மகளிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகளிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 ஜூலை, 2022

திருச்சிக்கு பெருமை சேர்த்த திராவிடர் கழக மகளிர் கலந்துரையாடல்!

வெள்ளி, 20 மே, 2022

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய புதிய உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்


தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை இன்று (21.2.2022) தலைமைச் செயலகத்தில்தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள .எஸ்.குமரிஉறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் மாலதி நாராயணசாமிபி.கீதா நடராஜன்பி.சீத்தாபதிஎம்.எஸ்.கே.பவானி இராஜேந்திரன்ஆர்.ராணிகே.சிவகமசுந்தரிஎம்.வரலாட்சுமி ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் நியமனம்

 

சென்னை, பிப்.19 தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவராக ஏ.எஸ்.குமாரியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவி மற்றும் 9 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். இந்த ஆணை யம் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது.பெண்கள் பாதுகாப்புக்கு தேவையான அதிகாரங்களைப் பெற்ற ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும். தமிழ்நாடு மகளிர் ஆணையம் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்த பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்தாண்டு தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக் கப்பட்டனர். இந்நிலையில், இந்த ஆணையம் தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மகளிர் ஆணைய தலை வராக ஏ.எஸ்.குமாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. மேலும், ஆணையத்தின் உறுப்பினர்களாக, மாலதி நாரா யணசாமி, கீதா நடராஜன், சீதாபதி, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்பி எஸ்.கே.பவானி ராஜேந்திரன்,   சட்டமன்ற உறுப்பினர்கள் கே.சிவகாமசுந்தரி, எம்.வரலட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.