ஞாயிறு, 19 ஜூலை, 2015

லாரி ஓட்டுநராக முதல் பெண் ஜோதிமணி

ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிப்பாளையம் அருகில் உள்ள கள்ளிப் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி கவுதமன். மாநிலத்திலேயே முதல்முறையாக ஒரு பெண் லாரி ஓட்டுநராக பணி யாற்றுபவர் என்றால் அவர் ஜோதிமணி கவுதமன்தான். லாரி ஓட்டுநராக பணி யாற்றுவதில் உள்ள மகிழ்வு மற்றும் ஆபத்துகள் உள்ள தாக ஜோதிமணி கூறு கிறார்.
நாடுமுழுவதும் நெடுஞ் சாலையில் நீண்ட தொலைவு, தனிமையான நேரங்களில் செல்லும் சூழல். லாரியின் மாபெரும் சுமைகளுடன் பொருள் களுடன் செல்வது என்பது மிகவும் கடினமானது.  பெண் என்பதால் மற்றவர்களின் ஊடுருவும் பார்வை, தேவையில்லாத விசாரணைகள் மற்றும் குண்டும் குழியுமாக உள்ள பாதைகள் உள்ளிட் டவை மோசமானவை என்கிறார்.
இவையாவும் 30 வயதுள்ள தீப்பிழம்பாக உள்ள ஜோதிமணியை எதுவும் அவர் பணியை நிறுத்த முடியவில்லை. ஆண்கள் மட்டுமே செய்துவந்துள்ள லாரி ஓட்டுநர் பணியை நிறைவாக செய்துவருகிறார்.
தமிழ்நாட்டில் ஒரேயொரு பெண் லாரி ஓட்டுநராக முதல்முறையாக பணியாற்றிவரும் ஜோதிமணிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 16 டன் எடையுள்ள லாரியுடன் பல்வேறு மாநி லங்களைக் கடந்து சென்றுவருகிறார்.
ஜோதிமணி தன் அனுபவத்தைக் கூறும்போது, 1.1.2009 அன்று முதல் முறையாக லாரியை என் கரங்களால் ஓட்டத் தொடங்கினேன். என் கணவர் கவுதமனுக்கு சொந்தமான லாரியை ஓட்டினேன். கட்டுக்கடங்காத லாரியை எப்படி ஓட்டுவது என்று எனக்கு அவர் மிகவும் கவனமாகச் சொல்லிக் கொடுத்தார். அப்போது அப்படியும் இப்படியுமாக மோதிவிட்டேன். எனக்கு அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது என்று சிரித்தபடி கூறினார்.
வீட்டுவேலைகளை மட்டுமே செய்து வந்த ஜோதிமணிக்கு அவர்களுக்கு சொந்தமான லாரியை ஓட்டுவது தொழிலாகிவிட்டது. அவர் மேலும் கூறும்போது, எங்களின் இரண்டாவது லாரிக்கு ஓட்டுநரை நியமித்தோம். எங்களிடம் சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிட்டார்.
அதனால் பெரும் நட்டம் ஏற்பட்டது. அதனாலேயே நானே என்னுடைய கணவருடன் இணைந்து லாரி ஓட்டத் தொடங்கினேன். நீண்ட தூரம் நெடுஞ்சாலையில் சென்றுவருவதே என்னுடைய வாழ்க்கையாகிவிட்டது என்றார். அப்போதுதான் சூரத்துக்கு பொருள்கள் ஏற்றிச் சென்று திரும்பினார்.
மணமாவதற்கு முன்பே 2009ஆம் ஆண்டின் மத்தியில் தற்போதைய கணவரான கவுதமுடன் அய்தராபாத்வரை பயணித்திருக்கிறார். தற்பொழுது குஜராத் உள்ளிட்ட பகுதிவரை தனியாகவே சென்று வருகிறார். அடிக்கடி ஆடைகள், பருத்தி ஆடைகள் மற்றும் மரம், எந்திரங்களின் பாகங்கள் ஆகியவைகளை ஏற்றிச் செல்வார்.
சுமை களுக்கு ஏற்ப எங்குமே நிறுத்தவேண்டிய அவசியம் இல்லாத பயணங்களாக அமைந்துவிடும். அதிலும் இரண்டு வாரங்கள் அல்லது ஒரு மாதம்கூட செல்ல வேண்டியதாக இருக்கும். அவருடைய குழந்தைகள் 9 வயது மோனிக் சுபாஷ், 7 வயது விஜயாபானு ஆகிய இருவரும் அவர் பாட்டி யான சரஸ்வதியிடம்(78) வளர்ந்து வருகிறார்கள்.
இந்தத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றுள்ள ஜோதிமணி நல்ல திறமையான ஓட்டுநராக மாறிவிட்டார். அதுமட்டுமன்றி அசோக் லெய்லேண்ட் லாரியில் இன்னமும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டியவராகவே இருப்பதாகக் கூறுகிறார். ஜோதிமணி கூறும்போது, 2012ஆம் ஆண்டில் மகாராட்டிர மாநிலத்தில் பிரேக் செயலிழந்துவிட்டதால் விபத்து நேர்ந்துவிட்டது. அதிலிருந்து தப்பியதே பெரிதாகிப்போனது என்றார்.
ஜோதிமணியின் நோக்கம் என்ன வென்றால், தன் கணவருடன் சேர்ந்து போதுமான பணம் சேர்த்தபிறகு ஒருநாளில் ஓட்டும் தொழிலில் இருந்து மாறி போக்குவரத்து முகவாண்மை நிறுவனத்தை சொந்தமாக நடத்த வேண்டும் என்பதுதான்.
அதுவரை, இந்த பெண் லாரி ஓட்டுநர் கள்ளிப்பட்டியிலிருந்து பெரு மிதத்துடன் நீண்ட தூர பயணங்களைத் தொடர்வார்.
நெஞ்சார அவரை நாம் வாழ்த் துவோமாக!
_ தி இந்து ஆங்கில நாளிதழ்
-விடுதலை ஞாயிறு மலர்,30.5.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக