், மறுவாசிப்புக்கு உட்படுத்துவதும் அவசியமாகிறது.
தொடர்புக்கு:
susithra.m@thehindutamil.co.in
(நன்றி: ‘தி இந்து தமிழ்’ 8.3.2016)
-விடுதலை ஞா.ம.,12.3.16

புதன், 9 நவம்பர், 2016

சாதித்துக் காட்டிய மகளிரணி! முழுக்க மகளிரே நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலியாவில் சாதித்த உப்மா


நம் நாட்டில் பலருக்கும் ஒவ்வொரு நாளும் தேநீருடன்தான் தொடங்குகிறது. புத்துணர்ச்சி பெறுவது முதல் எடை குறைப்புவரை ஒவ் வொரு வீட்டிலும் ஒவ்வொரு பரிமாணத்துடன் இடம் பெற்று விடுகிறது தேநீர்.

தேநீரைத் தன் உற்சாகத்துக்கு மட்டு மல்ல, வியாபாரத்துக்கான உத்தியாகவும் பயன்படுத்தி வருகிறார் உப்மா. ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் நகரில் வசிக்கும் உப்மா விரதியின் அடையாளம் விதவிதமான சுவைகளில் தயா ராகும் தேநீர் வகைகள்!

சண்டிகரைச் சேர்ந்த உப்மா, தேநீர் தயாரிப்பதற்காக ஆர்ட் ஆஃப் சாய் வகுப்புகளை ஆன்லைனில் நடத்தி வருகிறார். அத்துடன் தேயிலை கலவைகளை ஆன்லைனில் விற் பனையும் செய்து வருகிறார். இந்தியக் கலாச் சாரத்தில் தேநீர் குடிப்பதற்காக மக்கள் எப் போதும் ஒன்று கூட விரும்புவார்கள். இங்கே மகிழ்ச்சியான நேரங்களிலும் கடினமான நேரங் களிலும் தேநீர் தவறாமல் இடம்பெறுகிறது.

ஆஸ்திரேலிய ஹோட்டல்களில் நான் எவ்வளவோ தேடிப் பார்த்தும் ஒரு டீயைக் குடிக்க முடியவில்லை. அப்போதுதான் டீத்தூள் கலவை தயாரிக்கும் அய்டியா பிறந்தது என்று சொல்லும் இவர், முதலில் இந்தத் தொழிலைத் தன் குடும்ப உறவுகள், நண்பர்களிடமிருந்து தொடங்கியிருக்கிறார்.  பின்னர், அருகிலுள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடை களில் தேயிலைக் கலவையை விற்பனைக்கு வைத்தி ருக்கிறார். இன்று நிற்கக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டு இருக்கிறார்.

வழக்குரைஞராகத் தன் பணியைத் தொட ரும் உப்மாவுக்கு, அவருடைய தாத்தா தான், மூலிகைகள், வாசனை மசாலாக்களைக் கெண்டு ஆயுர்வேத தேநீர் போடக் கற்றுத்தந்திருக்கிறார். மெல்போர்னில் சாய்வாலி (பெண் டீ விற்பனை யாளர்) என்ற பெயரில் ஆன்லைனில் தேயிலை கலவையை விற்பனை செய்து வருகிறார்.

அருமையான மணமும் சுவையும் ஆஸ்தி ரேலியர்களின் ருசியுணர்வைத் தூண்ட 26 வயதில் உப்மா, வெற்றிபெற்ற தொழில் முனை வோராக மாறியிருக்கிறார். இந்த ஆண்டுக்கான இந்திய ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் சமூக விருது வழங்கும் விழாவில், சிறந்த பெண் தொழிலதிபர் விருதை கடந்த வாரம் சிட்னியில் பெற்றிருக்கிறார்.  விருதைப் பெற்ற உப்மா, ஆஸ்திரேலிய மக்கள் காபிக்கு மாற்று ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தனர்.

இதுவே சரியான நேரம் என்று தேயிலை விற் பனைத் தொழிலைக் கையில் எடுத்தேன். ஆஸ்திரேலிய சமூகத்துக்கு, தேயிலை மூலம் இந்தியக் கலாச்சாரத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் என்னு டைய குறிக் கோள் என்று சொல்லியிருக்கிறார்.
-விடுதலை,8.11.16

ஞாயிறு, 6 நவம்பர், 2016

ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் தெரிந்திருக்க வேண்டிய சட்டங்களும் உரிமைகளும்

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஆண், பெண் விகிதாச்சாரம் 943. அதாவது ஜனத்தொகை அடிப்படையில், இந்தியா வில் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் எதிராக 943 பெண்கள் இருக்கிறார்கள். ஆகையினால், பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கான ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் எதிராக நீதிமுறை சட்டங்கள் இயற்ற வேண்டும்.
உலகின் மிகப் பெரிய இந்திய நியாய அமைப்புக்கு, இந்த பிரச்சினையைத் தீர்க்க பல சட்டங்கள் உள்ளன. மக் களின் அறியாமையினால், இந்த சட்டங் கள் செயல்படாமல் தோற்றுவிட்டன.
சர்வதேச களத்தில், நாம் பொரு ளாதாரம் அரசியலில் சக்தியடைந்து வருவதால், நம்முடைய அரசியல் சட்டத் தில் நம் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட உரிமைகள் வாய்ப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இதற்குக் கூடுதலாக பெண்கள் சிறிது சிறிதாக மத்திய அரங்கத்தை எடுத்துக் கொண்டு ஒரு தொழில் திறனுடன் கூடிய பணிபுரியும் சக்தியாக மாறிவருகிறார்கள். இருந்த போதிலும், மனது. உடல், பாலியல் வன்முறை, பெண்கள் மீதான வெறுப்பு ஆண் பெண் ஏற்றத்தாழ்வு முதலியன பெரும்பாலானோரின் வாழ்வில் தொடர்கிறது. இந்த சூழலால் இந்திய சட்டத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணை சட்ட உரிமைகள் குறித்த அவர்களுடைய உணர்திறன் வளர வேண்டியது முக்கியத் துவம் பெறுகிறது.
முக்கியமாக பெண்களுக்கு எதிராக இங்கு அடிக்கடி நடைபெறும் பலவித மான அநீதிகள், அவர்களுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் குறித்த விளக்கம் மற்றும் பாதுகாப்பு இதோ...
பெண்களிடம் செய்யும் கேலி: இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294, 509 எந்த ஒரு தனி நபரோ மக்கள் கூட்டமோ எந்த வயதைச் சேர்ந்த பெண்ணுக்கு எதிராகவும் எந்த வித வன்மையான பேச்சோ அல்லது குறும்புச் செயலோ செய்வதைத் தடுக்கிறது.
பால்ய விவாகம்: இது பெண்களுக்கு மாத்திரம் அல்ல. இருந்தபோதிலும், நடைபெறும் நிகழ்வுகள் வயதுக்கு வராத பெண்களையே குறிக்கிறது. குழந்தைத் திருமணத் தடை சட்டம் 1929, 18 வயதைத் தாண்டாத பெண்ணுக்கு (இந்து திருமண சட்டத்தில் வரையறுக்கப்பட் டுள்ள வயது) திருமணம் செய்வதைத் தடை செய்கிறது.
முறையற்ற காவல்துறை செயல் முறை: உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தலைமைக் காவலர் பதவிக்குக் குறையாத ஒரு பெண் அதிகாரி எல்லா சமயங்களி லும் இருக்க வேண்டும். எந்தவித  வன்முறைக்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட நபருக்கும் காவல்துறை ஆலோசனை உதவி புரிய வேண்டும். பாதிக்கப்பட்ட வரின் நலனுக்கும் உதவ வேண்டும். அல் லது, ஒரு பெண் ஒரு பெண் அதிகாரி யால் மாத்திரமே சோதனை செய்யப்பட லாம். ஒரு பெண் அதிகாரி முன்னா லேயே கைது செய்யப்படலாம். சூரிய உதயத்துக்கு முன்போ சூரிய அஸ்த மனத்துக்குப் பின்போ ஒரு பெண்ணைக் கைது செய்ய இயலாது. இருந்தபோதிலும் நீதியரசரின் உத்தரவின் கீழ் இதற்கு விதிவிலக்கு அளிக்கலாம்.
குறைந்த பட்ச கூலி: குறைந்த பட்ச கூலிகள் சட்டம் 1948ன் படி இந்திய அரசாங்கம் தேர்ந்த பயிற்சியுடைய, பகுதி பயிற்சியுடைய பயிற்சியற்ற ஒவ்வொரு பிரிவுத் தொழிலையும் சேர்ந்த தொழி லாளர்களுக்கும் குறைந்த பட்ச கூலிகள் நிர்ணயித்துள்ளது. ஆணாக இருந்தா லும் பெண்ணாக இருந்தாலும், டில்லி யில் குறைந்த பட்ச கூலி ரூபாய் 423/ ஆகும்.
சொத்துக்கு வாரிசு: இந்து வாரிசு சட்டம், 1956, ஆண் பெண் யாராக இருந்தாலும் மூதாதையர் சொத்துக்கு சம பங்கீடு வாரிசாக இருக்கும் தகுதி உண்டு என அனுமதிக்கிறது. இதன் மூலம் புதிய விதிமுறைகளையும் நிபந் தனைகளையும் நிர்ணயிக்கிறது.
வரதட்சனை: வரதட்சணை தடுப்பு சட்டம், 1961 கூறுவது என்னவென்றால் எந்த ஒருவரும் கொடுத்தாலோ, பெற் றாலோ, இந்தப் பரிமாற்றத்துக்கு உதவி னாலோ கூட அய்ந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான காலத்துக்கு சிறைத் தண்டனை அல்லாது ரூபாய் 15,000 அல்லது வரதட்சணைத் தொகை, இதில் எது அதிகமோ அந்தத் தொகை அபராதமாக விதிக்கப்படும்.
குடும்ப வன்முறை: இது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498இன் கீழ் வருகிறது. இந்த சட்டம் முக்கியமாக ஒரு மனைவி ஒன்றாக வசிக்கும் பெண் இணை அல்லது குடும்பத்தில் ஒரு தாயாராக ஒரு சகோதரியாக இருப்ப வருக்குக் கணவரால் ஆண் இணையால் அல்லது உறவினர்களால் ஏற்படும் குடும்ப வன்முறையிலிருந்து காப்பாற்று வதற்கானது. அவரோ அவருக்கு பதிலாக வேறு எவரோ அவருக்காக புகார் தாக்கல் செய்யலாம்.
இரக்கமற்ற துஷ்பிரச்சாரம்: பெண்கள் குறித்து பண்பற்ற வர்ணனை (தடை) சட்டம், 1986, எந்த ஒரு நபரோ அமைப்போ எந்த விதமான பண்பற்றது எனக் கருதப்படும் பெண்கள் குறித்த வர்ணனையைப் பிரசுரிக்க, பிரசுரிக்க உதவ பதிப்பிக்க, வெளிக்காட்ட அல்லது விளம்பரப்படுத்த, இணைய தளத்திலோ,     .அதற்கு வெளியிலோ செய்ய தடை விதிக்கிறது.
சமமான ஊதிய உரிமை: சம ஊதிய சட்டத்தின் கீழான ஷரத்துக்களின்படி, சம்பளம் அல்லது கூலிக்கு ஒருவரை ஆணா பெண்ணா பேதம் பார்த்து பாகுபடுத்த இயலாது.
பணியில் உளைச்சலுக்கு எதிரான உரிமை: பணிபுரியும் இடத்தில் பெண் களுக்கு நேரும் பாலியல் வன்முறைக்கு  எதிராக இயற்றப்பட்ட சட்டம் உங் களுக்கு பாலியல் வன்முறைக்கு எதிராக ஒரு புகார் தாக்கல் செய்ய உரிமை கொடுக்கிறது.
பெயர் குறிப்பிடாதிருக்கும் உரிமை: மானபங்கத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு பெயர் குறிப்பிடாதிருக்கும் உரிமை உண்டு. அவருடைய அந்தரங்கம் பாதுகாக்கப்படுவதற்காக, வழக்கு விசாரணையில் இருக்கும்போது பாலியல் வன்முறை செய்யப்பட்ட ஒரு பெண் அவர் மாத்திரம் அவருடைய வாக்கு மூலத்தை மாவட்ட விசாரணை நீதியரசர் முன் அல்லது ஒரு பெண் காவல்துறை அதிகாரி முன்பு கொடுக்கலாம்.
பிரசவம் சம்பந்தப்பட்ட ஆதாயங் களுக்கான உரிமை: பிரசவ ஆதாயங்கள், வேலை பார்க்கும் பெண்ணின் ஒரு சாதாரணமான சலுகை மாத்திரம் இல்லை. அவர்களுடைய உரிமை. பிரசவ ஆதாய சட்டம், ஒரு புதிய தாய்க்கு அவருடைய பிரசவத்துக்கு பன்னிரண்டு வாரங்களுக்குப் பின்னர் அவரை வேலை யில் திரும்பச் சேர அனுமதிப்பதன் மூலம் அவருக்கு வருமானத்தில் எந்த நஷ்டமும் இருக்காது.
பெண் குழந்தை கருச்சிதைவுக்கு எதிராக உரிமை: எல்லா உரிமைகளி லும் முக்கியமான அடிப்படை உரிமை யான ஒரு பெண்ணை வாழ்ந்து அனுப விக்க விடுவது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமையாக சுமத்தப்பட்டி ருக்கிறது. பிறக்கும் முன்பாக அறியும் வழிமுறைகள் குறித்த எண்ணம் (ஆணா பெண்ணா எனத் தேர்வு செய்யப்படுதல் தடை) சட்டம்  அவருக்கு பெண் குழந்தை கருச்சிதைவுக்கு எதிராக உரிமையை உறுதி செய்கிறது.
இலவச சட்ட உதவிக்கு உரிமை: சட்ட சேவைகள் அமைப்பு சட்டத்தின் கீழ் பாலியல் வன்முறையில் பாதிக்கப் பட்ட எல்லா பெண்களுக்கும் இலவச சட்ட உதவி பெற உரிமை உண்டு. சட்ட சேவைகள் அமைப்புக்கு காவல் நிலைய தலைமை அலுவலர் தகவல் கொடுத்து அவர்கள் மூலம் வழக்குரைஞர் ஏற்பாடு செய்வது கட்டாயமாகும்.
கண்ணியம், நடத்தை ஒழுங்கு உரிமை: குற்றம் சுமத்தப்பட்டவர் ஒரு பெண்ணாக இருந்தால் எந்த மருத்துவ பரிசோதனை செயல்முறையும் ஒரு பெண் ணால் அல்லது மற்றொரு பெண்ணின் முன்னிலையில் நடத்த வேண்டும்.
-விடுதலை ஞா.ம.,9.4.16

உடன்கட்டை



மொகலாய மாமன்னர் அக்பரின் ஆட்சிக் காலத்தில் (1556-1605) இருந்து முயன்று, வில்லியம் பெண்டிங் காலத்தில் (1829) சனாதன இந்துக்களின் பெரும் எதிர்ப்பு களுக்கு இடையே உடன்கட்டை யேற்றும் இரக்கமற்ற கொடிய பழக்கத்தைத் தடுக்கச் சட்டம் இயற்றினர். சட்டத்தால் தடுப்பதற்கு முன்பு கல்கத்தாவைச் சுற்றியிருந்த மாவட்டங்களில் ஆண்டிற்குச் சுமார் அய்நூறு பெண்கள் உடன் கட்டை ஏறியதற்குத் தக்க சான் றுகள் உள என்று ஆர்.சி.மஜூம்தார் எழுதுகிறார்.
“மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம்” - பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான், ப: 25
-விடுதலை ஞா.ம.,18.6.16