சமத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 நவம்பர், 2024

சமத்துவம் மலரப் போராடிய அமெரிக்கப் பெண்கள்

 


அமெரிக்கா என்ற ஒரு நாடே ஒரு காலத்தில் இல்லை. இங்கிலாந்து போன்ற அய்ரோப்பிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து குடியேறியவர்கள் உருவாக்கிக் கொண்ட நாடு அது. எப்படி முழு நாடும் உருவாயிற்று? வெள்ளையர்கள் உடல் உழைப்பில் வல்லவர்கள் அல்ல. எனவே, கட்டடங்கள் கட்டவும், சாலைகள் உருவாக்கவும் லட்சக்கணக்கான கருப்பு நிற உழைப்பாளிகளை ஆப்பிரிக்க வனப் பகுதிகளிலிருந்து வரவழைத்தார்கள். அவர்கள் வியர்வை சிந்தி முழு நாட்டையே உருவாக்கினார்கள். பல நூறு ஆண்டுகளுக்குப் பின் – “உங்கள் வேலை முடிந்துவிட்டது கருப்பு நாய்களே! உங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று உத்தரவிட்டார்கள் வெள்ளைத் தோல் அமெரிக்கர்கள். வெகுண்டு எழுந்த ஆப்பிரிக்க மக்கள் – “அடேய்! இது உன் நாடு மட்டுமல்ல. எங்கள் நாடும் இதுதான். நாங்கள் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?” என்று முழக்கமிட்டார்கள்.

“எங்கள் மூதாதையர் ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து வந்தது உண்மை. ஆனால், என் பெற்றோரும் இங்கே பிறந்தவர்கள். அவர்களுடைய பெற்றோரும் இங்கே பிறந்தவர்கள். நாங்களும் இங்கே பிறந்தோம். எங்களைப் போகச் சொல்ல நீங்கள் யார்?” என்று கொதித்தெழுந்துக் கேட்டார்கள். போராட்டம் வெடித்தது.
நாளடைவில் – “இருந்துத் தொலையுங்கள்! ஆனால், எங்களோடு ஒட்டி உறவாடக் கூடாது. எல்லா இடங்களிலும் எங்களை விட்டு விலகியே இருங்கள்!” என்றார்கள்.

சமூக அநீதியும் கொடுமைகளும்
கருப்பர் இனப் பிள்ளைகளுக்கு தனியாகப் பள்ளிகள்; உணவகங்களில் தனி இடங்கள்; பேருந்துகளில் பின்புறம் மட்டுமே ஒரு ஓரத்தில் உட்கார அனுமதி; அஞ்சல் நிலையங்களில் தூரத்தில் உட்கார அனுமதி; அஞ்சல் நிலையங்களில் தூரத்தில் நின்றபடி அஞ்சல் தலைகள் வாங்கும் நிலை; இப்படி நாடு முழுவதும் கருப்பு நிற அமெரிக்கர்கள் ஒதுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். தென் அமெரிக்காவில் கொடுமைகள் மிக அதிகமாக இருந்தன. மறுபடியும் பல போராட்டங்கள் நடந்தன – சமூக நீதிக்காவும் சமத்துவத்திற்காகவும். நிற வெறிக்கு எதிராக பல இயக்கங்கள் போராட ஆரம்பித்தன. சமூக உரிமைகள் இயக்கம் (Civil Rights Movement) உலகப் புகழ் பெற்ற, வரலாற்று சிறப்புடைய இயக்கமாக இன்றும் போற்றப்படுகிறது. ஆப்பிரகாம் லிங்கன் பற்ற வைத்த நெருப்பு மார்டின் லூதர்கிங் ஜூனியர் வரை கொழுந்துவிட்டு எரிந்தது. காலப்போக்கில் சில மாற்றங்கள் ஏற்படவும் செய்தன. இருந்தாலும் நிறவெறி இருள் அகலவில்லை.

பேருந்துகளில் நிகழ்ந்த கொடுமை
வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமே பேருந்துகளில் முன்புறம் ஏறி நல்ல இருக்கையில் அமர அனுமதிக்கப்பட்டனர். கருப்பு நிற அமெரிக்கர்களுக்கு பேருந்தின் பின்புறம் மோசமான ஓரிரு இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. கருப்பு நிற குடிமக்கள் “காக்கை”கள் என்று கேலி செய்யப்பட்டனர். வீதி நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் ஒரு வெள்ளைத் தோல் கலைஞர் முகத்தில் கருப்பு சாயம் பூசிக்கொண்டு உயரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வது போல் நடிப்பது வழக்கமாம். அந்த நடிகரின் பெயர் ஒரு நிகழ்ச்சியில் Jimஎன்று இருந்துள்ளது. பார்வையாளர்கள் – “Jim Crow”  குதி! குதி!” என்று உற்சாகமாகக் குரலெழுப்புவார்களாம். நாளடைவில் Jim Crow – JC  என்று சுருங்கி JC Bus Law என்று மாறியது.

பேருந்துகளில் காட்டப்பட்ட பாரபட்சத்தை எதிர்த்து முதலில் போராடிய கருப்பர் இனப் பெண் (Irene Morgan)  அய்ரீன் மார்கன் என்பவர். இது நடந்தத 1946இல். அதன் பிறகு அதே போன்ற ஒரு பேருந்து எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய கருப்பர் இனப் பெண் ரோஸா பார்க்ஸ்  (Rosa Parks). 1955 டிசம்பர் 1ஆம் நாளன்று அவர் துவக்கிய போராட்டம் அமெரிக்காவையே உலுக்கி எடுத்தது வரலாறாகும்!
அலுவலகப் பணி முடிந்த வீடு திரும்ப ஒரு பேருந்தில் ஏறிய ரோஸா பார்க்ஸ் வெள்ளையர்களுக்காக இருந்த இருக்கை ஒன்றில் களைப்புடன் அமர்ந்து விட்டார். பேருந்தில் ஏறிய ஓட்டுநர் – “போர்டைப் பார்க்கலையா? இறங்குடீ!” என்று உறுமியுள்ளார். “முடியாது போடா!” என்றார் ரோஸா. “பின்னால் போய் உக்காரு!” என்று ஓட்டுநர் மிரட்டியுள்ளார். அதற்கும் மசியவில்லை ரோஸா. “எல்லோரும் சமம்!” என்று பதிலடி கொடுத்தார். அவ்வளவுதான்! போராட்டம் வெடித்தது.
“இனி பேருந்துகளில் பயணம் செய்ய மாட்டோம்!” என்று முடிவு செய்த கருப்பு அமெரிக்கர்கள் சாலை மறியல் போராட்டங்களிலும் இறங்கினர். 1955 டிசம்பரில் துவங்கிய “பேருந்து எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து 381 நாட்கள் நடந்து 1956ஆம் ஆண்டு இறுதியில் முடிவடைந்தது. ரோஸா பார்க்ஸ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. பேருந்துப் பயணப் பாரபட்சமும் முடிவுக்கு வந்தது.

மார்டின் லூதர் கிங் ஜூனியர்
சமூக நீதிக்காகப் போராடிய உலகப் புகழ்பெற்ற கருப்பர் இனத் தலைவர் மார்டின் லூதர் கிங். இவருடைய “I have a dream”(எனக்கு ஒரு கனவு உள்ளது) என்ற உரை உலக வரலாற்றில ஒரு மகத்தான அத்தியாயமாகும். நிறவெறி, பிறப்பு சார்ந்த பாகுபாடுகள், இனவெறி இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடிய மார்டின் லூதர் கிங் 1968 ஏப்ரல் 4ஆம் நாளன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருடைய வயது 39. அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஏறத்தாழ மூன்று லட்சம் அமெரிக்கர்கள் கலந்து கொண்டார்கள்.
கருப்பு நிற மக்களை நீக்ரோக்கள் என்று அழைத்த காலம் மறைந்தது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்று பின்னர் அழைத்தனர். இன்று அமெரிக்கர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். திரை உலகிலும், இலக்கிய உலகிலும், நூற்றுக்கணக்கான உயர் பதவிகளிலும் இன்று அவர்கள் உச்சத்தில் உள்ளார்கள். போராளிகள் புதைக்கப்படுவதில்லை – விதைக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மைதான்.


வெள்ளி, 28 டிசம்பர், 2018

பாலின சமத்துவம், மாணவர் ஒற்றுமையை வலியுறுத்தி மாணவியரின் 'பெண்கள் சுவர்'

மாட்டுச்சாணத்தை தெளித்து  புனிதப்படுத்திய பிற்போக்கு ஏபிவிபி




கொச்சி, டிச.22 வழிபாட்டு இடங்களில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துகின்ற கேரள மாநில அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் ஆதரவு அளிக்கும் வகையில் பெண்கள் சுவர் எனும் பெயரில் மாணவியர் கரங்களை இணைத்துக்கொண்டு  மனித சங்கிலி பரப் புரை மேற்கொண்டுள்ளனர்.

திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோட் வரை இப்பரப்புரை நடத்திட திட்ட மிடப்பட்டுள்ளது. இப்பரப்புரையில் லட் சக்கணக்கிலான பெண்கள் கலந்துகொண்டு தங்களின் ஆதரவை அளிக்கின்றனர். இப்பரப்புரையை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாணவர் அமைப்பாகிய இந்திய மாணவர் சங்கம் நடத்திவருகிறது.

கேரள மாநிலத்தில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி நாயர் சர்வீஸ் சொசைட்டி இந்து கல்லூரி தலை மையகத்தில் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பாகிய இந்திய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாலின சமத்துவம், மாணவர் ஒற்றுமையை வலியுறுத்தி சுமார் 350 மாணவிகள்  ஒன்றிணைந்த வனிதா மதில் எனும்  பெண்கள் சுவர் மனித சங்கிலி பரப்புரை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தின் வெளியே சுற்றுச்சுவரையொட்டி மாணவியர் பதாகைகளை ஏந்தி சிறிதுநேரம் மனித சங்கிலி அமைத்து பரப்புரை மேற்கொண்டனர். அதன்பின்னர் கலைந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்றனர்.

கல்லூரி வளாகச் சுற்றுச்சுவரையொட்டி சாலையோரத்தில் இந்திய மாணவர் சங் கத்தின் சார்பில் மாணவியர் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பதாகைகள், பலூன்களை ஏந்தி பெண்கள் சுவர் மனித சங்கிலி அமைத்து கோரிக்கைகளை வலியுறுத்தினர். மீண்டும் கேரளாவை புகலிடமாக்காதீர், மாணவர் ஒற்றுமைக்கான பெண்கள் சுவர்  என்கிற வாசகங்களைக் கொண்ட பெரிய பதாகையை மாணவிகள் ஏந்தியிருந்தார்கள்.

பெண்கள் சுவர் (மனித சங்கிலி) பரப்புரை நடைபெற்ற பகுதியிலேயே அக்கல்லூரியின் மற்றொரு பிரிவாகிய ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பாகிய ஏபிவிபி அமைப்பினர்   சிறிதுநேரத்தில், அப்பகுதியில் மாட்டுச் சாணத்தைத் தண் ணீரில் கரைத்து தெளித்து தீட்டு கழித்து புனிதப்படுத்தினார்களாம். அச்செயலை படமாக ஏபிவிபியினர் முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.

முகநூலில் குறிப்பிட்டுள்ளதாவது:

மன்னாது பத்மநாபனின் (கல்லூரி நிறுவனர்) மண்ணில் ஏபிவிபியின் சார்பில் புனிதப்படுத்தப்பட்டது. பினராயினுடைய இந்திய மாணவர் சங்கத்தினர் பெண்கள் சுவர் (மனித சங்கிலி) அமைத்து நம்முடைய கலாச்சாரத்தை பாழ்படுத்தி விட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் பகுதி செயலாளர் சுபின் சாபு கூறியதாவது:

ஒரு பகுதிக்குள் தீண்டத்தகாதவர்கள் நுழைந்தாலோ,தொட்டுவிட்டலோஉயர் ஜாதி இந்துக்கள் மற்றும் அர்ச்சகப் பார்ப்பனர்கள் மாட்டுச் சாணத்தைக் கரைத்துத் தெளித்து தீட்டு கழிப்பார்கள். அதுபோல், ஏபிவிபி அமைப்பினர் பார்ப் பனியத்தை தங்களின் செயல்மூலமாக செயல்படுத்தியுள்ளனர். ஏனென்றால், மறுமலர்ச்சிக்கான பரப்புரை மற்றும் பிற முற்போக்கு இயக்கங்களின் பரப்புரைகளால் ஆத்திரமடைந்ததாலேயே இதுபோன்று செய்துள்ளார்கள் என்றார்.

கோட்டயம் மாவட்ட இந்திய மாணவர் சங்க இணை செயலாளர் ஜஸ்டின் ஜோசப் கூறியதாவது:

இப்பரப்புரையில் கலந்துகொள்ள மாணவியர் பெரிதும் ஆர்வத்துடன் உள்ள நிலையில், ஏபிவிபி அமைப்பினர் அச்சுறுத்தி வருகின்றனர். இந்திய மாண வர் சங்கம் பரப்புரை நடத்தும் இடங் களில்ஏபிவிபிஉள்ளிட்டஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எதிர்ப்புறமாக நின்று எங்கள் பரப்புரைக்கு ஆதரவளிக்க வரு வோருக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். கல்லூரி நிர்வாகமும் ஏபிவிபிக்கு ஆதரவாக எங்கள் பரப்புரையில் பங்கேற்கின்ற மாண விகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து அடக்குமுறையைக் கையாள்கிறது. இந்த பரப்புரை எப்போதுமே வகுப்பு தொடங்கப்படுவதற்கு முன்பாக நடத்தப் படுகிறது என்றார்.

- விடுதலை நாளேடு, 22.12.18