திங்கள், 20 ஜூலை, 2015

பிராமணர்கள் எப்படிக் கற்பழித்திருக்க முடியும்?- டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு!

Image result for நீதிபதிகள்
பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தது என்ன?
ராஜஸ்தான் மகளிர் வளர்ச்சித் திட்டத்தில் சத்தீன் திருமதி பன்வாரிதேவி குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதனால் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளானார். ராம்கர்ன் குர்ஜார் என்பவரின் ஒரு வயதுக் குழந்தையின் திருமணத்தை பன்வாரி தடுத்து நிறுத்தினார். அந்த ஆசாமியோ அந்தப் பகுதியில் பிரபலமானவர், விளைவு, பன்வாரி தன் கணவரின் எதிரிலேயே கொடுரமான முறையில் அய்ந்து கொடியவர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார். (1992  செப்டம்பர்). பி.ஜே.பி. ஆட்சி இதனைக் கண்டுகொள்ளவேயில்லை. கடும் எதிர்ப்புக் கிளர்ந்து எழுந்த பிறகே அய்ந்து மாதங்கள் கழித்தே குற்றவாளிகள் கைது செய்யப்-பட்டனர். சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும், பன்வாரி கிராமத்திலிருந்து சமூகப் பிரஷ்டம் செய்யப்பட்டார்.
வழக்குத் தொடுக்கப்பட்டதோ 1994 அக்டோபரில். டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் சொன்னது என்ன தெரியுமா? பான்வாரியை  உயர்ஜாதி பிராமணர்கள் எப்படிக் கற்பழித்திருக்க முடியும்? என்பதுதான் அந்தக் கேள்வி. வழக்கு தள்ளுபடியும் செய்யப்-பட்டது. (Economic Political Weekly 25.11.1995)
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. (10.1.1996)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக