புதன், 28 பிப்ரவரி, 2018

சவுதி அரேபியாவில் துணை அமைச்சராக முதல் முறையாக பெண் நியமனம்


துபாய், பிப். 28- எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா வில் மன்னர் ஆட்சி நடக்கிறது. சல்மான் மன்னர் ஆக இருக் கிறார். அவரது மகன் முகமது பின் சல்மான் பட்டத்து இளவ ரசராக உள்ளார்.

இவர் பொறுப்பு ஏற்றதும் சவுதி அரேபியாவில் இருந்து பல அதிரடி சீரமைப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்டவும், தொழில் தொடங்கவும், கால்பந்து போட்டிகளை கண்டுகளிக்கவும் அனுமதி வழங்கினார். ஏற்கெ னவே இருந்த தடைகளை நீக் கினார்.

லஞ்ச ஊழலில் ஈடுபட்ட இளவரசர்கள், அமைச்சர்கள், கோடீஸ்வரர்கள் என 50-க்கும் மேற்பட்டோரை கைது செய் தார். அவர்களை ரியாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சிறை வைத்தார்.

இந்தநிலையில் சவுதி அரே பியாவில் ராணுவ தளபதிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ள னர். ராணுவம், விமானப்படை தளபதிகள் மற்றும் உயர் அதி காரிகள் பணிநீக்கம் செய்யப் பட்டனர். இந்த நிலையில் துணை அமைச்சராக பெண் ஒருவரையும் மன்னர் சல்மான் நியமித்துள்ளார். சமூக முன் னேற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறை துணை அமைச்சராக டாக்டர் தாமாதர் பின் யூசுப் அல்-ரம்மா என்ற பெண் நிய மிக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்ற முக்கிய துறை யில் பெண் ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்படுவது அந்த நாட்டில் இதுவே முதல் முறையாகும். இவர் மான் செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ரோடியோலஜி மற்றும் மருத் துவ பொறியியல் துறையில் பி.எச்.டி. படித்தவர். 2016இல் சவுதி அரேபியாவின் மனித உரி மைகள் ஆணைய உறுப்பினராக இருந்தார்.

- விடுதலை நாளேடு, 28.2.18

சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி!

ரியாத், பிப். 27- ராணுவத்தில் இனி பெண்களும் சேர்ந்து பணியாற்றலாம் என்று சவுதி அரேபிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


சவுதி அரேபியாவின் நீடித்த வளர்ச்சியினை உறுதி செய்யும் பொருட்டு சவுதி அரேபிய இள வரசர் முகமது பின் சல்மான் ‘சவுதி அரேபியா விசன் 2030’ என்ற தொலைநோக்குத் திட் டத்தை அறிமுகம் செய்துள்ளார்.


அந்த திட்டத்தின் அடிப் படையில் சில நாட்களுக்கு முன்னதாக ஆண்களின் அனு மதி இல்லாமலேயே பெண்கள் தொழில் தொடங்கலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந் தது. அடுத்ததாக இவ்வாண்டு ஜனவரியில் பெண்கள் கார் ஓட் டுவதற்கு முன்பு விதிக்கப்பட்டி ருந்த தடையும் ரத்து செய்யப் பட்டுள்ளது.


அந்த வரிசையில் தற்போது  பெண்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி வழங்குவதாக ஞாயிற்றுக் கிழமை அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக ரியாத், மக்கா,  அல்-குசைம் மற்றும் அல் மதினா உள்ளிட்ட மாகாணங் களைச் சேர்ந்த பெண்கள் ராணு வத்தில் முதல்நிலை வீராங்க னையாக சேர விண்ணப்பிக் கலாம் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.


இனி நாட்டின் பொருளா தாரத்தினை விரிவு செய்யும் வகையில், பெண்கள் பொருள் ஈட்டும் வாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கித் தரப் படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


-விடுதலை நாளேடு, 27.2.18

சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி!

ரியாத், பிப். 27- ராணுவத்தில் இனி பெண்களும் சேர்ந்து பணியாற்றலாம் என்று சவுதி அரேபிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


சவுதி அரேபியாவின் நீடித்த வளர்ச்சியினை உறுதி செய்யும் பொருட்டு சவுதி அரேபிய இள வரசர் முகமது பின் சல்மான் ‘சவுதி அரேபியா விசன் 2030’ என்ற தொலைநோக்குத் திட் டத்தை அறிமுகம் செய்துள்ளார்.


அந்த திட்டத்தின் அடிப் படையில் சில நாட்களுக்கு முன்னதாக ஆண்களின் அனு மதி இல்லாமலேயே பெண்கள் தொழில் தொடங்கலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந் தது. அடுத்ததாக இவ்வாண்டு ஜனவரியில் பெண்கள் கார் ஓட் டுவதற்கு முன்பு விதிக்கப்பட்டி ருந்த தடையும் ரத்து செய்யப் பட்டுள்ளது.


அந்த வரிசையில் தற்போது  பெண்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி வழங்குவதாக ஞாயிற்றுக் கிழமை அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக ரியாத், மக்கா,  அல்-குசைம் மற்றும் அல் மதினா உள்ளிட்ட மாகாணங் களைச் சேர்ந்த பெண்கள் ராணு வத்தில் முதல்நிலை வீராங்க னையாக சேர விண்ணப்பிக் கலாம் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.


இனி நாட்டின் பொருளா தாரத்தினை விரிவு செய்யும் வகையில், பெண்கள் பொருள் ஈட்டும் வாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கித் தரப் படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


-விடுதலை நாளேடு, 27.2.18

சவுதி அரேபியாவில் துணை அமைச்சராக முதல் முறையாக பெண் நியமனம்


துபாய், பிப். 28- எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா வில் மன்னர் ஆட்சி நடக்கிறது. சல்மான் மன்னர் ஆக இருக் கிறார். அவரது மகன் முகமது பின் சல்மான் பட்டத்து இளவ ரசராக உள்ளார்.

இவர் பொறுப்பு ஏற்றதும் சவுதி அரேபியாவில் இருந்து பல அதிரடி சீரமைப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்டவும், தொழில் தொடங்கவும், கால்பந்து போட்டிகளை கண்டுகளிக்கவும் அனுமதி வழங்கினார். ஏற்கெ னவே இருந்த தடைகளை நீக் கினார்.

லஞ்ச ஊழலில் ஈடுபட்ட இளவரசர்கள், அமைச்சர்கள், கோடீஸ்வரர்கள் என 50-க்கும் மேற்பட்டோரை கைது செய் தார். அவர்களை ரியாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சிறை வைத்தார்.

இந்தநிலையில் சவுதி அரே பியாவில் ராணுவ தளபதிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ள னர். ராணுவம், விமானப்படை தளபதிகள் மற்றும் உயர் அதி காரிகள் பணிநீக்கம் செய்யப் பட்டனர். இந்த நிலையில் துணை அமைச்சராக பெண் ஒருவரையும் மன்னர் சல்மான் நியமித்துள்ளார். சமூக முன் னேற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறை துணை அமைச்சராக டாக்டர் தாமாதர் பின் யூசுப் அல்-ரம்மா என்ற பெண் நிய மிக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்ற முக்கிய துறை யில் பெண் ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்படுவது அந்த நாட்டில் இதுவே முதல் முறையாகும். இவர் மான் செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ரோடியோலஜி மற்றும் மருத் துவ பொறியியல் துறையில் பி.எச்.டி. படித்தவர். 2016இல் சவுதி அரேபியாவின் மனித உரி மைகள் ஆணைய உறுப்பினராக இருந்தார்.

- விடுதலை நாளேடு, 28.2.18

சவுதி அரேபியாவில் துணை அமைச்சராக முதல் முறையாக பெண் நியமனம்


துபாய், பிப். 28- எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா வில் மன்னர் ஆட்சி நடக்கிறது. சல்மான் மன்னர் ஆக இருக் கிறார். அவரது மகன் முகமது பின் சல்மான் பட்டத்து இளவ ரசராக உள்ளார்.

இவர் பொறுப்பு ஏற்றதும் சவுதி அரேபியாவில் இருந்து பல அதிரடி சீரமைப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்டவும், தொழில் தொடங்கவும், கால்பந்து போட்டிகளை கண்டுகளிக்கவும் அனுமதி வழங்கினார். ஏற்கெ னவே இருந்த தடைகளை நீக் கினார்.

லஞ்ச ஊழலில் ஈடுபட்ட இளவரசர்கள், அமைச்சர்கள், கோடீஸ்வரர்கள் என 50-க்கும் மேற்பட்டோரை கைது செய் தார். அவர்களை ரியாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சிறை வைத்தார்.

இந்தநிலையில் சவுதி அரே பியாவில் ராணுவ தளபதிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ள னர். ராணுவம், விமானப்படை தளபதிகள் மற்றும் உயர் அதி காரிகள் பணிநீக்கம் செய்யப் பட்டனர். இந்த நிலையில் துணை அமைச்சராக பெண் ஒருவரையும் மன்னர் சல்மான் நியமித்துள்ளார். சமூக முன் னேற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறை துணை அமைச்சராக டாக்டர் தாமாதர் பின் யூசுப் அல்-ரம்மா என்ற பெண் நிய மிக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்ற முக்கிய துறை யில் பெண் ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்படுவது அந்த நாட்டில் இதுவே முதல் முறையாகும். இவர் மான் செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ரோடியோலஜி மற்றும் மருத் துவ பொறியியல் துறையில் பி.எச்.டி. படித்தவர். 2016இல் சவுதி அரேபியாவின் மனித உரி மைகள் ஆணைய உறுப்பினராக இருந்தார்.

