ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

பெண்களே, சட்டங்களை அறிந்து கொள்க!


9

வாழ்வூதியம் மற்றும் பராமரிப்புச் சட்டங்கள் ஏராளமாக இருந்த போதிலும், பெண்கள் வெறுங்கையுடன் இருக்கிறார் கள். மோசமான திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையைச் சந்திக்கப் போராடுகிறார்கள். ஏனெனில் இந்தச் சட்டங்கள் பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் வழங்க வில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஏப்ரல் 23, 1985இல், ஷா பானோ பேகம் என்ற ஒரு முஸ்லிம் பெண், தனது கணவரால் விவாகரத்து பெற்றவர்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு மூலம் வாழ்வூதிய உரிமையை பெற்றார். பாதிக்கப்பட்ட, விவா கரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு வாழ்வூதியம் அளித்து தீர்ப்பு வழங்கியது. இருப்பினும், இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அன்றைய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது. சமூகத் தலைவர்கள் குர்ஆனில் இருந்து மேற்கோள் காட்டி, தீர்ப்பு இஸ்லாமிய சட்டத்திற்கு முரண்படுவதாகக் கூறினர்.

அன்றைய அரசாங்கம் பின்னர் முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986அய் இயற்றியது. இது ஷிசிஇன் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்தது. விவாகரத்துக்கு 90 நாட்களுக்குப் பிறகு முஸ்லிம் விவாகரத்து பெற்றவர்களின் உரிமைகளை அவர்களின் மேனாள் கணவர்களிடமிருந்து கட்டுப்படுத்தியது. இந்த காலம் இஸ் லாமிய சட்டத்தில் இத்தா என்று அழைக்கப்படுகிறது. பல சர்ச்சைகளைத் தூண்டிய இந்தச் சட்டம், ஷா பானோவை வீட்டுப் பெயராக மாற்றியது.

பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பராமரிப்புக்கான கோரிக்கையை வடிவமைப்பதில் நீதிமன்றம் நியாயமாக இருக்கும் என்பது உத்தரவின் முக்கிய அம்சமாகும். வழங்கப் பட்ட நிரந்தர வாழ்வூதியத்தின் அளவு, வழக்குதாரர்களின் நிலை மற்றும் பராமரிப்பு செலுத்தும் வாழ்க்கைத் துணை களின் திறனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்று நிரந்தர வாழ்வூதியம் செலுத்துவதற்கான அளவுகோல் விகிதத்தை நிர்ணயித்துள்ளது. கணவரின் நிகர வருமானத்தில் 25% வாழ்வூதியமாக நியாயமான மற்றும் சரியான தொகை என்று நீதிமன்றம் கூறியது. விவாகரத்து செய்யப்பட்ட மனைவியின் நிதிநிலை வாழ்வூதியத்தின் அளவை தீர்மானிக்கும் போது முக்கியமானதாக இருக்கும். எனவே, சவுத்ரிகள் வழக்கில் நீதிமன்றம் நிர்ணயித்த பெஞ்ச்மார்க் ரேட் இங்கே வேலை செய்யக்கூடும் என்று சட்ட ஆதாரம் கூறுகிறது.

பின்னர் நவம்பர் 2020இல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி, பிரிந்து செல்லும் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு அவர்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பித்த நாளிலிருந்து கணவர்களிடமிருந்து வாழ்வூதியம் மற்றும் பராமரிப்புக்கு உரிமை உண்டு. நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கணவரால் பிரிந்து செல்லும் பெண்கள் மிகவும் நெருக்கடியான சூழ் நிலையில் இருப்பதாகவும், தங்களையும் தங்கள் குழந்தை களையும் பராமரிக்க வழியின்மையால் அவர்கள் பெரும் பாலும் ஏழ்மையான நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் கூறி யது. 67 பக்கத் தீர்ப்பில், குடும்ப நீதிமன்றங்கள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்கள் பின்பற்றுவதற்கான சீரான மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.

இந்த நீதிமன்றங்கள் பராமரிப்பு மற்றும் வாழ்வூதியம் எவ்வாறு பார்க்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரு வடிவத்தை இது உருவாக்கியது. மகாராட்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவரிடமிருந்து பிரிந்து, தனக்கும், மகனுக்கும் வாழ்வூதியம் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு பல மாதங்களாக இழுத்தடிக் கப்பட்டு வந்தது. பல பராமரிப்புச் சட்டங்கள் இருந்தபோதிலும், மோசமான திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையைச் சந்திக்க முடியாமல் பல ஆண்டுகளாக பெண்கள் வெறுங்கையுடன் உள்ளனர் என்று உச்ச நீதிமன்றம் கவனித்தது.

நீதிபதி மல்ஹோத்ரா தனது தீர்ப்பில், “விண்ணப்பம் செய்யப்பட்ட தேதியிலிருந்து பராமரிப்பு வழங்கப்பட வேண் டும் என்ற கருத்து, பிரிந்து செல்லும் மனைவி மற்றும் சார்ந் திருக்கும் குழந்தைகளை ஏழ்மை மற்றும் அலைச்சலில் இருந்து பாதுகாப்பதே பராமரிப்புச் சட்டங்களின் முதன்மை நோக்கம் என்ற நியாயத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. விண்ணப்பித்த நாளிலிருந்து பராமரிப்புப் பணம் செலுத்தப் படாவிட்டால், பராமரிப்புக் கோரும் தரப்பினர், விண்ணப் பத்தை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நேரத்தின் காரணமாக, வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.

வாழ்வூதியம் செலுத்தும் பொறுப்பு நீதிமன்றங்களால் கணவர்களின் மீது தள்ளப்பட்டது. கணவன் தனது பிரிந்த மனைவிக்கு பணம் செலுத்தத் தவறினால், அவர் தனது சொத்துக்களை இணைத்தல் உட்பட சிவில் தடுப்புக்காவலில் அடைவார். மனைவியைப் பராமரிக்கும் தார்மீகக் கடமையி லிருந்து கணவன் விடுபட முடியாது என்று நீதிமன்ற உத்தரவு தெளிவாக இருந்தது. அவர் திறமையானவராகவும் கல்வித் தகுதி பெற்றவராகவும் இருந்தால், தனக்கு வருமான ஆதாரம் இல்லை என்ற கணவரின் வேண்டுகோள், அவருக்கு பரா மரிப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். குழந்தை களின் கல்விச் செலவுகளை பொதுவாக தந்தையே ஏற்க வேண்டும்.

ஆனால், மனைவி வேலை செய்து போதுமான வரு மானம் ஈட்டினால், செலவுகளை இரு தரப்பினரும் விகிதாச் சாரப்படி பகிர்ந்து கொள்ளலாம் என்று நீதிபதி மல்ஹோத்ரா குறிப்பிட்டார். சமகால சமூகத்தில் திருமணங்கள் ஒரு நியாய மான காலத்திற்கு நீடிக்காது என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, கணவன் தனது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் நிரந்தர வாழ்வூதியம் வழங்க உத்தரவிடுவது சமமாக இருக் காது என்றும் நீதிமன்றம் கவனித்தது.

எனவே, வாழ்வூதியம் வழங்கும்போது திருமண காலமும் பரிசீலிக்கப்படும். CrPCஇன் பிரிவு 125 பல ஆண்டுகளாக ஒன்றாக வாழும் இணையினரையும் உள்ளடக்கும் என்று தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தியது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, மேற்கூறிய பிரிவின் கீழ் பராமரிப்பு வழங்குவதற்கு திருமணத் திற்கான கண்டிப்பான ஆதாரம் முன் நிபந்தனையாக இருக்கக் கூடாது.