வெள்ளி, 28 அக்டோபர், 2016

சரித்திர சாதனை படைத்த தீபா மாலிக்

பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் தீபா மாலிக். ரியே நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் வீல் சேரில் உட்கார்ந்தபடியே சக்கர நாற்காலியில் பங்கேற்று, குண்டு எறிதல் போட்டியில் இவர் வெள்ளிப்பதக்கம் வென்றபோது பார்வை யாளர்கள் இமைக்க மறந்தனர்.
டில்லியைச் சேர்ந்த 45 வயதான தீபாவுக்கு, கடந்த 14 ஆண்டுகளில் முதுகில் மூன்று அறுவை சிகிச்சைகள் செய்தபோதும் மார்புக்குக் கீழ் உடல் இயங்கவில்லை. அதற்காக அவர் சோர்ந்துவிடவும் இல்லை. மோட்டார் ஸ்போர்ட்ஸ், நீச்சல், ஈட்டி எறிதல் வீராங்கனையாகத் தன்னை மாற்றிக்கெண்டு, தன்னம்பிக்கையூட்டும் பேச் சாளராகவும் மாறினார்.
வெளிநாடுகளில் பயிற்சிகள் பெற வாய்ப்பு கிடைத்தபோதும் அதை மறுத்து டில்லியிலேயே பயிற்சியைத் தொடர்ந்தார் தீபா. விளையாட்டில் சாதிக்க வெளிநாடுதான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை என தீவிரமாக நம்பியவர், பயிற்சியாளர் வைபவ் சிரேஹி வழங்கிய கடும் பயிற்சிகளையும் தட்டாமல் செய்து இந்த உயரத்தைத் தொட்டிருக்கிறார்.
என் உடலில் கட்டி இருப்பது கண்டறியப் பட்டபோது, அனைத்துத் தேவைகளுக்கும் பிறரைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதால், நான் வீட்டேடு முடங்கிப் போவேன் என்று பலரும் நினைத்தார்கள். அதைப் பொய்யாக்க வேண்டும் என்பதற்காகவே நீச்சல், குண்டு எறிதல் என நிறையப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். அறுவை சிகிச்சை தந்த வலியும் வேதனையும் என்னை நானே உணரும் புதிய பாதையில் என்னை இட்டுச் சென்றன. பாராலிம்பிக் போட்டிக்குத் தேர்வான பின், கண்டிப்பாகப் பதக்கம் வென்றுதான் வீடு திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்தேன். சரியான திட்டமிடல் இந்த வெற்றியைச் சாத்திய மாக்கி யிருக்கிறது.
மீதமுள்ள வாழ்க்கை முழு வதும் நினைவுகூர இந்த வெற்றி போதும் என்று சொல்லும் தீபா, தான் பெற்ற இந்த வெற்றி, நாட்டில் உள்ள பிற மாற்றுத் திறனாளிப் பெண்கள் சமூகத் தடைகளை உடைத்து, அவர்களின் கனவை நோக்கிப் பயணிக்க உந்து சக்தியாக இருக்கும் என நம்புவதாகச் சொல்கிறார். அவரது நம்பிக்கை இன் னும் பல வீராங்கனைகளை உரு வாக்கும்!
எனக்காக என் கணவர் தன் வேலையைக்கூட விட்டுவிட்டார். பைக்கராகத் தொடர் வதே என் விருப் பம். விளையாட்டு வீராங்கனையாக இருப்பது இன்னும் சவால்தான். ஆனால் நாம் பெறும் வெற்றிதான் அந்தச் சவாலுக்குக் கிடைக் கிற பரிசு! என்கிறார் தீபா.


கலாம்களை உருவாக்கும் ஆசிரியை!

மாணவர்களைப் புத்தகப் படிப்பில் தேர்ச்சியடைய வைப்பது தான் தலைசிறந்த பள்ளி என்பதை நான் ஏற்க மாட்டேன். பாடத்தைத் தாண்டி அந்த மாணவர்களிடம் எந்த அளவுக்கு தேச பக்தி வளர்ந்திருக்கிறது, மாணவர்களின் தனித்திறமை என்ன, விளையாட்டில் அவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள், மாணவர்களின் புதிய முயற்சி என்ன? இதற்கெல்லாம் ஆரோக்கியமான பதிலைச் சொல்லும் பள்ளிதான் உண்மையிலேயே தலைசிறந்த பள்ளி என்கிறார் சபரிமாலா.
திண்டிவனம் அருகிலுள்ள வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர். பட்டிமன்றப் பேச்சாளராக இருந்து ஆசிரியப் பணிக்கு வந்தவர். சரியான போக்குவரத்துக்கூட இல்லாத வைரபுரம் பள்ளி மாணவர்கள், இப்போது கடல் கடந்தும் பேசப்படுகிறார்கள். அதற்குக் காரணம் சபரிமாலா.
அப்துல் கலாம் மறைந்தபோது, அவரைப் போன்ற மாணவர் களை நம்மால் ஏன் உருவாக்க முடியாது என்று களமிறங்கினார் சபரிமாலா. `அப்துல் கலாம் ஆகலாம் மாணவர் இயக்கத்தை உருவாக்கினார். பேச்சு வல்லமை கொண்ட மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து இதில் சேர்த்தார். அந்த மாணவர்களுக்கு கலாமின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கக் கொடுத்தார். அவர்களைக் கொண்டே கலாமின் கருத்துகளை மடை திறந்த வெள்ளமாகக் கொட்டும் பேச்சாளர் அணிகளை உருவாக்கினார் சபரிமாலா. இவரிடம் பேச்சுப் பயிற்சி பெற்ற மாணவர்கள் மாவட்ட, மாநில அளவில் முதல் பரிசுகளை அள்ளிக்கொண்டு வந்தார்கள்.
வைரபுரம் பள்ளியை மற்ற பள்ளிகளும் திரும்பிப் பார்க்க, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 75 மாணவர்கள் கலாம் ஆகலாம் மாணவர் இயக்கத்தில் உறுப்பினரானார்கள். இவர்களைக் கொண்டு கலாம் போல் ஆகலாம் மாணவர் பட்டிமன்றம் என்ற அமைப்பை உருவாக்கினார். கலாமின் நினைவு தினத்தில் அய்ம்பதாவது பட்டிமன்றத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.
சரியாகப் பேச முடியாமல் திக்கிப் பேசும் மாணவர் ஒருவர், பட்டிமன்றத்தில் பேச ஆரம்பித்த பிறகு  இதில் கிடைத்த வருமானத்தில்   15 ஆயிரம் ரூபாயில் தனது தந்தையின் கடனை அடைத்திருக்கிறார். எட்டாம் வகுப்பு மாணவி சுஜித்ரா மதுரையில் திருக்குறள் தமிழ் என்ற தலைப்பில் 45 நிமிடம் பேசினார். அந்த உரைவீச்சைக் கேட்டு வியந்த தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று, தங்கள் பள்ளி விழாவுக்கு சுஜித்ராவைச் சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தது.
24 குழந்தைப் பாடல்களைத் தொகுத்து ஆடல் பாடல் ஏ.பி.எல். என்ற தலைப்பில் இசை மாலையாக்கி, மாணவிகள் நளினியும் கமலியும் நடனமாடும் குறுந்தகடு ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார் சபரிமாலா.
ஆரம்ப வகுப்புகளிலிருந்தே மாணவர்கள் தமிழை இலக் கணப் பிழை இல்லாமல் வாசிக்கப் பழக வேண்டும் என்பதற்காகவே தாய்மொழி பயிலகம் ஒன்றை உருவாக்கி யிருக்கிறார். வகுப்பறைக்குள் திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் மணக்கிறது.
எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைத் தமிழன்னை தந்த வரமாக நினைக்கிறேன். கலாம் வாழ்க்கையைப் படித்த மாணவர்களிடம் வித்தியாசத்தைப் பார்க்கிறேன். அவர்கள் டியூஷன் செல்வதில்லை. இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். பிறருக்கு உதவ நினைக்கிறார்கள். நல்ல பண்புகள் மேலோங்கியிருக்கின்றன.
அப்துல் கலாம் அமைப்பில் உள்ள மாணவர்கள் பள்ளியை விட்டுச் சென்ற பிறகும் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். மாணவர்களின் பேச்சுகளை நூலாக்கி, அனைத்துப் பள்ளி களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். கலாம் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் தொடர்கிறோம். நிச்சயம் எங்களிடமிருந்தும் கலாம்கள் தோன்றுவார்கள்! நம்பிக் கையோடு கூறுகிறார் சபரிமாலா.
-விடுதலை,20.9.16

மதராஸ் மாகாணத்தின் ஒரே பெண் அமைச்சர்


தமிழக மாநில எல்லை வரையறுக்கப்படுவதற்கு முந்தைய மதராஸ் மாகாணத்தின் ஒரே பெண் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர் விடுதலைப் போராட்ட வீராங்கனை ருக்மிணி லட்சுமிபதி.
சமூக சீர்திருத்தவாதியான அவர் சிறு வயதிலிருந்தே பெண்கள் மேம்பாட்டுக்காக உழைத்தவர். 1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்களில் முன்னின்றாலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்று சேவை செய்யவும் ருக்மிணி லட்சுமிபதி தவறவில்லை.
தேர்வு பெற்ற முதல் பெண்
மதராஸ் மாகாணத்தில் ஆங்கிலேயர் - இந்தியர் என்ற இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்ட பிறகு, மதராஸ் மாகாண சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் 1934-ல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் சார்பில் ருக்மிணி வெற்றி பெற்றார். இதன் மூலம் மதராஸ் மாகாணத்துக்கான தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் பெண் என்ற பெரு மையை அவர் பெற்றார். 1937-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற அவர், மதராஸ் மாகாண சட்டப் பேரவையின் துணை சபாநாயகராகவும் பொறுப்பேற்றார்.
இரண்டாவது உலகப் போருக்கு முன்னதாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1939இல் மதராஸ் மாகாண காங்கிரஸ், அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகியது. தொடர்ந்து காந்தி விடுத்த அழைப்பின் பேரில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். அதில் ஈடுபட்ட ருக்மிணி லட்சுமிபதி 1940இல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மருத்துவ வளர்ச்சிக்கு ஊக்கம்
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1946இல் நடைபெற்ற மதராஸ் மாகாண இரண்டாவது சட்டப்பேரவை தேர்தலில் ருக்மிணி லட்சுமிபதி வெற்றிபெற்றார். அப்போது டி. பிரகாசம் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் ருக்மிணி இடம்பெற்றார். அவருக்கு சுகாதாரத் துறை ஒதுக்கப்பட்டது.
மதராஸ் மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த முதல் பெண் அமைச்சர் அவரே. மாகாணத்தில் நல்ல மருத்துவக் கல்லூரிகளின் தேவையையும், மருத்துவப் பணியில் இந்தியர்களை நியமிக்க வேண்டியதன் முக்கியத் துவத்தையும் வலியுறுத்தினார். அப்போது மதுரையிலும் ஆந்திரத்தின் குண்டூரிலும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க ருக்மிணி கையெழுத்திட்டார். இந்திய மருத்துவ முறைகளுக்குக் கவனம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். அவருடைய கணவர் அசண்ட லட்சுமி பதி பிரபல ஆயுர்வேத மருத்துவர் என்பது குறிப் பிடத்தக்கது.
நாடு விடுதலை பெற்ற பிறகு மதராஸ் மாகாண அமைச்சரவை கலைக்கப்பட்டாலும், 1951இல் இறக்கும் வரை ருக்மிணி எம்.எல்.ஏவாகத் தொடர்ந்தார். அதன் பிறகு மதராஸ் மாகாணம் மறுவரையறை செய்யப்பட்டதால், பழைய மாகாணத்தில் செயல்பட்ட ஒரே பெண் அமைச்சர் அவரே.
அவரை கவுரவப்படுத்தும் வகையில் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை போன்ற முக்கியமான இடங்கள் அமைந் துள்ள சாலைக்கு ருக்மிணி லட்சுமிபதி சாலை  என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 -விடுதலை,20.9.16

செவ்வாய், 18 அக்டோபர், 2016

தன் உடலையே சோதனைக் களமாக  மாற்றிய ஆராய்ச்சியாளர்

திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக, மருத்துவ குணமுள்ள தாவரங்கள் குறித்த ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த வி.மஞ்சுளா.  தற்போது வரை 90 வகையான செடிகளை ஆய்வு செய்துள்ள இவர், அவற்றின் மூலம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் பாதிக்கப்பட்டு வரும் பல்வேறு நோய்களை தீர்க்க முடியும் என்பதை கண்டறிந்துள்ளார்.

நோய் தீர்க்கக் கூடிய மருந்துக்கான செடிகளை தேடி காடு, மலைகளில் இவர் சுற்றித் திரியவில்லை. ஆனால், குடியிருப்புகளைச் சுற்றிலும், குப்பை மேடுகளிலும் சாதாரணமாக வளர்ந்து நிற்கும் தாவரங்களிலிருந்தே பல்வேறு நோய்களுக்கும் தீர்வு கண்டுள்ளார்.

செடியின் ஒவ்வொரு உறுப்பையும் எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் என்ற தேடலையும் தொடங்கியுள்ள இவர், மாரடைப்புக்கு (நெஞ்சு வலி) முக்கிய காரணமான கொழுப்பை கட்டுப்படுத்துவ தற்கான ஆராய்ச்சிக்கு தன் உடலையே பரி சோதனைக் களமாக மாற்றி, அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டவை: “எங்களது குடும்பம் பாரம்பரிய முறையில் தாவரங்களை பயன்படுத்தி வைத்தியம் செய்து வரும் குடும்பம். எனது தாத்தா, தந்தை ஆகியோரின் வழியில் எனக்கும் அதில் நாட்டம் ஏற்பட்டது.

திருமணத்திற்கு பின், மருத்துவத் துறையில் இணை இயக்குநராக பொறுப்பு வகித்த எனது மாமனார் எஸ்.சுப்பிரமணியனும் எனது முயற்சி களுக்கு ஊக்கமாக இருந்தார். ஆங்கில மருத் துவத்தில் (அலோபதி) பல நோய்களுக்கு மருந்து இல்லை, அதுபோன்ற நோய்களுக்கு பாரம்பரிய முறையில் மட்டுமே தீர்வு காண முடியும் ” என கூறி எனது நம்பிக்கைக்கு வலு சேர்த்தார்.

அதன் பின்னரே, அதற்கான முயற்சியில் தீவிரமாக களம் இறங்கினேன். நம் உடம்பில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமாக விளங்குவது கல்லீரல். இதன் செயல்பாடு பாதிக்கப் படும் போது, ஒவ்வொரு உறுப்புகளும் தன் பணியை முறையாகச் செய்வதில்லை. இதன் காரணமாகவே நோய் தாக்குதல் ஏற்படுகிறது.

மனிதனின் ஆயுளுக்கு திடீர் முற்றுப்புள்ளி வைக்க கூடிய நெஞ்சுவலிக்கு முக்கிய காரணம் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதே. இந்த பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என திட்டமிட்டு, எனது உடலையே பரிசோதனை களமாக்க முடிவு செய்தேன்.

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை 400 மி.கிராம் வரை உயர்த்தினேன். இதனால் படபடப்பு, மூச்சு திணறல், தோள்பட்டைகளில் வலி, தலைவலி, கண் தெளிவின்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட பின், மருத்துவ பரிசோதனைக்குச் சென்றேன்.

பரிசோதனை முடிவுகள் வந்தபோது, உடனடியாக அறுவை சிகிச்சை  செய்யாவிடில், உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள்(அலோபதி) எச்சரித்தனர். ஆனால், பதட்டமின்றி வீடு திரும்பிய நான், ஏற்கெனவே கண்டறிந்த 3 தாவரங்களை சாப்பிடத் தொடங்கினேன்.

3 நாள்களில் மூச்சுத் திணறல், வலி உள்ளிட்ட பாதிப்புகள் சீராகத் தொடங்கின. பயணம் செய்யக் கூடாது என்ற மருத்துவர்களின் ஆலோசனைகளை கடந்து, என்னால் பேருந்தில் எளிதாக பயணிக்க முடிந்தது.

2 மாதங்களுக்கு பின், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு 180 மி.கிராமாக குறைந்தது. 3 வேளையிலும் இனிப்பு சாப்பிட்ட போதும், சர்க்கரையின் அளவு அதிகரிக்கவில்லை. இதனை அறிவியல் பூர்வமாக விரைவில் நிரூபித்துக் காட்டி, குறிப்பிட்ட 3 தாவரங்களில் உள்ள மருத்துவப் பொருள்களை பிரித்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளேன்.

சளி, காய்ச்சல், இருமல், பல் வலி, கண் வலி, தோல் வியாதிகள் உள்ளிட்ட பாதிப்புகள் தொடங்கி, சர்க்கரை நோய், கல்லீரல், சிறுநீரகம், பெண் களுக்கான எலும்பு தேய்மானம் மற்றும் கர்ப்பப்பை பிரச்சினை, எலும்பு முறிவு, மூட்டுவலி, மஞ்சள் காமாலை, மலச்சிக்கல்  உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கும், நம் வீட்டைச் சுற்றி வளரும் தாவரங்களின் மூலம் குணப்படுத்த முடியும்‘’  என்றார்
_விடுதலை,18.10.16

திங்கள், 17 அக்டோபர், 2016

அன்று ஆடு மேய்த்த சிறுமி இன்று கல்வித்துறை அமைச்சர்!


வாழ்க்கை என்பது பெரும் போராட்டம்தான்; அதற்காகப் போராடாமல் விட்டுவிட முடியுமா? என்பதை இளம் வயதிலேயே உணரத் தொடங்கியவர் நஜா வெலு பெல்காசம் (Najat Vallaud-Balkacem) இன்று பிரான்ஸின் புதிய முகம் எனக் கொண்டாடப்படும் இவர் வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் ஒரு குக்கிராமத்தில் வறுமைப் பிடியில் வாடிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர்.
அப்பா கட்டிடத் தொழிலாளர்; உடன் பிறந்தவர்கள் ஆறு பேர். இளந்தளிர் நஜா நான்கு வயதில் ஆடு மேய்க்க விடப்பட்டார். வறுமை வாழ்க்கை விளிம் புக்குத் தள்ள ஆப்பிரிக்காவை விட்டுப் புலம்பெயர்ந்து பிரான்ஸில் குடியேறும் நிலைக்கு நஜாவின் குடும்பம் தள்ளப்பட்டது.
பிறந்த பூமியை, உறவினரை, நண்பர்களை, பழக்கப் பட்ட கலாச்சாரத்தை திடீரென்று உதறிவிட்டு முற்றிலும் அந்நியமான சூழலில் வாழ்க்கையைத் தொடங்குவது மிகப் பெரிய சவால்! பள்ளிப் பாடங்களைப் படிப்பது முதல் பிரெஞ்சு மொழியைப் பேசுவது அதன் கலாச்சாரத்தைப் பழகிக்கொள்வதுவரை திகைப்பும் தடுமாற்றமும் ஆரம்ப நாட்களில் நஜாவுக்கு இருந்தது. ஆனால் தனக்கு நேர்ந்த அனுபவத்தைத் துணிச்சலாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டார் இளம் நஜா.
பிரான்ஸின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான பாரிஸ் அரசியல் ஆய்வுகள் கல்வி நிறுவனத்தில் 2002இல் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே வேளையில் பகுதி நேர வேலைக்குச் சென்று குடும்ப பாரத்தையும் தாங்கினார். சக மாணவர் போரிஸ் வெலு வோடு காதல் மலரவே கல்வியோடு காதலும் கைகூடியது. இருவரும் 2005இல் தம்பதிகள் ஆனார்கள்.
அரசியல் கல்வி அரசியலுக்கான கதவுகளைத் திறந்தது. வேலையில்லாத் திண்டாட்டம், அகதிகள், புலம் பெயர்ந்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்தல், நிறப் பாகுபாடு உள்ளிட்ட அரசியல் பிரச்சினைகள் அன்றைய காலகட்டத்தில் பிரான்ஸில் நிறைந்திருந்தன.
இது போன்ற பிரச்சினைகளில் பிரெஞ்சு அரசு கொண்டிருந்த கொள் கைகள் மீது நஜாவுக்குக் கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. ஜனநாயகத்தை நிலைநாட்டவும், குடிமக்களின் உரிமை களைப் பாதுகாக்கவும் அரசியலில் ஈடுபடுவது என முடிவெடுத்து சோஷலிஸ்ட் கட்சியில் 2002இல் சேர்ந்தார். லியான் நகர மேயரான ஜெரார்து கோலம்பை ஆதரித்து முழு மூச்சாக அரசியலில் 2003இல் இறங்கினார். ரோன் - ஆப்ஸ் பிராந்திய சபையின் கலாச்சாரக் கழகத் தலைவராக 2004இல் நஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே சோஷலிஸ்ட் கட்சியின் ஆலோசகரானார்.
2008இல் அவர் முதன்முதலில் களமிறங்கிய லியான் நகருக்கே கவுன்சிலரானார். 2012இல் பெண்கள் அமைச் சகத்தின் அமைச்சரானார். 2013இல் தன்பாலின உறவாளர் களின் திருமணத்தைச் சட்டரீதியாக பிரான்ஸ் அங்கீ கரித்ததை இது வரலாற்று முன்னேற்றம் என துணிச்சலாகப் பாராட்டி ஆதரித்தார். சமூக வலைத்தளமான டிவிட்டரை வெறுப்பு அரசியலுக்குப் பிரயோகிக்கக் கூடாது என்கிற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்காற் றினார். அதை அடுத்து, நகர்சார் விவ காரங்களுக்கான அமைச்சர், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், அரசாங்கச் செய்தி தொடர்பாளர் எனப் பல பதவிகள் வகித்தார்.
சாதனைப் பெண்
2014இல் பிரான்ஸ் அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தபோது பல அமைச்சர்களின் பதவிகள் பறி போயின. ஆனால், நஜாவின் திறமைக்காகவும் போராட்டக் குணத்துக் காகவும், அதுவரை அவர் வகித்துவந்த பொறுப்புகளில் சிறப்பாகப் பங்காற்றியதற்காகவும் 2014இல் கல்வித் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புலம்பெயர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் 38 வயதில் பிரான்ஸின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைச்சராக ஆனது மிகப் பெரிய வரலாற்று நிகழ்வு. பிரான்ஸின் முதல் பெண் கல்வி அமைச்சர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் அவர். நிஜமாகவே நஜா பிரான்ஸுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே உற்சாக மூட்டும் புதிய முகம்தான்!
-விடுதலை,6.9.16

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

உலகின் முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையின் பெண் அமைச்சர்

எழுத்தாளர்... சிந்தனையாளர்... புரட்சியாளர்... ரஷ் யாவில் லெனின் அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே பெண் அமைச்சர்...  அயல்நாட்டுத் தூதராகவும் பணியாற்றிய முதல் பெண் அலெக்சாண்ட்ரா!
1872ஆம் ஆண்டு வசதியான பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார் அலெக்சாண்ட்ரா. உக்ரைனிலும் பின்லாந்திலும் வளர்ந்தார்.
வீட்டிலேயே அவருக்குக் கல்வி அளிக்கப் பட்டது. தன் வீட்டுக்கு அருகில் வசித்த விவசாயக் குழந்தைகள் தன்னைப் போல வசதியாக இல்லை என்கிற விஷயம் அலெக்சாண்ட்ராவை மிகவும் யோசிக்க வைத்தது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரி யரும் குடும்ப நண்பரும் அலெக்சாண்ட்ராவுக்குப் பல விஷயங்களை அறிமுகம் செய்தனர். அவர் எழுத்தாளராக வாய்ப்பிருப்பதாகக் கூறினார்கள்.
வீட்டிலேயே கல்வி கற்ற அலெக்சாண்ட்ராவுக்குப் பல்கலைக்கழகம் சற்று அச்சத் தைத் தந்தது. அவர் கூச்ச சுபாவம் கொண்டவராகவும் இருந் தது ஒரு காரணம். படிப்பை முடித்தவுடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய  ஆரம்பித்தார்கள்  பெற்றோர்.  அக்காலத்தில் இளம்பெண்களுக்கு வயதான முதியவரைத் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் இருந்தது. அலெக்சாண்ட் ராவின் அக்காவுக்கு வசதியான 70 வயது முதியவரைத் திருமணம் செய்து வைத்தார்கள்.
அதனால் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணத்தை வெறுத்தார் அலெக் சாண்ட்ரா. காதலித்துதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். உறவினரான விளாடிமிர் கொ லோண்டையைத் திருமணம் செய்துகொண்டார். பொறியாளராக இருந்தாலும் கொலோண்டை எந்த வேலைக்கும் செல்லவில்லை. அவரிடம் பணமும் இல்லை.
காதலுக்குப் பணம் அவசியம் இல்லை என்ற கருத்தில் உறுதியாக இருந்தார் அலெக்சாண்ட்ரா. ஒரு மகனையும் பெற்றெடுத்தார். 1896ஆம் ஆண்டில் ஆடைகள் தயாரிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலைக்குச் சென்றார். அங்கே 12 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண் டிருந்தனர். தினமும் 12 மணி நேரத்திலிருந்து 18 மணி நேரம் வரை வேலை செய்துகொண்டிருந்தனர்.
இடையில் கிடைக்கும் சிறிது நேரத்தில், அங்கேயே தூங்கி எழுந்து, மீண்டும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் ளேயே சிறைபட்டுக் கிடந்ததைக் கண்ட அலெக்சாண்ட்ரா அதிர்ச்சியில் உறைந்து போனார். இந்த நிகழ்ச்சி அலெக்சாண்ட்ராவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொழிலாளர் நலனுக் காகப் பாடுபட உறுதி எடுத்துக்கொண்டார். தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கினார்.
அரசியல் பொருளாதாரம் படிப்பதற்காக ஜுரிச், லண்டன் சென்றார். சிந்தனையாளர்களைச் சந்தித்தார். தன்னை நன்றாக வளர்த்துக்கொண்டு, ரஷ்யா திரும்பினார். தடை செய்யப் பட்ட ரஷ்ய ஜனநாயகக் கட்சியில் சேர்ந்தார். கொள்கைப் பரப்பாளராகவும்  எழுத்தாளராகவும்  பணி யைத் தொடர்ந்தார்.
முதலில் நான் ஒரு மனிதன். அடுத்து ஒரு பெண். கடைசியாகத்தான் ஒருவரின் மனைவி, ஒருவரின் தாய் என்ற தெளிவு அலெக்சாண்ட் ரா வுக்குள் வந்தது. கணவரை விட் டுப் பிரிந்தார். மகனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டார்.
ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி இரண் டாகப் பிரிந்தது. லெனின் தலைமையில் போல்ஷ் விக் கட்சியில் இணைந்தார் அலெக்சாண்ட்ரா. பல் வேறு போராட்டங்களில் பங்கு பெற்றார்.
முதல் உலகப் போர் நடைபெற்றபோது, போர் எதிர்ப்புப் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார். பல்வேறு உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று உரை நிகழ்த்தினார். கட்டு ரைகள் எழுதினார். ஜார் மன்னருக்கு எதிரான போராட் டங்களில் தீவிரமாகக் கலந்துகொண்டார். ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் லெனின் தலைமையில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்தது.
இந்த அரசாங்கத்தின் ஒரே பெண் அமைச்சராகப் பொறுப்பேற்றார் அலெக்சாண்ட்ரா. அவருக்குச் சமூக நலத்துறை ஒதுக்கப்பட்டது.
சமூக நலத்துறையில் என் னென்ன விஷயங்கள் வரவேண்டும் என்ற முன்மாதிரி எதுவும் இல்லை. அவர்தான் உலகத்துக்கே ஒரு முன்மாதிரியை உருவாக்க வேண்டியிருந்தது. இரவு, பகலாக உழைத்தார் அலெக்சாண்ட்ரா. பெண்கள், தொழிலாளர்கள், குழந்தைகள் நலன் மேம்பட பல சட்டங்களை இயற்றினார்.
ஒரே  வேலை செய்யும்  ஆணுக்கும் பெண்ணுக்கும் சம மான சம்பளம் வழங்கப்பட வேண்டும். பணிபுரியும் இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.  ஆணுக்கும் பெண்ணுக்கும் விவாகரத்து எளிதாக்கப்பட்டது. பெண் தன் விருப்பப்படி தந்தை அல்லது கணவனின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொள்ளலாம்.  திருமண உறவு மூலம் பிறக்காத குழந்தைகள் முறையற்ற குழந்தைகள் என்று சொல்வது தடை செய்யப்பட்டு, அவர்களும் மற்ற குழந்தைகள் போலவே நடத்தப்பட்டனர்.
பெண் ஊழியர்களுக்குப் பிரசவ காலத்தில், சம்பளத் துடன் கூடிய 16 வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இப்படிப் பல சீர்திருத்தங்கள்! 1922ஆம் ஆண்டு நார்வேக் கான ரஷ்யத் தூதராக நியமிக்கப்பட்டார் அலெக்சாண்ட்ரா.
உலகின் முதல் அயல்நாட்டுத் தூதுவர் என்ற சிறப் பையும் பெற்றார். நார்வேக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தினார். மெக்சிகோ, ஸ்வீடன், நார்வே என்று பல ஆண்டுகள் தூதுவராகச் சிறப்பாகச் செயலாற்றினார் அலெக்சாண்ட்ரா.
உலக அரசியலிலும் ரஷ்ய அரசியலிலும் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் இன்று பெண்கள், தொழி லாளர்கள் ஓரளவு உரிமைகளைப் பெறுவதற்குக் காரண மாக  இருந்தவருமான  அலெக்சாண்ட்ரா 80ஆவது வயதில் மறைந்தார்.
-விடுதலை,23.8.16

திங்கள், 10 அக்டோபர், 2016

இந்து மதத்தில் பெண்கள் நிலை பெண்களின் அந்தஸ்து பற்றி

1. நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: “எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ  அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது ஒரு வேலைக் காரனாவாவது ஒரு ஸ்திரீயாகவாவது, ஒரு நாலு கால் மிருகமாகவாவது பிறப்பான்”
2. மனு (இந்துச் சட்டம் செய்தவராய், வேத முறைகளை முதன் முதலில் வெளியிட்டவராய், இன்றைக்கும் மக்கள் யாவரும் பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்களைச் செய்தவராய் உள்ளவர்) கூறுவது: ஒரு மகன், ஒரு அடிமை ஆகியோர் சொத்துக்களை வைத்திருக்க யோக்கியதை அற்றவர்களாவார்கள். அவர்கள் என்ன சம்பாதித்தாலும்  அதெல்லாம் அவர்கள் எவர்களுக்கு உரிமையுடையவர்களோ அவர்களைச் சேரும்.
3. போதாயனர் கூறுவது எந்த மனிதனும் பெண்களுக்கு இரவலோ, கடனோ கொடுக்கக் கூடாது; அடிமை கட்கும், குழந்தைகட்கும்கூட ஒன்றும் இரவல் தரக் கூடாது.
4. மத விதிகள் கூறும் நூல்களில் ஒன்றாகிய ராமாயணம் உரைப்பது: ‘தப்பட்டைகள், பயிரிடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக்கப்பட வேண்டும்” (சுந்தரகாண்டம் 5)
5. மனு கூறுகிறார்: பகலும் இரவும் மாதர்கள் அவர்களுடைய சொந்தக் காரர்களை அண்டியே இருக்கும் படியாகச் செய்யப்பட வேண்டும். பெண்களைக் குழந்தைப் பருவத்தில் தகப்பன்மாரும், வாலிப காலத்தில் புருஷன் மாரும், வயது முதிர்ந்த காலத் தில் பிள்ளைகளும் காப்பாற்றுகிறார்கள் - ஒரு பெண் ஆனவள் ஒரு போதும் சுயேச்சையாயிருக்கத் தகுதியுடைய வளல்லள். அவளுடைய வாழ்வு பூராவும் நல்லவர்களாகவோ, கெட்டவர் களாகவோ, அலட்சியக்காரர்களாகவோ இருக்கும்படியான மற்றவர்களுடைய இரக்கத்தினால் வாழ்பவளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் அவ் வளவு அற்ப ஜீவர்களாகவே இருக் கிறார்கள்.
6. உத்தமஸ்திரீக்கு மனுவுரைக்கும் யோக்கியதாம் சமென்னவெனில் அவ ளுடைய தகப்பன் அவளை எவனுக்குக் கொடுத்திருக்கின்றானோ அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் அவ னையே அவள் மரியாதை செய்யட்டும்.. ஒரு புருஷன் துர்நடத்தையுடைய வனாயினும், இன்னொரு மாதினிடம் அன்பு கொண்டவனாயினும், நல்ல தன்மைகளில்லாதவனாயினும், அவனைத் தெய்வம் போலவே கருது கிறவள்தான் புண்ணிய ஸ்திரீயாவாள் V, 154)
7. மனு: ஒரு மாதானவள், எவ்வளவு நல்லவளாகவும், உத்தமமானவளாகவும் இருப்பினும், அவள் தன் கணவனுடைய குணங்களையுடையவளாகத்தான் இருப்பாள். மேலும் அவர் சொல்லுவது ஒரு மங்கையானவள் தான் மணம் செய்து கொண்ட ஒரு புருஷன் என்ன குணங் களையுடைய வனாயிருக்கின்றாறோ அதே குணங்களையே அவளும் அடைவாள் எதுபோலவெனில் கடலில் போய்க் கலக்கிற ஆற்றைப் போல் (அத்தியாயம் IX 22)
8. போதாயனர் உரைப்பது: ‘மாதர்கள் அறிவுகளேஇல்லாதவர்கள்; அவர்கள் சொத்துரிமை கொள்ளவும் யோக்கியதை யற்றவர்கள்.
-விடுதலை,0.7.16

வட மாநிலங்களில் பெண் குழந்தைகளின் கல்வி சதவீதம் குறைவு: ஆய்வுத் தகவல்



புதுடில்லி, ஜூலை 7  வட மாநிலங்களில் பெண் குழந்தை களின் கல்வி சதவீதம் குறைவாக உள்ளதாக புள்ளி விபர ஆய் வறிக்கை தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு ஆய்வ  றிக்கையின்படி, கல்வி நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்ட 21 முக்கிய மாநிலங்களில் குஜராத் 20ஆவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் 21 ஆவது இடத்தில் உள்ளது. குஜராத்தில் 15 முதல் 17 வயதிற்குற்பட்ட சுமார் 26.6 சதவீதம் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல் லாதவர்களாகவோ அல்லது பள்ளி படிப்பை பாதியில் நிறுத் தியவர்களாகவோ உள்ளனர்.

பீகாரில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் எண் ணிக்கை 83.3 சதவீதமாகவும், அசாமில் 84.8 சதவீதமாகவும், ஜார்கண்டில் 84.1 சதவீத மாகவும், சட்டீஸ்கரில் 90.1 சதவீதமாகவும், ம.பி.,யில் 79.2 சதவீதமாகவும், உ.பி.,யில் 79.4 சதவீதமாகவும், ஒடிசாவில் 75.3 சதவீதமாகவும் உள்ளன. அதே சமயம் குஜராத்தில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 73.4 சதவீதமாக வும், ராஜஸ்தானில் 72.1 சதவீத மாகவும் உள்ளன.
-விடுதலை,7.7.16