செவ்வாய், 22 டிசம்பர், 2015

இந்திய அரசியல் அமைப்பு சாசனமும் பெண்களும்


இந்தியா, ஆங்கில ஆதிக்கத்திலிருந்து அற வழியில் சுதந்திரம் பெற்ற பிறகு, நாம் தனி சுதந்திர நாடாக செயல்பட, அரசியல் அமைப்பு சாசனம் இயற்றுவது அவசியம் என்ற காரணத் தால், ஒரு குழு அமைக்கப்பட்டது.
பல கருத்து பரிமாற்றங்கள், விவாதங்களோடு, நடைமுறையிலிருக்கும் பல நாட்டு அரசியல் அமைப்பு சாசனங்களின் உள் அமைப்பினையும் உற்று நோக்கி, நம் ஜனநாயகத்துக்குத் தேவையான விஷயங்களை சேகரித்து, இவை அனைத் தையும் ஒன்றிணைத்து டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் உள்பட பல தலைவர்களின் முயற்சியால் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் 1949 நவம்பர் 30 அன்று இயற்றப்பட்டு, 1950 ஜனவரி 26இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக் காப்பதில் பெரும் பங்கு வகித்து வருகிறது.  நம் நாட்டின் சட்டங்கள் அனைத்துக்கும் ஒரு தாய் சட்டமாக, முதுகெலும்பாக விளங்குவதுதான் இந்த அரசியல் அமைப்பு சாசனம்!
நம்முடைய அரசியல் அமைப்பு சாசனத்தின் ஷரத்து 14, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட் டையே வலியுறுத்துகிறது. ஒருவர் பின்பற்றும் மதத்தின் அடிப்படையிலோ, ஜாதியின் அடிப்படையிலோ, ஆண்- பெண் வித்தியாசத்தின் அடிப்படையிலோ அரசியல் அமைப்பு சாசனம் செயல்படவில்லை.
இதன் ஷரத்து 15(1) மதம், சாதி, பாலினம், பிறந்த இடம் மற்றும் இனத்தின் () அடிப்படையில் எந்தவித பாகுபாடும் இல்லை என வலியுறுத்துகிறது. அதன் ஷரத்து 15(3)ன் கீழ், பெண் களுக்கும் குழந்தைகளுக்குமான சிறப்புச் சட்டங்கள் இயற்றவும், சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழி செய்யப்பட்டுள்ளது.
ஆணாதிக்க சிந்தனை மிக்க சமுதாயத்தில் அடுப் பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என எண்ணப் பட்ட நிலையில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்திருக் கிறது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் எந்தவொரு செயலையும் தன்னிச்சையாக செய்ய முடியாத நிலையும் இருந்திருக்கிறது. பெண்களின் நலனுக்காகவும் விடுதலைக் காகவும் குரல் கொடுத்த தந்தை பெரியார், ராஜாராம் மோகன்ராய்,  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற பலரின் முயற்சியால் பெண்களுக்கு எதிரான பல இன்னல்கள் படிப்படியாக குறைக்கப்பட்டன.
பெரும் முயற்சியால் பெண்களுக்கு கல்விக் கண் திறக்கப்பட்டது. தடைகள் எல்லாவற்றையும் கடந்து, இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக கல்வியறிவு பெறுவ துடன், அவ்வாறு கற்ற கல்வியின் மூலம் நல்லதொரு பணி செய்து பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறார்கள்.
இந்நிலை சாத்தியமானதற்கு நமது அரசியல் அமைப்பு சாசனமும் முக்கிய காரணம். அதன் ஷரத்து 16இன் கீழ், ஒருவரின் பணி நியமனத்தின்போதோ, பணி உயர்வின் போதோ ஆண் - பெண் என்ற பேதமை பார்க்கப்படாம லிருப்பதற்கும், அனைவரையும் ஒரே கண்ணோட் டத்துடன் பார்ப்பதற்கும் வழிவகை செய்துள்ளது. ஷரத்து 39 (டி) ஒரே பணி செய்யும் ஆணுக்கும், பெண்ணுக்கும் அந்தப் பணிக்கான சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது.
அரசியல் அமைப்பு சாசனத்தின் ஷரத்து 42ன் கீழ், அனைவருக்கும் பாது காப்புடன் கூடிய பணியிடமும் மற்ற வசதிகளும் செய்து தரவேண்டும். தாய்மைப்பேறு அடைந்த பெண்களுக்கு பேறுகால உதவியும் சலுகைகளும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயேதான் மகப்பேறு நல சட்டம் 1961, சம ஊதிய சட்டம் 1976 ஆகியவை இயற்றப்பட்டு பணிபுரியும் பெண்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக இருந்து வருகின்றன.
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தில் ஷரத்து 39(ஏ)ன் படி இந்த சமுதாயத்தில் எந்தவித வித்தியாசமும் இன்றி ஆணும் பெண்ணும் சமமாக வாழ வழிவகை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. ஷரத்து 39(ஏ)இன் கீழ் சமநீதியை நிலை நாட்டும் வகையில், தேவைப்படும் அனைவருக்கும்  இலவச சட்ட உதவி கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக... பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கட்டாயமாக இந்த இலவச சட்ட உதவி கிடைக்க இந்த ஷரத்து வலியுறுத் துகிறது. எந்த நிலையிலும் ஒரு பெண்ணுக்கு நீதி மறுக்கப் படக் கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த ஷரத்து இயற்றப் பட்டுள்ளது.  இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை களும் குற்றங்களும் பெருகி வரும் நிலையில் நம் நாட்டுப் பெண்கள் அவர்களுக்கான சட்ட உரிமை களையும் கடமைகளையும் அறிவது அவசியமாகிறது.
இன்றைய நிலையில் என்னதான் பெண்கள் கல்வியறி வில் மேம்பட்டிருந்தாலும் பொருளாதார வளர்ச்சியை தொட்டுக் கொண்டிருந்தாலும் அனைத்து இந்தியப் பெண்களும் இந்த நிலையை எட்டிவிட்டார்களா என்றால் கண்டிப்பாக இல்லை என்ற பதிலே மிஞ்சி நிற்கும்.  ஆணுக்கு நிகரான ஒரு நிலையை அடைய பெண்கள் அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தாலும், நம் நாட்டுப் பெண்கள் அந்த நிலையை அடைவதற்கு இன்னும் பயணம் செய்ய வேண்டிய தூரம் மிக அதிகம்.
நம் நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களும் பயனளிக்கும் சட்டங்களும் ஏராளமாக உள்ளன. எனினும், இந்தச் சமுதாயம் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டிய சமமான அங்கீகாரத்தை, இன்றும் எல்லா நிலைகளிலும் கொடுக்க மறுக்கிறது என்பதுதான் நிதர்ச னமான உண்மை. இப்பாகுபாட்டைக் களைய இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் ஷரத்து 46  பெரிதும் முயல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,2.9.14

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

பேச்சே இவரது மூச்சு(ஓப்ரா)



உலக ஊடகங்கள், முன்னணி பத்திரிகைகளால் ஆற்றல் மிக்கவர், செல்வாக்கு உள்ளவர், சக்தி வாய்ந்தவர் என்று பாராட்டப்பட்ட ஒரு பெண். கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகச் சிறு வயதிலேயே பாலியல் கொடுமைகளை எதிர்கொண்டவர்.
ஆனால், தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களைத் தலைகீழாக மாற்றி, உலகப் பிரபலங்கள் எல்லாம் அவரது நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்படமாட்டோமா என்று ஏக்கப்பட வைத்தவர். இந்தப் பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஓப்ரா வின்பிரே.
உலகின் மிகுந்த செல்வாக்கான பெண் இவராக இருக்கலாம் " என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் பாராட்டப்பட்டவர். அதே ஓபாமா முன்னால் கால் மேல் கால் போட்டு உரையாடக்கூடிய சகஜத்தை ஓப்ரா பெற்றிருந்தார். இதற்குக் காரணம் உலகின் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளராக அவர் இருந்ததுதான்.
அவருக்கு முந்தைய தலைமுறை யில் சினிமா நடிகர், நடிகைகள் பெற்றிருந்த புகழை டிவி மூலம் பெற்றவர் ஓப்ரா. 25 ஆண்டுகளாக அவர் நடத்தி வந்த தி ஓப்ரா வின்பிரே டாக் ஷோ'வை நிறுத்துவது பற்றி யாருமே யோசித்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், அந்த நிகழ்ச்சி அவ்வளவு புகழ் பெற்றவை.
நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தபோது, அவருடைய ஆண்டு வருமானம் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல். இப்படி உலகப் புகழ் பெற்றவராகவும், பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் இருக்கும் ஓப்ரா, சிறு வயதில் தனக்கு நேர்ந்ததைப் போல மற்றக் குழந்தைகளுக்கு நேரக்கூடாது என்பதில் உறுதிகொண்ட வராக இருந்தார். தனது பணத்தில் பெரும் பகுதியைக் கறுப்பின ஏழைக் குழந்தைகளின் வளர்ச்சிக்குச் செலவிட்டுவருகிறார்.
அதற்குக் காரணம் இருக்கிறது. வறுமை காரணமாகச் சிறு வயதில் பல நேரம் கோணிச் சாக்கே அவரது உடையாக இருந்திருக்கிறது. அப்போது பாட்டி வெர்னிடா லீயிடம் வளர்ந்தார் ஓப்ரா. அவர் அடிக்கடி வீட்டு வேலைக்குப் போய்விட்டதால், பிறகு தந்தையிடம் விடப்பட்டார்.
அங்கு நெருங்கிய உறவினர்களாலேயே பல முறை பாலியல் வன்முறைக்கு உள்ளானார். கறுப்பினப் பெண்களுக்கு அதுவே அன்றைய நியதியாக இருந்தது. பிறகு காதல் கொண்டவருடன் 14 வயதிலேயே தாயானார். ஆனால், சில நாட்களில் அக்குழந்தையைப் பறிகொடுத்தார்.
மற்றொருபுறம், சிறு வயதில் இருந்தே ஓப்ராவின் பேச்சுத்திறமையும், வாசிப்பும் மேம்பட்டிருந்தன. இந்த இரண்டையும் கொண்டு சமூகம் அவர் மீது குத்திய ஒவ்வொரு முத்திரையையும் தகர்க்க ஆரம்பித்தார்.
பேச்சுத் திறமை மூலம் கல்லூரியில் சேர்வதற்கு முன்பே 19 வயதில் ரேடியோ செய்தி வாசிப்பாளர் ஆனார். அந்த வருமானமும் போதாத நிலையில், அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டதன் மூலமாகக் கிடைத்த தொகை மூலம் கல்லூரி கட்டணங்களைச் செலுத்தினார்.
கொஞ்ச காலத்தில் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையில் செய்தி வாசிப்பாளராகச் சேர்ந்தார். அமெரிக்காவில் அந்தக் காலத்தில் ஊரின் வாயை அடக்குவதற்காகக் கறுப்பினப் பெண்கள் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும் அவர்களுக்கு, முக்கியப் பொறுப்பு கள் வழங்கப்பட்ட தில்லை. ஆனால், ஓப்ரா அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், தன் இயல்பான கடும் உழைப்பைச் செலுத்தினார்.
புகழ்பெற்ற பேச்சு
அடுத்து பால்டிமோர் தொலைக்காட்சி நிலையத்தில் வேலை பார்த்தபோது எப்படி பேட்டிகளை எடுப்பது, வி.அய்.பிக் களிடம் எப்படி தொடர்புகளை உருவாக்கிக் கொள்வது என்பதையெல்லாம் கற்றுக்கொண்டார். 1984இல் ஏ.எம்.சிகாகோ தொலைக்காட்சி நிறுவனமே, ஓப்ராவை வேலைக்குச் சேர அழைத்தது.
அங்கேதான் தனது அடையாளமான டாக் ஷோ நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அது மிகப் பெரிய ஹிட். அப்போது புகழ்பெற்றிருந்த பில் டொனாகு டாக் ஷோ'வை அது விஞ்சியது. டாக் ஷோவைத் தொகுத்து வழங்குவதில் தனி ஆளுமையாக வளர்ந்த பின் ஹார்ப்போ புரொட சன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, தனது நிகழ்ச்சி களைத் தானே தயாரித்தார்.
நலப்பணிகள்
தனது வருமானத்தின் பெரும் பகுதியை ஏஞ்சல் நெட்வொர்க் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார். கறுப்பினக் குழந்தைகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்தினாலும், இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் குழந்தைகளின் படிப்புக்கும் அவர் உதவி வருகிறார்.
தென்னாப்பிரிக்காவில் ஓப்ரா வின்பிரே பெண்கள் தலைமைப்பண்பு அமைப்பை நடத்தி வருகிறார். கறுப்பின மாணவிகளின் ஆளுமைப் பண்பை வளர்க்கும் கல்வி நிறுவனம் அது.
ஓப்ராவின் வார்த்தைகளிலேயே அவரது வாழ்க் கையைச் சொல்வதென்றால், இந்த உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது தெரியுமா? ஒருவர் தனது அணுகு முறையை மாற்றிக்கொண்டால் தங்கள் வாழ்க்கையையே மாற்றிக்கொள்ளலாம் என்பதுதான்.
போராட்டம் இல்லையேல் வலிமை நமக்குக் கிடைக்காது. உங்கள் மனக்காயங்களைப் புத்திக்கூர்மையாக மாற்றுங்கள். அதுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய ரகசியம்"
-விடுதலை,10.6.14

சனி, 12 டிசம்பர், 2015

முதன்முறையாக சவுதியில் பெண்கள் ஓட்டுப்போட அனுமதி

 

ரியாத், டிச. 12_ நகராட்சி தேர்தலில் சவுதி அரேபியாவில் பெண்கள் ஓட்டுப்போட முதன் முறையாக அனுமதி வழங் கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமை யான கட்டுப்பாடுகள் உள் ளன. இங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக் கப்பட்டுள்ளது. அதே போன்று அங்கு நடை பெறும் தேர்தல்களில் பெண்கள் போட்டியிட முடியாது. ஓட்டு போட வும் தடை விதிக்கப்பட் டிருந்தது.
இவற்றை எதிர்த்து பல ஆண்டுகளாக அங்குள்ள பெண்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் தேர்தலில் பெண்கள் போட்டியி டவும், வாக்களிக்கவும் தற்போதைய மன்னர் சல்மான் அனுமதி அளித் தார். இந்த நிலையில் அங்கு நாளை (12ஆம் தேதி) நகராட்சித் தேர் தல் நடக்கிறது.
அதில், தங்கள் உரி மைகளுக்காகப் போரா டிய பெண்கள் தங்கள் வாழ்நாளில் முதன் முறை யாக ஓட்டு போடுகிறார் கள். அதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் பெண்கள் தீவிர பிரசாரத் தில் ஈடுபட்டனர். அங்கு அவர்கள் ஆண்களிடம் நேருக்கு நேராக முகத்தை பார்த்து பேசக்கூடாது. ஏதாவது தடுப்புக்கு பின் னால் நின்றே பேச வேண் டும். அல்லது அவர்களது ஆண் உறவினர்கள் உடன் இருக்க வேண்டும்.
தேர்தல் பிரசாரத்துக்கு வாகனங்கள் மற்றும் விளம் பரப் பலகைகள் மற்றும் சமூக வலைத் தளங்களை பயன்படுத்தக் கூடாது. தொலைக்காட்சியில் தோன்றி பிரசாரம் செய் யக்கூடாது. அது போன்று ஆண் வேட்பாளர்களும் பெண்களிடம் நேருக்கு நேராக பேசி ஓட்டு கேட் கவும் தடை செய்யப்பட்டு உள்ளது. எது எப்படி இருந்தாலும் நாளை நடை பெறும் தேர்தல் மூலம் சவுதி அரேபிய பெண்கள் ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கின்றனர். ஒன்று தேர்த லில் போட்டியிடும் வாய்ப்பு, மற்றொன்று தேர் தலில் ஓட்டு போடுவதாகும்.
-விடுதலை,12.12.15

சனி, 5 டிசம்பர், 2015

விண்வெளி சென்ற முதல் அமெரிக்க பெண் சாலி ரைட்


1983ஆம் ஆண்டு சாலி ரைட் விண்வெளிக்கு சென்றார் . அப்போது அமெரிக்கா வானில் வெற்றகரமாக ஏவிய சேலஞ்சர் விண்கலத்தில், முதல் அமெரிக்க பெண்ணாக சாலி பயணித்தபோது அவருக்கு வயது 32.
இவர் மொத்தம் 343 மணி நேரம் விண்வெளியில் இருந்துள்ளார். இவர் பயணித்த விண்கலம் சிக்கல் ஏதுமின்றி தரையிறங்கியது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, சாலி ரைட் ஒரு தேசிய வீராங்கனையாக மதிக்கப்படுவார் என அறிவித்துள்ளார்.

-விடுதலை,14.8.12

சீனாவின் முதல் பெண் விண்வெளி வீரர்!

சீனா முதன்முறையாக பெண் விண்வெளி வீரர் ஒருவருடன் விண்கலமொன்றை இன்று விண்ணுக்கு ஏவுகிறது. ஒரு பெண் உட்பட 3 விண்வெளி வீரர்கள் அடங்கலாக ஷென்ஷோவு 9 எனும்  விண்கலம் ஜூன் 2012 16ஆம் தேதி, இற்கு ஜியூக்குவான் ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்டது.
விண்ணில் இயங்கி வரும் சீனாவின் விண் நிலையமான டியாங்கொங் - 1 உடன் சேர்ந்து விண்வெளி குறித்து ஆய்வு செய்யவிருக்கிறது இவ்விண்கலம். எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை இது போன்று பல விண்கலங்களைப் படிப்படியாக ஏவி, இந்த டியாங்கொங் - 1 எனும் விண் நிலையதில் பல வீரர்கள் தங்கி ஆய்வு செய்யக் கூடியவாறு அதனை  நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஒப்பாக கட்டி எழுப்புவதே சீனாவின் நோக்கம் ஆகும்.
இவ் விண்கலத்தில் செல்லவுள்ளவர்களில் ஜிங் ஹைப்பெங், லியூ வாங் ஆகிய இரு ஆண் வீரர்களும்,  லியூ யாங் எனும் பெண் வீரரும் அடங்குவர். 33 வயதான லியூ யாங்  எனும் சீன வான்படையின் தளபதியாகக் கடமையாற்றியவர். 

-விடுதலை,21.8.12

வெள்ளி, 4 டிசம்பர், 2015

மருத்துவப் புரட்சிக்கு வித்திட்ட கறுப்புத் தாய்!

அமெரிக்காவில் வர்ஜினியா என்ற மாநிலத்தின் ஒரு பகுதியில் ஒரு புகை யிலை விவசாய - அடிமைகளாக முன் னோர்கள் இருந்த கறுப்பின அமெரிக்கப் பெண்மணி ஹென்ரிட்டா லாக்ஸ்.
இவர் 5 ஆவது, 6 ஆவது வகுப்பு மட்டுமே படித்த ஒரு ஏழைப் பெண்மணி. அய்ந்து (5) குழந்தைகளுக்குத் தாயாகி விட்டவர்.
1951 இல் அவர் மெரிலாண்ட் பகுதியில் (வாஷிங்டன் டி.சி. - அருகில் உள்ள பகுதிதான்) பிரபல ஜான்ஹாப் கின்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்!
குழந்தைப் பருவம் முதலே இந்த பெண்மணிக்கு மூச்சுத் திணறல் வரு வதுண்டு அடிக்கடி. மூக்குப் பகுதி கொஞ்சம் வளைந்திருக்கும் (Deviated Septum) பல ஆண்டுகளாக பல் வலி உபாதையும் அடிக்கடி.
15 வயது முதலே கணவனோடு தாம்பத்திய வாழ்வு. பிறகு உடலுறவில் நாட்டமில்லை. காரணம், அவர்களை அறியாமலேயே அந்தப் பெண்ணுக்கு கருப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer). இவரது தாய், தந்தைக்கு இவர் 10 பிள்ளைகளில் மூத்தவர்.
இந்தப் பெண்ணை ஜான் ஹாப் கின்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள். அது அவருக்கு வெளிநாடு போல் தோன்றியது. காரணம், அவர்கள் பேசும் ஆங்கிலம்கூட இவருக்குச் சரிவரத் தெரியாது.
புகையிலை விவசாய அறுவடை, பன்றி வளர்ப்பு - இவைதாம் இவருக்குத் தெரியும்.
இவருக்கு Cervix என்ற சொல்லோ, Biopsy என்ற வார்த்தையோ எதுவும் தெரியாது! எழுதப் படிக்கவே தெரி யாதவர் இவர்!
தனது வலி பற்றி டாக்டர்களிடம் சொன்னார்; ரத்தம் கசிந்து கொண் டிருந்ததை அறிந்து கூறினார். மூன்று மாதம் கழித்து ஒரு பெரிய கட்டியாக அது மாறியது.
அவர் உயிருடன் மருத்துவமனையில் இருக்கிறபோது, அவருக்குத் தகவல் தெரியாமலேயே அவரது உடம்பிலிருந்து செல்கள்(Cells)
எடுத்து குளிர்பதனப் பெட்டி அறையில் வைக்கப்பட்டன! அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அந்த செல்கள் எடுத்து வைக்கப்பட்டன.
பொதுவாக  இப்படி எடுக்கப்படும் செல்கள் உயிருடன் இருப்பதில்லையாம்! இது மிகவும் உயிர் நிலையிலேயே பராமரிக்கப்பட்டு, இன்றும் பலவித நோய்களுக்கும், சிகிச்சைகளுக்கும் மூலாதாரமாகப் பயன்படுகிறதாம்!
மைக்ரோஸ்கோப் என்ற நுண் ணாடியின்மூலம் பார்த்தால் வறுக்கப்பட்ட முட்டை (Fried Egg) போல அந்த செல்கள் காணப்படுமாம்! ஹீலாவின் செல்கள் வளர்ந்தன; வளர்ந்துகொண்டே இருக்கின்றன 350 மில்லியன் அடிக்கு. (35 கோடி அடி நீளம்; 5 அடி அவரது உயரம்). அவர் இறந்துவிட்டார்; அவரி டமிருந்து எடுக்கப்பட்டு, பாதுகாத்து பராமரிக்கப்பட்டு மருத்துவ ஆராய்ச் சிக்குப் பயன்படும் அந்த செல்கள்மூலம் மருத்துவ ஆராய்ச்சி நாளும் வளர்ந் தோங்குகிறது இன்றும்கூட!
போலியோ வாக்சின், கீமோதெரபி, குளோனிங், ஜீன் மேப்பிங், விட்ரோ ஃபர்ட்டிலைசேஷன் போன்ற பல முக்கிய ஆய்வுகளுக்கு அவரது தியாகம் அவரது அனுமதியின்றியே அமெரிக்க டாக்டர்கள் செய்தது - மனித குல வளர்ச்சிக்கு அந்தக் கறுப்பின, ஏழைத்தாயின், படிக்காத ஒரு பெண் ணிடம் அறக்கொடை (செத்தும் கொடுத்ததால் அப்படி அழைப்பதில் தவறில்லையே) மனித குலத்திற்குப் பயன்படுகிறதே!
ஹெல்த் இன்ஷுரன்ஸ் கூட கட்ட முடியாத அந்த கறுப்புப் பெண்ணின் செல்கள் மூலம் இன்றும் - அவை பல நூறு கோடி டாலர்களை பலர் சம் பாதிக்க மூலதனமாக முதலாகப் பயன்படுகிறது!
இதை ஒரு நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர், பெண்தான் - சிறப்பான வரலாறாக மருத்துவ உலகின் மிகப் பெரிய புரட்சியாக மலர்ந்த ஒரு அருமை யான நூலாக படைத்துள்ளார்.  அண்மையில் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோது நியூஜெர்சியில் ஒரு பேரங்காடியில் இந்த நூல் ஒரு மூலையில் 20 சதவிகித தள்ளுபடியுடன் கிடைத்தது!
இந்நூல் எப்படிப்பட்டது?
‘‘A thorny and provocative book about cancer, racism, Scientific ethics, and cripping poverty’’ - The immortal life of Henrietta Lacks.
இதன் தமிழாக்கம்:
புற்றுநோய், இனவெறி, அறிவியல் நன்னெறி, வாழ்க் கையை முடக்கிப் போடும் வறுமை ஆகிய முட்களைப்பற்றி, ஆத்திர மூட்டக் கூடிய, சிந்தனையைத் தூண்டும் நூல் - ஹென்ரிட்டா லாக்சின் அழிவே இல்லாத வாழ்க்கை.
லாக்ஸ் மகளைக் கண்டுபிடித்து, கோபம் - சோகம் நிறைந்த அந்த மகளுடன் கலந்து பேசி இந்நூலை எழுதி உலகுக்கு இந்தக் கதையைத் தந்தவர் ரெபாக்கா ஸ்கூலூட் (Rebecca Skloots) என்ற பெண் எழுத்தாளர். இவர் ஒரு மனிதநேயர்; கடவுள் நம்பிக்கையற்றவரும்கூட. அவருக்கும் உலகு கடமைப்பட்டுள்ளது!
குறிப்பு: இந்நூல் 2010 ஆம் ஆண்டு பல பரிசுகளைப் பெற்ற ஒரு நூல்!
லாக்ஸ் செல்லை அவர் அனுமதியின்றி எடுத்த அமெரிக்க டாக்டர் இன்னமும் 100 வயது கடந்து வாழ்ந்து கொண்டுள்ளார். இதை நான் வேறு வழியில் கண்டறிந்தேன்!
-விடுதலை,5.9.12

புதன், 2 டிசம்பர், 2015

உலகின் முதல்' பெண்கள்


அமெரிக்கா
  • அமெரிக்க தபால் தலையில் இடம் பெற்ற முதல் பெண்மணி : மகாராணி இஸபெல்லா, ஸ்பெயின் (1893)
  • அமெரிக்காவில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி : எலிசபெத் பிளாக் வெல் (1849)
  • அமெரிக்காவின் முதல் பெண் வழக்கறிஞர் : அராபெல்லா மான்ஸ் ஃபீல்டு (1869)
  • அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி : சான்ட்ரா டே ஒகோன்னர் (1981)
  • அமெரிக்காவின் முதல் பெண் அட்டர்னி ஜெனரல் : ஜானெட் ரெனோ (1993)
  • அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் தூதர் : பாட்ரிக்கா ஆர் ஹாரிஸ், லக்சம் பார்க் (1965)
  • அமெரிக்க காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி : ஜானெட் ரான்கிங், மோன்டானா (1916)
  • அமெரிக்காவின் முதல் பெண் அயலுறவுச் செயலர் : மாடலின் ஆல்பிரைட் (1996)
  • அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகரான முதல் பெண்மணி : கோண்டலீஸா ரைஸ் (2001)
  • அமெரிக்காவின் முதல் முதல் பெண்மணி : மார்த்தா வாஷிங்டன்
  • வடமுனை சென்றடைந்த முதல் பெண்மணி : ஆன் பான்ரோஃப்ட், அமெரிக்கா (1986)
  • முதல் கறுப்பின பெண் நீதிபதி : ஜேன் மடில்டா போலின், நியூயார்க் நகரம் (1939)
  • உலகின் முதல் பெண் ஒலிம்பிக் மாரத்தான் சாம்பியன் : ஜோன் பெனோயிட், லாஸ் ஏஞ்சல்ஸ் (1984)
இங்கிலாந்து
  • பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் : மார்க் ரெட் தாட்சர் (1979)
  • சூப்பர்சானிக் கான்கார்ட் விமானத்தின் முதல் பெண் பைலட் : பார்பரா ஹார்மர், பிரிட்டீஷ் ஏர்வேஸ் (1993, மார்ச் 25)
  • பிரிட்டனின் முதல் பெண் உள்துறை செயலர் : ஜாக்வி ஸ்மித் (2007 ஜூன்)
  • சர்வதேச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைவர்: ரோஸலின் ஹிக்கின்ஸ், பிரிட்டன் (சர்வதேச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும் இவரே) (2006, பிப்ரவரி 6)
  • பக்கிங்காம் அரண்மனையில் குடிபுகுந்த முதல் ஆங்கில அரசு வாரிசு : விக்டோரியா மகாராணி (1837)
  • ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண்மணி : சார்லோட்டே கூப்பர், பிரிட்டன், ஒற்றையர் டென்னிஸ்
இந்தியா
  • உலக சுகாதார அமைப்பின் உலக சுகாதார அசெம்ப்ளி தலைவரான முதல் பெண்மணி : ராஜ்குமாரி அம்ரித் கௌர், இந்தியா (1950)
  • ஆங்கிலக்கால்வாயை நீந்திக் கடந்த முதல் ஆசியப் பெண்மணி : ஆரதி சாஹா. இந்தியா (1959)
  • உலகின் முதல் பெண் ஏர்பஸ் பைலட் : துர்பா பானர்ஜி, இந்தியா (1987)
  • ஆசியாவின் முதல் பெண் ரயில்  ஒட்டுநர் : சுரேகா யாதவ், இந்திய ரயில்வே (1992)
ஏனைய நாடுகள்
  • செயற்கை இதயம் பொருத்திக் கொண்ட முதல் பெண்மணி : மேரி லுண்ட் (1986)
  • சொந்தமாக தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத் தைத் துவங்கிய முதல் கறுப்பினப் பெண்மணி : ஒப்ரா வின்ஃப்ரே, பில்லினியரான முதல் கறுப்பினப் பெண்மணியும் இவரே (1986)
  • ஒரு செய்தித்தாளின் முதல் பெண் எடிட்டர் : ஆன் ஃபிராங்ளின், தி நியூபோர்ட் மெர்க்குரி (1762)
  • வரலாற்றில் பதிவான உலகின் முதல் புகழ் பெற்ற பெண்மணி : ஹாட்ஷேப்கட் (கி.மு. 1479)
  • உலகின் முதல் பெண் பிரதமர் : சிரிமாவோ பண்டார நாயகே, இலங்கை (1960)
  • உலகின் முதல் பெண் அதிபர் : இஸபெல் பெரோன், அர்ஜென்டினா (1974)
  • ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் பெண் தலைவர் : விக்டிஸ் ஃபின் போகாடோட்டிர், அதிபர், ஐஸ்லாந்து (1980)
  • இஸ்ரேல் நாட்டின் முதல் பெண் பிரதமர் : கோல்டா மேயர் (1964)
  • பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர் : கொரோஸான் அகினோ (1986)
  • கனடாவின் முதல் பெண் பிரதமர் : கிம் காம் பொல் (1993)
  • ஜெர்மனியின் முதல் பெண் சான்சிலர் : டாக்டர் ஏஞ்சலா மெர்கல் (2005)
  • சிலி நாட்டின் முதல் பெண் அதிபர் : மிச்செல் பாச்லெட் (2006)
  • ஒரு நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி : எல்லன் ஜான்சன் சர்லீஃப் லைபீரிய அதிபர் (2005)
  • துருக்கியின் முதல் பெண் பிரதமர் : தான்சு சில்லர் (1993)
  • விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் கறுப்பினப் பெண்மணி : அல்தியா கிப்ஸன் (1957)
  • கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் பெண்மணி : மௌரீன் காதரின் (1953)
  • ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த முதல் பெண்மணி : கெர்ட்ரூட் எடர்லே, 14 மணி 39 நிமிடங்கள் (1926, ஆகஸ்ட் 3)
  • நூறு நாட்களில் தனியாக உலகைப் படகு மூலம் சுற்றி வந்த முதல் பெண்மணி : எர்லென் மக் ஆர்தர், ஆங்கில கடற்பயணி (2001)
  • தனியாக உலகைப் பறந்து சுற்றிய முதல் பெண் மணி : ஜெர்ரி ஃபிட்ரிட்ஸ் மோக், 29 நாட்கள் (1864)
  • ஆக்சிஜன் இன்றி எவரெஸ்டில் ஏறிய முதல் பெண்மணி : லிடியா பிராடே, நியூசிலாந்து (1988)
  • எவரெஸ்டை அடைந்த உலகின் முதல் பெண்மணி : ஜீங்கோ தாபேய், ஜப்பான் (1975 மே, 16)
  • விண்வெளி சென்ற உலகின் முதல் பெண்மணி : வாலென்டினா தெரஷ்கோவா, ருஷ்யா (1963)
  • விண்வெளி சென்ற முதல் கறுப்பினப் பெண்மணி : மா கரோல் ஜெமிசன். என்டவர் (1992)
  • விண்வெளியில் நடந்த உலகின் முதல் பெண் மணி : காத்ரின் டி. சுல்லிவன், சாலஞ்சர் பயணம் (1984)
  • உலகின் முதல் விண்வெளி பெண் சுற்றுலாப் பயணி : அனுஷ் அன்சாரி, இரான் (2006)
  • உலகின் முதல் ஹெலிகாப்டர் பெண் பைலட்: ஹன்னா ரெயிட்ஷ், ஜெர்மனி (1938)
  • அய்ரோப்பாவில் மருத்துவராகத் தேர்வு பெற்ற முதல் பெண்மணி : டாக்டர் மரியா மான்டசேரி, இத்தாலி (1896)
  • பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய உலகின் முதல் நாடு : நியூசிலாந்து (1893)
  • -விடுதலை,7.8.12

செவ்வாய், 1 டிசம்பர், 2015

பருவமடைந்த பெண்களுக்குரிய உணவுகள்- நேயன்

ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் உடல் ரீதியாக பலஇழப்புகளை அடைகிறார்கள். மாதாமாதம் உதிரப்போக்கு, பிள்ளைபெறல், பாலூட்டல் போன்றவை. எனவே, பெண் பிள்ளைகள் சத்தான உணவு கொடுத்து வளர்க்கப்பட வேண்டும்.
சத்தான உளுந்தங்களி
தேவை: வெல்லத்தூள் இரண்டு டம்ளர், உளுந்தம் பருப்பு ஒரு டம்ளர், நெய், நல்லெண்ணெய் கால் டம்ளர், ஏலத்தூள் தேவைக்கேற்ப.
செய்முறை: உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும். இறக்கி ஆறிய பின் மிக்சியில் பவுடராக அரைக்கவும். வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதி வந்த பின் ஆறவிட்டு வடிகட்டவும்.
அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பின், உளுந்து மாவு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கை விடாமல் கிளறவும். பிறகு இதனுடன் வெல்லக்கரைசல், ஏலத்தூள் சேர்த்து மாவு நன்கு வேகும்வரை கிளறி நெய்விட்டு ஒரு சுற்று கலந்து இறக்கி பரிமாறவும்.
மருத்துவப் பலன்: 1. உளுந்தின் புரதம், வெல்லத்தின் இரும்புச் சத்துகள் கிடைக்கும். 2. ஏலத்தூள் சேர்ப்பதால் கபத் தொல்லை வராது. 3. நல்லெண்ணெயில் செய்வதால் எலும்புகள் வலுவடையும். 4. நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்ப்பதால் உடல் சூடு தணியும்.
உளுந்து - தேங்காய் பாயசம்
தேவை: வெல்லம் ஒரு டம்ளர், தோல் நீக்கிய உளுந்து _ தேங்காய்த் துருவல் தலா அரை டம்ளர், ஏலத்தூள் _ நெய் தலா அரை தேக்கரண்டி, முந்திரி _ திராட்சை தலா 5.
செய்முறை: நெய்யை வாணலியில் காயவிட்டு முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுக்கவும். வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, ஒரு கொதி வந்து கரைந்த பின் வடிகட்டவும். உளுந்தை 20 நிமிடம் ஊறவைத்து களைந்து, தேங்காய்த் துருவல் _ ஏலத்தூள் சேர்த்து நைசாக நீர்க்க அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் அரைத்த விழுதைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து, நன்கு வேகும் வரை கை விடாமல் கிளறவும். பிறகு வெல்லக் கரைசல் சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கி, வறுத்து வைத்த முந்திரி _ திராட்சையை மேலே அலங்கரித்து பரிமாறவும்.
மருத்துவப் பயன்: 1. பூப்படைந்த பெண்களுக்கு அந்த நேரத்தில் எலும்புகள் வளர்ச்சி பெறும். இந்த உளுந்து பாயசம் அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கு பெருமளவில் உதவி புரிகிறது. உதிரப் போக்கால் ஏற்படும் சோர்வு. பலவீனத்தை நீக்கி உடலை பலப்படுத்தும். 2. உளுத்துப் போன உடலுக்கு உளுந்து என்பார்கள். 3. வெல்லத்தின் இரும்புச் சத்தும், உளுந்தின் புரதச் சத்தும் கிடைக்கும். வாரம் ஒரு முறை தாராளமாக தரலாம்
வாழை - முருங்கைப்பூ பொரியல்
தேவை: வாழைப் பூ ஒன்று, முருங்கைப் பூ _ முருங்கைக் கீரை தலா ஒரு கைப்பிடி. வேர்க்கடலை கால் டம்ளர். ஒரு பெரிய வெங்காயம். மிளகாய் வற்றல் 4. தேங்காய் துருவல் 5 தேக்கரண்டி. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி. கடுகு உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தாளிக்க எண்ணெய், உப்பு தேவைக்கு.
செய்முறை: வாழைப் பூவின் மேல் மடலை அகற்றிவிட்டு, பூக்களின் நடுவே சிறிய தீக்குச்சி போல இருப்பதை நீக்கி, பொடியாக நறுக்கி தண்ணீரில் போடவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும். முருங்கைக் கீரையை அலசி ஆய்ந்து வைக்கவும். முருங்கைப் பூவையும் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.,
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம்பருப்பு, வெங்காயம் போட்டு தாளித்து... வாழைப்பூ, முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, மஞ்சள் தூள், உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். வேர்க்கடலையுடன், மிளகாய் வற்றல் சேர்த்து மிக்சியில் பொடிக்கவும்.
வாழைப்பூ நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் தேங்காய்த் துருவல், வேர்க்கடலைப் பொடியைக் கலந்து கிளறி சற்று நேரம் கழித்து இறக்கி பரிமாறவும்.
மருத்துவ நன்மை: 1. பூப்பெய்திய பெண்களுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு வாழைப் பூ சிறந்த மருந்தாகும். 2. முருங்கைக் கீரை மற்றும் முருங்கைப் பூவின் இரும்பு சத்தானது அதிக உதிரப் போக்கால் உருவாகும் சோகையைப் போக்கும். 3. தேங்காய் _ வெங்காயம், உடல் சூட்டை தணிக்கும். 4. வேர்க்கடலையின் புரதச் சத்தும் கிடைக்கும்.
-உண்மை,16-30.11.15

சனி, 28 நவம்பர், 2015

ஒரு பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!



இந்திய அரசியல் சாசனம் நாட்டுக் குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை அளித்துள்ளது. நாட்டுப் குடிமக்களுக்கு, அவர்கள் விருப்பப்படி, நாட்டு நலனுக்கு ஏற்ற முறையில், மக்களின் நன்மைகளை வலியுறுத்தும் வகையில் பல சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த உரிமை, குடிமக்களோ அல்லது அயல்நாட்டுவாசிகளோ, குற்றம் செய்தால், அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் காவல்துறை, அவர்கள் கைது செய்ய உரிமை பெற்றுள்ளது. காவல்நிலையக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, வன்முறை, சித்திரவதை நடக்க வாய்ப்பிருக்கிறது. அடிப்படை உரிமைகளின் அத்துமீறலுக்கு வழிவகுக்கிறது.
ஒரு குடிமகனைக் கைதுசெய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிய முதல் திருப்புமுனை தீர்வு D.K.Basu Vs. State Case என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்திலிருந்து வந்தது. இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை செய்ய, காவல்துறை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைக் குறித்து உச்சநீதிமன்றம் சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைஅறிவித்துள்ளது.
இதனால், போலீஸ் காவலில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும்போது, சித்திரவதைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும். ஆனால், இந்தியாவில் பெண்கள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும்பொழுது பல சூழ்நிலைகளில் அவர்கள் காவல் நிலையத்தில் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பெண்கள் பல காவல் நிலையங்களில் பாலியல் கொடுமைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உச்சநீதிமன்றமும், அரசியல்வாதிகளும் சேர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்காக பல வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.


பெண்களைக் கைது செய்யும்போது காவல்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:-
1.    கைது செய்யப்பட்ட பெண்களை, ஆண் குற்றவாளிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, தனி லாக்-_அப்பில் அடைக்கப்பட வேண்டும். தனியாக லாக்_அப் இல்லாவிட்டால், பெண்களை தனி அறைகளில் அடைக்க வேண்டும். மேலும், பெண்கள் கைது செய்யப்படும்போது, பெண் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2.    பெண்களை, சூரிய அஸ்தமனம் -_ சூரிய உதயம் இடையே அதாவது இருட்டியபிறகு, கைது செய்யக்கூடாது. ஆண் காவலர்களால் பெண்கள், பாலியல் தொல்லைகளுக்கு காவல் நிலையத்திலேயே ஆளாக்கப்பட்டதால், இந்த விதி உருவாக்கப்பட்டது.
3.    மூன்றாவதாக, பெண்களை, சிறுமிகளை காவல் நிலையத்திற்கோ, வேறு இடங்களுக்கோ விசாரணை செய்ய அழைக்கக்கூடாது. அவர்கள் வசித்துவரும் வீட்டில்தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை செய்ய வேண்டிய நேரமும், முறையும் பெண்களுக்கு கூச்சத்தை, அவமானத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
4.    பெண் கைதிகளுக்கு, அல்லது வேறு பெண்களுக்கு மருத்துவ சோதனை செய்ய பெண் மருத்துவர்களையே அனுமதிக்க வேண்டும். பெண் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த மருத்துவ பரிசோதனை கையாளப்பட வேண்டும். பெண் கைதிகள் குழந்தை பெற்றால், Prenatal and Postnatal Care  பராமரிப்பு அளிக்க வேண்டும்.
5.    பெண்கள் பேறுகாலத்தில் இருந்தால், அவர்களை கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்ல, கருவில் இருக்கும் சிசுவும் சேதமுற வாய்ப்புகள் இருப்பதால், இந்த முடிவை முடிந்த அளவிற்குத் தவிர்க்க வேண்டும். மேலும், கருத்தரித்த பெண்களை கட்டுப்படுத்தக் கூடாது.
ஓரளவு சுதந்திரம் அளிக்க வேண்டும். பெண்களையும், சிறுமிகளையும் பெண் காவலர்கள் அல்லது பெண் அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். பெண் காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
 -உண்மை இதழ்,1-15.6.15

திங்கள், 16 நவம்பர், 2015

இந்து சகோதரிகாள்!


பி.ஜே.பி., மற்றும் ஆர். எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவாரைச் சேர்ந்த இந்துத் துவ அமைப்பில் இருக்கும் பெண்கள்  சிந்திப்பதற் கான உண்மைகள், தக வல்கள் ஏராளம் உண்டு!
வடமொழியிலிருந்து சுலோகம் ஒன்று ஆங்கி லத்தில் மொழி பெயர்க்கப் பட்டு இந்தியன் எக்ஸ் பிரஸ் ஏட்டில் முதல் பக்கத்தில் வெளி வந்தது.
Only when fire will cool, the moon Burn, or the ocean fill with tasty water will a woman pure.
(இந்தியன் எக்ஸ்பிரஸ் 24.12.1990)
எப்பொழுது தீ தென்ற லாக மாறுகிறதோ, நிலா நெருப்பாக மாறுகிறதோ, அல்லது கடல் சுவை நீரால் நிரப்பப்படுகிறதோ, அப் போதுதான் ஒரு பெண் ணும் தூய்மையான வளாக இருப்பாள் - இது தான் இந்தியன் எக்ஸ் பிரஸ் வெளியிட்ட ஆங்கி லத்தில் இருந்த சுலோகத் தின் பொருளாகும்.
விடுதலை வெளி யிட்டு இருந்தால் வேறு கண்ணோட்டத்தில் பேசக் கூடும்; வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு அல்லவா?
பி.ஜே.பி. - இந்து முன்னணி வகையறாக்கள் என்பதைவிட இவ்வமைப் புகளில் உள்ள சகோதரிகள் சிந்திக்க வேண்டும். இந்த அமைப்புகள் கூறும் இந்து ராஜ்ஜியத்தில் இவைதானே சட்டாம்பிள்ளைகள்?
கணவன் இறந்தவுடன் மனைவியும் உடன்கட்டை ஏ(ற்)றும் கொடுமை இந்த அர்த்தமுள்ள (?) இந்து மதத்தில்தானே இருந்தது.
வெள்ளைக்காரன் கிறிஸ்தவன் - அவன் இந்த நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டான் என்று ஆக்ரோசமாக வார்த்தைகளைக் கொட்டு வார்கள்; அந்த வெள்ளைக் காரன் சதி என்ற உடன் கட்டை ஏ(ற்)றுதலை சட் டப்படி ஒழிக்காவிட்டால் ஒரு வசந்த்ரா ராஜே ராஜஸ் தான் முதல் அமைச்சராக இருக்க முடியுமா? ஒரு விஜயலட்சுமி பண்டிட் அய்.நா.வின் தலைவராக வந்திருக்க முடியுமா? ஒரு சிவசங்கரி எழுத்தாளராக  உலா வர முடியுமா?

கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங்கால் சதி (உடன்கட்டை) தடை செய்யப்பட்டபோது, இந்திய இராணுவத்தின் கமாண்டர் - இன் - சீஃப் சர் சார்லஸ் நேப்பியரை பார்ப்பனர் குழு ஒன்று சந்தித்து, இந்துக்களின் தேசிய பழக்க வழக்கங் களில், கலாச்சாரங்களில் தலையிடுவதில்லை என்று பிரிட்டீஷ் மகாராணி உறுதி அளித்திருப்பதை அவருக்கு நினைவுப்படுத் தினார்கள்.
அதற்குக் கமாண்டர் - இன் - சீஃப் நேப்பியர் சொன்ன பதில் தான் அலாதியானது. ஆம் அழகானது!
என்னுடைய நாட்டி லும் ஒரு பழக்கம் இருக் கிறது. பெண்களை உயி ருடன் எரிக்கும் ஆண் களைத் தூக்கில் தொங்க விடுவதுதான் அந்தப் பழக் கம். நாம் எல்லோரும் நமது தேசங்களின் வழக்கப்படி தான் நடக்கிறோம் என்று பதிலடி (தி வீக் - அக் டோபர் 11-17 (1987) கொடுத் தாரே பார்க்கலாம்! வந்த பார்ப்பனக் குழுவோ கப்-சிப்! என்ன சொல்கிறீர்கள் இந்துத்துவா சகோதரிகளே?
- மயிலாடன்
விடுதலை,28.9.15

ஞாயிறு, 15 நவம்பர், 2015

ஓர் திறந்த மடல்



டாக்டர் இள.பதக், அகமதாபாத் பெண்கள் செயற்குழுவை நிறுவியவர்; இன்றைய அதன் தலைவர்.
குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, இந்திய வணிக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (Ficci)
பெண்கள் அமைப்பின் 29ஆவது அமர்வில் பேசி யுள்ளதை ஊடகங்கள் செய்தியாக்கி யுள்ளன. அந்த பெண்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு டாக்டர் பதக் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதம் தான் இது:
ஊடகங்களில் வெளியாகும் செய்திகளிலிருந்து நமது முதல்வர் நரேந்திரமோடியின் சரளமான பேச்சைக் கண்டும் கேட்டும் நீங்கள் வியப்படைந்திருப்பீர்கள். குஜராத்தில் உள்ள பெண்களைப் பற்றியா அவர் பேசியுள்ளார்? இல்லை. குஜராத்தில் உள்ள உண்மை நிலையை உங்களுக்குத் தெரிவிக்க ஆசைப்படுகிறோம்.
குஜராத்தில் பெண்களின் எண் ணிக்கை குறைந்து போய் விட்டது. 2001-இல் 1000 ஆண்களுக்கு 921 பெண்கள் இருந்தனர். 2011இல் 918 ஆகக் குறைந்துவிட்டது. இதே பத்தாண்டுகள் கட்டத்தில் டில்லியில் அது 45ஆகவும் ராஜஸ்தானில் 4 ஆகவும் உயர்ந்துள்ளது.
18ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பெண் சிசுக் கொலையைப்பற்றி மோடி பேசியுள்ளார்.
2011இல் அரசு பெண் களுக்கான சோனோகிராபி (Sonography) மருத்துவமனைகளை மூடியுள்ளது 2012லும் மற்றும் சில மூடப்பட்டன. மேற்கொண்டு எந்த செயல்பாடும் இல்லை. இதுதான் மோடியின் அரசு!
திருமணமான பெண்களைப்பற்றிய 2006ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15 முதல் 49 வயதான பெண்களில் 55லு விழுக்காடு சோகை நோய் பிடித்தவர்களாக உள்ளனர்.
60.8 விழுக்காடு கருவுற்ற பெண்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்களாகவும் சோகை பிடித்தும் உள்ளனர். 1998-_99 இல் 74.05 விழுக்காடு பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோரின் 6.-38 மாதங்கள் வயது கொண்ட குழந்தைகள் ஊட்டச் சத்து குறைந்தவர்களாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2005-_2-006ல் அந்த எண்ணிக்கை 79.8 விழுக்காடு ஆக உயர்ந்துள்ளது. சென்ற தேர்தலின் போது இது எடுத்துப் பேசப்பட்ட பொழுது, அதற்கான அமைச்சர், குழந்தைகளுக்கான செறிவூட்டப்பட்ட அந்த உணவுப் பொட்டலங்கள் எங்கே என்று தேடப் போனார்? இதுதான் குஜராத்தின் நிர்வாகம்!
தாய்மார்களின் மரண எண் ணிக்கையும் சிசுக்களின் மரண எண் ணிக்கையும் குறையவில்லை. குஜராத் தில் ஒன்று, அவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லது நோஞ் சான்களாக வாழ்ந்து கொண்டுள்ளனர்!
அரசு மருத்துவமனைகளிலும், தாலுகா அல்லது மாவட்ட மருத்துவ மனைகளிலும் மகப் பேறு மருத்துவர்கள் நியமிக்கப்படாததால், இளம் தாய்மார்கள் மடிகிறார்கள். பெரும் நகரங்களில் அத்தகைய மருத்துவர்கள் உண்டு. அதனால் பல பெண்கள் ஆம்புலன்சுகளிலும், பேருந்துகளிலும் குழந்தை பெற நேரிடுகிறது. இளம் பெண்களின் உயிர் பற்றி அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இளம் பெண்களின் உயிர் பற்றியோ, ஏன் இளம் ஆண்களின் உயிர் பற்றியோ அரசு கவலைப்படுவதாகத் தெரிய வில்லை. அவர்களைக் காப்பாற்றுவதற் கான எந்தத் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனை மருத்துவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தார். குஜ ராத்தில் பலர் பறவைக் காய்ச்சலால் தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்களுக்கான கல்வி இலவசம் என்று சொல்லப்படுகிறது. சென்ற இரண்டு வருடங்களாக, அதற்கான பள்ளிகளையும் கல்லூரிகளையும் ஊக்குவிப்பதை நிறுத்தி விட்டது. நல்ல கல்வி வேண்டுமானால் தற்பொழுது பெண்கள், மிக அதிகமான பணம் கொடுத்தால்தான் பெற முடியும் அதுதான் குஜராத்தின் நிர்வாகம்! உள்ளாட்சி நிர்வாகங்களில் பெண் களுக்கு 50 விழுக்காடு இடம் வேண்டும் என மோடி பேசுகிறார். ஆனால், டாக்டர் திருமதி க. மாலானி குஜராத்தின் கவர்னர்தான் ஒரு பெண்ணாக இருந்தும் கூட அந்த சட்டம் நிறைவேறுவதற்கான கையெழுத்தை இடவில்லை. ஏனென் றால், கட்டாய வாக்களிப்பு பற்றிய மற்றொரு தீர்மானத்துடன் அது இணைக்கப்பட்டிருந்தது. தனித் தனியாகப் பிரித்து சட்டமுன் வரைவு களை நிறைவேற்றி அனுப்பினால், தான் கையெழுத்து இடத் தயாராக இருப்ப தாகச் சொல்லி, கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார். அதற்காக கவர்னர் தான் ஒரு பெண்ணாக இருந்தும், கையெழுத்திடாமல் திருப்பி விட்டார் என்று குற்றம் சுமத்தப்படுகிறது. அவர் பெண்ணாக இருந்தாலும்கூட என்பது அழுத்தம் கொடுத்துச் சொல்லப் படுகிறது. இதே போல அரை உண்மைகளே மட்டும் சொல்வதுதான் மோடியிசத்தின் சிறப்பு.
மோடி, குஜராத் கவர்னரைச் சிறுமைப்படுத்த வேண்டும். ஏனென் றால், அவர் விரும்பாத லோக் ஆயுக் தாவை நிறுவ கவர்னர் நடவடிக்கை எடுத்தார். நீண்ட நாட்களாக கொண்ட அந்தத் தொடர் சண்டை உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
2012 மே மாதத்தில் குஜராத்தில் 422 மகளிர் பஞ்சாயத்துக்கள் அமைக்கப் பட்டன. ஓட்டெடுப்பு இல்லாமல் ஒப்புதல் மூலமே பெண்கள் நியமிக்கப் பட்டனர். இந்த முறை ஜனநாயக உரிமையை மறுப்பதுடன், கிராம அளவில் வல்லமையோ செல்வாக்கோ மிக்கவர்களுக்கே சாதகமாக அமையும். பல நேரங்களில் கணவன்மார்களின் பிரதிநிதிகளாக பெண்கள் செயல் புரிய நேருகிறது. பெண்கள் தனிமைப் பொறுப்பிலிருக்கும் பஞ்சாயத்துக் களைப் பற்றி பெருமையாகப் பேசும் மோடி, அரசியல் சட்டப்படி உயர்நிலையிலுள்ள ஒரு பெண்ணான கவர்னரைப்பற்றி, சுயமரியாதைபற்றி கவலைப்படவில்லை. கூட்டம் முடிந்த வுடன் மக்கள் சிரித்துக் கொண்டே வீடு திரும்பும் வரை மோடியின் ஒட்டுகளுக்கும் பஞ்சமில்லை. அதனால் அவர் ஏன் மற்றவர் மான மரியாதை பற்றி கவலைப்பட வேண்டும்?
சென்ற பத்தாண்டுகளாக குஜராத் தில் குற்றங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. ஒவ்வொரு நாளும் கொள் ளைகள், முதியவர் மற்றும் பெண்கள் கொலைகள் கூடி வருகின்றன.
குற்றம் ஆண்டு             ஆண்டு    2001    2012
பாலியல் வன்முறை                     235      413
ஆட் கடத்தல்                                 731    1329
மற்ற குற்றங்கள் குறைந்தனவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. காவல் நிலையங்கள் குற்றங்களைப் பதிவு செய்ய விரும்புவதில்லை. காரணம், குற் றங்கள் மிகுந்தால், அவர்கள் கண்டிக் கப்படுவார்கள். அரசின் கண்ணோட் டத்தில் குறைந்த குற்றப் பதிவுகள், மாநிலத்தை குற்றமில்லாததாகக் கூட்டும் அல்லவா?
வாணிகம் குஜராத்திகளின் ரத்தத் தில் ஊறிப்போன ஒன்று பல பெண்கள் சொந்தத் தொழில்களை நடத்துகின்றனர்.
அவர்கள் உணவு வகைகள் மட்டுமில்லாமல் ஆடை அணிகலத் தொழில் உரிமையாளர்களாகவும் உள்ளனர்; சிறந்தும் விளங்குகின்றனர். ஆனால் லிஜ்ஜாத் அப்பளம் பழங்குடி பெண்களால் தயாரிக்கப்படுவதில்லை. அது ஒரு தவறான செய்தி.
மோடி முதல்வராக இருந்தும்கூட, குஜராத்தில் நீண்ட நாட்களாக பெண்கள் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்து வருகின்றனர்.
-விடுதலை ஞா.ம.,27.4.13

பெண்களுக்குப் பாதுகாப்பு


பாலியல் கொடுமைகளிலிருந்து மகளிரைக் காப்பாற்றக் கூடிய "ஷாக்' அடிக்கும் உள்ளாடைகள் வந்து விட்டன. சென்னையைச் சேர்ந்த ஆட்டோமொபைல் பொறியாளர்கள் பிரா போன்ற பெண்களின் உள்ளாடையில் 3800 கிலோ வாட் ஷாக் அடிக்கும் அமைப்பு, குளோபல் நிலைநிறுத்தும் சிஸ்டம் (GPS) மற்றும் மொபைல் தொலை தொடர்பு (GSM) கருவிகளை இணைத்து புதியதொரு சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். மனிஷா மோகன், ரிம்பி திரிபாதி, நீலாத்ரி பாசுபால் ஆகிய மூவரும் இணைந்து மேற்சொன்ன சாதனத்துக்கு "சமூக கவச சாதனம்' எனப் பெயரிட்டுள்ளனர். இந்த உள்ளாடையை பயன்படுத்தும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும்போது காவல்துறை மற்றும் பெண்ணின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும். சம்பவம் நடைபெறும் இடத்தை ஜி.எஸ்.எம். கருவி காட்டிக் கொடுத்துவிடும். இதுமட்டுமின்றி, 3800 கிலோ வாட் திறன் கொண்ட மின்சாரத்தை வெளிப்படுத்தி ஷாக் அடிக்கும். பெண்ணை நாடி வந்தவன் அப் பெண்ணைத் தொடுவதற்குக் கூடப் பயப்படுவான். இந்தக் கருவி 82 முறை இதுபோல ஷாக் அடிக்குமாம்!
-விடுதலை ஞா.ம.,27.4.13

கர்நாடகாவில் பெண்களுக்குஇட ஒதுக்கீடு


பெங்களூரு, அக்.11 கர்நாடக அரசுத்துறை வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கர்நாடக அரசுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலத்தில் தற்போது அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் மேலும் 3% உயர்த்தி 33 சதவீத மாக வழங்குவதற்காக கர்நாடக அரசு ஊழியர் சேவை விதிமுறை சட்டம் 1977இல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மூலம் ஏ, பி குரூப் பணியிடங்கள் உட்பட பி குரூப் பணியிடங்கள் வரை அனைத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக் கீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,11.10.15

சனி, 14 நவம்பர், 2015

எல்லாமே இருக்கு நம் விவசாயத்தில்!

பூட்டன், பாட்டன், தந்தை இவர்கள் அனைவரும் பரம்பரையாகச் செய்துவந்த விவசாயத்தை நாம் ஏன் புறக்கணித்தோம் என்ற கேள்வி திவ்யாவை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. எம்.பி.ஏ., முடித்து விட்டு மாதம் கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாய் சம்பாதித்த திவ்யாவை விவசாயத்தை நோக்கித் திருப்பியது எது?
திவ்யாவின் சொந்த ஊர், சென்னிமலையை அடுத்த கவுண்டன்பாளையம். அப்பா வாசுதேவனுக்கு விவசாயமும் வியாபாராமும் தொழில். அம்மா சுசீலா, இல்லத்தரசி. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஆறரை ஆண்டுகள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார் திவ்யா. கைநிறைய சம்பளம் கிடைத்தாலும் ஏதோ ஒரு போதாமை உணர்வு அவரது மனதுக்குள் நெருடிக்கொண்டே இருந்தது.
அப்பாவுக்கு வியாபாரத்தில் ஆயிரம்தான் வருமானம் வந்தாலும் எங்க தென்னந்தோப்புல இருந்து கிடைச்ச வருமானத்தைதான் என் படிப்பு செலவுக்குக் கொடுப்பார். ஒரு நாள் அதைப் பத்தி யோசிச்சப்பதான் விவசாய வருமானம் எவ்வளவு தனித்துவமானதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
நாமளும் விவசாயத் துறையில ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. நாலு மாசம் ஒரு பயோ டெக் கம்பெனியில வேலை பார்த்தி ருந்ததால, விவசாயத்தைப் பத்தியும் விவசாயிகளோட நிலை பத்தியும் என்னால் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது என்று சொல்லும் திவ்யா, தான் பார்த்துவந்த வேலையைத் துறந்தார்.
கோயம்புத்தூரில் விவசாய ஆலோசனை மய்யம் தொடங்கும் திவ்யாவின் முடிவுக்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு.
என்னோட இந்த முடிவை எல்லாருமே எதிர்த்தாங்க. ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்த்த நீ, சேத்துல இறங்கி வேலை செய்வியா?ன்னு என் கணவரே கேட்டார் - சொல்லும்போதே சிரிப்பு பொங்குகிறது திவ்யாவுக்கு. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்திவிட்டு தன் வேலைக்கான அடுத்த கட்டப் பணியில் இறங்கினார்.
பெண்களால் இயங்கும் மய்யம்
இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த ஆலோசனை மய்யத்தின் ஆலோசகர்களாக இருக்கிறார்கள். பல மாநிலங்களில் இருக்கும் இயற்கை வேளாண் இடுபொருள் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறார் திவ்யா. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டது திவ்யாவின் வேளாண் அறிவை விசாலமாக்கியது.
விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கவும், அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும் இங்கே விவசாய மருத்துவர்கள் இருக்கிறார்கள். முழுக்க முழுக்கப் பெண் ஊழியர்களைக் கொண்டு செயல்படுவது இந்த மய்யத்தின் இன்னொரு சிறப்பம்சம்!
-விடுதலை,10.11.15

வெள்ளி, 13 நவம்பர், 2015

நேபாள நாடாளுமன்றத் தலைவராக முதல் முறையாக பெண் தேர்வு



நேபாள், அக். 17_ நேபாள நாடாளுமன்றத் தின் தலைவராக முதல் முறையாக பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ளதை அடுத்து, நாடாளுமன்றத் தலைவராக நேபாள மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அன்சாரி கர்தி மகர் (37), வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
தங்களது கட்சி சார் பில் நிறுத்தப்பட்ட அனு ராதா தபா மகரின் வேட்பு மனுவை நேபாள தொழிலா ளர்கள் மற்றும் விவசாயி கள் கட்சி திரும்பப் பெற் றுக்கொண்டதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் களால் அன்சாரி கர்தி மகர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு முன்பு, நாடா ளுமன்றத்தின் துணைத் தலைவராக அன்சாரி கர்தி மகர் பதவி வகித்து உள்ளார். இதேபோல, நாடாளுமன்ற துணைத் தலைவராக கங்கா பிர சாத் யாதவ் என்ற பெண் ஒருமனதாக வெள்ளிக் கிழமை தேர்வு செய்யப் பட்டார்.
புதிய அரச மைப்பு பிரகடனப்படுத்தப் பட்டதை அடுத்து, நேபா ளத்துக்கான அரசியல் சாசனத்தை எழுதுவதற் காக இருந்த அரசியல் நிர்ணய சபை, நாடாளு மன்றமாக மாற்றப்பட்டது. அதையடுத்து, நேபா ளத்துக்கு புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,17.10.15

புதன், 11 நவம்பர், 2015

பெண் எனும் ஓர் ஆற்றல் அச்சமூட்டும் ஒரு செய்தி


- முனைவர் பேரா. ந.க. மங்களமுருகேசன்
தமிழகத்தையும், இந்தியாவையும் மட்டுமல்லாது சீனா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான தெற்காசிய நாடுகளையும் அச்ச மூட்டும் ஒரு விஷயம் இது பாலியல் வன்கொடுமை என்று இப்போது அதிகம் பேசப்படும் விஷயமா? இல்லை அதைவிட மிக மிக முக்கியமான அடிப்படை விஷயம் இது. அது -_- இது. விகிதாச்சார வேறுபாடு
பெண் குழந்தைகளின் பிறப்பு வீதத்தில் படிப்படியாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வீழ்ச்சி குறித்த தகவல்கள் இவை. ஆண் குழந்தை களுக்குச் சமமான பெண் குழந்தை களின் இந்த விகிதாச்சார வேறுபாடு உலகின் பெண் குழந்தைகள் அதாவது பெண்கள் அரிதாகும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடக் கூடிய ஆபத்துதான் அது.
பெரியாரும், திரு.வி.க.வும்
பெண்ணிய சிந்தனாவாதிகளான தந்தை பெரியாரும், தமிழ்த் தென்றல் திரு.வி.க.வும் போற்றி வளர்த்த பெண்மைக்கு மட்டுமல்ல, பெண்ணி யத்துக்கு மட்டுமல்ல, பெண் குழந்தை களின் எண்ணிக்கைக்கே ஏற்படும் குறைவுச் சிக்கல் இது. பெண்களின் முன்னேற்றத்திற்கான தலையாய விஷயங்கள், பெண்களின் இடஒதுக் கீடு, பெண்களின் நலனுக்கான சட்டப் பாதுகாப்புகள், ஆண்களுக்கு இணையான வாய்ப்பு ஆகியன குறித்தெல்லாம் பேசப்பட்டாலும் கூடப் பெண் குழந்தை களின் பிறப்பு பெரிய சோதனைக்கு, வேத னைக்கு ஆளாகிவிடும் உண்மை இது.
ஒன்றே போதும்
நாமிருவர் நமக் கிருவர் என்பதெல்லாம் போய், நாமிருவர் நமக்கொருவர் என்று ஆனபின், குடும்பம் ஒன்றுக்குக் குழந்தை ஒன்று எனும் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையினை அடைந்தபோது பெண் குழந்தையின் எண்ணிக்கை மிகவும் சரிந்தது. ஒரே ஒரு குழந்தை மட்டுமே போதும் எனும் எண்ணம் கொண்ட பெற்றோர், அந்த ஒன்றும் ஆண் குழந்தையாக இருக்கையில் அத்தோடு போதும் பிள்ளைகள் என்று நிறுத்தி விடுகின்றனர். இது பிறப்பு விகிதக் கணக்கீட்டில் பலத்த வேறுபாட்டை ஏற்படுத்தி விட்டது. இன்னும் பிறக்கும் முதல் மகவு ஆண் மகவு வேண்டும் என எண்ணும் பெற்றோரே பெரும்பான்மை.
முதல் குழந்தை ஆணாக இருந்தால் அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வமுடையவர்கள் தயங்காமல் அடுத்த குழந்தையைப் பெற விழைகின்றனர். அடுத்துப் பெண் பிறந்தால், ஆஸ்திக்கு ஓர் ஆண், ஆசைக்கு ஒரு பெண் எனப் பழமொழியைப் பகிர்ந்து கொண்டு நிறைவு அடைகின்றனர். முதல் குழந்தை பெண் எனில் அடுத்து ஆண்தான் பிறக்க வேண்டும் எனும் மனப்போக்குப் பெரும்பான்மை இந்தியப் பெற்றோர்களிடம் உண்டு என்று தெற்காசிய நாடுகளின் குழந்தைப் பிறப்பு விகிதாச்சாரத்தின் அடிப்படையிலான அய்.நா.வின் புள்ளி விவரங்கள் துள்ளி வரு கின்றன.
பெற்றோர்களின் இத்தகு மனப் போக்கே பெண் சிசுக்களின் பிறப்பு வீதத்தில் மாபெரும் வீழ்ச்சியை உண்டாக்கியது.
பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தைக் குறைப்பன 1. பெண் சிசுக் கொலைகள் 2. செலக்டிவ் அபார்ஷன் (கருச்சிதைவு) 3. வறுமை 4. உளவியல் மூடநம்பிக்கைகள், 5. விலைவாசி உயர்வு என ஆய்வில கண்டறிந்துள்ளனர்.
பெண் சிசுக் கொலை: பெண் சிசுக்கொலை புரியும் பேய்கள், மாபாவிகள், இரக்கமில்லா அரக்கமன நிலையாளர் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் பரவிக் கிடக்கின்றனர். நம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் எத்தனை கருத்தம்மாக்கள் வந்தாலும், தொட்டில் குழந்தைகள் திட்டம் வந்தாலும், வலிமையான சட்டங்கள், வாதங்கள் வைத்த போதும், கடுமையான தண்டனை விதித்தபோதிலும் அங்கொன்றும் இங்கொன்றும் கமுக்கமாக நடைபெற்றுக் கொண்டுள்ளன என்பது வேதனைக்குரியதே.
பெண் சிசுக்கொலைக்கு வறுமை, ஆண் வாரிசு வேண்டும் எனும் அவா, பெண் சிசுக் கொலை என்பது கொடூரச் செயல் என்ற உணர் வின்மை, அதிக வரதட்சணை கொடுக்க வேண்டிய சமூகச் சூழல், பெண் குழந்தைகளுக்கு மரபு வழியே செய்யப்படும் செலவினம், கல்விச் செலவு என்று முதன்மைக் காரணங் களை அடுக்கினால் இதனை எவரும் ஏற்க மாட்டார்கள்.
தொட்டில் குழந்தை
2001-இல் அரசுக் கட்டில் எறிய அம்மையார் அறிவித்த தொட்டில் குழந்தைத் திட்டம் இந்தியாவில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் அனேக கவனம் பெற்ற திட்டம் என்று அரசு கூறுகிற 3200--_க்கும் அதிகமான பெண் குழந்தைகளும், 520 ஆண் குழந்தைகளும் காப்பாற் றப்பட்டதோடு, 2088 பெண் குழந் தைகளும் 372 ஆண் குழந்தைகளும்,  ஆக மொத்தம் 2460 குழந்தைகள் உள் நாட்டிலும், 197 குழந்தைகள் வெளி நாட்டிலுமாகத் தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப் பட்டுள்ளன என்று அரசின் புள்ளி விவரம் கொட்டினாலும், பிறப்பு விகிதத்தில் பெண் குழந்தைகளின் சரிவைச் சரிக்கட்ட இத்திட்டம் உதவி யுள்ளது என்று கூறத்தான் முடியும். பெண் சிசுக்கள் கொலையைத் தடுக்கும் நல்ல செயல் என்று பாராட்டி விட்டுப் போகலாம்.
செலக்டிவ் அபார்ஷன்
ஆண் - பெண் வீதத்தில் ஏற்பட் டுள்ள கவலை தரும் சரிவு இருபது ஆண்டுகளாகத்தான் வேகமடைந்து வருகிறது. அல்ட்ராசோனோகிராபி எனும் கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்து பார்க்கும் முறை நகர்ப்புற மய்ய நிலைக் குடும்பங்களிலே நன்கு அறிமுகமானதிலிருந்து இச்சரிவு அளவுக்கு மிஞ்சி வேகம் காணத் தலைப்பட்டிருக்கிறது. இந்திய அரசு கருவிலிருக்கும் சிசுவை ஸ்கேன் செய்து பார்க்கும் வழக்கத்தைத் தடை செய்துள்ளது.
இரண்டு கடுமையான சட்டங் களை Pre-Natal Diagnotic Technique gululation Act 1974, Medical Termination of Pragnation Act 1971 என்பதை நிறை வேற்றியது. ஆனாலும் நிலையில் மாற்றம் ஏற்பட்டு விடவில்லை. படித்த நடுத்தரப் பிரிவு அறிவியல் வளர்ச்சியை - அறிவியல் கண்டு பிடிப்பான தொலைக்காட்சியை, ஜாதகம், ஜோதிடம், வாஸ்து, கர்த்தரின் சுவிசேஷப் பிரசங்கம் என்று செல வழிக்கிறதோ அது போல் சுயநலனை முன்னிட்டு இயல்பு வாழ்க்கைக்கு முர ணாக, எவ்வித வெட்கமும் இல்லாமல் பயன்படுத்தத் தயங்குவதில்லை என்பதற்கு இதுஒரு கோடிப் பெண் சிசுக்கொலைகள் ஓர் எடுத்துக்காட்டு.
பாதகமான வழிமுறைதான் ஸ்கேன் வாயிலாகப் பிறக்கும் முன்பே சிசுக்கள், ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து அழிக்கப்படும் முறை என அறிவியல்மீது குறை காணப்பட்டது. ஸ்கேன் வாயிலாகக் கண்டறிந்துபெண் குழந்தை எனில் செலக்டிவ் அபார்ஷன் எனும் முறையில் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்படுவதைத் தடுக்கவே 1994-ல் இயற்றப்பட்ட சட்டம் வந்தது. அச்சட்டப்படி அனைத்து அலட்ரா சோனோகிராபி கருவிகளும் பதிவு செய்யப்பட வேண்டும். கருவுற்றி ருக்கும் பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவின் பாலினம் குறித் துத் தெரிவிக்கக் கூடாது. மீறுபவர் களுக்கு அபராதம் மட்டுமின்றிச் சிறைத் தண்டனையும் உண்டு.
ஆனால் மக்கள் இதைப் பொருட் படுத்தாமல் பணம் வாயிலாக நினைத்ததைச் சாதித்துக் கொள்வ தாகக் கூறப்படுகிறது.
உண்மைதான்
கீழ்க்கண்ட தகவல் அது உண்மை தான் என்று காட்டும் அரியானாவில் பணக்காரக் குடும்பங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 541. ஆனால் ஏழைக் குடும்பங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 1567 எனும் அளவில் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தியாவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு நிகர் பெண் குழந்தைகளின் வீதம் 957.
வறுமை
அய்.நா.வின் பன்னாட்டு ஆய்வறிக்கையின் அடிப்படையில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கவும், ஆணுக்கு நிகரான எண்ணிக்கையில் இருந்து பெரிதும் வேறுபடவும் வறுமையும் காரணம் என மக்கள் நலம், பெண்கள் குழந்தைகள் நலனுக்கான செய்தி ஏடுகள் கூறுகின்றன. குழந்தைகளில் ஆண் குழந்தை பெண் குழந்தை எனும் பாகுபாடு காட்டப்படும் வேறுபாட்டு நிலை, ஏழைக் குடும்பங்களில் உணவில் முன்னுரிமை ஆண் குழந்தைக்கே என்றாகிறது. இது பெண் குழந்தை கள் பலவீனமடைந்து டைபாய்டு, மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சல் பரவும் போது சரி விகித உணவோ, மருத்துவ உதவியோ கிட்டாமல் வாழ்வு மறுக்கப்பட்டவை ஆகின்றன.
உளவியல் அடிப்படையான விளிம்பு நிலை, மத்திய தர, மேல் மத்திய தரக் குடும்பங்களிலும் பெண் குழந்தையைக் காட்டிலும் ஆண் குழந்தைக்கான வரவேற்பு என்றுமே அதிகமாகத் தானிருக்கிறது. ஏனென் றால் பெண்ணை மணம் செய்து கொள்ள மணமகள் வீட்டில் இன்னும் பேராசையோடு எதிர்பார்க் கப்படும் நாகரிகப் பிச்சை எனும் உணர்வு இல்லாமல் எதிர்பார்க்கும், வரதட்சணை, தலைத் தீபாவளி, தலை ஆடி, தலைப்பொங்கல் சீர் வரிசை கள், தலைப்பிரசவம், காதணி விழா தாய்மாமன் சீர் ஆகியன பொரு ளாதார நிர்ப்பந்தங்கள் எந்தக் கட்டத்திலும் பெண் வீட்டாருக்கு முடிவடைவதில்லை.
சுயமரியாதைத் திருமணங்கள், காதல் திருமணங்கள் மேற்கொள்ளும் குடும்பங்களில் சமூகப் பழிக்கு அஞ்சியோ, அல்லது தந்தை பெரியார் காட்டிய, திராவிட இயக்கம் காட் டிய வழிமுறைகள், வலியுறுத்தலின் பயனாலோ இதுமுற்றிலும் மறை யாவிடினும் மறைந்து விடுவது ஓர் ஆறுதல் பெண்ணைப் பாதுகாத்து வளர்த்து, படிப்பு அளித்து, உரிய வயதில் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பதோடு திருமணத்திற்குப் பின்னரும் அதன் வாழ்வு கவலை படர்ந்ததாக இல்லாமல் நிம்மதியாய், நிறைவுடன் இருக்க வேண்டுமே எனும் கவலை எப்போதும் பெண்ணைப் பெற்றவர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டே, அரித்துக் கொண்டே இருக்கும்.
செலக்டிவ் அபார்ஷன் ஏன்? மூடநம்பிக்கை ஊட்டும் ஊடகங்கள்
தினசரிகளில் காணும் வரதட் சணைக் கொலைகள், தொலைக் காட்சிகள் பளிச்சிடும் நிஜம், சொல்வதெல்லாம் உண்மை  ஆகியன பார்த்து எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் பெண் என்பதாலேயே கீழாக மதிக்கப்பட்டு, அடக்கி வைக்கப்பட்டு இழிவுபடுத் தப்படும் பெண்களைப் பற்றிய செய்திகள், கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளை, பிரிந்து வாழும் பெற்றோரால் பேதலித்து விடப்பட்டு நிற்கும் குழந்தைகள் ஆகிய செய்திகளை வெளிச்சப்படுத்தும் மட்டமான ரசனைக்குத் தீனி போடும் சில மட்டமான ஊட கங்கள் ஆகியன, படிப்பறிவு குறை வான பெண்டிரையே மட்டுமல்லாது, ஆட வரிடையேயும் உள வியல் அடிப்படை யில் பெண் குழந்தை யென்றாலே பெற்ற வயிற்றில் பெரு நெருப்பைக் கட்டிக் கொண்ட நிலை எனும் மூடத் தனத்தை வளர்க் கிறது. இதன் விளைவுதான் தென் மாவட்டங்களில் கருக்கலைப்பு முயற்சிகள்.
விளிம்பு நிலை மக்கள் இடையே, முதலாவதாக, தான் பட்ட துன்பம், அனு பவித்த அல்லல்கள் அத்தனையும் தன்செல்லமகள் அனுபவிக்கக்கூடாது எனும் விரக்தியே பெரும்பாலான சிசுக் கொலைகளுக்குக் காரணமா கின்றன.
ஆண் பிள்ளைகளை வரிசையாகப் பெறுவது மட்டும் தான் காரண மில்லை இறைவன் கொடுத்தது என்று பெற்றுத் தள்ளுபவர்கள், பெண் குழந்தை எனில் மட்டும் அதுவும் இறைவன் கொடுத்தது என்று எண்ண வேண்டியதுதானே. இது மட்டும் என்ன கடவுள் நம் பிக்கையோ, செலக்டிவ் அபார்ஷ னுக்கு இரண்டாவதாக முதன்மைக் காரணங்களாக இருப்பவை, தாம் பெற்ற குழந்தையை வளர்க்கும் பொறுப்பில் இன்றைய மாடர்ன் ஏஜ் பெற்றோர்களுக்கு இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும் கூற வேண்டும்.
கணவன், - மனைவி இருவரும் மிக இளம் வயதில் உயர் பதவியில் இருப்பவர்களாயின் ஆண் அல்லது பெண் என ஒரே குழந்தையோடு  குழந்தை பேற்றை முடித்துக் கொள்கின்றனர். அடுத்த முறை தாய்மையடையும் நிலைவரின் ஆண் குழந்தையா, பெண் குழந்தையா எனும் நிகழ்வின் அடிப்படையில் அது செலக்டிவ் அபார்ஷன் செய்யத் தூண்டுகிறது.
ஒன்றாயின், இரண்டாயின்
ஒரே குழந்தை எனில் அதன் தேவைகளை முழுமையாக நிறை வேற்றிக் குழந்தையின் விருப்பங்களை நிறைவடையச் செய்வது என்பது பெற்றோர்களுக்கு எளிதாக தோன்றுகிறது. இதே இரண்டு குழந்தைகள் எனில் செலவுகளும் இரண்டு மடங்காகுமே என விண்ணைத் தொடும் விலைவாசி, உயர்வினால் யோசிக்கத் தொடங்கி அதன் விளைவால் செலக்டிவ் அபார் ஷன் முறையில் இரண்டாம் குழந்தை பெண் எனில் அதைக் கருவிலேயே கொலை செய்து விடுகின்றனர்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு
பெண் சிசுக் கொலை குழந்தைகள கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாகத் திகழ்வது ஆப்கானித்தான். 2ஆவது இடத்தில் காங்கோவும், 3ஆவது இடத்தில் பாகிஸ்தானும், நான்காவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதனைப் பெண் உரிமைக்காக சட்டபூர்வ தகவல், சட்ட ஆதரவு ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
தமிழக நிலை
தமிழக மக்கள் தொகையில் பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் தமிழகத்தில் மக்கள் தொகை 7,21,38,958. இதில் ஆண்களின் எண்ணிக்கை 3,71,89,229. பெண்களின் எண்ணிக்கை 3,49,49,729.
குறைந்து வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தால் 2030-இல் பெண் குழந்தைகளைவிட ஆண்கள் 20 விழுக்காடு அதிகமாக இருப்பார்கள் என லண்டனில் பன்னாட்டு மக்கள் நல, வளர்ச்சிக் கான ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் சமூகத்தில் ஆண்கள் திருமணம் செய்யத் தேவையான பெண்கள் கிடைக்காமல் பற்றாக் குறை நிலவும். உரிய வயதில் திரு மணத்திற்கும் பெண் கிடைப்பது தாமதமாவதால் திருமணத் தடை ஏற்பட்டு மனச்சிதறல் அடையும். பலவீனமான வக்கிரபுத்தி ஆண் களால் சிறுமிகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகலாம்.
வரதட்சணை வாங்கிய காலம் போய், பொருத்தமான பெண் கிடைக்காமல் மகன்களின் திரு மணம் தாமதமாகி விடும் எனும் பயத்தினால், மாப்பிள்ளை வீட் டாரே கல்யாணச் செலவுகளை, ஏற்றுக் கொண்டு பெண்ணுக்கு இத்தனை சவரன் நகை போடுகிறோம் என்று பெண் வீட்டடாரிடம் பேசி மணம் செய்து கொள்ளும் நிலை- நல்லதுதான் - என்றாலும்  மணப் பெண்கள் டிமாண்ட் என்பது வதந்தி இல்லை என்பது உண்மை யாகலாம். எழுத்தாளர் சுஜாதா ஒரு கதை ஒன்றில் எழுதியது போல் பெண்கள் உலகின் அதிசயங்களில் அரிதான விஷயங்களில் ஒன்றென வும் ஆகலாம்.
எந்த நாட்டின் வளர்ச்சிக்கும் மனித வளம் இன்றியமையாதது.
பெண் கடவுள்களை வணங்கு கிறான். சக்தி என்று போற்றுகிறான். ஆணுக்குப் பெண் இளைப்பில்லை மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று பாரதி பாடலை முழுமையாக முழங்குகிறான். ஆனால் பெண் குழந்தைகளைச் சுமையாகக் கருது கிறான். இந்த நிலை மாற வேண்டும். ஆணுக்கும் பெண்தான் மிகச் சிறந்த துணையாக அமைய இயலும் ஆதலால், ஆண் குழந்தைகளுக்குச் சமமாகப் பெண் குழந்தை பிறப்பைப் போற்ற வேண்டும். எங்கள் வீட்டு மகாலட்சுமி என்று போலித்தனமாகக் கூறுவது மறைய வேண்டும்.
-விடுதலை ஞா.ம.,23.2.13