பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

பெண்களே, சட்டங்களை அறிந்து கொள்க!


9

வாழ்வூதியம் மற்றும் பராமரிப்புச் சட்டங்கள் ஏராளமாக இருந்த போதிலும், பெண்கள் வெறுங்கையுடன் இருக்கிறார் கள். மோசமான திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையைச் சந்திக்கப் போராடுகிறார்கள். ஏனெனில் இந்தச் சட்டங்கள் பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் வழங்க வில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஏப்ரல் 23, 1985இல், ஷா பானோ பேகம் என்ற ஒரு முஸ்லிம் பெண், தனது கணவரால் விவாகரத்து பெற்றவர்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு மூலம் வாழ்வூதிய உரிமையை பெற்றார். பாதிக்கப்பட்ட, விவா கரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு வாழ்வூதியம் அளித்து தீர்ப்பு வழங்கியது. இருப்பினும், இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அன்றைய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது. சமூகத் தலைவர்கள் குர்ஆனில் இருந்து மேற்கோள் காட்டி, தீர்ப்பு இஸ்லாமிய சட்டத்திற்கு முரண்படுவதாகக் கூறினர்.

அன்றைய அரசாங்கம் பின்னர் முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986அய் இயற்றியது. இது ஷிசிஇன் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்தது. விவாகரத்துக்கு 90 நாட்களுக்குப் பிறகு முஸ்லிம் விவாகரத்து பெற்றவர்களின் உரிமைகளை அவர்களின் மேனாள் கணவர்களிடமிருந்து கட்டுப்படுத்தியது. இந்த காலம் இஸ் லாமிய சட்டத்தில் இத்தா என்று அழைக்கப்படுகிறது. பல சர்ச்சைகளைத் தூண்டிய இந்தச் சட்டம், ஷா பானோவை வீட்டுப் பெயராக மாற்றியது.

பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பராமரிப்புக்கான கோரிக்கையை வடிவமைப்பதில் நீதிமன்றம் நியாயமாக இருக்கும் என்பது உத்தரவின் முக்கிய அம்சமாகும். வழங்கப் பட்ட நிரந்தர வாழ்வூதியத்தின் அளவு, வழக்குதாரர்களின் நிலை மற்றும் பராமரிப்பு செலுத்தும் வாழ்க்கைத் துணை களின் திறனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்று நிரந்தர வாழ்வூதியம் செலுத்துவதற்கான அளவுகோல் விகிதத்தை நிர்ணயித்துள்ளது. கணவரின் நிகர வருமானத்தில் 25% வாழ்வூதியமாக நியாயமான மற்றும் சரியான தொகை என்று நீதிமன்றம் கூறியது. விவாகரத்து செய்யப்பட்ட மனைவியின் நிதிநிலை வாழ்வூதியத்தின் அளவை தீர்மானிக்கும் போது முக்கியமானதாக இருக்கும். எனவே, சவுத்ரிகள் வழக்கில் நீதிமன்றம் நிர்ணயித்த பெஞ்ச்மார்க் ரேட் இங்கே வேலை செய்யக்கூடும் என்று சட்ட ஆதாரம் கூறுகிறது.

பின்னர் நவம்பர் 2020இல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி, பிரிந்து செல்லும் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு அவர்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பித்த நாளிலிருந்து கணவர்களிடமிருந்து வாழ்வூதியம் மற்றும் பராமரிப்புக்கு உரிமை உண்டு. நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கணவரால் பிரிந்து செல்லும் பெண்கள் மிகவும் நெருக்கடியான சூழ் நிலையில் இருப்பதாகவும், தங்களையும் தங்கள் குழந்தை களையும் பராமரிக்க வழியின்மையால் அவர்கள் பெரும் பாலும் ஏழ்மையான நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் கூறி யது. 67 பக்கத் தீர்ப்பில், குடும்ப நீதிமன்றங்கள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்கள் பின்பற்றுவதற்கான சீரான மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.

இந்த நீதிமன்றங்கள் பராமரிப்பு மற்றும் வாழ்வூதியம் எவ்வாறு பார்க்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரு வடிவத்தை இது உருவாக்கியது. மகாராட்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவரிடமிருந்து பிரிந்து, தனக்கும், மகனுக்கும் வாழ்வூதியம் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு பல மாதங்களாக இழுத்தடிக் கப்பட்டு வந்தது. பல பராமரிப்புச் சட்டங்கள் இருந்தபோதிலும், மோசமான திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையைச் சந்திக்க முடியாமல் பல ஆண்டுகளாக பெண்கள் வெறுங்கையுடன் உள்ளனர் என்று உச்ச நீதிமன்றம் கவனித்தது.

நீதிபதி மல்ஹோத்ரா தனது தீர்ப்பில், “விண்ணப்பம் செய்யப்பட்ட தேதியிலிருந்து பராமரிப்பு வழங்கப்பட வேண் டும் என்ற கருத்து, பிரிந்து செல்லும் மனைவி மற்றும் சார்ந் திருக்கும் குழந்தைகளை ஏழ்மை மற்றும் அலைச்சலில் இருந்து பாதுகாப்பதே பராமரிப்புச் சட்டங்களின் முதன்மை நோக்கம் என்ற நியாயத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. விண்ணப்பித்த நாளிலிருந்து பராமரிப்புப் பணம் செலுத்தப் படாவிட்டால், பராமரிப்புக் கோரும் தரப்பினர், விண்ணப் பத்தை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நேரத்தின் காரணமாக, வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.

வாழ்வூதியம் செலுத்தும் பொறுப்பு நீதிமன்றங்களால் கணவர்களின் மீது தள்ளப்பட்டது. கணவன் தனது பிரிந்த மனைவிக்கு பணம் செலுத்தத் தவறினால், அவர் தனது சொத்துக்களை இணைத்தல் உட்பட சிவில் தடுப்புக்காவலில் அடைவார். மனைவியைப் பராமரிக்கும் தார்மீகக் கடமையி லிருந்து கணவன் விடுபட முடியாது என்று நீதிமன்ற உத்தரவு தெளிவாக இருந்தது. அவர் திறமையானவராகவும் கல்வித் தகுதி பெற்றவராகவும் இருந்தால், தனக்கு வருமான ஆதாரம் இல்லை என்ற கணவரின் வேண்டுகோள், அவருக்கு பரா மரிப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். குழந்தை களின் கல்விச் செலவுகளை பொதுவாக தந்தையே ஏற்க வேண்டும்.

ஆனால், மனைவி வேலை செய்து போதுமான வரு மானம் ஈட்டினால், செலவுகளை இரு தரப்பினரும் விகிதாச் சாரப்படி பகிர்ந்து கொள்ளலாம் என்று நீதிபதி மல்ஹோத்ரா குறிப்பிட்டார். சமகால சமூகத்தில் திருமணங்கள் ஒரு நியாய மான காலத்திற்கு நீடிக்காது என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, கணவன் தனது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் நிரந்தர வாழ்வூதியம் வழங்க உத்தரவிடுவது சமமாக இருக் காது என்றும் நீதிமன்றம் கவனித்தது.

எனவே, வாழ்வூதியம் வழங்கும்போது திருமண காலமும் பரிசீலிக்கப்படும். CrPCஇன் பிரிவு 125 பல ஆண்டுகளாக ஒன்றாக வாழும் இணையினரையும் உள்ளடக்கும் என்று தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தியது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, மேற்கூறிய பிரிவின் கீழ் பராமரிப்பு வழங்குவதற்கு திருமணத் திற்கான கண்டிப்பான ஆதாரம் முன் நிபந்தனையாக இருக்கக் கூடாது.

திங்கள், 29 மே, 2023

பெண்கள் பற்றி பார்ப்பனர்கள் பேச யோக்கியதை உண்டா?

  

கேள்வி: சோ அவர்கள் ஆசிரியராக இருந்தபோது, பெண்களுக்கு எதிரான கருத்துகளை துணிந்து சொல்லியும், எழுதியும் வந்தார். இந்த விஷயத்தில் தாங்கள் எப்படி?

6

பதில்: சோ பெண்களை எதிர்க்கவில்லை, இட ஒதுக்கீட்டைத் தான் எதிர்த்தார். அதுதான் இன்றும் நம் நிலை. பெண்களின் இடஒதுக்கீட்டை எதிர்க்க, எந்தப் பத்திரிகைக்கும் துணிவில்லை நாம் துணிவாக எதிர்க்கிறோம்.

- துக்ளக்கில் குருமூர்த்தி (29.3.2023)

பெண்களை எதிர்க்கவில்லை - பெண்கள் இட ஒதுக்கீட்டை ஏன் எதிர்க்க வேண்டும். ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி வாசனையின்றி அடுப்பங்கரைப் பிள்ளைப் பூச்சிகளாக அமுக்கப்பட்ட பெண்கள் படிப்பதற்கும், உத்தியோகங்களில் அடி எடுத்து வைப்ப தற்கும் இடஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்புக் கதவைத் திறந்து விட்டால், அக்கிரகாரத்தில் இழவு விழ வேண் டுமா?

காரணம் அவர்களின் மனுதர்மப் புத்தி! - வேலைக் குச் செல்லும் பெண்கள் ஒழுக்கம் குறைவானவர்கள் என்று சொன்னவர்தானே அவாளின் ஜெகத்குரு சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி.

Sankaracharya against quota for women in politics, virtually rejected for the demand for separate reservation for women (‘The Pioneer'. 17.3.1997).

பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்று சங்கராச்சாரியார் சொன்னார். அவாளின் சீடர்களான சோவும், குருமூர்த்தியும் அவரது காலைப் பூஜை செய்து அப்படியே அப்பட்டமாகத்தானே வழி மொழி வார்கள்.

விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்கு ஒப்பான வர்கள் என்று சொன்னவரும் சாட்சாத் இதே சங்க ராச்சாரியார்தான்.

அதனைக் கண்டித்து காஞ்சி சங்கரமடம் முன் மறைந்த திருமகள் தலைமையிலும், மகளிர் அணி பொறுப்பாளர்களான புலிவலம் ராஜலட்சுமி மணியம், ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், கு.தங்கமணி முதலியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுண்டே! (9.3.1998).

சோவின் சீடரான திருவாளர் குருமூர்த்தி அய்யர் வாளின் யோக்கியதை தான் என்ன?

சென்னையில் தனியார் மருத்துவமனை 10ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட இவர் ‘இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30 சதவீதம் தான் உள்ளனர்' (செய்தி 25.8.2019) என்று பேசி பெண் களிடம் வசமாக வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லையா?

இவர்கள்தான் இப்பொழுது துணிந்து எழுது கிறார்கள்.

நாங்கள் பெண்களை எதிர்க்கவில்லை - பெண்களுக்கான இடஒதுக்கீட்டைத்தான் எதிர்க்கிறோம் என்று.

அதாவது உண்மையா? பெண்களை இவர்கள் எதிர்க்கவில்லையா?

பெண்களைப் பற்றி திருவாளர் சோ.ராமசாமி என்னென்ன வெல்லாம் எழுதினார்? 

மாதிரிக்கு இதோ எடுத்துக்காட்டுகள்:

மனுவாதி பக்கம் திரும்புக!

கேள்வி: பெண்களைப் பற்றி உங்களின் உண்மை யான அபிப்பிராயம் தான் என்ன?

பதில்: உயர்ந்தவர்கள். அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள். (18.3.2009)

கேள்வி: பெண்களுக்கு சமஉரிமை என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

பதில்: யார் இப்படியெல்லாம் என்னைப் பற்றி புரளி கிளப்பி விடுகிறார்களோ, தெரியவில்லையே! பெண் களுக்குச் சம உரிமை தேவைதான். மாமியார், மருமகள் ஆகியோருக்குச் சம உரிமை வந்தால், அது வரவேற்கத் தக்கதுதான். (22.4.2009)

கேள்வி: பெண்களிடம் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும்?

பதில்: என்ன தவறு செய்தாலும், அந்தத் தவறை தான் செய்யாதது போலவும், மற்றவர்கள்தான் அதற்குக் காரணம் என்பது போலவும் நடந்து கொள்கிற திறமை, அதைக் கற்றுக் கொண்டால் ஆண்களும் கூட நிம்மதியாக இருக்கலாமே! (20.5.2009)

கேள்வி: மத்திய அமைச்சரவையில் பெண் அமைச் சராக தமிழகத்திலிருந்து ஒருவர் கூட நியமிக்கப் படவில்லையே?

பதில்: தப்பித் தவறி ஏதாவது நல்லது நடக்கிற மாதிரி தெரிந்தால் போதும் உங்களைப் போல் பலருக்கு ஆட்சேபம் வந்துவிடுகிறது. யார் கண்டது? உங்கள் குறை தீராது என்று சொல்லிவிட முடியுமா என்ன? குடும்பத்தில் சமநீதி காண்பதற்கு வழி பிறந்தால், உங்கள் குறை நீங்கிவிடலாமே! (17.6.2009)

கேள்வி: மக்களவையில் மகளிருக்காக இட ஒதுக் கீடு மசோதா நூறு நாள்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் கூறி யுள்ளாரே?

பதில்: சில தண்டனைகள் சொன்னபடி நடப்ப தில்லை. அஃப்ஸல் தூக்குத் தண்டனை அப்படியே பெண்டிங் ஆக இருக்கிறதே? அந்த மாதிரி இதுவும் தொங்கலில் விடப்பட்டால்தான் உண்டு. (24.6.2009)

கேள்வி: மக்களவை சபாநாயகர் பெண் என்றால் இனி அமளியின்றி சபை நடைபெறுமா?

பதில்: ஒரு வீட்டில் பெண்கள் அதிகாரம் ஓங்கி இருந்தால், அந்த வீட்டில் அமளி, துமளி இல்லாமல் போய்விடுமா? அந்த மாதிரிதான் இதுவும். (1.7.2009)

கேள்வி: இந்தியாவில் உள்ள 617 ஹைகோர்ட் நீதிபதிகளில் 45 பேர்தான் பெண் நீதிபதிகளாக உள்ளனர். மேலும் 6 ஹைகோர்ட் நீதிபதிகளில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை. அதே போல் சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை. (டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3.8.2009) இது குறித்து தங்கள் கருத்து என்ன? 

பதில்: நாடு சுதந்திரம் அடைந்தபோதும், அதைத் தொடர்ந்து சில வருடங்களிலும் பெண் நீதிபதிகளே இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இப்பொழுது 45, 61 என்றெல்லாம் கணக்கு வருகிறது. சரி, சுதந்திரம் அடைந்தபோதும், அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளிலும், நீதித் துறையிடம் மக்களுக்கு இருந்த நம்பிக்கை இப்பொழுது இருக்கிறதா? நீதித் துறையில் பெண்களின் எண்ணிக்கை வளர்ந்து என்ன முன்னேற்றம் காணப் பட்டது? அந்த எண்ணிக்கையை அதிகமாக்குவதால், மேலும் என்ன முன்னேற்றம் வந்து விடும்? (2.9.2009)

கேள்வி: பெண்கள் சிறப்பு ரயில் திட்டம் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கான அச்சாரம் என்று ப.சிதம்பரம் கூறுகிறாரே?

பதில்: அப்படியானால் சிறப்பு ரயில் ஓட்டாமலேயே, இத்தனை காலமாக பெண்கள் பலர் எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைப் பெற்றிருக்கிறார்களே, அதெல்லாம் என்ன? கள்ளப் பயணம் மாதிரி, அதுவும் கள்ளப் பதவிகளா? (2.9.2009)

கேள்வி: பெண்களால் ரகசியத்தைக் காப்பாற்றவே முடியாது என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதே?

பதில்: பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே, மஹாபாரதத்தில், இது மிகத் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. அது ஆண் ஆதிக்கத் தீர்ப்பு; இன்று சொல்லப்பட்டிருப்பது, ஆராய்ச்சியின் முடிவு. அதை ஏற்காதவன் மூடநம்பிக்கையில் உழல்பவன். (14.10.2009)

கேள்வி: பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: இருக்கலாம். அந்தக் கண்களின் பார்வை யைச் சரி செய்கிற மூக்குக் கண்ணாடிகள்தான் ஆண் கள் என்பதும் சரியாக இருக்கலாமே! (4.11.2009)

கேள்வி: கருநாடகாவில், ஷோபாவின் அமைச்சர் பதவி தியாகத்தாலும், பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் செய்து வைத்த சமரசத்தாலும் கருநாடக பா.ஜ.க. அமைச்சரவையின் சிக்கல் தீர்ந்துள்ளதே? பெண்களின் பெருமை இப்போதாவது தங்களுக்குப் புரிந்திருக்குமே?

பதில்: புரிகிறதே! ஒரு பெண்மணி தன் பதவியை விட்டு விலகுவதாலும், மற்றொரு பெண்மணி தனக்கு எந்தப் பதவியையும் நாடாமல் சமரசம் தேடியதாலும் பிரச்சினை தீர்ந்திருக்கிறது. அதாவது பெண்களில் பதவியை நாடாமல் இருக்கிற வரை பிரச்சினைகள் தீர வழியுண்டு. இதைத்தானே நீங்கள் சுட்டிக் காட்டு கிறீர்கள். புரிகிறது. (21.2.2009)

மேற்கண்ட கேள்வி பதில்கள் எல்லாம் இடம் பெற்ற பத்திரிகை எதுவாக இருக்க முடியும்?

21 ஆம் நூற்றாண்டின் மனுவின் தத்துப் புத்திரனாக இருக்கக்கூடிய திருவாளர் சோ ராமசாமியின் துக்ளக் கில் எழுதப்பட்டவைதான் இவை.

இவை ஒவ்வொன்றிற்கும் தனியே பதவுரை, பொழிப்புரை, கருத்துரை தேவைப்படாது.

பட்டப்பகலில் சூரியனுக்கு விலாசமா தேவை?

பார்ப்பனர்களா?

பழைய காலமெல்லாம் மாறிவிட்டது

இன்றைக்கு எவ்வளவோ மாற்றம்

எவன் அவுட்டுத்திரி வைத்திருக்கிறான்?

எவன் பஞ்சகச்சம் வைத்துக் கட்டுகிறான்?

காலமாற்றம் அவர்களையும் விட்டு வைக்கவில்லை என்று அவாளுக்காக வக்காலத்து வாங்கும் ஆசாமிகள் நம்மவாளிடத்திலே உண்டு.

மாற்றமா? அது வெளிப்புறத்தில்தான்.

தோற்றத்திலும் மாற்றம் இருக்கிறது. மறுக்கவில்லை.

ஆனால் உள்ளத்தில் மாற்றம் உண்டா? எண்ணத் தில் ஏற்பட்டுவிட்டதா மாற்றம்? சிந்தனையில் சிறிதா வது முன்னேற்றம் உண்டா என்றால் இல்லை - இல்லவே இல்லை என்பதற்கு ஆணி அடித்தாற் போன்ற எடுத்துக் காட்டுதான் மேலே எடுத்துக் காட்டப் பட்டவை.

எந்த ஓர் இடத்திலாவது பெண்கள் என்றால் அவர் களுக்கு மனிதக் கூறுதான் என்று ஏற்றுக் கொள்ள இடம் இருக்கிறதா?

பெண்கள் உயர்ந்தவர்கள்தானாம். ஆனால் இப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்களாம்.

உயர்ந்தவர்களாக இருக்க விருப்பம் இல்லாதவர்கள் எப்படி உயர்ந்தவர்களாக இருக்க முடியும்?

இப்படி ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் அந்தர் பல்டி அடிக்கும் ஆசாமிகள்தான் அவாள் அகராதியில் அறிவாளியோ அறிவாளி!

ஒரு முறை பின்பொறியால் சிரித்துத் தொலையுங்கள்.

இதில் ஒரு வெட்கக்கேடு என்ன தெரியுமா?

இவ்வளவு இழிவாகப் பெண்களை இந்தப் பார்ப்பான் விமர்சித்திருந்தாலும், கொச்சைப் படுத்திக் கூவினாலும், முற்போக்கு முத்திரை குத்தி அலையும் எந்தப் பெண்கள் அமைப்பும் அது பற்றியெல்லாம் மூச்சு விடுவதில்லை. ஒரு கண்டன அறிக்கைகூட கொடுப்பதில்லை.

திராவிடர் கழகம்தான் தீயாக எழவேண்டும். விடுதலைதான் வேங்கைப் புலியாக பாயவேண்டும்.

எழுத்துக்கு எழுத்து செம்மையாகக் கொடுக்கும் சாட்டை பெரியார் திடலில்தான் இருக்கிறது. கருஞ்சட்டைக்காரரின் கையில்தான் அது சுழன்று கொண்டே இருக்கிறது.

பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு பற்றிய பிரச்சினையில் இருவேறு கருத்துகள் உண்டு. ஒன்று உள் ஒதுக்கீடு இல்லாத இட ஒதுக்கீடு; இன்னொன்று உள்ஒதுக்கீடு இருந்தே தீரவேண்டும் என்கிற வற்புறுத்தல்.

மூன்றாவது ஒரு கூட்டம் இருக்கிறது. அதுதான் சோ போன்ற மனுதர்ம மலத்தை மடியில் கட்டிக் கொண்டு அலையும் கூட்டம்.

தினமணி என்ற பெயர் இருக்கும்; இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற நாமம் இருக்கும்; கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளையான குருமூர்த்தி வடிவத்திலும் இருக்கும்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடவே கூடாதாம். அது வீண் வேலையாம். இந்தச் சட்டம் வருவதால் பெண்களுக்குப் புதிதாக ஆகப் போவது ஒன்றும் கிடையாதாம்; வெறும் கண்துடைப்புதானாம்.

பெண்கள் மீதான அக்கறை காரணமாகச் சொல்லப் படுவதா இவை? அல்ல, அல்ல. பெண்கள் மீதான வக்கிரக் குணத்துடன் வடிகட்டி எழுதப்படும் வருணா சிரமவாதிகளின் குமட்டல்கள் இவை.

டெக்கான் கிரானிக்கல் (9.3.2010) ஆங்கில நாளேட் டில் (பக்கம் 2 இல்) திருவாளர் சோ ராமசாமியின் பேட்டி வெளிவந்துள்ளது.

அப்பட்டமான மனுதர்மத்தின் அசல் அக்மார்க் முத்திரையுடன் கருத்துச் சொல்லியிருக்கிறார்.

"சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் பெண் களுக்கான சட்டங்களை இயற்றவில்லையா? பின் எதற்காக பெண்களுக்கென்று தனி ஒதுக்கீடு? அதனால் என்ன பலன் ஏற்பட்டு விடப் போகிறது?

பெண்களுக்கான தொகுதிகள் ஒதுக்கப் பட்டால் அந்த இடத்தில் யார் நிறுத்தி வைக்கப்படுவார்கள்? ஏற்கெனவே சட்ட மற்ற உறுப்பினர்களாக, நாடாளு மன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களின் மனைவிமார் களோ மகள்களோதான் நிறுத்தி வைக்கப்படுவார்கள்?

தேர்ந்தெடுக்கப்படும் இந்தப் பெண்கள் ஆண் களின் பினாமியாகத் தானிருப்பார்கள்" என்று மூக்கால் அழுகிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட பொழுதும் இதே கூட்டம் இந்த வகையில்தான் மண்ணை வாரி இறைத்தது.

உள்ளாட்சிகளில் பெண்கள் போய் உட்கார்ந்ததால் என்ன கெட்டுப் போய்விட்டது? எதில் தோல்வி அடைந்துவிட்டார்கள்?

வாய்ப்புக் கொடுப்பதற்கு முன்பே வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வது ஆற்றாமையின் வெளிப்பாடு. மனுதர்ம குயுக்தியின் கோணல் புத்தி!

543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் குறைந்த பட்சம் 181 பெண்கள் வீற்றிருக்கப் போகிறார் களே - பொறுக்குமா இந்தப் பூதேவர்களுக்கு? வீங்கி வெடித்திட மாட்டார்களா?

தங்கள் உரிமைகளுக்காக இன்னொருவரிடம் கையேந்தி நின்ற காலத்திற்குக் கல்தா கொடுக்கப் பட்டுவிட்டதே!

ஆண்களுக்கு உள்ள ஒவ்வொரு உரிமையும் தங்களுக்கும் வேண்டும் என்று ஓங்கிக்குரல் கொடுப் பார்களே - அது இன்னொரு வகையில் இந்த ஈரோட்டுக் கிழவனாரின் கொள்கைக்கு அல்லவா வெற்றியாக முடியும்?

தமிழ்நாட்டில் ஒளி வீசிய பெரியார் சரக்கு டில்லிப் பட்டணம் வரை அம்பலம் ஏறிவிட்டதே என்ற ஆத்திரத்தில் அம்மிக் குழவியை எடுத்து வயிற்றில் குத்திக் கொள்கிறது சோ கூட்டம்.