- விடுதலை நாளேடு, 28.2.18

புதன், 21 பிப்ரவரி, 2018

பெண்களுக்கு முதுகலை படிப்பு வரை இலவச கல்வி கருநாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு


பெங்களூரு, பிப்.20 கருநாடகா வில் பெண்களுக்கு தொடக்கக் கல்வி முதல் முது கலை படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என அம் மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கருநாடக முதல்வர் சித்த ராமையா 17ஆம் தேதி சட்டப் பேரவையில் 2018-  -  2019-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். 
அப்போது அவர் தனது உரையில், கருநாடகாவில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 2017- 2018-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் 1-ஆம் வகுப்பு முதல் இளங்கலை படிப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு அந்த திட்டம், அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரி களுக்கும் விரிவுபடுத்தப்படு கிறது.

மேலும் பெண்கள் உயர் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.95 கோடி செலவில் முதுகலை படிப்பு வரை அவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 3.75 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள். மொத்தமாக பெண்களின் கல்வி மற்றும் கல்வி நிலையங்களின் மேம்பாட்டிற்காக ரூ.4514 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

சித்தராமையாவின் இந்த அறிவிப்புக்கு கர்நாடகாவில் உள்ள மகளிர் அமைப்பினரும், சமூக நல அமைப்பினரும் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மகளிர் அமைப்பினர், கர்நாடக அரசின் இந்த அறிவிப்பால் மாநிலத்தில் பெண்களின் கல்வி நிலை உயரும்.

பெண்கள் அனைத்து துறை களிலும் முன்னேற்றம் அடைய, இந்த திட்டம் பெரிதும் உதவும். பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கியதற்காக முதல்வர் சித்த ராமையா வரலாற்றில் போற்றப் படுவார் என பாராட்டு தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 20.2.18

திங்கள், 5 பிப்ரவரி, 2018

2017: அனிதா முதல் ஆரிபா வரை

அனிதா



பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்களை பெற்றும் நீட் தேர்வின் காரணமாக தான் மருத்துவராக வேண்டும் என்ற கனவு தகர்ந்ததால், தற்கொலை செய்து கொண் டார் அனிதா. அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நீட் தொடர்பான வழக்கில் பங்கேற்ற அனிதா செய்தியாளர்களை சந்தித்து நீட் தேர்விற்கு எதிரான தன் நிலையை முன்வைத்தார்.

இருப்பினும், நீட் தேர்வின் அடிப் படையிலேயே சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால் அனிதாவின் கனவு தகர்ந்தது.

இதைத் தொடர்ந்து அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனி தாவின் மரணத்தை தமிழக மக்கள் அவ்வளவு எளிதாக மறப்பதற்கு வாய்ப்பில்லை. அனிதாவிற்கான நீதிகோரிய போராட்டம் ஓய்ந்துவிட வில்லை. நாடு முழுவதும் பல அனி தாக்கள் உருவாகியுள்ளார்கள். இந்த அனிதாக்களால் ஆட்சியாளர்களின் ஆணவப்போக்கு விரைவில் ஒழிந்து விடும் என்கிற விதமான நம்பிக்கையை நுங்கம் பாக்கப் பள்ளி மாணவிகள் விதைக்கத் தொடங்கியுள்ளனர்.

சாதி எதிர்ப்பு போராளி கவுசல்யா



திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கவுசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் இளைஞரான சங்கர் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். ஆனால், கவுசல்யாவின் உறவினர்களால் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இது ஆணவப் படுகொலை என்று கூறி நீதிமன்றத்தில் நீதி கேட்டு போராடி வந்தார் கவுசல்யா. தீர்ப்பின்படி, இந்த வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. தனது கணவரின் மரணத்திற்காக நீதி கேட்டு போராடிய கவுசல்யா சாதி எதிர்ப்புப் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார். இன்று சாதி எதிர்ப்பு போராளியாக பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு இன்றைய இளம் பெண்களுக்கு ஒரு முன்னு தாரணமாகவும் இருந்து வருகிறார் கவுசல்யா.

ஹாதியா



காதலுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் அதிகம் பேசப்பட்டார் ஹாதியா. தற்போதைய இந்த நவீன உலகத்திலும், தங்களது துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் மறுக்கப்பட்டுதான் வருகிறது. அது மதத்தின் பெயராலோ அல்லது சாதியின் பெயராலோ பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது.

கேரளாவில் இந்து குடும்பத்தில் பிறந்த ஹாதியா இசுலாம் மதத்திற்கு மாறி இசுலாமிய இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஹாதியா மூளைச் சலவை செய்யப்பட்டார் என்றும், இது ‘லவ் ஜிஹாத்’ என்றும் அவரின் தந்தை தெரிவித்தார். ஆனால், தன்னை மதம் மாறும்படி யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று ஹாதியா தெரிவித்தார்.

பத்மாவதி



இந்த வருடத்தில் பரபரப்பை பஞ்ச மில்லாமல் ஏற்படுத்தியது பத்மாவதி திரைப்படம். இந்த திரைப்படம் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மாவதியின் கதை என்று கூறப்படுகிறது. தாங்கள் தெய்வமாக மதிக்கும் பத்மாவதியை "தவறாக சித்தரிப்பதால்" இத்திரைப்படம் வெளி வரக்கூடாது என்று தீவிர வலதுசாரி இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திரைப்படத்தில் பத்மாவதியாக நடித்துள்ள தீபிகாவின் மூக்கை அறுக்க வேண்டும் என்றும், அவரின் தலையை வெட்டி வருபவர்களுக்கு 10 கோடி பரிசு என்றும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. கற்பனை கதாப்பாத்திரமான பத்மாவதிக்காக போராடும் குழுக்கள் இயல்பு நிலையில் இன்றைய அளவில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறை குறித்து போராடினால் நன்றாக இருக்கும் என்றே சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டது.

ஆரிபா



ராஜஸ்தானைச்சேர்ந்தபாயல் என்ற 22 வயது ஆசிரியை ஏற்றுமதி வணிகம் செய்யும் பயஸ்முகமது என்பவரை காதலித்துவந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக பாயலின் வீட்டார் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும் பஜ்ரங் தள் அமைப்பைச்சேர்ந்தவர்களிடம் இவ்விவகாரத்தைச் சொல்ல பாயல் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டார்.

இந்த நிலையில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டைவிட்டு வெளியேறி பயஸ் முகமதுவை திருமணம் செய்து கொண்டார். மேலும் தனது விருப்பத்துடன் கணவரின் மதமான இசுலாத்தை தழுவி தனது பெயரை ஆரிபா என்று மாற்றிக் கொண்டார்.

இவ்விவகாரம் ராஜஸ்தானில் பூதாகர மாக வெடித்தது. இந்து அமைப்புகள் பாயல் என்ற ஆரிபாவின் பிறப்புச்சான்றிதழையே மாற்றி அவரின் வயதைக் குறைத்துக் காட்ட முயற்சி செய்தார்கள். இவர்களுக்கு மாநில நிர்வாகத் தைச்சேர்ந்த சிலரும் உடந்தையாக இருந்தனர்.

மோசடியாக தயாரிக்கப்பட்ட வயதுச் சான்றிதழ் விவகாரம் நீதிமன்றம் சென்றது. இந்த நிலையில் சான்றிதழ் தொடர்பான வழக்கு முடியும் வரை ஆரிபா கணவனை விட்டு தனது வீடு செல்லவேண்டும் என்று கூறியது. ஆனால் தான் தனது பெற்றோரின் வீட்டிற்குச் செல்ல மாட்டேன் என்று உறுதி யாக கூறியதால் நீதிமன்றம் ஆரிபாவை பெண்கள் காப்பகத்தில் வைக்க உத்தர விட்டது.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் இந்து அமைப்பினரும் ஆரிபாவின் பெற்றோரும் பயஸ்முகமது மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை செய்தல், துன்புறுத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் புகார் செய்தனர். நீதிமன்ற விசாரணையில் ஆரிபா இதை முழுமையாக மறுத்தார். மேலும் தனக்கு 22 வயதாகிவிட்டதை உறுதிசெய்யும் கல்லூரிச் சான்றிதழ்களைக் கொடுத்தார்.  இதனை ஆய்வு செய்த ராஜஸ்தான் தலைமை நீதிபதி கோபால கிருஷ்ண வியாஸ் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில் ''ஆரிபாவுக்கு அவரின் சுய விருப்பத் தின் பேரில் திருமணம் செய்துகொள்ள முழு உரிமை உண்டு, அதற்கான வயதை அவர் அடைந்துவிட்டார்.

அவரின் பாதுகாப்பைக் காவல் துறை யினரே உறுதி செய்யவேண்டும் என்று கூறி ஆரிபா அவர் கணவருடன் வாழ முழு உரிமை உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது.  அதன் பிறகு காப்பகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வந்த ஆரிபா தனது கணவர் பயஸ் முகமதுவுடன் சென்றார்.

இவ்வாறு எத்தனை அனிதாக்களும், ஆரிபாக்களும், ஹாதியாக்களும், கவுசல் யாக்களும் நீதிமன்றம் செல்ல வேண்டுமோ?

- விடுதலை ஞாயிறுமலர்,20.1.18