வெள்ளி, 28 டிசம்பர், 2018

பாலின சமத்துவம், மாணவர் ஒற்றுமையை வலியுறுத்தி மாணவியரின் 'பெண்கள் சுவர்'

மாட்டுச்சாணத்தை தெளித்து  புனிதப்படுத்திய பிற்போக்கு ஏபிவிபி




கொச்சி, டிச.22 வழிபாட்டு இடங்களில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துகின்ற கேரள மாநில அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் ஆதரவு அளிக்கும் வகையில் பெண்கள் சுவர் எனும் பெயரில் மாணவியர் கரங்களை இணைத்துக்கொண்டு  மனித சங்கிலி பரப் புரை மேற்கொண்டுள்ளனர்.

திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோட் வரை இப்பரப்புரை நடத்திட திட்ட மிடப்பட்டுள்ளது. இப்பரப்புரையில் லட் சக்கணக்கிலான பெண்கள் கலந்துகொண்டு தங்களின் ஆதரவை அளிக்கின்றனர். இப்பரப்புரையை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாணவர் அமைப்பாகிய இந்திய மாணவர் சங்கம் நடத்திவருகிறது.

கேரள மாநிலத்தில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி நாயர் சர்வீஸ் சொசைட்டி இந்து கல்லூரி தலை மையகத்தில் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பாகிய இந்திய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாலின சமத்துவம், மாணவர் ஒற்றுமையை வலியுறுத்தி சுமார் 350 மாணவிகள்  ஒன்றிணைந்த வனிதா மதில் எனும்  பெண்கள் சுவர் மனித சங்கிலி பரப்புரை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தின் வெளியே சுற்றுச்சுவரையொட்டி மாணவியர் பதாகைகளை ஏந்தி சிறிதுநேரம் மனித சங்கிலி அமைத்து பரப்புரை மேற்கொண்டனர். அதன்பின்னர் கலைந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்றனர்.

கல்லூரி வளாகச் சுற்றுச்சுவரையொட்டி சாலையோரத்தில் இந்திய மாணவர் சங் கத்தின் சார்பில் மாணவியர் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பதாகைகள், பலூன்களை ஏந்தி பெண்கள் சுவர் மனித சங்கிலி அமைத்து கோரிக்கைகளை வலியுறுத்தினர். மீண்டும் கேரளாவை புகலிடமாக்காதீர், மாணவர் ஒற்றுமைக்கான பெண்கள் சுவர்  என்கிற வாசகங்களைக் கொண்ட பெரிய பதாகையை மாணவிகள் ஏந்தியிருந்தார்கள்.

பெண்கள் சுவர் (மனித சங்கிலி) பரப்புரை நடைபெற்ற பகுதியிலேயே அக்கல்லூரியின் மற்றொரு பிரிவாகிய ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பாகிய ஏபிவிபி அமைப்பினர்   சிறிதுநேரத்தில், அப்பகுதியில் மாட்டுச் சாணத்தைத் தண் ணீரில் கரைத்து தெளித்து தீட்டு கழித்து புனிதப்படுத்தினார்களாம். அச்செயலை படமாக ஏபிவிபியினர் முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.

முகநூலில் குறிப்பிட்டுள்ளதாவது:

மன்னாது பத்மநாபனின் (கல்லூரி நிறுவனர்) மண்ணில் ஏபிவிபியின் சார்பில் புனிதப்படுத்தப்பட்டது. பினராயினுடைய இந்திய மாணவர் சங்கத்தினர் பெண்கள் சுவர் (மனித சங்கிலி) அமைத்து நம்முடைய கலாச்சாரத்தை பாழ்படுத்தி விட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் பகுதி செயலாளர் சுபின் சாபு கூறியதாவது:

ஒரு பகுதிக்குள் தீண்டத்தகாதவர்கள் நுழைந்தாலோ,தொட்டுவிட்டலோஉயர் ஜாதி இந்துக்கள் மற்றும் அர்ச்சகப் பார்ப்பனர்கள் மாட்டுச் சாணத்தைக் கரைத்துத் தெளித்து தீட்டு கழிப்பார்கள். அதுபோல், ஏபிவிபி அமைப்பினர் பார்ப் பனியத்தை தங்களின் செயல்மூலமாக செயல்படுத்தியுள்ளனர். ஏனென்றால், மறுமலர்ச்சிக்கான பரப்புரை மற்றும் பிற முற்போக்கு இயக்கங்களின் பரப்புரைகளால் ஆத்திரமடைந்ததாலேயே இதுபோன்று செய்துள்ளார்கள் என்றார்.