33 சதவிகிதத்துக்காகப் போராடும் பெண்களின் கவனம் இந்த மனுவாதிகளின் பக்கமும் திரும்பும் நாள் எந்நாளோ!


வெள்ளி, 14 அக்டோபர், 2022

உலகிற்கு தடுப்பூசி தந்த பெண்கள்!

 

பெண்ணால் முடியும்! : உலகிற்கு தடுப்பூசி தந்த பெண்கள்!

செப்டம்பர் 1-15,2021

தகவல் : சந்தோஷ்

கொரோனா ஒன்றாவது அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்-கிறது. இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்-கொண்டவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை, மக்களிடையே உருவாகி இருக்கிறது. குறுகிய காலத்தில் ஒரு நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது என்பது மருத்துவ உலக வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தத் தடுப்பூசிகளைக் கண்டு-பிடிப்பதற்கு உழைத்த விஞ்ஞானிகள் யார் யார் என்பதை கொஞ்சம் அறிவோம்.

‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசிக்கு அதைக் கண்டறிந்த விஞ்ஞானக் குழுவிற்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர் ‘சாரா கில்பர்ட்’ என்ற பெண் விஞ்ஞானி. அவருடைய பங்கு இதில் மிகவும் முக்கியமானது. ‘கோவேக்சின்’ இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி-யாகும். விஞ்ஞானிகள் குழுவிற்கு தலைமை-யேற்று வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றியவர் ‘சுமதி’ என்ற பெண் விஞ்ஞானி.

 

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்த ‘‘ஜேன்சன்’ (Janssen) என்ற தடுப்பூசியைத் தயாரிப்பதில் மிக முக்கிய பங்காற்றியவர் டச்சு நாட்டைச் சேர்ந்த ‘Elena smolyarchuk’ என்னும் பெண் விஞ்ஞானி. இந்தத் தடுப்பூசிதான் ஏனைய தடுப்பூசிகளைவிட சக்தி வாய்ந்தது என்று இப்போது உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தத் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு அடிப்படையான ஓர் ஆய்வை நடத்தியதும் ஒரு பெண் என்பதுதான் இதில் மிகவும் முக்கியமானது. அவரது பெயர் ‘கேட்டலின் கேரிகோ’. ஹங்கேரியில் பிறந்து தற்போது அமெரிக்காவில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்.

நோய்த் தொற்றுகளைக் கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் அவர் 22 ஆண்டுகளாக தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கண்டுபிடித்த ஒரு மகத்தான மருத்துவப் புரட்சிதான் mRNA என்ற புதிய நுட்பவியல் ஆகும். இதை அவர் கண்டுபிடித்ததன் வழியாகத்தான் இன்றைக்கு இந்த நோய்களில் இருந்து தடுக்கின்ற தடுப்பு ஊசிகளையும் கண்டுபிடிக்க முடிந்தது என்பது மிகவும் அடிப்படையான ஒரு செய்தி ஆகும். உலகத்தில் இதற்கு முன் mRNA என்ற மருத்துவ நுட்பவியலை இதுவரை கற்பனையில் கூட எவரும் சிந்தித்தது இல்லை. அத்தகைய கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கி மகத்தான புரட்சியைச் செய்து காட்டியிருப்பவர், இந்த கேட்டலின் கேரிகோ என்ற அமெரிக்காவில் பணியாற்றுகின்ற, ஹங்கேரியப் பெண் விஞ்ஞானி.

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைக்கும், நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க வந்த போது கூடியிருந்த சுகாதாரப் பணியாளர்கள் எழுந்து நின்று கைதட்டி, கண்ணீருடன் அந்த விஞ்ஞானிக்கு வரவேற்புக் கொடுத்த போது ‘என்னுடைய 22 ஆண்டு கனவு இப்போது வெற்றி பெற்றிருக்கிறது’ என்று அவர் மனம் நெகிழ்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இந்த ஆண்டு நோபல் பரிசுக்குத் தகுதி படைத்த ஒரே ஒரு விஞ்ஞானி இவராகத்தான் இருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அறிவியல் உலகிலும், மருத்துவ உலகிலும்,  ஆண்கள் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. பெண் விஞ்ஞானிகள்  புறக்கணிக்கப் படுகிறார்கள். இந்தியத் திருநாட்டில் பெண்களுக்கான ஒடுக்குமுறைகள் வேறு வேறு வடிவத்தில் இருந்தாலும், அய்ரோப்பிய நாடுகளில் பெண்களுக்கான ஒடுக்குமுறைகளை முறியடித்து இந்த உலகம் முழுவதும் நோயினால் தவித்த மக்களைக் காப்பாற்றி அதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்த இந்தப் பெண் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.

ஞாயிறு, 25 ஜூலை, 2021

மெக்காவில் பாதுகாப்பு பணியில் பெண்கள்

 

மெக்காஜூலை 23- மேற்காசிய நாடானசவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில்முதல் முறை யாக பாதுகாப்புப் பணியில்ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்துலட்சக்கணக்கான முஸ்லிம்கள்  புனித யாத்திரை மேற் கொள்வர்கரோனா வைரஸ் பரவல் காரணமாககடந்தாண் டைப் போலவேஇந்தாண்டும்வெளிநாட்டவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளைபட்டத்து இளவரசர்முகமது பின் சல்மான் மேற்கொண்டு வருகிறார்முஸ்லிம் பழைமைவாத கொள்கைகளை மாற்றி வருகிறார்.

பெண்களுக்கு அதிக அதிகாரம்சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.ராணுவத்திலும் பெண்கள் அதிகள வில் சேர்ந்து வருகின்றனர்.இந்த நிலையில்மெக்கா மற்றும் மதீனாவில்பாதுகாப்புப் பணியில்ராணுவத் தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்தஏப்ரலில் இருந்து இவர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

புதன், 3 மார்ச், 2021

பரோடா சமஸ்தானத்திலுள்ள இந்துப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, இந்துச் சமுதாயச் சட்டத்தை திருத்திப் புதிய சட்டம்

சனி, 4 மே, 2019

முதல் முறையாக ராணுவ காவல் துறையில் பெண்களுக்கு வாய்ப்பு..!



புதுடில்லி, ஏப்.27ஆயுதப் படை வரலாற்றில் முதல்முறையாக, ராணுவ காவல் துறையில் காவலர்கள் பிரிவில் பெண்கள் இணைவதற்கு இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ராணுவ காவல் துறையில் அதிகாரிகள் நிலை பணியிடங்களைத் தவிர்த்து மற்ற பணியிடங்களில் பெண்கள் இதுவரை நியமிக்கப்பட்டதில்லை. ராணுவ காவல் துறையில் முதல்முறையாக காவலர்கள் மற்றும் பணியாளர்கள் பிரிவில் பெண்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.

இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

ராணுவ காவல் துறையில் காவலராக சேர விரும்பும் பெண்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 25) முதல் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.  தகுதியுள்ள பெண் களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கு  ஜூன் 8-ஆம் தேதி கடைசி நாளாகும். ராணுவ தலைமை தளபதியாக விபின் ராவத் பொறுப்பேற்ற பிறகு, பெண்களை ராணுவ காவல் துறையில் இணைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது என்றனர்.

ராணுவ காவல் துறையில் உள்ள மொத்த பணியிடங்களில் 20 சதவீத பணியிடங்களில் பெண்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.  ராணுவத்துக்கு தேவைப்படும் நேரத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அவர்களுக்கு உதவிபுரியும் வகையில் பெண் ராணுவ காவலர்களின் பணிச்சூழல் இருக்கும்.

ராணுவ சட்டதிட்டங்களை வீரர்கள் மீறாது பாதுகாப்பது, போர் காலங்களில் சரக்கு போக்குவரத்தை மேற்கொள்வது, போர்க்கைதிகளை கையாள்வது, உள்ளூர் காவல் துறையினருக்கு தேவைப்படும் போது உதவி புரிவது உள்ளிட்டவை  ராணுவ காவல் துறையினரின் பணி களாகும்.

ராணுவத்தில் மருத்துவம், கல்வி, சட்டம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் மட்டுமே பெண்கள் இதுவரை பணி யமர்த்தப்பட்டனர்.

ஆண்கள் மட்டுமே பணியாற்றும் ராணுவ காவல் துறையின் காவலர் பணியிடங்களில் பெண்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் கடந்த ஆண்டு கூறியது இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவத்தில் 3. 80 சதவீதமும், விமானப்படையில் 13. 09 சதவீதமும், கடற்படையில் 6 சதவீதமும் மட்டுமே பெண்கள் பணியாற்றுவது குறிப்பிடத் தக்கது.

-  விடுதலை நாளேடு, 27.4.19

சனி, 28 ஜூலை, 2018

பிறந்தாலும் பெண்களாய் பிறக்கக் கூடாதா?



பெண்களுக்கெதிரான சர்வதேச வன்கொடுமைகள் தடுப்பு நாளாக ஒரு நாள் (ஜூன் 26) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப் படுகிறது. 1960ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி மிராபெல் சகோதரிகளான மூன்று சகோதரிகள் அரசியல் செயல்பாடுகளுக்காக அந்நாட்டின் ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டனர். சமூகத்தில் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவதை கடுமையாக எதிர்த்து இவர்கள் குரல் கொடுத்து வந்த வர்கள். அவர்கள் படுகொலை செய்யப்பட் டதை அடுத்து மூன்று சகோதரிகளும் மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள் என்று  உலகம் முழுவதும் அடையாளம் காணப்பட்டார்கள். 1999 டிசம்பர் 17இல் அய்.நா சபை கூட்டத்தில், மூன்று சகோதரிகள் இறந்த நவம்பர் 25ஆம் நாளை சர்வதேச பெண்களுக் கெதிரான வன்கொடுமைகள் தடுப்பு நாளாகப் பிரகடனம் செய்யப்பட்டது.

"பெண் என்பவள் பிறப்பதில்லை - உருவாக்கப்படுகிறாள்" என்று பிரஞ்சு தத்துவம் ஒன்று உள்ளது. உண்மையில் பெண் குழந்தையாகப் பிறந்தாலும், அவள் இந்தச் சமூகத்தில் பெண்ணாக வளர முடிவதில்லை. இந்தச் சமூகம் அவளை வளர விடுவதில்லை. பெண் குழந்தை என்று தெரிந்துவிட்டால் அக்குழந்தையைக் கொன்றுவிடும் நிலைமை இப்போதும் உலகெங்கிலும் பரவலாக உள்ளது. ஒருவேளை அந்தப் பெண்  குழந்தை, கொலையிலிருந்து தப்பித்து, பருவ வயதை அடைந்துவிட்டால், பலரின் கண்கள் அப்பெண்ணின் உடலைத் துளைக்கும். ஒரு தலை காதலால் ஆசிட் வீச்சு, ஆணவக் கொலைகள், வரதட்சணைக் கொடுமைகள், சட்டத்தில் ஆண்களுக்கு இணையான சமஉரிமை இல்லாமை என  இப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரை இப்பூமியில் வாழ்வதற்கு தினம் தினம் தீயில் பெண்கள் எரிந்து கொண்டே இருக்கிறார்கள். இந்தக் காலகட்டத் திலும் கூட பெண்கள் ஆண்களுக்கு ஒருபடி கீழேதான் என்ற நிலைமை உலகெங்கும் உள்ளது.

பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது பாலியல் ரீதியாகத்தான் என்றும், அதற்கு அடுத்தபடியாக அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுதல் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று அனைத்து நாடுகளின் கணக்கெடுப்புகளின் முடிவுகளும் சொல்லு கின்றன. அனைத்து நாடுகளின் அரசு களுக்கும் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் பற்றி நன்றாகத் தெரிந்தி ருக்கிறது. ஆனாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், மற்றும் உரிமைகள் ரீதியிலான கொடுமைகள் குறைந்த பாடில்லை. காரணம் ஒன்றே ஒன்றுதான். என்ன தான் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கொடிகட்டிப் பறந்தாலும், அவர்களை என்றுமே ஒரு போதைப் பொருளாக, காமப் பொருளாக, ஆண்களுக்கு அடுத்த படியாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை எந்த நாட்டில் வசிக்கும் ஆண்களும் தவிர்க்கத் தயாராக இல்லை.

கவுரக்கொலை எனப்படும் ஆணவக் கொலைகள்  பெண்களுக்கு எதிரானதாகவே அதிகம் நடக்கிறது. உலக அளவில் ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது இந்தியாதான். Action Aid   என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், பாலியல் வன்கொடுமை களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நாடுகள், பிரேசில் மற்றும் இந்தியா ஆகும். அதாவது பிரேசிலில் 87 சதவிகித மும், இந்தியாவில் 73 சதவிகிதமும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு.

பெண்கள் இந்தியாவில் 2015இல் வெளியிடப்பட்ட தேசியக் குற்ற ஆவணப் பதிவேடு ஆண்டறிக்கையின்படி 2014இல் சுமார் 34,530 பாலியல் வன்கொடுமை வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2013-அய் விட இந்த எண்ணிக்கை 7 சதவிகிதம் அதிகம் ஆகும். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் 90 சதவிகிதத்துக்கு மேல் அந்தப் பெண் ணுக்கு அறிமுகம் ஆனவர்களே. இதில் 40 சதவிகிதப் பெண்கள் 19 வயதுக்குக் குறை வான சிறுமிகள் ஆவர். தினமும் 800-க்கும் அதிகமான பெண்கள் பாலியல் கொடுமை களாலும் மற்ற கொடுமைகளாலும் பாதிக்கப் படுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு இருபது நிமிடத்துக்கும், ஒரு பாலியல் வன் கொடுமை சம்பவம் நடைபெற்று வருகிறது.  2011ஆம் ஆண்டில் எடுத்த ஒரு கருத்துக் கணிப்பு என்ன சொல்கிறது தெரியுமா? 2010-க்கு முன் 30 ஆண்டுகளில், இந்தியாவில் கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சம். இதில் ஒரு சோகமான செய்தி என்ன தெரியுமா? பெண் சிசுக் கொலைக்கு முக்கிய காரணமாக இருப்பது இன்னொரு பெண்தான் என்கிறது அந்த ஆய்வு.

பெண்களுக்கான வன்முறைகள் மற்றும் அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் அதிகமாக நடக்கும் நாடுகளில், முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் இருக்கிறது, இங்கு 19 வயதிலிருந்தே பெண்கள், திருமணம் செய்து கொள்ளக் கட்டயப் படுத்தப்படு கிறார்களாம்.  ஆப்கானிஸ்தானில் 87 சத விகிதப் பெண்கள் கல்வி அறிவு இல்லாத வர்களாக இருக்கிறார்களாம். இரண்டாவது இடத்தில் காங்கோ நாடு இருக்கிறது. இங்கு ஒவ்வொரு நாளும் சுமார் 1100 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். இங்கு பெண் சிசுக் கொலையும் அதிக அளவில் நடந்தேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்தபடியாக பெண்களுக்கான அதிக வன்கொடுமைகள் நடப்பது அதாவது பாலியல் கொடுமைகள், உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்துதல், சம உரிமை இல்லாமை போன்றவற்றில் மூன் றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தி யாவில் மட்டுமே 87 சதவிகிதம் பெண்களுக்கு எதிராக பாலியல்  உடல் மற்றும் மனரீதியான வன்கொடுமைகள் நடப்பதாக ஆய்வறிக்கை சொல்லுகின்றது. இதில் கூட்டு பாலியல் வன்செயல்களும்,  வன்கொடுமைகளும் அடக்கம். மேலும் பெண் சிசு கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என உலக நாடுகள் சொல்லுகின்றன. நான்காவது இடத்தில் சோமாலியா நாடு உள்ளது. இங்கு 4 முதல் 5 வயதுப் பெண்குழந் தைகளின் உறுப்புகள் சிதைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. இது மட்டுமல்லாமல், பாகிஸ்தான், கொலம்பியா, எகிப்து, மெக்சிகோ போன்ற நாடுகள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

உலகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொது வெளிப்பகுதிகள், பேருந்து, அலுவல கங்கள் போன்ற இடங்களில் பெண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், தினம் தினம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

"பெண்கள் ஒரு ஃபீனிக்ஸ் பறவையை போல... இப்பூமியில் வாழ்வதற்கு அவர் கள் மீண்டும் மீண்டும் எரிந்துகொண் டிருக்கிறார்கள், நமக்கெல்லாம் தெரியும் அவர்கள் மீண்டு வருவார்கள் என்று. ஆனால், ஒவ் வொரு முறை எரியும் போதும் அவர்களின் உயிர்போகும் வலியை உணர நாம் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்."

- ஜெ.அன்பரசன்

(இதில் கூறப்பட்டுள்ள நிலவரம் 2014ஆம் ஆண்டுக்கானது)
- விடுதலை ஞாயிறு மலர், 14.7.18

பிறந்தாலும் பெண்களாய் பிறக்கக் கூடாதா?



பெண்களுக்கெதிரான சர்வதேச வன்கொடுமைகள் தடுப்பு நாளாக ஒரு நாள் (ஜூன் 26) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப் படுகிறது. 1960ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி மிராபெல் சகோதரிகளான மூன்று சகோதரிகள் அரசியல் செயல்பாடுகளுக்காக அந்நாட்டின் ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டனர். சமூகத்தில் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவதை கடுமையாக எதிர்த்து இவர்கள் குரல் கொடுத்து வந்த வர்கள். அவர்கள் படுகொலை செய்யப்பட் டதை அடுத்து மூன்று சகோதரிகளும் மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள் என்று  உலகம் முழுவதும் அடையாளம் காணப்பட்டார்கள். 1999 டிசம்பர் 17இல் அய்.நா சபை கூட்டத்தில், மூன்று சகோதரிகள் இறந்த நவம்பர் 25ஆம் நாளை சர்வதேச பெண்களுக் கெதிரான வன்கொடுமைகள் தடுப்பு நாளாகப் பிரகடனம் செய்யப்பட்டது.

"பெண் என்பவள் பிறப்பதில்லை - உருவாக்கப்படுகிறாள்" என்று பிரஞ்சு தத்துவம் ஒன்று உள்ளது. உண்மையில் பெண் குழந்தையாகப் பிறந்தாலும், அவள் இந்தச் சமூகத்தில் பெண்ணாக வளர முடிவதில்லை. இந்தச் சமூகம் அவளை வளர விடுவதில்லை. பெண் குழந்தை என்று தெரிந்துவிட்டால் அக்குழந்தையைக் கொன்றுவிடும் நிலைமை இப்போதும் உலகெங்கிலும் பரவலாக உள்ளது. ஒருவேளை அந்தப் பெண்  குழந்தை, கொலையிலிருந்து தப்பித்து, பருவ வயதை அடைந்துவிட்டால், பலரின் கண்கள் அப்பெண்ணின் உடலைத் துளைக்கும். ஒரு தலை காதலால் ஆசிட் வீச்சு, ஆணவக் கொலைகள், வரதட்சணைக் கொடுமைகள், சட்டத்தில் ஆண்களுக்கு இணையான சமஉரிமை இல்லாமை என  இப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரை இப்பூமியில் வாழ்வதற்கு தினம் தினம் தீயில் பெண்கள் எரிந்து கொண்டே இருக்கிறார்கள். இந்தக் காலகட்டத் திலும் கூட பெண்கள் ஆண்களுக்கு ஒருபடி கீழேதான் என்ற நிலைமை உலகெங்கும் உள்ளது.

பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது பாலியல் ரீதியாகத்தான் என்றும், அதற்கு அடுத்தபடியாக அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுதல் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று அனைத்து நாடுகளின் கணக்கெடுப்புகளின் முடிவுகளும் சொல்லு கின்றன. அனைத்து நாடுகளின் அரசு களுக்கும் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் பற்றி நன்றாகத் தெரிந்தி ருக்கிறது. ஆனாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், மற்றும் உரிமைகள் ரீதியிலான கொடுமைகள் குறைந்த பாடில்லை. காரணம் ஒன்றே ஒன்றுதான். என்ன தான் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கொடிகட்டிப் பறந்தாலும், அவர்களை என்றுமே ஒரு போதைப் பொருளாக, காமப் பொருளாக, ஆண்களுக்கு அடுத்த படியாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை எந்த நாட்டில் வசிக்கும் ஆண்களும் தவிர்க்கத் தயாராக இல்லை.

கவுரக்கொலை எனப்படும் ஆணவக் கொலைகள்  பெண்களுக்கு எதிரானதாகவே அதிகம் நடக்கிறது. உலக அளவில் ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது இந்தியாதான். Action Aid   என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், பாலியல் வன்கொடுமை களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நாடுகள், பிரேசில் மற்றும் இந்தியா ஆகும். அதாவது பிரேசிலில் 87 சதவிகித மும், இந்தியாவில் 73 சதவிகிதமும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு.

பெண்கள் இந்தியாவில் 2015இல் வெளியிடப்பட்ட தேசியக் குற்ற ஆவணப் பதிவேடு ஆண்டறிக்கையின்படி 2014இல் சுமார் 34,530 பாலியல் வன்கொடுமை வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2013-அய் விட இந்த எண்ணிக்கை 7 சதவிகிதம் அதிகம் ஆகும். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் 90 சதவிகிதத்துக்கு மேல் அந்தப் பெண் ணுக்கு அறிமுகம் ஆனவர்களே. இதில் 40 சதவிகிதப் பெண்கள் 19 வயதுக்குக் குறை வான சிறுமிகள் ஆவர். தினமும் 800-க்கும் அதிகமான பெண்கள் பாலியல் கொடுமை களாலும் மற்ற கொடுமைகளாலும் பாதிக்கப் படுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு இருபது நிமிடத்துக்கும், ஒரு பாலியல் வன் கொடுமை சம்பவம் நடைபெற்று வருகிறது.  2011ஆம் ஆண்டில் எடுத்த ஒரு கருத்துக் கணிப்பு என்ன சொல்கிறது தெரியுமா? 2010-க்கு முன் 30 ஆண்டுகளில், இந்தியாவில் கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சம். இதில் ஒரு சோகமான செய்தி என்ன தெரியுமா? பெண் சிசுக் கொலைக்கு முக்கிய காரணமாக இருப்பது இன்னொரு பெண்தான் என்கிறது அந்த ஆய்வு.

பெண்களுக்கான வன்முறைகள் மற்றும் அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் அதிகமாக நடக்கும் நாடுகளில், முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் இருக்கிறது, இங்கு 19 வயதிலிருந்தே பெண்கள், திருமணம் செய்து கொள்ளக் கட்டயப் படுத்தப்படு கிறார்களாம்.  ஆப்கானிஸ்தானில் 87 சத விகிதப் பெண்கள் கல்வி அறிவு இல்லாத வர்களாக இருக்கிறார்களாம். இரண்டாவது இடத்தில் காங்கோ நாடு இருக்கிறது. இங்கு ஒவ்வொரு நாளும் சுமார் 1100 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். இங்கு பெண் சிசுக் கொலையும் அதிக அளவில் நடந்தேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்தபடியாக பெண்களுக்கான அதிக வன்கொடுமைகள் நடப்பது அதாவது பாலியல் கொடுமைகள், உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்துதல், சம உரிமை இல்லாமை போன்றவற்றில் மூன் றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தி யாவில் மட்டுமே 87 சதவிகிதம் பெண்களுக்கு எதிராக பாலியல்  உடல் மற்றும் மனரீதியான வன்கொடுமைகள் நடப்பதாக ஆய்வறிக்கை சொல்லுகின்றது. இதில் கூட்டு பாலியல் வன்செயல்களும்,  வன்கொடுமைகளும் அடக்கம். மேலும் பெண் சிசு கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என உலக நாடுகள் சொல்லுகின்றன. நான்காவது இடத்தில் சோமாலியா நாடு உள்ளது. இங்கு 4 முதல் 5 வயதுப் பெண்குழந் தைகளின் உறுப்புகள் சிதைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. இது மட்டுமல்லாமல், பாகிஸ்தான், கொலம்பியா, எகிப்து, மெக்சிகோ போன்ற நாடுகள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

உலகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொது வெளிப்பகுதிகள், பேருந்து, அலுவல கங்கள் போன்ற இடங்களில் பெண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், தினம் தினம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

"பெண்கள் ஒரு ஃபீனிக்ஸ் பறவையை போல... இப்பூமியில் வாழ்வதற்கு அவர் கள் மீண்டும் மீண்டும் எரிந்துகொண் டிருக்கிறார்கள், நமக்கெல்லாம் தெரியும் அவர்கள் மீண்டு வருவார்கள் என்று. ஆனால், ஒவ் வொரு முறை எரியும் போதும் அவர்களின் உயிர்போகும் வலியை உணர நாம் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்."

- ஜெ.அன்பரசன்

(இதில் கூறப்பட்டுள்ள நிலவரம் 2014ஆம் ஆண்டுக்கானது)
- விடுதலை ஞாயிறு மலர், 14.7.18