சாதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 ஜனவரி, 2020

2019 சாதனைப் பெண்கள்

இந்தியாவின் இளவரசி

டில்லியில் 1972 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி ராஜீவ் காந்தி- சோனியா காந்தி இணையரின் மகளாகப் பிறந்த பிரி யங்கா காந்தி, சிறுவயதில் பாட்டி இந்திராவின் அரவணைப்பில் அண்ணன் ராகுலோடு வளர்ந்தார்.  உளவியல் பட்டப் படிப்பை டில்லி பல்கலைக்கழகத்திலும், பவுத்த மதத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.புகைப்படக் கலையிலும் ஆர்வம் கொண்டவர். தொழிலதிபரான ராபர்ட் வதேராவை காதலித்து 1997இல் திருமணம் செய்து கொண்ட, இந்தத் இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  16ஆம் வயதில் தேர்தல் பிரசாரப் பரப்புரை பயணத்தைத் தொடங்கிய பிரியங்கா, அன்றிலிருந்து இன்றுவரை தேர்தல் அரசியலோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

தாய்மைக்கு கிடைத்த வெற்றி

உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை 11 தங்கப் பதக்கங்களை வென்றிருந்த சாதனையை, 12 பதக்கங்களை வென்று முறியடித்தார் அலிசன் ஃபெலிக்ஸ். இச்சாதனையை இவர் முறியடித்திருந்தாலும், இந்த இடத்துக்கு ஃபெலிக்ஸ் வந்தது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் தனது மகள் கேம்ரினை பெற்றெடுத்த 10ஆவது மாதத்திலேயே இந்த சாத னையை நிகழ்த்தியுள்ளார்.  2020ஆம் ஆண்டு டோக்கி யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அலிசன், ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வென்ற பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரராவார்.

உலகின் சிறந்த வீரர்களை வெல்வேன்

லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொட ரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், உலகின் முன் னணி வீராங்கனையான வீனஸ் ஆட்டத்திற்கு நிகராக ஈடுகொடுத்து விளையாடிய காஃப் 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார். விம்பிள்டன்னில் 5 முறை வாகையர் பட்டம் வென்ற வீனஸை முதன்முதலில் எதிர் கொண்ட காஃப் எந்தவித பயமின்றி புயல்போல் விளையாடி வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

தங்க மங்கை

23ஆவது சர்வதேச ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு, ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதே லட்சியம்.

மிஸ் இந்தியா

ராஜஸ்தான், ராஜ்ஸமந்த் பகுதியைச் சேர்ந்த 20 வயது சுமன் ராவ் 2019க்கான மிஸ் இந்தியா பட்டத்தைத் தட்டிச் சென்றார். வெற்றியாளர் சுமன் ராவ், கோதுமை நிறம், 5‘8‘‘ உயரம், சிரித்த முகம் என ஒரே நாளில் இந்திய இளைஞர்களின் ஹாட் சாய்ஸ் இந்தக் கண்ணம்மாதான். பிறப்பு ராஜஸ்தான், வளர்ப்பு மும்பை. மகாத்மா கல்வி அமைப்பில் பள்ளிப்படிப்பு, இன்ஸ்டிடியூட் ஆஃப் சாட்டர்ட் அக்கவுன்ட் - டில்லியில் கல்லூரி படிப்பு, பி.காம் மற்றும் சாட்டர்ட் அக்கவுன்ட் முடித்திருக்கும் சுமன் படிப்பிலும் கொஞ்சம் கெட்டி.

அந்த 38 நிமிடங்கள்

சுவிட்சர்லாந்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற உலக பேட்மிண்டன் வாகையர் பட்ட இறுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து. இதன் மூலம், உலக வாகையர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். இறுதி ஆட்டத்தில் பி.வி. சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவிடம் மோதினார். போட்டி தொடங்கிய முதல் 38 நிமிடங்களிலேயே, நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் சிந்து.

பெங்காலுக்கு கிடைத்த நைட்டிங்கேல்

மேற்கு வங்க மாநிலத்தின் நாடியாவில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதற்காக பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை ராணு மோண்டால் என்ற பெண்மணி சிறப்பாக பாடியுள்ளார். அதை ஒருவர் காணொலியாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியதை அடுத்து ஒரே இரவில் வைரலானார். அதன் பின்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்று அவருக்கு மேடை அமைத்து தந்தது. தற்போது தொழில்முறை பாடகியாக பேருரு எடுத்துள்ள அவருக்கு தான் இசையமைக்கும் பாலிவுட் படத்தில் பாடல் பாட வாய்ப்பு தந்துள்ளார் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன்.

நடிகையர் திலகத்திற்காக தேசிய விருது

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்தார் கீர்த்தி சுரேஷ். அந்த படத்தில் சாவித்ரியாகவே மாறிய கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் டில்லியில் நடந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கீர்த்தி சுரே ஷுக்கு விருதை வழங்கி, அவரின் நடிப்பை பாராட்டினார்.

மிஸ் யூனிவர்ஸ் மகுடம் வென்ற

தென் ஆப்ரிக்க அழகி

தென் ஆப்ரிக்க அழகியான, சோசிபினி டன்சி, 2019 ஆம் ஆண்டிற்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றார்.  பெண் களிடையே இயற்கை அழகை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல், பாலியல் குறித்த நிகழ்வுகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார் சோசிபினி. அவரிடம் போட்டியின் நீதிபதிகள், “பெண்களுக்கு முக்கியமாக கற்றுக்கொடுக்க வேண்டிய பண்பு எது?” என்று கேட்டதற்கு, அவர்களுக்குத் தலைமைப் பண்பை கற்றுத்தர வேண்டும் என்று, இவர் கூறிய பதில்தான், இவருக்கு மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை பெற்றுத் தந்தது.

ஆங்கில கால்வாய்

சாரா தாமஸ் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். இவர் இந்தாண்டு ஆங்கில கால்வாயை இடைவேளை இல்லாமல் நான்கு முறை கடந்து சாதனை படைத்துள்ளார். வலுவான அலைகள் காரணமாக 209 கி.மீ தூரத்தை, 54 மணி நேரத்தில் வெறும் நீராகாரம் கொண்டு முடித்துள்ளார் 37 வயது நிரம்பிய சாரா. இதுவரை நான்கு பேர் இந்த கால்வாயை மூன்று முறை கடந்துள்ளனர். அந்த சாதனையை முறியடித்து இருக்கும் சாரா மார்பக புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து ஒரு வருடம் கழித்து இதனை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீறிப் பாய்ந்த தோட்டா

தோட்டாவிற்கு முன் அவரது அழகிய புன்னகையும் சீறிப்பாய... ‘இளவேனில் வாலறிவன்’ என்கிற தமிழ் பெயர் இணையத்தில் வைரலானது. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்றவர், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தைபே நகரில் நடைபெற்ற ஆசிய மூத்தோர் போட்டிகளில் தன் முதல் சர்வதேச தங்கப்பதக் கத்தை வென்றார். 2018ஆம் ஆண்டு, தன் 19ஆவது வயதில் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார்.

இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்

சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது  மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார்.

இதன் மூலம் பிரபலமான அவர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டார். செப்டம்பர் மாதம், நியூயார்க்கில் நடந்த அய்.நா. வின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டிற் காக, அட்லான்டிக் கடல்பகுதியில் சுமார் 14 நாட்கள் படகில் பயணித்து சென்ற கிரேட்டா, தனது பயண அனுபவத்தையும், தேசிய அளவிலான அரசியல் தலைவர்களையும் குற்றம் சாட்டி பேசினார்.

வரலாறு படைத்த தங்க எக்ஸ்பிரஸ்

செக்குடியரசில் நடந்த சர்வதேச ஓட்டப்பந்தயத்தில் இந்திய தடகள வீராங்கனை இமா தாஸ் 19 நாட்களில் அடுத்தடுத்து 5 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். பிரதமர், குடியரசுத் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் இமா தாஸ்.

- விடுதலை நாளேடு 21.1. 20

புதன், 9 ஜனவரி, 2019

2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்

பல மைல் கல் தருணங்களை 2018இல் சந்தித்திருக் கிறார்கள் இந்திய வீராங்கனைகள்.  அவற்றில் சில முக்கியமான தடங்கள் இவை.

மேரிகோம்


மூன்று குழந்தைகளின் தாய், 36 வயது பெண் போன்ற தடைகள் எல்லாம்  மேரிகோமுக்கு எப்போதும் கிடை யாது. சென்ற ஆண்டு மட்டும் அவர் 4 தங்கப் பதக்கங் களை வென்று இந்திய குத்துச்சண்டைப் பிரிவுக்குப் பெருமைசேர்த்தார். 2018இன் தொடக்கத்தில் இந்திய ஓபனில் தங்கப் பதக்கம் வென்ற மேரிகோம், ஆண்டு இறுதியில் டில்லியில் நடைபெற்ற உலக வாகையர் பட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று 2018ஆம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவுசெய்தார். இடையே காமன்வெல்த், பல்கேரியாவில் நடைபெற்ற அய்ரோப்பியப் போட்டி யிலும் இவருக்கே தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.

பி.வி. சிந்து


2018-லும் பி.வி. சிந்துவை நோக்கி வெற்றிக் காற்று பலமாக வீசியது. இரண்டு பட்டங்கள், காமன்வெல்த், ஆசியப் போட்டி, உலக வாகையர் பட்டப் போட்டிகளில் 3 வெள்ளிப் பதக்கங்கள் என வெற்றி மேல் வெற்றி குவிந்தது. இந்திய ஓபன், தாய்லாந்து ஓபனில் இரண்டாமிடத்தைப் பிடித்த சிந்து, இறுதியாக பி.டபுள்யு. உலக டூர் ஃபைனல்ஸ் பட்டப் போட்ட்டியில் வாகையர்  பட்டம் வென்று தொடர்ச்சியாக இறுதிப் போட்டித் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மணிகா பத்ரா


டேபிள் டென்னிஸில் சென்ற ஆண்டு அறிமுக நாயகியாக அமர்க்களப்படுத்தினர் மணிகா பத்ரா. டெல்லியைச் சேர்ந்த இவர், காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கினார்.

சாய்னா நேவால்


சாய்னாவுக்கு 2018 மறக்க முடியாத ஆண்டு. காமன்வெல்த்  பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி.வி. சிந்துவைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஆசிய வாகையர் பட்டப் போட்டியிலும் வெண்கலம் இவருக்கே கிடைத்தது. தவிர இந்தோனேசியா மாஸ்டர்ஸ், டென்மார்க் ஓபன், சயீத் மோடி இண்டர் நேஷனல் போன்ற தொடர்களில் இறுதிப் போட்டிவரை முன் னேறினார். பாட்மிண்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப்பை மணந்துகொண்டு புதிய இன்னிங்ஸைத் தொடங்கினார்.

இமா தாஸ்


தடகளத்தில் தன்னிகரற்ற சாதனைகளைப் படைத்தார் ஹிமா தாஸ். பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ட்ராக் போட்டியில் 400 மீ. ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை சென்ற ஆண்டு இமாவுக்குச் சொந்தமானது. இதற்கு முன்பு எந்த இந்திய வீராங்கனையும் செய்யாத சாதனை இது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கத்தையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்று தடகளத்தில் அழியா தடம் பதித்தார்.

தீபா கர்மாகர்


ரியோ ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்கத்தைக் கோட்டைவிட்டது, இரண்டு ஆண்டுகள் காயத்தால் அவதிப்பட்டது என ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் சறுக்கல்களைக் கண்ட தீபா கர்மாகருக்கு சென்ற ஆண்டு புத்துணர்வைத் தந்தது. நீண்ட ஓய்வுக்குப் பிறகு களத் துக்கு வந்த தீபா, துருக்கியில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சேலஞ்ச் கோப்பையை வென்று மீண்டும் புதிய அவதாரம் எடுத்தார்.

டுட்டி சந்த்


பயிற்சி பெறவே பெரும் சிரமங்களைச் சந்தித்த டுட்டி சந்துக்குச் சென்ற ஆண்டு மறக்க முடியாதது. ஆசிய விளையாட்டுப் போட்டி 100 மீ. ஓட்டப் போட்டியில் இவர்  வெள்ளி வென்றார். வெறும் 0.02 விநாடிகளில் தங்கத்தைக் கோட்டைவிட்டார்.

ஆனால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பி.டி. உஷாவுக்குப் பிறகு வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமை டுட்டிக்குக் கிடைத்தது.

வினேஷ் போகத்


கடந்த சில ஆண்டுகளாக ஏமாற்றங்களைச் சந்தித்த வினேஷ், சென்ற ஆண்டு ஏற்றம் கண்டார். ஆசிய  மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தன்னை நிரூபித்தார் வினேஷ். ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் யாருடன்  விளையாடும்போது  காயம் ஏற்பட்டதோ, அதே வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதித்தார்.

ஹர்சிதா தோமர்


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது ஹர்சிதா தோமருக்குப் பொருந்தும். பதின் பருவத்திலேயே சர்வதேசப் படகு வலித்தல் போட்டியில் பங்கேற்றுப் பதக்கத்தை வென்றார். இளம் வயதில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சிறப்பு அவருக்குக் கிடைத்தது. ஹர்சிதா தற்போது 10ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

 -  விடுதலை நாளேடு, 8.1.19

சாதனைப் பெண்கள் - 2018

விருது பெற்றுத்தந்த மயானம்


பெரும்பாலும் ஆண்களே நிறைந் திருக்கும் மயானப் பணிகளில் பெண் ஒருவர் பணியாற்றுவதை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், சவாலான துறையில் சாதித்த முதல் பெண் என்ற தேசிய விருது சென்னையைச் சேர்ந்த  பிரவீனா சாலமனுக்கு வழங்கப்பட்டது.

அங்கீகாரம்


சென்னை ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த திருநங்கைகள் நேயா, செல்வி ஆகியோருக்குத் தமிழக அரசு இந்த ஆண்டு நிரந்தப் பணி வழங்கியது.  அரசு வேலைக்கான வயது வரம்பை இவர்கள் கடந்திருந்தாலும் திருநங்கைகளை ஊக்கு விக்கும்வகையில் இவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளது.

‘அழகு’க்கு விருது


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகு, மத்திய அரசின் மகிளா கிஸான் விருதுக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். தன்னுடைய 15 ஏக்கர் நிலத்தில்  விவசாயம் மேற்கொள்வதுடன் மாடு, ஆடு, கடக்நாக் கோழி போன்ற வற்றை வளர்த்தும் வருகிறார். ஆவின் முகவராக இருப்பதுடன் டீக்கடையும் நடத்திவருகிறார்.

முதன்மை அதிகாரி


சென்னையைச் சேர்ந்த திவ்யா சூரியதேவரா  அமெரிக்காவின் முன்னணி கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி யாக நியமிக்கப்பட்டுள்ளார். 110 ஆண் டுகள் பாரம்பரியம் கொண்ட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பெண் ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் முறை.

தாய் மண்ணே வணக்கம்




ஏழை மாணவர்களின் கல்விக்காக உலக அளவில் பிரச்சாரம் நடத்திவரும் மலாலா யூசஃப்சாய் அய்ந்தாண்டு களுக்குப் பிறகு தன் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் சென்றார். பாகிஸ்தானில் தாலிபன் தீவிர வாதிகளால் சுடப் பட்டு பல்வேறுகட்ட சிகிச்சைக்குப் பிறகு உயிர்பிழைத்தவர் மலாலா. சிகிச்சைக்குப் பிறகு லண்டனில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். தீவிர வாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்த மலாலா, பாகிஸ் தானுக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி யாக உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

மாற்றத்தின் அடையாளம்


பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை சத்தியசிறீ ஷர்மிளா, இந்தியாவின் முதல் திருநங்கை வழக்குரைஞராகப் பதிவுசெய் திருக்கிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்த இவரைத் தொடர்ந்து  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை விஜியும் பார் கவுன் சிலில் பதிவுசெய்தார்.

செய்திகள் வாசிப்பவர்...


பாகிஸ்தானின் உள்ளூர் செய்தி சேனலான கோகினூர், மார்வியா மாலிக் என்ற திருநங்கையைச் செய்தி வாசிப்பாள ராக நியமித்து உள்ளது.

அந்நாட்டிலேயே முதன்முறையாகத் திருநங்கை ஒருவரைப் பணியமர்த்திய பெருமை இந்நிறுவனத்துக்குக் கிடைத் துள்ளது. மார்வியா மாலிக், ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றவர்.

நோபல் பெண்கள்


உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசை  இந்த ஆண்டு மூன்று பெண்கள் பெற்றுள்ள னர்.  இயற்பியலுக்கான நோபல் பரிசை கனடாவைச் சேர்ந்த  டோனா ஸ்ட்ரிக் லேண்டு பெற்றிருக்கிறார். 55 ஆண்டுகள் கழித்து நோபல் பரிசு பெற்ற பெண் என்ற அங்கீகாரம் டோனாவுக்குக் கிடைத் துள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசை அமெரிக்கரான ஃபிரான்செஸ் அர்னால்ட் பெற்றிருக்கிறார். ஈராக் நாட்டில் பெண்கள், குழந்தைகளின் உரிமைக்காகவும் அவர்கள் மீது நிகழ்த்தப் படும் வன்முறைக்கு எதிராகவும் போராடி வரும் 23 வயதான நாதீயே மூராத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது.



போர்ப் பறவைகள்




இந்திய போர் விமானத் துறையில் நுழைந்த முதல் பெண் என்ற பெருமை யைப் பெற்றிருக்கிறார் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவனி சதுர்வேதி. இவர் மிக்-21  பைசன் என்ற போர் விமானத்தைத் தனியாக ஓட்டிய முதல் பெண் என்ற சாதனையையும் படைத்துள் ளார்.

இவருடன் மோகனா சிங், பாவனா காந்த் ஆகியோரும் போர் விமானப் படைப் பிரிவில் சேர்ந்துள்ளனர்.

-  விடுதலை நாளேடு, 8.1.19

வெள்ளி, 18 மே, 2018

வானில் “அனிதா” துணைக்கோள் தமிழக மாணவி சாதனை



கைக்குள் அடங்கும் “கலாம்” துணைக்கோளைத் தொடர்ந்து  இதோ  “அனிதா” துணைக் கோள் - உருவாக்கி யிருப்பவர் வில்லெட் ஓவியா. திருச்சி ஆர். எஸ். கே பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவி. வயது பதினேழு.

பிளஸ் டூ தேர்வுகள் எழுதிவிட்டு காத்திருக்கும் வில்லெட் ஓவியா, தான் உருவாக்கிய துணைக் கோள் பற்றி கூறியதாவது:

“சில ஆண்டுகளுக்கு முன், விவசாயத்திற்கு நவீன முறையில் சிக்கனமாக நீர்ப்பாசனம் எப்படி செய்யலாம் என்பது குறித்த திட்டத்தை டாக்டர் கலாம் அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதை கலாம் சார் பாராட்டினார். தூர்தர்ஷன் பொதிகை சானலில் “ஏழாம் அறிவு’ என்ற அறிவியல் போட்டித் தொடர் நடைபெற்றது. அதில் நானும் பங்கு பெற்றேன். நிகழ்ச்சியின் முடிவில் முதல் ஏழு பேர்களில் ஒருத்தியாக என்னால் வர முடிந்தது . அந்த நிகழ்ச்சிதான் என்னை துணைக் கோள் குறித்து சிந்திக்கச் செய்தது. அதன் காரணமாக மின்னணுவியல், மின்னியல் தொடர்பாக படிக்க ஆரம்பித்தேன்.

சுற்றுப்புறச் சூழலால் காற்றில் மாசு நாளுக்கு நாள் அதிகமாகிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசுகள் அதிகமாவதால் பல நோய்க்கு காரணம் தெரியாமலேயே இரையாகிறோம் . “காற்றில் மாசுகள்’ குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த துணைக்கோளை வடிவமைத்தேன். பூமியைச் சுற்றியிருக்கும் வாயு மண்டலம் பூமி வெப்பம் அடைவதால் எப்படியெல்லாம் மாற்றம் அடைகிறது... தாக்கத்திற்கு உள்ளாகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக ஒரு துணைக் கோள் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தேன். வாயு மண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, ஆக்சிஜன் மற்றும் இதர வாயுக்களின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை அறிய துணைக்கோள் உதவும். “நீட்’ தேர்வு காரணமாக உயிரிழந்த அனிதாவின் நினைவாக எனது துணைக் கோளுக்கு “அனிதா - சாட்” என்று பெயரிட்டேன்.

இந்த துணைக்கோளைத் தயாரிக்க மூன்று ஆண்டுகள் பிடித்தது. “அனிதா’ துணைக்கோள் ஆறு அங்குல நீளம், அகலம், உயரம் கொண்டு கன சதுர வடிவில் இருக்கும். எடை சுமார் நானூறு கிராம். இந்த துணைக் கோளைத் தயாரிப்பதில் எல்லா வகையிலும் உதவியவர் அக்னீஷ்வர் ஜெயப்ரகாஷ். சென்னை மற்றும் “அக்னி ஃபவுண் டேஷன்” அமைப்புகளின் தலைவர். துணைக்கோளுக்கு தேவையான பாகங்களை வாங்கவும், அதை எப்படி கையாள வேண்டும் என்பதை சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் உதவியது.

இந்த துணைக் கோளை கூம்பு வடிவில் இருக்கும் கருவியில் வைக்கப் பட்டு ஹீலியம் பலூன் மூலம் பறக்க விடப்படும். இந்த நிகழ்வு வரும் மே 6ஆம் தேதி மெக்சிகோவில் நடை பெற்றது.

இந்த துணைக் கோளை உருவாக்க சுமார் ஒன்றே கால் லட்சம் செலவானது. அதனையும், துணைக் கோள் விண்வெளியில் செலுத்தப்படும் செலவையும் அக்னீஷ் வர் ஜெயப்ரகாஷ் சார் ஏற்றுக் கொண்டுள்ளார்.

புவியிலிருந்து வான் நோக்கி சுமார் அய்ம்பது கி.மீ தூரம் வரை வாயு அல்லது வளி மண்டலம் பரவியுள்ளது. துணைக் கோளில் வளி மண்டலத்தின் வெப்பம், அங்கி ருக்கும் காற்று அழுத்தம், மண்டலத்தில் (பூமியிலிருந்து சுமார் பதினைந்து கி. மீ தூரத்தில்) குடி கொண்டிருக்கும் வாயுக்கள், அதன் அளவு, அங்கே காற்றின் தூய்மையின் அளவு குறித்த புள்ளிவிவரங்களைப் பதிவு செய்ய சென் சர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பூமியிலிருந்து துணைக் கோளின் வான் நோக்கிய பயணத்தை படம் பிடித்து நேரடியாக அனுப்பத் தேவையான கேமராவும் துணைக் கோளில் உண்டு. பதிவு செய்யப்படும் புள்ளிவிவரங்கள் உடனுக்குடன் மெக்சிகோ நகரில் இருக்கும் அஸ்ட்ரா ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். வாயு மண்டலம் நிலைமை குறித்து தெரிந்து கொண்டு அதை பாதுகாக்கும் நடவடிக்கைள் எடுக்க உதவியாக இருக்கும். ஹீலியம் பலூன் அதிகபட்சம் அய்ம்பது கி. மீ உயரம் வரை போகும். அங்கு போனதும் சூரிய ஒளியின் வெப்பம் காரணமாக வெடித்து விடும். அப்போது துணைக் கோள் வைக்கப்பட் டிருக்கும் கருவி கீழே விழத்தொடங்கும். அது பத்திரமாக வந்து சேர பாராசூட் விரிந்து உதவும். அநேகமாக கடலில் வந்து இறங்க வாய்ப்புள்ளது. அதை மீட்டு ஆய்வு செய்வார்கள்.  இந்தத் திட்டம் குறித்து அறிந்ததும் தமிழக முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் நேரில் அழைத்துப் பாராட்டினார்கள்.

சிறு வயதிலிருந்து மருத்து வராக வேண்டும் என்ற லட்சி யத்துடன் படித்து வந்தேன். அதனால் “பிளஸ் ஒன்” னில் பயோ பாடங்களை எடுத்தி ருந்தேன்.

துணைக் கோள் குறித்து சிந்திக்கத் தொடங்கியதும் மின்னணுவியல், மின்னியல் தொடர்பான புத்தகங்களை ஆழமாகப் படிக்கத் தொடங்கினேன்.

தொடர்ந்து அந்த பாதையில் போகலாம் என்றாலும், “மருத்துவராக வேண்டும்” என்ற நீண்ட நாள் கனவை நனவாக்க தேர்வுகளுக்கு என்னைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.

மே 6 ஆம்தேதி எனது துணைக் கோள் வளிமண்டலம் நோக்கி அனுப்பப்பட்டது. மே 6ஆம் தேதி  தேர்வு எழுத வேண்டும் என்று சென்றதால் , எனது துணைக் கோளின் விண் பயணத்தை நான் பார்க்க முடியவில்லை. அதுதான் கொஞ்சம் வருத்தத்தைத் தருகிறது” என்கிறார் வில்லெட் ஓவியா.

- விடுதலை நாளேடு, 15.5.18

வெள்ளி, 2 மார்ச், 2018

பெரும் பளு தூக்க பெண்ணால் முடியும்! 70 கிலோ தூக்கி 8 தங்கப் பதக்கம்!


காமன்வெல்த் போட்டியில் சேலம் மாணவி சாதனை!

நிவேதா படித்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த, இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில், பேண்டு வாத்தியங்கள் முழங்க, கழுத்தில் தொங்கிய தங்கப் பதக்கங்களுடன், வழிநெடுகிலும் மக்களின் உற்சாக வரவேற்பைப் பெற்றபடி சேலம் நகரை கம்பீரமாக வலம் வந்தார் நிவேதா.

பிளஸ்_டூ மாணவியான நிவேதா, சென்ற ஆண்டு ராஜஸ்தான் உதய்பூர் நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் 19 வயதுக்குரிய பிரிவில் 4 தங்கப் பதக்கங்களை வென்றே காமன்வெல்த்துக்குத் தகுதிபெற்றார்.

20 நாடுகள் கலந்துகொண்ட இந்தப் போட்டிகள் இந்த வருடம் செப்டம்பர் 10 முதல் 17ஆம் தேதிவரை தென்ஆப்பிரிக்காவின் பாட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடந்தது. இதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான (சப்_ஜூனியர்) பளு தூக்கும் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரே வீராங்கனை நிவேதா மட்டுமே. அந்தப் போட்டிகளில் எக்யுப்டு பிரிவில் 4 தங்கங்களையும், அன் எக்யுப்டு பிரிவில் 4 பதக்கங்களையும் வென்றதுடன், அன் எக்யுப்டு பிரிவில் டெட் லிப்ட்டில் 95 கிலோ எடையும் பெஞ்ச் பிரிவில் 45 கிலோ எடையும் மற்றும் ஸ்குவாடில் 70 கிலோ எடையும் தூக்கி இதற்கு முந்தைய காமன்வெல்த் சாதனைகளை முறியடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறார்.

“என் அப்பாதான் என் ரோல் மாடல். மூன்றாம் வகுப்பு முதலே இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு பல போட்டிகளில் பங்கேற்று மாவட்டம், மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் பல பரிசுகளையும் வென்றேன். இப்போது, பெருமைக்குரிய காமன்வெல்த் போட்டிகளிலும் இந்தியாவின் சார்பில் பதக்கங்களை வென்றதுடன், புதிய சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளேன். நான் படிக்கும் பள்ளியான விநாயகா வித்யாலயாவின் நிர்வாகமும் என் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருந்ததைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.’’

இவரது தந்தை வெங்கடேஸ்வரன் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில், பொறுப்பாளராக, குறைவான வருமானமே ஈட்டி வருகிறார். பளு தூக்குவதில் சிறு வயதில் ஏற்பட்ட ஈர்ப்பினாலும், வாய்ப்புகளின்றி தன்னால் சாதிக்க முடியாததைத் தன் பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் வீட்டிலேயே சொந்தமாக உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்) அமைத்து, தம் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பயிற்சி தந்து வருகிறார். எட்டாம் வகுப்பு படிக்கும் இவரது தங்கை சோனா லட்சுமியும் பளு தூக்குவதில் சாதித்து வருகிறார்.உலகப் போட்டியிலும் அவர் சாதனை படைக்க நமது வாழ்த்துகள்!

- உண்மை இதழ், 1-15.11.17

பெரும் பளு தூக்க பெண்ணால் முடியும்! 70 கிலோ தூக்கி 8 தங்கப் பதக்கம்!


காமன்வெல்த் போட்டியில் சேலம் மாணவி சாதனை!

நிவேதா படித்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த, இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில், பேண்டு வாத்தியங்கள் முழங்க, கழுத்தில் தொங்கிய தங்கப் பதக்கங்களுடன், வழிநெடுகிலும் மக்களின் உற்சாக வரவேற்பைப் பெற்றபடி சேலம் நகரை கம்பீரமாக வலம் வந்தார் நிவேதா.

பிளஸ்_டூ மாணவியான நிவேதா, சென்ற ஆண்டு ராஜஸ்தான் உதய்பூர் நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் 19 வயதுக்குரிய பிரிவில் 4 தங்கப் பதக்கங்களை வென்றே காமன்வெல்த்துக்குத் தகுதிபெற்றார்.

20 நாடுகள் கலந்துகொண்ட இந்தப் போட்டிகள் இந்த வருடம் செப்டம்பர் 10 முதல் 17ஆம் தேதிவரை தென்ஆப்பிரிக்காவின் பாட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடந்தது. இதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான (சப்_ஜூனியர்) பளு தூக்கும் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரே வீராங்கனை நிவேதா மட்டுமே. அந்தப் போட்டிகளில் எக்யுப்டு பிரிவில் 4 தங்கங்களையும், அன் எக்யுப்டு பிரிவில் 4 பதக்கங்களையும் வென்றதுடன், அன் எக்யுப்டு பிரிவில் டெட் லிப்ட்டில் 95 கிலோ எடையும் பெஞ்ச் பிரிவில் 45 கிலோ எடையும் மற்றும் ஸ்குவாடில் 70 கிலோ எடையும் தூக்கி இதற்கு முந்தைய காமன்வெல்த் சாதனைகளை முறியடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறார்.

“என் அப்பாதான் என் ரோல் மாடல். மூன்றாம் வகுப்பு முதலே இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு பல போட்டிகளில் பங்கேற்று மாவட்டம், மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் பல பரிசுகளையும் வென்றேன். இப்போது, பெருமைக்குரிய காமன்வெல்த் போட்டிகளிலும் இந்தியாவின் சார்பில் பதக்கங்களை வென்றதுடன், புதிய சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளேன். நான் படிக்கும் பள்ளியான விநாயகா வித்யாலயாவின் நிர்வாகமும் என் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருந்ததைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.’’

இவரது தந்தை வெங்கடேஸ்வரன் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில், பொறுப்பாளராக, குறைவான வருமானமே ஈட்டி வருகிறார். பளு தூக்குவதில் சிறு வயதில் ஏற்பட்ட ஈர்ப்பினாலும், வாய்ப்புகளின்றி தன்னால் சாதிக்க முடியாததைத் தன் பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் வீட்டிலேயே சொந்தமாக உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்) அமைத்து, தம் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பயிற்சி தந்து வருகிறார். எட்டாம் வகுப்பு படிக்கும் இவரது தங்கை சோனா லட்சுமியும் பளு தூக்குவதில் சாதித்து வருகிறார்.உலகப் போட்டியிலும் அவர் சாதனை படைக்க நமது வாழ்த்துகள்!

- உண்மை இதழ், 1-15.11.17