சனி, 13 பிப்ரவரி, 2016

டில்லி உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி


டில்லி உயர்நீதி மன்றம் தொடங்கி 47 ஆண்டுகள் கடந்து விட்ட பிறகும்  தலை மை நீதிபதி நாற்காலி யில் இதுவரை எந்த பெண் நீதிபதியும் நியமிக்கப்படவில்லை. இத்தனை காலமாக தலைமை நாற்காலி அதற்குத் தகுதியான ஒருவரை தேடிக் கொண்டிருந்தது போலும்!
நீதிபதி ரோஹினி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அறிவியல் பிரிவில் பட்டம் படித்துவிட்டு விசாகப்பட்டினத்திலுள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.
இத்தனை காலத்துக்குப் பிறகு  டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நாற்காலி இவரது உழைப்புக்கும் திறமைக்கும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் டில்லி உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் தலைமை நீதிபதி ஜி.ரோஹினி என்ற தனி மகுடம் சட்ட வரலாற்றில்  பதியப்பட்டுவிட்டது!
டில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி  பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்றம் செல்வதால், அந்தப் பதவிக்கு ஆந்திர உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான இவர் நியமனமானார்.
2014 ஏப்ரல் 21 அன்று டில்லி உயர்நீதிமன்றத்தில் இவர்  பதவி ஏற்கும்போது அங்கு மொத்தம் 40 நீதிபதிகள் இருந்தனர். அதில் இவரோடு சேர்த்து 10 பெண் நீதிபதிகள். இவரது பதவிக்காலம் 4 ஆண்டுகள்.
முதன்முதலாக இவர் வழக்கு கட்டுகளோடு வாதிட நீதிமன்றத்துக்கு வந்தது 1980இல். கோகா ராகவா ராவ் என்ற மூத்த வழக்கறிஞரிடம் ஜூனியராக சேர்ந்தார். எழுத்துப் பணியிலும் ஆர்வம் செலுத்தினார். ஆந்திராவில் அன்றைய சட்ட ஜர்னலில் ரிப்போர்ட்டராகவும் களமிறங்கினார். பின்னர் எக்சிகியூடிவ் எடிட்டராகவும் பொறுப்பு வகித்தார்.
1995 அரசு வழக்கறிஞராக நியமனமானார். ஆந்திரப் பிரதேசத்தில்  2001ல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார், அதற்கடுத்த ஆண்டே நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பார் மற்றும் பெஞ்சுக்கான நல்லுறவு  போன்றவற்றிலும் கவனம் செலுத்தி, சிறப்புற செயல்படுத்தினார்.  ஆந்திரப் பிரதேச பார் கவுன்சிலில் சேர்மனாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
மூத்த நீதிபதியாக ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் பதவியிலிருந்த ரோஹினி குடியரசுத் தலைவரின் அங்கீகார கடிதம் வெளியானதைத் தொடர்ந்து தலைமை நீதிபதியாக டெல்லிக்கு மாற்றலானார்.
இந்தியன் விமன் நெட்வொர்க் கூட்டத்தில் பெண்கள் மற்றும் மனித உரிமை என்ற தலைப்பில் கையேடு வெளியிட்டுள்ளார் ரோஹினி. டில்லி உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற பிறகு, வழக்கு விசாரிப்பில் பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளார்.
-விடுதலை,15.12.15

பெண்களின் கருப்பை கட்டிகளை கரைக்கும் வெண்கடுகு


உள் உறுப்புகளை தூண்டக் கூடிய தன்மை கொண்டதும், வீக்கம் மற்றும் வலியை போக்க கூடியதும், பெண்களின் கருப்பை கட்டிகளை கரைக்கவல்லதும், செரிமானத்தை தூண்டக் கூடியதும், இருமல், விக்கலை சரிசெய்ய கூடியதும், ரத்த ஓட்டத்துக்கு மருந்தாக பயன்படுவதுமான வெண்கடுகு பல மருத்துவ பலன்களை கொண்டது.
கடுகைப் போன்று பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது வெண்கடுகு. கடுகு வகையை சேர்ந்த இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வெண்கடுகை பயன்படுத்தி கருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்ககூடியதும், செரிமாணத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.
வெண் கடுகை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் வெண்கடுகு பொடி, ஒரு சிட்டிகை மிளகு, சிறிது உப்பு, 2 சிட்டிகை பெருங்காய பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 முதல் 100 மிலி வரை எடுத்துக் கொண்டால், இது செரிமானத்தை தூண்டும்.
பெண்களின் கருப்பை கோளாறுகளை சரிசெய்யும். வெண்கடுகு உள் உறுப்புகளை தூண்டக் கூடியது. இரையறை கோளாறுகளை சரிசெய்யும் தன்மை உடையது.
சிறுகுடலில் உள்ள மென் திசுக்களை தூண்டக் கூடியது. மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும். கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைத்து, கருப்பைக்கு பலம் தரக்கூடியது.
வெண் கடுகை பயன்படுத்தி கெண்டைக்கால் தசையில் வீக்கம், வாயுக்கான மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் விளக்கெண்ணெய்யில், ஒரு ஸ்பூன் வெண்கடுகு பொடியை வறுக்கவும்.
பின்னர், நீர்விட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவு சேர்த்து களி பதத்தில் தயாரிக்கவும். இந்த களியை மெல்லிய துணியில் தடவி வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைக்க வேண்டும். இதனால் வலி, வீக்கம் சரியாகும். வெண்கடுகை பயன்படுத்தி விக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம். அரை டம்ளர் அளவுக்கு நீர் எடுத்து கொதிக்க வைக்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் அளவுக்கு வெண்கடுகு பொடியை எடுத்துக்கொள்ளவும். இதில் வெந்நீரை ஊற்றி நன்றாக கலந்து 15 நிமிடம் வைத்திருந்தால் நீர் தெளிந்துவிடும். மேலே இருக்கும் தெளிந்த நீரை குடித்தால் விக்கல் சரியாகும். விக்கலை போக்க வெண்கடுகு மருந்தா கிறது.
வெண்கடுகை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் வெண்கடுகு பொடியுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து சாப்பிட இருமல் கட்டுப்படும்.
சுவாச பாதையில் ஏற்படும் அழற்சி, வீக்கத்தை குறைக்கும். வெண்கடுகு, ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இருமல், சளியை போக்கும். நுண்கிருமிகளை அழிக்கும் தன்மைகொண்டது. வலி நிவாரணியாகிறது. ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் தன்மை கொண்டது.
-விடுதலை,15.12.15

சவுதியில் முதன்முறையாக நகராட்சி தேர்தலில் 17 பெண்கள் வெற்றி


ரியாத், டிச. 14-_ மன்னர் ஆட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண் கள் தேர்தலில் போட்டியி டவும் முடியாது. பெண் கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை.
கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா மரணம் அடைவதற்கு முன்பாக சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதும் அடங்கும்.
இந்தநிலையில், சவுதி அரேபியாவில் உள்ள 2 ஆயிரத்து 100 உள்ளாட்சி கவுன்சில் இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. மேலும், 1,050 இடங்களில் மன்னர் ஒப்புதலுடன் நிய மனங்கள் செய்யப்படும். பொதுவாக்கெடுப்புக்கான தொகுதிகளில் 900 பெண்கள் உள்பட 6,440 பேர் போட்டியிட்டனர்.
நேற்று வாக்கு எண் ணிக்கை நடைபெற்றது. இதில் சவுதியின் பல்வேறு பகுதிகளில் போட்டி யிட்ட பெண்களில் 17 பேர் வெற்றி பெற்றுள்ள னர். இவர்களுக்கு சட்டம் இயற்றுவதில் எவ்வித அதிகாரமும் இல்லை என்ற போதிலும், அதி காரிகளுக்கு ஆலோசனை வழங்குவது, உள்ளூர் வரவு செலவு திட்டங் களை மேற்பார்வை செய் வது போன்ற பணிகளில் ஈடுபட முடியும்.
-விடுதலை,14.12.15