கோட்டயம் மாவட்ட இந்திய மாணவர் சங்க இணை செயலாளர் ஜஸ்டின் ஜோசப் கூறியதாவது:

இப்பரப்புரையில் கலந்துகொள்ள மாணவியர் பெரிதும் ஆர்வத்துடன் உள்ள நிலையில், ஏபிவிபி அமைப்பினர் அச்சுறுத்தி வருகின்றனர். இந்திய மாண வர் சங்கம் பரப்புரை நடத்தும் இடங் களில்ஏபிவிபிஉள்ளிட்டஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எதிர்ப்புறமாக நின்று எங்கள் பரப்புரைக்கு ஆதரவளிக்க வரு வோருக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். கல்லூரி நிர்வாகமும் ஏபிவிபிக்கு ஆதரவாக எங்கள் பரப்புரையில் பங்கேற்கின்ற மாண விகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து அடக்குமுறையைக் கையாள்கிறது. இந்த பரப்புரை எப்போதுமே வகுப்பு தொடங்கப்படுவதற்கு முன்பாக நடத்தப் படுகிறது என்றார்.

- விடுதலை நாளேடு, 22.12.18

செவ்வாய், 4 டிசம்பர், 2018

பெண்களுக்குத் தேவையான வைட்டமின்கள்

வளரிளம் பருவப்பெண்கள் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கலோரி யின் அளவை தினமும் பூர்த்திசெய்துவிட்டாலே, நியாசின், தயாமின், ரிபோபிளேவின் போன்ற பி வகை வைட்டமின்கள் அவற்றிற்குரிய அளவில் கிடைத்துவிடும். புதிய செல்களின் உருவாக்கத்திற்குத் தேவையான  டிஎன்ஏ மற்றும்  ஆர்என்ஏ உற்பத்திக்கு போலாசின், பி12, பி6 போன்ற வைட்டமின்கள் அவசியம் என்பதால் பட்டைத்தீட்டப் படாத, முழு தானியங்கள், மணிலா, பால், பாலாடைக்கட்டி, தயிர், முட்டை, ஆட்டு ஈரல், பச்சை காய்கள், கீரைகள் போன்ற உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய்க்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்னர் ஏற்படும் லேசான உடல் எடை அதிகரிப்பு, மார்பகத்தில் அழுத்தம், கண்ணில் லேசான வீக்கம், வயிற்று வலி, செரிமான சிக்கல், மனஅழுத்தம், உணவின் மீது வெறுப்பு, அதிக இனிப்பு அல்லது உப்பு சேர்த்த உணவுகளின்மீது விருப்பம், திடீரென்று அதிகரிக்கும் பசி, வகுப்பில் கவனமின்மை, உடல் மற்றும் மனச்சோர்வு போன்ற முன்மாத விடாய் பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டுமெனில், வைட்டமின் பி6 ஒரு நாளைக்கு 100 மி.கிராம் என்ற அளவில் உணவில் சேர வேண்டும். பிற வைட்டமின்களான வைட்டமின் ஏ 15 மற்றும் 18 வயதில் 60; 400 மைக்ரோ கிராமும், வைட்ட மின் ஏ யானது 13 மற்றும் 18 வயதில வயதில் 40 மி.கிராமும் தேவைப்படுகிறது.

-  விடுதலை நாளேடு, 4.12.18

பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்



ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு காங்கோ நாட்டைச் சேர்ந்த டெனிஸ் மக்வெஜ் மற்றும் ஈராக் நாட்டின் யாசிடி இனத்தைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் நாடியா முராட் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.


சிரியா எல்லையை ஒட்டியுள்ள ஈராக் நாட்டின் சின்ஜார் நகரத்தை சேர்ந்த நாடியா முராட், கடந்த 2014-இல் அய்.எஸ். தீவிர வாதிகள் சின்ஜார் நகரத்தை தாக்கியபோது பாலியல் அடிமையாக மொசூலுக்கு கடத்தப் பட்டார். அங்கு தீவிரவாதிகளின் கூட்டு பலாத்கார பாலியல் வன்முறைக்கு ஆளாகி மூன்று மாதங்களுக்குப் பின் தப்பிச் சென்று ஜெர்மனியில் அவரது சகோதரியிடம் அடைக்கலமானார். போரில் ஆண்களைக் கொன்று பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கும் அவலத்தை நாடியா வெளிப் படுத்தியதோடு, தன்னுடைய யாசிடி இன மக்களுக்காகவும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்காகவும் தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வரு கிறார். 2016-ஆம் ஆண்டு முதல் பாலியல் அடிமைகளுக்காக அய்.நா.வின் நல்லெண்ண தூதராக உள்ள நாடியா முராட் தன்அனுப வத்தை கூறுகிறார்:


