செவ்வாய், 23 அக்டோபர், 2018

முலைவரிச்சட்டம்

#இந்தியாவில் சாதிக்கொடுமை தலைவிரித்து ஆடிய காலத்தில் '#முலைவரிச்சட்டம்' என்ற பெயரில் ஒரு சட்டம் அமுலில் இருந்தது. அதாவது #தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் தமது #மார்பின்அளவுக்கேற்ப வரி செலுத்த வேண்டும் என்பது கட்டாயம். #மார்பைமறைக்காவிட்டால் வரி செலுத்தத் தேவையில்லையாம். குறிப்பாக #கேரளா, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இச்சட்டம் கடுமையாக அமுலில் இருந்ததாம்.

அப்போது கேரளா #திருவாங்கூர் அரசின் முலைவரிச் சட்டத்துக்கு எதிராக #நாஞ்செலி என்ற தாழ்த்தப்பட்ட பெண் போராடி இருக்கிறாள். 30 வயதை நெருங்கிக் கொண்டிருந்த அழகியான நாஞ்செலியின் மார்புகள் ரொம்பவும் பெரிதாக இருந்ததினால் திருவாங்கூர் அரசு அம்முலைகளுக்கு #இரட்டை வரி செலுத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பித்ததாம். அதனால் ஆத்திரப்பட்ட நாஞ்செலி வரி செலுத்த மறுத்துவிட்டாள். ஆனாலும் திருவாங்கூர் அரசு விடாமல் அவளிடம் வரி கேட்டு வற்புறுத்தி வந்தது. ஒருநாள் வரி வசூலிப்பவர்கள் வீடுவரை வந்து நாஞ்செலியிடம் வரி கேட்டபோது, கொஞ்சம் பொறுங்கள் எடுத்து வருகிறேன் என்று வீட்டுக்குள் சென்ற நாஞ்செலி, ஒரு கத்தியுடன் வெளியே வந்தாள்.

#முலைவரிச்சட்ம் அமுலில் இருந்த காலத்தில்
கேரள கடைத்தெருவில் #வாழைஇலையை நிலத்தில் பரப்பி தமது கையிலிருந்த கத்தியால் மார்புகள் இரண்டையும் அறுத்து இலையில் வைத்தாளாம்! அந்தக் கொடுமையான காட்சியை நேரில் பார்த்த #வரிவிதிப்பவர்கள் ஆடிப்போனார்களம். 'இது இருந்தால்தானே வரி கேட்பாய்? நீயே எடுத்துக்கோ' என்று சொல்லிவிட்டு #நாஞ்செலி தரையில் வீழ்ந்து இறந்தாள். இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன #திருவாங்கூர் அரசு உடனடியாக முலை வரிச் சட்டத்தை நீக்கியது. இந்த சம்பவம் நடந்து நூறு வருடங்கள் கடந்து விட்டன. சம்பவம் நடந்த இடம், கேரளாவில் #சேர்தலா அருகே உள்ளது. அதன் பெயர் #முலைச்சிபுரம். அந்த ஊர் மக்கள் இன்னும் #நாஞ்செலியை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். ஆனால் கேரளாவில் நாஞ்செலிக்கு எந்த நினைவுச் சின்னமும் கிடையாது. நாமும் தான் எத்தனையோ #மகளிர்தினங்களைக் கொண்டாடி விட்டோம். ஆனால் நம்மில் எத்தனை பெண்களுக்கு #நாஞ்செலியைத் தெரியும்? #பெண்கள் தமது உரிமைகளுக்காக எவ்வாறெல்லாம் போராட வேண்டியிருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக