புதன், 24 ஜனவரி, 2024

புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்கம்


Published November 10, 2023

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து அடையாளமாக ஆறு மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” தொடக்கம்!


விடுதலை நாளேடு,
Published July 24, 2023

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.7.2023) தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட”ப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்து, விண்ணப்பம் செய்ய வந்த மகளிருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கே.என். நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் 

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வளர்ச்சி ஆணையர்,  முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம்,  தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

(செய்தி விவரம்: 2 ஆம் பக்கம் காண்க)

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்