2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதியன்று இரவு வடக்கு ஈராக் எல்லைப் பகுதியில் உள்ள சின்ஜார் நகரத்திற்குள் நுழைந்த அய். எஸ். தீவிரவாதிகள் சிறிய கிராமத்தில் இருந்த எங்களை சிறைப்பிடித்த போது, என்னுடைய தாயார் மற்றும் ஆறு சகோதரர்களை சுட்டுக் கொன்றனர். என்னையும், மற்ற இளம் பெண்களையும் மொசூலுக்கு கடத்திச் சென்றனர். எங்களை சிறை வைத்த இடத்தில் ஏராளமான பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.  அவர்கள் அனைவருமே எங்களை பாலியல் அடிமை களாகவே நடத்தினர். ஆனால் அவர்கள் நடத்தும் பத்திரி கையில், மேலும் பல புதிய பெண்களை கவர்வதற்காக பெண்களைப் பற்றி உயர்வாக எழுதுவார்கள். நாங்கள் சிறைவைக்கப்பட்ட இடம் திறந்த வெளியாக இருந்ததால் சுலபமாக என்னால் தப்பிக்க முடிந்தது. சிலரது உதவி யால் ஜெர்மனியில் உள்ள என் சகோதரியிடம் தஞ்சமடைந்தேன்.


என்னுடைய மிகப்பெரிய மூன்று தவறுகளில் முதலாவது நான் குர்து இனத்தைச் சேர்ந்தவள், துருக்கி, ஈரான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் வசிக்கும் குர்து இன மக்கள், பல நூற்றாண்டுகளாக தங்களுக்குரிய உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். இரண்டாவது நான் உலகிலேயே மிக பழமை யான யாசிடி பிரிவை சேர்ந்தவள். நாங்கள் சாத்தானை வணங்குபவர்கள் என்பது சன்னி பிரிவினர் நம்பிக்கையாகும். மூன்றாவது நான் ஒரு பெண்ணாக பிறந்தது. எந்த ஆண் வேண்டுமானாலும் என்னை சுலபமாக அடையமுடியும்.


குர்து பிரிவினரோ, சன்னி பிரிவினரோ அவர்களில் ஒரு அங்கமாக யாசிடி பிரிவினரை அங்கீகரிப்பதில்லை. எங்களை சிறை பிடித்த தீவிரவாதிகள் அன்றிரவு கிராமங் களையும், வழிபாட்டு தலங்களையும் அடித்து நொறுக்கி கொளுத்தியதோடு, கல்லறைகளை கூட சேதப்படுத்தினர். ஆண்களை வரிசை யாக நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இவர்களை எதிர்த்து போராட வேண்டிய குர்து ராணுவப் படையினர் சந்தடி யில்லாமல் இருட்டில் மறைந்தனர். தப்பிவந்த நான் பெண்களை வணிக பொருளாக கருது வதை எதிர்த்தும், என் இன மக்களை காப் பாற்றுவதற்காகவும் போராடத் தொடங் கினேன். இது குறித்து அதிகம் பேசினேன். நான் பட்ட துயரங்கள் என்னோடு முடியட்டும் என்ற நினைப்பில் கடைசிப் பெண் என்ற தலைப்பில் என் சுயசரிதையை எழுதி வெளியிட்டேன்.  என்னைப்போன்று பாலியல் வன் முறைக்கு ஆளான பெண்களை இந்த சமூகம் குற்றவாளிகள் போல் பார்ப்பதை எதிர்த்தேன். நாஜிக்களை போல் இந்த அய்.எஸ். தீவிரவாதிகளையும் போர்க் குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டுமென்று குரல் எழுப்பினேன். இதற்கு மனித உரிமை ஆர்வலர்களும், வழக் குரைஞர்களும் ஆதரவளிக்க முன்வந்தனர்.


இன்று எனக்கு உலகின் மிகப்பெரிய விருதான நோபல் பரிசு கிடைத்தது குறித்து பெருமைப்படுகிறேன். பெரும்பாலான உலக நாடுகளில் சரிசமமான அளவில் பெண்கள் எண்ணிக்கை உள்ளது. அவர்களில் பாலின வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்கு எதிராக போராடுவதோடு, விழிப்புணர்வை ஏற்படுத்த பெண்கள் அனைவரும் முன்வர வேண்டும். அதற்கு வழிகாட்டியாக நான் இருப்பேன். பெண்கள் உரிமைக்காக இறுதி வரை போராடுவேன் என்று கூறும் நாடியா முராட், இம்மாத இறுதியில் மும்பை வரவுள் ளார். அப்போது அவருக்கு இங்குள்ள ஹார்மனி பவுண்டேஷன் பெருமைக்குரிய மதர்தெரசா நினைவு விருது வழங்கி கவுர விக்கவுள்ளது.


-  விடுதலை நாளேடு, 4.12.18