திங்கள், 20 ஜூலை, 2015

முதல் பெண் கப்பல் பொறியாளர்

முதல் பெண் கப்பல் பொறியாளர்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கு சரியான எடுத்துக்காட்டு சிறீலட்சுமி பிரியா. சராசரியாக ஓராண்டில் 9 மாதங்கள் கப்பலிலேயே பயணம் செய்கிறார். கப்பலை வளைக்கும் சோமாலியா நாட்டு கடற்கொள்ளை யர்கள் பகுதி முதல் ஆபத்தான கடல்பகுதிகள் வரை உலகிலுள்ள அனைத்து கடல்பகுதிகளும் இவருக்கு அத்துபடி. இந்தியா வில் பெண்கள் நுழையவே அச்சப்படும் கப்பல் துறையில், தமிழகத்திலிருந்து முதல் பெண் மரைன் இன்ஜினீயராக கடலில் களம் இறங்கி சாதித்து வருகிறார் இந்த திருச்சிக்காரர்.
இப்போதெல்லாம் 8ஆம் வகுப்பு படிக்கும் போதே பலரும், எதிர்காலத்தில் என்னவாக வரவேண்டும் என்று தீர்மானித்துவிடுகிறார் கள். ஆனால், நான் 11ஆம் வகுப்பு படிக்கும் வரை அடுத்து என்ன என்று தீர்மானிக்கவில்லை. எதேச்சையாக ஒரு நாள் டைட்டானிக் படம் பார்த்தேன். காதல், சென்டிமென்ட் என நிறையக் காட்சிகள் வந்தாலும், என் மனதில் நின்றது கடலும், அந்த மிகப்பெரிய கப்பலும் மட்டுமே. இதே சமயத்தில் தொலைக்காட்சியில் கப்பல் அதிகாரி ஒருவரின் பேட்டியைப் பார்த்தேன். அப்போதுதான் மரைன் பொறி யாளராக வேண்டும் என்று முடிவு செய்தேன்.
12ஆம் வகுப்பில் 94 சதவிகிதம் மதிப்பெண் பெற்றதும், பல கல்லூரிகளில் மரைன் படிப்புக்காக விண்ணப்பம் போட்டுவிட்டுக் காத்திருந்தேன். சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில், வயது குறைவாக இருக்கிறது என்று எனது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டார்கள். பெரும்பாலான கல்லூரிகளில், ஆண்களை மட்டுமே இந்தப் படிப்பில் சேர்க்கிறோம் என்று கூறிவிட்டார்கள். நீண்ட முயற்சிக்குப் பின் புனேவில் பிட்ஸ் பிலானி குழுமத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இடம் கிடைத்தது. அங்கே சென்றபோதுதான், மரைன் பொறியியல் துறையில் 13 பெண்கள் மட்டுமே இதுவரை படித்துள்ளனர் என்பதும், தமிழகத்திலிருந்து இந்தப் படிப்பைப் படிக்கும் முதன் பெண் நான்தான் என்பதும் தெரியவந்தது
. 90 மாணவர்களில் என்னையும் சேர்த்து மூவர் மட்டுமே பெண்கள். நேவி உடைதான் யூனி ஃபார்ம். அந்த உடையை அணிந்தவுட னேயே தனி கம்பீரம் வந்துவிட்டது. இத்தனைக்கும் பள்ளியில் படிக்கும் போது கடற்கரையையோ, கப்பலையோ நான் பார்த்ததேயில்லை. இரண்டாம் வருடத்தில்தான் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மொத்தம் நான்கு வருட படிப்பு. ஒவ்வொரு பருவத் தேர்விலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். இறுதியாண்டு படிக்கும் போது வளாகத் தேர்வில் வேலை கிடைத்தது. என் கனவு நிறைவேறிய தருணம் அது. 2007இல் ஆங்கிலோ ஈஸ்டர்ன் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் 5ஆம் நிலை பொறியாளராக பணிக்குச் சேர்ந்தேன். இதுவரை 3 முறை உலகை வலம் வந்திருக் கிறேன் என்று சொல்லும் சிறீலட்சுமி ப்ரியாவுக்கு தமிழ், ஆங்கிலம் தவிர இந்தி, பிரெஞ்சு, ஜப்பானீஸ் மொழிகளும் தெரியுமாம்.
கடலைக் காதலிக்கும் இவருக்கு, அகில இந்திய இளம் கடல்சார் அலுவலர் என்ற விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்து உள்ளது. ஒரு முறை பசிபிக் கடலில் பயணம் செய்தபோது கடும் சூறாவளி தாக்கியதில் இன்ஜின் பழுதாகி, நடுக்கடலில் கப்பல் தத்தளித்தது. நான் உள்பட சக ஊழியர்களும் கிட்டத்தட்ட 22 மணி நேரம் போராடி இன்ஜினை சரி செய்தோம். வாழ்நாளில் மறக்கவே முடியாத நிகழ்ச்சி அது.
அதேபோல் ஒவ்வொரு முறையும் சோமாலியா நாட்டு கடல் எல்லையைத் தாண்டும் போது உயிரைக் கையில் பிடித்தபடியேதான் பயணம் செய்கிறோம். எப்போது கடற்கொள்ளையர்கள் வந்து கப்பலைத் தாக்குவார்கள் என்று சொல்லவே முடியாது. இதுவரை 6 முறை சோமாலியாவைக் கடந்து சென்றிருக்கிறேன். இப்போது டென் மார்க் நாட்டு தனியார் நிறுவன சரக்குக் கப்பலில் 3ஆம் நிலை பொறியாளராகப் பணியாற்றி வருகிறேன். என் ஒரே கனவு தலைமைப் பொறியாளராக வரவேண்டும் என்பதே என்கிறார் சிறீலட்சுமி ப்ரியா.

பெண்களுக்கு 30 விழுக்காடு
அசாம் மாநிலத்தில் மோரி காவ் மாவட்டத்தில் உள்ள பொபிடோரா வனவிலங்குச் சரணாலயத்தில், ரேகா மற்றும் கவிதா எனும் இரண்டு பெண் காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர் (9 ஆகஸ்ட், 2010). காடுகளைக் காக்கும் பணியில் அசாம் மாநிலத்தில் உள்ள வெவ்வேறு காட்டுப் பகுதிகளில் 56 பெண்கள் ஈடுபட்டுள்ளனர். பெண்களை 30 விழுக்காடு அளவிற்கு எல்லாப் பதவிகளிலும் நியமிப்பது எனும் ஏற்பாட்டின் கீழ், வன இலாகா முதன்முதலாக இப்பணியில் அவர்களை அமர்த்தி இருக்கிறது

வாள்வீச்சு வீராங்கனை!
இந்திய வாள்சண்டை வீராங்கனை பவானி தேவி அக்டோபரில் டில்லியில் நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிக்காக பயிற்சி செய்கிறார். அவர் கூறுகிறார்:
வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக, வாள்சண்டையைத் தேர்ந்தெடுத் தேன். இந்த விளையாட்டில் அமெரிக்காவை சேர்ந்த ஜாக்யுனிஸ் எனக்கு மிகவும் பிடித்த வீராங்கனை. பிற விளையாட்டுக்களைப்போல் வாள்சண்டை நமது நாட்டில் பிரபலம் ஆக வில்லை என்பது மறுக்க முடியாது. சர்வதேச விதிமுறைகளை உடனுக்குடன் அறியச் செய்தல், அதிக ஸ்பான்ஸர் கிடைக்க செய்தல் ஆகிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டால் இதுவும் பிரபலம் ஆகும்.
இந்த விளையாட்டில் எப்பி, சேபர், ஃபாய்ல் என மூன்று பிரிவுகள் உள்ளன. இவை ஆண் களுக்கும், பெண்களுக்கும் பொதுவானவை. பன்னாட்டு அளவில் பத்து போட்டிகளில் பங் கேற்று மூன்று வெண்கல பதக்கங்கள் வென்றுள் ளேன். தேசிய அளவில் இருபத்திரண்டு போட்டி களில் பங்கேற்று ஏறக்குறைய அறுபது மெடல்கள் வாங்கியுள்ளேன். இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும். சேபர் பிரிவின் பன்னாட்டு நடுவராக பணியாற்ற வேண்டும் என விரும்புகிறார் பவானி.
விடுதலை,10.8.10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக