சனி, 25 ஜூலை, 2015

6 மாதங்களாக வளர்ப்பு மகளை கற்பழித்த தந்தை கைது


பதிவு செய்த நாள்:
சனி, ஜூலை 25,2015, 4:04 PM IST
டிவி தொலைகாட்சி தொடர் ஒன்றின் பிரதிபலிப்பாக வளர்ப்பு தந்தை ஒருவர் தனது மகளை பலமுறை கற்பழித்து உள்ளார் என்று  போலீசார் தெரிவித்து உள்ளனர். குற்றவாளியை போலீசார் கண்டறிந்து கைது செய்து கோர்ட் உத்தரவுக்கு பிறகு சிறையில் அடைத்து உள்ளனர். அவரது பெயர் சச்சின் சர்மா.

இந்தூரை சேந்ர்தவர் 11 வயது சிறுமி அவரது பெயர் வெளியிடப்படவில்லை. கடந்த் 6 மாதமாக வளர்ப்பு தந்தை தன்னை கற்பழித்து  வந்து உள்ளதாக தாயாரிடம் கூறி உள்ளார். சிறுமியின் வாழ்க்கையில் நடந்தது போல் கடந்த செவ்வாய்க்கிழமை பிரபல டிவி ஒன்றில்  குற்ற கண்காணிப்பு என்ற பெயரில் கிரைம் தொடர் வெளியாகி இருந்தது.

வெள்ளிக்கிழமை சிறுமி தாயாரிடம் இதை கூறி உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் உடனடியாக போலீசாரை அழைக்க முயற்சி செய்து உள்ளார். ஆனால் கணவர் மொபைல் போனை பறித்து விட்டார். இருந்தாலும் உடனடியாக தயார் அருகே உள்ள தவாரிகாபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதை தொடர்ந்து குற்றவாளியை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக  எனது மகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதை நிறுத்தி விட்டாள். நான் என்ன காரணம் என தெரிந்து கொள்ள முயன்றேன். ஆனால்  அவள் அமைதியாகவே இருந்தார். வெள்ளிகிழமை என் கணவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதை விவரித்தாள் என் தயார் கூறி உள்ளார்.

தனது முதல் கணவன் இறந்து விடடதால் சர்மாவை கடந்த 2 வருடங்களுக்கு முன் இவர் திருமணம் செய்து உள்ளார்.
-தினத்தந்தி இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக