வியாழன், 23 ஜூலை, 2015

ஏழு கண்டங்களின் மலைச்சிகரங்களில் ஏறி அரியானா சகோதரிகள் சாதனை


சண்டிகர், ஜூலை 9_- அரியானாவைச் சேர்ந்த சகோதரிகள் டஷி மற்றும் நுங்ஷி மாலிக் இருவரும் சேர்ந்து உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள ஏழு உயர்ந்த சிகரங்களில் ஒன்றாக ஏறி சாதனை படைத்துள்ளனர். உலகின் முதல் இரட்டை சகோதரி களாக இவர்கள் இச்சாத னையை நிகழ்த்தியுள்ளனர்.
இவர்கள் இந்த சாத னையை நிகழ்த்தியதற்காக சாகசக்காரர்களுக்கான கிராண்ட்ஸ்லாம் என்கிற விருதினை வென்றிருக்கின் றனர். ஏழு கண்டங்களின் மலைச்சிகரங்கள் மற்றும் வட துருவத்திலிருந்து தென் துருவத்திற்கு பனிச் சறுக்கு மற்றும் மூன்று துருவ சவால் என பல்வேறு தேசிய மற்றும் மண்டல சாதனைகளை செய்துள் ளனர்.
இவர்களது 21-ஆவது வயதில் உலகின் மிகப் பெரிய சிகரத்தை அடைந் தனர். மேலும், கின்னஸின் 60-வது பதிப்பில் இவர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்களை அரியானா வின் பெண் குழந்தை பாதுகாப்பு அமைப்பின் தூதராக நியமித்துள்ள னர்.
இந்த சகோதரிகளின் சாதனைகளைப் பற்றி மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, பெண் சிசுக் கொலை மற்றும் கல்வியறிவின்மை உள்ள நம் நாட்டில் இளைய சமூகத்தின் முன் மாதிரியாக இவர்கள் விளங்கவேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த பெண்கள், ஆப் பிரிக்காவின் கிளிமாஞ் சாரோ மலைச்சிகரம், அய் ரோப்பாவின் எல்பர்ஸ் மலைச்சிகரம், தென் அமெ ரிக்காவின் அகோன்கா குவா மலைச்சிகரம், ஓசி யானாவின் கார்ஸ்டென்ஸ்ஸ் பிரமிட் மலைச்சிகரம், அலாஸ்காவின் மெக் கின்லே மலைச்சிகரம் மற்றும் அண்டார்டிக்கா வின் உயரமான வின்சன் மலைச்சிகரங்களில் ஏறி வெற்றிகொண்டுள்ளனர்.
-விடுதலை,9.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக