வியாழன், 14 டிசம்பர், 2017

வங்காளதேசம்: பெண்கள் வயல் வேலைக்கு செல்ல தடை விதித்த மதத் தலைவர்கள் கைது


டாக்கா, டிச. 14- இசுலாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை யில் இருக்கும் வங்காளம் தேசம் நாட்டில் முன்னர் பெண்கள் கொத்தடிமைகள் போல் நடத் தப்பட்டு வந்தனர். வீடுகளுக் குள்ளே முடங்கி கிடந்த அவர் கள் பிற்காலத்தில் மெல்ல, மெல்ல ஆண்களுக்கு நிகராக வெளி வேலைகளுக்கு செல்ல தொடங்கினர்.

தற்போது அந்நாட்டில் உள்ள 40 லட்சம் தொழிலாளர் களில் சுமார் 80 சதவீதம் பேர் பெண்களாக காணப்படுகின்ற னர். நாடு முழுவதும் உள்ள சுமார் 4500 ஜவுளி தொழிற் சாலைகளில் இவர்கள் பணி யாற்றி வருகின்றனர். இந்நிலை யில், வங்காளதேசம் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள குமர் காலி நகரில் உள்ள மசூதி ஒலி பெருக்கியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜும்மா தொழுகைக்கு பின்னர் ஒரு மத அறிவிப்பு (பத்வா) வெளியானது.
அப்பகுதியில் உள்ள பெண் களில் யாரும் இன்று முதல் வயல் வேலைகளுக்கு செல்லக் கூடாது என்று

உத்தரவாக வெளி யான அறிவிப்பு அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.

மதத் தலைவர்கள் இது போன்ற பொது அறிவிப்பு களை (பத்வா) வெளியிடுவ தற்கு கடந்த 2001ஆ-ம் ஆண்டு அந்நாட்டு அரசு தடை விதித் திருந்தது. பின்னர், இந்த உத்த ரவை எதிர்த்து உச்சநீதிமன்றத் தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த தடையை நீக்கி உத்தர விடப்பட்டது.

மதம் சார்ந்த விவகாரங்க ளில் உடலுக்கு காயம் விளை விக்காத உத்தரவுகளை இமாம் கள் பிறப்பிக்க அனுமதி அளிக் கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பெண்களில் யாரும் வயல் வேலைகளுக்கு செல்ல கூடாது என்று மத உத்தரவு (பத்வா) பிறப்பித்த குமர்காலி பகுதி மதத் தலைவர் மற்றும் அங்குள்ள 5 மசூதி களின் இமாம்களை காவல் துறையினர் கைது செய்துள்ள னர். இவர்கள் 6 பேரின் மீதும் ராணுவ காலத்து சிறப்பு அதி கார சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
- விடுதலை நாளேடு, 14.12.17

செவ்வாய், 12 டிசம்பர், 2017

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர்

எல்லோருக்கும் பொதுவானவர்!



“இனம், மொழி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் அதிபராகப் பணியாற்றுவேன்’’ என்று தனது முதல் உரையிலேயே கவனம் ஈர்த்துள்ளார் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஹாலிமா யாக்கோப். சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்த்து போட்டியிட எந்த வேட்பாளரும் தகுதி பெறாத நிலையில் ஹாலிமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹாலிமா மலாய் இசுலாமியர்கள் என்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர். இதற்கு முன்பு சிங்கப்பூர் விடுதலை பெற்ற சமயத்தில் 1965 முதல் 1970 வரை யூசுஃப் இஷ்ஹாக் என்ற மலாய் இசுலாமியர் அதிபராக பணியாற்றினார். 47 ஆண்டுகளுக்கு பிறகு அதே இனத்தைச் சேர்ந்த ஹாலிமா அதிபராகப் பதவியேற்றுள்ளார்.

63 வயதாகும் ஹாலிமாவுக்கு இந்த உயரம் எளிதில் கிடைத்துவிடவில்லை. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தைக்கும், மலாய் தாய்க்கும் பிறந்தவர் ஹாலிமா. காவலாளியாக பணியாற்றி வந்த ஹாலிமாவின் தந்தை சிறுவயதிலேயே மாரடைப்பால் காலமானார். ஹாலி மாவுடன் சேர்த்து 5 குழந்தைகளையும் அவர் அம்மாதான் கடினமான சூழலில் வளர்த்தெடுத்தார்.

தந்தை காலமானபோது ஹாலிமாவுக்கு 8 வயது. தந்தையின் மறைவுக்குப் பின்னர் வறுமை அவர்களைச் சூழ சிறு வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார் அவரின் அம்மா. ஒரு பாலிடெக்னிக் கல்லூரிக்கு முன்பாக சாப்பாட்டு கடை வைத்திருந்தார் ஹாலிமாவின் தாய். பள்ளிக்குச் செல்லும் முன்பு அம்மாவுக்கு தேவையான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு செல்வது ஹாலிமாவின் வழக்கம்.

பள்ளிப் படிப்பை முடித்ததும் சட்டப்படிப்பை முடித்து சிங்கப்பூர் பார் கவுன்சிலில் பதிவு பெற்று பணியாற்றினார். இவருக்கு சட்டப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டமும் கடந்த ஆண்டு அளித்துள்ளது. அதன் பின்பு தேசிய தொழிற்சங்க காங்கிரசில் பணியைத் தொடங்கி, அதன் துணைத் தலைமைச் செயலாளர் பதவி வரை பல்வேறு பொறுப்புகளை தொழிற்சங்கத்தில் வகித்தார். சிங்கப்பூர் தொழிலாளர் படிப்புகள் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2001-ஆம் ஆண்டு அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்தார் ஹாலிமா. 2011-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சமூக மேம்பாட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சராகவும், சமுதாய மற்றும் குடும்ப மேம் பாட்டுத் துறையின் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக 2013-ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார். அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டதால் சபாநாயகர் பதவியையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார்.

அதிபர் தேர்தலில் இவரை எதிர்த்து 4 பேர் போட்டியிட்டனர். ஆனால் இவரைத் தவிர வேறு எந்த வேட்பாளருக்கும் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை. எனவே, போட்டியின்றி ஹாலிமா அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

சந்தோஷ தருணங்களை குறிப்பிடும் அதே சமயத்தில், ஹாலிமாவுக்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி ஹாலிமா தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்று சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

50 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட சிங்கப்பூரில், சீன வம்சவளியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூரில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஹாலிமா அதிபராகப் பொறுப்பேற்றுள்ளது சிறுபான்மையினருக்கு குதூகலத்தை அளித்துள்ளது. சிறுபான்மையினரின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்று அவர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஆனால் தான் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, அனைத்து சிங்கப்பூர் குடிமக்களுக்கும் பொதுவான அதிபராக பணியாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார் ஹாலிமா.

அதிபராக பொறுப்பேற்று அவர் பேசுகையில், “பன்முக கலாச்சாரத்துக்கும் பல இனவாதங்களும் ஒன்றிணைய உள்ளதால் இது சிங்கப்பூர் மக்களுக்கு பெருமை தரும் தருணம். போட்டியின்றி நான் தேர்வு செய்யப்பட்டாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற அர்பணிப்பு என்னிடம் இருந்து மாறாது.

திறமை, தகுதிக்கு முன்னுரிமை என்ற நமது அமைப்பின் மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். அது இல்லாமல் இன்று நான் இந்த நிலையை எட்டியிருக்க முடியாது!

அதிபர்களை ஜாதி, மத, இன வேறுபாடின்றி  சிங்கப்பூர் குடிமக்கள் தேர்ந்தெடுக்கும் நாளைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்’’ என்றார்.
- விடுதலை நாளேடு,12.12.17

கப்பல்படையின்  முதல் பெண் விமானி!




இந்திய கப்பல்படையின் முதல் பெண் விமானியாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப் தேர்ச்சி பெற் றுள்ளார்.

கேரளத்தில் உள்ள எழிமலா கப்பல்படை அகாதெமியில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ள இவர் விரைவில் கப்பல்படைக்குச் சொந்தமான உளவு விமானத்தில் பைலட்டாக உயரப் பறக்கப் போகிறார். 
இவரின் தந்தை கியான் ஸ்வரூப் கப்பல்படை கமாண்டராக உள்ளார்.

இவருடன் டில்லியைச் சேர்ந்த அஸ்தா சீகல், புதுச்சேரியைச் சேர்ந்த ரூபா, கேரளத்தைச் சேர்ந்த சக்தி மாயா ஆகிய மூன்று அதிகாரிகளும் இந்தியாவின் முதல் கப்பல்படை போர்தளவாட பெண் ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல் பெண் விஞ்ஞானி



கேரளத்தைச் சேர்ந்த அன்னாமணி ஒரு விஞ்ஞானி. 1918-இல் கேரள மாநிலம் பீர்மேட்டில் பிறந்த இவர் விண்வெளி குறித்தும் கோள்கள் குறித்தும் ஆய்வு செய்த முதல் பெண் விஞ்ஞானி. புனேவிலுள்ள விண் வெளி ஆராய்ச்சி நிலைய அலுவலகத்தில் 1948-இல் விஞ்ஞானியாகச் சேர்ந்து படிப்படியாக அதன் இயக்குநராக உயர்வு பெற்று 1960-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

இந்திய விஞ்ஞானக் கழகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு, வெளிநாடு மற்றும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சிக் குழு, கோள்கள் ஆராய்ச்சி குழு ஆகியவற்றில் சிறப்பு உறுப்பினராக பணியாற்றிய முதல் பெண் இவர்தான். விண்வெளி பாதை மற்றும் கோள்கள் குறித்த தனது எண்ணற்ற ஆராய்ச்சி முடிவுகளை புத்தகங்களாக எழுதி வெளியிட்டும் உள்ளார்.
- விடுதலை நாளேடு,12.12.17

திங்கள், 4 டிசம்பர், 2017

வனத்தைக் காக்கும் பெண்கள்




ஜார்க்கண்டில் வன மாஃபி யாக்களிடமிருந்து குங்கிலிய வனத்தை 60 பெண்கள், வன சுரக்சா சமிதி அமைப்பின் மூலம் காத்துவருகின்றனர். இதன் தலைவியான ஜமுனா குன்ட், தங்கள் பகுதியில் உள்ள வனத் தைப் பாதுகாப்பதற்காக இருபது ஆண்டுகளாகப் பெண்களை இணைத்துப் போராடிவருகிறார். ஆரம்பத்தில் ஆண்களை எதிர்த்துப் போராடத் தயங்கிய பெண்களிடம், தங்கள் முதன்மை வாழ்வாதாரமான வனம் கொள்ளையர்களால் சாராயத்துக்காகக் கொள்ளையடிக்கப் படுவதை விளக்கியுள்ளார்.

இந்த அமைப்பினர் தினசரி மூன்று முறை ரோந்து செல்கின்றனர். வில், அம்பு, கம்பு, ஈட்டிகள்தாம் கொள்ளை யர்களை விரட்டுவதற்கான ஆயுதங்கள். நாய்களும் இவர் களுக்கு உதவுகின்றன. இவர்களின் முயற்சியால் அய்ம்பது ஹெக்டேர் வனப்பகுதி தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுவருகிறது. மாஃபியாக்களின் கல் எறிதல் உள்ளிட்ட தாக்குதல்களையும் ஜமுனாவின் படையினர் சந்தித்துப் போராடி வருகின்றனர்.

விடுதலை நாளேடு,21.11.17

விமானத்தில் உலகைச் சுற்றிய பெண் ஊழியர்கள்


முற்றிலும் பெண் ஊழியர்களால் உலகை சுற்றிய விமானம் 


புதுடில்லி, மார்ச் 5 சர்வதேச பெண்கள் தினம், வருகிற 8-ஆம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஏர் இந்தியா நிறுவனம், உலக சாதனைக்காக முற்றிலும் பெண் ஊழியர்களை கொண்டு ஒரு சாதனைக்கு திட்டமிட்டது. அதுதான், விமானத்தில் உலகை சுற்றி வரும் திட்டம்.
அதன்படி, கடந்த 27ஆம் தேதி, டில்லியில் இருந்து போ யிங் ரக ஏர் இந்தியா விமானம், அமெரிக்காவின் சான் பிரான் சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. செல்லும்போது, பசிபிக் நாடுகள் வழியாக சென்ற விமானம், திரும்பி வரும்போது, அட்லாண்டிக் நாடுகள் வழியாக உலகை சுற்றி வந்து டெல்லி வந்தடைந்தது.

இந்த விமானத்தில், விமானிகள், சிப்பந்திகள் அனைவரும் பெண்கள் ஆவர். பயணிகளின் பொருட்களை பரிசோதித்த வர்கள், ஓடுபாதை பணியாளர்கள், விமானம் பரிசோதித்து பறக்க அனுமதித்த என்ஜினீயர்கள், விமானம் தரை இறங்க அனுமதி அளித்த விமான கட்டுப்பாட்டு கோபுர ஊழியர்கள் ஆகிய அனைவருமே பெண்களாக இருந்தனர்.

இது, புதிய உலக சாதனை ஆகும். இதை அங்கீகரிப்பதற்காக, கின்னஸ் நிறுவனத்திடமும், லிம்கா சாதனை புத்தக நிறுவனத் திடமும் ஏர் இந்தியா விண்ணப்பித்துள்ளது
-விடுதலை,5.3.17

குழந்தைத் தொழிலாளர்களின் நிலை குறித்து   நாடாளுமன்றத்தில் உரையாற்றிய  பெங்களூருவைச் சேர்ந்த தமிழ்பெண்




5 வயதில் இருந்து குழந்தைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவங்கியவர் பெங்களூரு வாழ் தமிழ் சிறுமி கனகா. தன்னுடைய நம்பிக்கை மற்றும் துணிச்சலான முடிவுகள் காரணமாக வாழ்க்கையில் உயர்ந்து வரும் கனகா உலகக் குழந்தைகள் நாளன்று (நவ.20) இந்திய நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கருநாடக மாநிலம் பெங்களூருவில் குடிசை வாழ் பகுதியை சேர்ந்தவர் கனகா (வயது 17). தமிழர்களாக அவர்கள் பெங்களூருவில் தங்கியி ருந்த வேலைபார்த்துவந்தனர். இந்த நிலையில் கனகாவின் தந்தை உடல்நலம் சீர்குலைந்து படுத்த படுக்கையாகிவிட்டார்.

கனகாவின் தாயாருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். அப்போது கனகாவிற்கு 7 வயது. இந்த நிலையில் தனது வீட்டையும் தந்தையைக் காப்பாற்றவேண்டும் என்ற நிலையில் உறவினர்களிடம் உதவி கேட்டபோது அவர்கள் தங்களின் வீட்டுவேலைகளைச் செய்யுமாறு கனகாவை நிர்பந்தம் செய்தனர்.

அப்போது வீட்டுவேலை செய்யச்சென்ற கனகா குழந்தைத்தொழிலாளியாக மாறினார். குப்பை பொறுக்குவது, காகித ஆலையில் வேலைபார்ப்பது, பிளாஸ்டிக் பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிவது போன்ற பல்வேறு பணிகளை இவர் செய்துவந்தார். எந்த ஒரு இடத்திலும் சிறுமி ஒருவர் பணிசெய்கிறாரே என்று யாரும் இரக்கம் காட்டவில்லை, அவருக்கு மேலும் மேலும் பணிச் சுமையைத்தான் தந்தார்கள்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண மண்டபம் ஒன்றில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த கனகாவை ஒரு தொண்டு நிறுவனம் மீட்டது,  அதன் பிறகு கனகாவின் வாழ்க்கை மாறியது, தற்போது பியுசி படித்துக்கொண்டு இருக்கும் அவர் ஆங்கிலத்தில் நல்ல புலமைபெற்றுள்ளார்.   இவரை யூனிசெப் அமைப்பு இந்தியப் பிரிவின் ஆலோசகர் என்ற பதவியைத் தந்து கவுரவித்துள்ளது.

ஆங்கிலம் மற்றும் தமிழ், கன்னடம், போன்ற மொழிகளில் திறமைபடைத்த கனகா யுனிசெப் அமைப்பின் சார்பில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றியுள்ளார்.

உலகக் குழந்தைகள் நாள் நவம்பர் 20 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதுமிருந்து 30 குழந்தைகள் நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய நபராக கனகாவிற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அவர் 20ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

இதுகுறித்து கனகா கூறுகையில், குழந்தை களின் உரிமைகளை பாதுகாக்க எவ்வளவோ சட்டங்கள் இருந்தாலும், அவை முறையாக அமலாக்கப் படவில்லை. மேலும் சட்டத்தின் பல ஓட்டைகளைப் பயன்படுத்தி குழந்தைத் தொழி லாளர்களை நியமிப்பவர்கள் தப்பிவிடுகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்க்கை எவ்வளவு வேதனையானது என்பதை நானே அனுப வித்திருக்கிறேன், இதனை நான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். என்னைப்போன்று ஆயிரக்கணக் கான குழந்தைகள் பல சுரண்டல்களை எதிர்கொள் கின்றனர். நகரங்களில் உள்ள குழந்தைகள், அவர் களை காப்பாற்றிக்கொள்ள சிலரை அணுகவாவது முடியும். ஆனால், என்னை போன்று குடிசை பகுதிகள், கிராமங்களில் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் உதவிக்கரம் வேண்டும் என கூறினார்.

- விடுதலை நாளேடு,21.11.17

செவ்வாய், 14 நவம்பர், 2017

நாசாவுக்குச் சென்ற கிராமத்து மாணவி


விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை முன்னோடியாக நினைத்து, விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வுகூடத்துக்கு செல்ல வேண்டுமென்று கனவு கண்ட ஆஷ்னா சுதாகர் (27) அண்மையில் தன்னுடைய ஆசையை நிறை வேற்றியுள்ளார்.

கோழிக்கோடு, கொடுவேலி கிராமத்தைச் சேர்ந்த ஆஷ்னாவின் பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சிறுவயது முதலே கல்வியில் ஆர்வமாக இருந்தாலும், ஆஷ்னாவுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் அதிக ஈடுபாடு. 

2008-ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவுடன் நைனிதாலில் உள்ள ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வி.எஸ்.எஸ்.சி. மூலம் அமெரிக்காவில் உள்ள நாசாவில் குறிப்பிட்ட எல்லைக்குள் வசிக்கும் உரிமை அடிப்படையில் பயிற்சி பெற விண்ணப்பித்தார்.

கடுமையான நேர்முகத் தேர்வுக்குப் பின்னர் இவரது ஆய்வுக் கட்டுரைகளைப் பரிசீலித்து, மகாராஷ் டிரத்தில் உள்ள நாசா விண்வெளி பள்ளியில் 15 நாள் பயிற்சிக்கு அனுமதியளிக்கப்பட்டது. தொடர்ந்து “இன்டர்ன்சிப்’ அனுமதியின் பேரில் நாசாவுக்கு மூன்று மாத காலம் பயிற்சிக்குச் சென்று கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பியுள்ளார். 

தன்னுடைய கனவு நனவானது குறித்து மகிழ்ச்சி யடைந்துள்ள ஆஷ்னா, மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள மீண்டும் நாசா செல்ல வுள்ளார். தற்போது செங்கனாச்சேரி என்.எஸ்.எஸ். இந்து கல்லூரியில் முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்து வரும் ஆஷ்னா, எழுதுவதிலும் நடனத்திலும் கூட ஆர்வமிக்கவர். 
- விடுதலை நாளேடு 14.11.17

சோதனையை சாதனையாக்கிய சாதனா



நாமெல்லாம் ஒரு மொழியை கற்றுக் கொள்ள  பல ஆண்டுகள் உழைக்க வேண்டி இருக்கும். படிக்க முடிந்தால், எழுத வராது. அப்படியே எழுதத் தெரிந்தால், பேச வராது. ஆனால்  ஒரே வருடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்ததோடு மட்டும் அல்லாமல் அந்த மொழியில் நடந்த ஒரு போட்டியில் பங்கு கொண்டு அதில் வெற்றியும் பெற்று பரிசும் வாங்கி வந்துள்ளார். அதுவும் இந்திய மொழி இல்லை, வெளிநாட்டு மொழி.  இப்படி பரிசு பெற்ற  மாணவி தான் சாதனா.

சென்னையில் சட்டம் பயின்று வரும் இந்த மாணவியிடம்  எப்படி முடிந்தது என்று கேட்டால் நம்  தமிழும், அவர்களது கொரிய மொழியும் கிட்டத்தட்ட ஒன்று போலவே உள்ளது என்று சிரித்துக் கொண்டே  கூறுகிறார். அவர் மேலும் கூறியது:

“எனக்கு எப்போதும் புது மொழிகள் மீது பற்று அதிகம்.  நான் 9ஆவது படிக்கும் போது எனது நெருங்கிய தோழி வெளிநாட்டு சீரியல் ஒன்றை பார்த்த தாகவும், அது மிகவும் நன்றாக இருந்ததாகவும் கூறினார். நானும் பார்க்கிறேன் கொடு என்றேன். தன்னிடம் உள்ள “பென் ட்ரைவில்’   அந்த சீரியலை காப்பி எடுத்துக் கொடுத்தார். 

அது கொரிய மொழியில் வந்த சீரியல் “பாய்ஸ் பிபோர்  பிளவர்ஸ்”. நான் அதை கொரிய மொழியிலே யே பார்த்து ரசித்தேன்.  அது பின்னர்  “புதுயுகம்” தொலைக்காட்சியில் தமிழில் வெளிவந்தது. கொரிய மொழி மீது அன்று முதல் ஒருவிதமான பற்று ஏற்பட்டது.  இந்த வெளிநாட்டு மொழியை சென்னையில் யாராவது கற்றுக் கொடுக்கிறார்களா? என்று தேடினேன். 

இன்கோ சென்டர்  என்ற ஒன்று கொரிய மொழிக்காக மட்டும் அல்லாமல், அந்த நாட் டின் மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் அவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ள ஒரு சிறந்த இடம் என தெரிந்தது.  அந்த மய்யத்தின்   தலைவி ரதி ஜாபர் அவர்களை சந்தித்து என் எண்ணத்தை கூறினேன். 

அவரும் சந்தோசத்துடன் கொரிய மொழியின் பயிற்சி வகுப்பில் சேர  சொன் னார். சேர்ந்த பிறகு தான் தெரிந்தது நம் தமிழ் மொழியும், கொரிய மொழியும்  பல விசயங்களில் ஒன்று போல உள்ளது என்று. நம் தமிழ் வார்த்தைகளான அம்மா, அப்பா, பாம்பு, வா, போன்று நிறைய தமிழ் வார்த்தைகள் போல், கொரிய மொழியிலும் கிட்டத்தட்ட அதே ஒலியுடன் இருக்கின்றன. 
அது மட்டும் அல்லாமல்  தமிழில் நாம் மரியாதை கொடுத்து பேசுவது   போல் கொரிய மொழியிலும் பேசுகிறார்கள். “நான் சிவே கந்தா’ என்று கூறினால், “நான் வீட்டிற்கு போறேன்’ என்று அர்த்தம்.    

சென்னையில் உள்ள கொரிய மொழி பள்ளியில் பலர் இரண்டு மூன்று ஆண்டு களாக படிக்கிறார்கள்.  இந்த ஆண்டு படிப்ப வர்களிடம் ஒரு சிறு போட்டி வைத்து மூன்று பேர்களை தேர்ந்தெடுத்தார்கள். 

அதில் நான் முதலில் வெற்றி பெற்றேன். பின்னர் எங்களை எல்லாம் வீடியோ படமெடுத்து அதை கொரியாவிற்கு அனுப் பினார்கள். அங்கு 56  நாடுகளில் உள்ள 105  கொரியன் மய்யத்தில் இருந்து 140  பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டர்கள்.  இந்த  140  பேர்களை  ஸ்கைப்  மூலம்  பேட்டி கண்டார்கள்.  அதில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து 12  பேர்கள் தேர்வானார்கள். இவர்கள் கொரியாவிற்கு பயணமானார்கள்.

அதில் நானும் ஒருத்தி என்பதில் நான் மிகவும் மகிழ்ந்தேன். அங்கு எங்களை மேடையில் பேசவிட்டு தேர்ந்தெடுத்தார்கள். அதில் நான் மூன்றாவது பரிசினை பெற்றேன். 

மற்ற இருவர் மட்டுமல்ல என்னுடன் வந்த பலரும் மூன்றாவது ஆண்டு கொரிய மொழியை படிக்கிறார்கள். நான் முதலாம் ஆண்டுதான் முடித்துள்ளேன்.  

எனக்கு மகிழ்ச்சியை தந்த விஷயங்கள் இரண்டு. கொரிய மொழியை கண்டுபிடித்த ராஜா செஜாங் இன்ஸ்டிடியூட் தான் இந்த போட்டிகளை  நடத்தியது.  

இரண்டாவது, இந்த பரிசினால் நான் அடுத்த ஆண்டு மீண்டும் கொரியா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. 

மூன்று   மாதம் அங்கு தங்கி இருந்து மேலும் அதிகமாக கற்க இந்த வாய்ப்பையும் நான் பயன்படுத்திக் கொள்வேன்.    

கொரியா சென்றபோது அங்குள்ள ஜி ஜூ (ஒங் ஒன்) என்ற தீவிற்கு சென்றோம். யங்ஜின் என்ற இடத்தையும் பார்த்தோம். அங்குள்ள கிராமம், அவர்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவைகளையும் பார்த்து தெரிந்து கொண்டோம். பல்வேறு பூங்காக்கள், அருங்காட்சியகம் ஆகியவைகளையும் பார்த்து ரசித்தோம். 

எங்களுடைய சவுகரியத்தை அவர்கள் முதன்மையாக எடுத்துக் கொண்டார்கள் என்று தைரியமாக கூறலாம். 

அதற்கு ஒரு சிறு உதாரணம், இந்த போட்டியாளர்களுக்கு தேவையான சாப் பாட்டை அவர்கள் தயாரித்து  வழங்கினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவிற்கு பார்த்துப் பார்த்து எங்களை எல்லாம் கவனித்தார்கள் என்றால் அது மிகை இல்லை. 

அடுத்த ஆண்டு மூன்று மாதம் தங்கி படித்த பின், பரீட்சை உண்டு. அதில் நான் தேர்ச்சி பெற வேண்டும்  என்று இப்பொழுதே கொரிய படிப்பை மேலும் கவனமாக படித்து வருகிறேன்.
- விடுதலை நாளேடு 14.11.17

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான சட்டங்கள் எழுத்துரு

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005 
இந்தச் சட்டத்தின்படி பெண்கள், தன் கணவரோ, மாமியாரோ துன்புறுத்தினால் தண்டனை பெற்றுத் தரலாம். கணவன் வீட்டில் மட்டும்தான் என்றில்லாமல் பெற்றோர் தன்னை துன்புறுத்தினாலும் இந்தச் சட்டத்தின் கீழ் புகாரளிக்கலாம். பெரும்பாலும் காதல் திருமணம் செய்ய விழையும் பெண்ணை அடித்து உதைத்துத் துன்புறுத்துவது போன்றவற்றில் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தலாம். இச்சட்டத்தின்படி காவல் நிலையம் சென்று புகாரளிக்கத் தேவை யில்லை. காவல் நிலையத்தில் புகாரளித்தால் எஃப்.அய்.ஆர். போடப்படுவதுபோல, மாவட்ட பாதுகாப்பு அதிகாரியிடம் புகாரளித்தால் டி.அய்.ஆர் பதிவு செய்யப்படும். இதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலான பெண்கள் கணவனுக்கு எதிராக காவல்நிலையம் செல்லத் தயங்குவதால் இச்சட்டத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர் திருமண தடைச் சட்டம், 2006  
சர்வதேச மகளிர் ஆராய்ச்சி மய்யம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் 48 சதவிகிதப் பெண்கள் 18 வயதுக்குள்ளேயே திருமணம் புரிந்து கொள்வதாகக் கூறுகிறது. குழந்தைத் திருமணத்தில் இந்தியா 13ஆவது இடத்தில் இருக்கிறது. இப்பழக்கம் தொன்றுதொட்டு இருப்பதால் அதைத் தடுப்பது சிரமமாக இருக்கிறது. 2007ஆம் ஆண்டு முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, பெண்ணுக்கு குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் ஆணுக்கு 21 ஆகவும் ஆக்கப்பட்டது.இச்சட்டத்தின்படி குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்துவைப்பது குற்றம். ஆயினும் சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு இன்றும் பல குழந்தை திருமணங்கள் நடைபெற்றுதான் வருகின்றன.

சிறப்பு திருமணச் சட்டம், 1954
இந்தியாவில் பல மதங்களும், ஜாதி அமைப்புகளும் இருப்பதால் மதம் மற்றும் ஜாதி தாண்டி திருமணம் புரிகிறவர்கள் திருமணத்தை முறையாக பதிவு செய்ய வேண்டுமென்றாலோ,  திருமணத்துக்குப் பின்னான வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டு விவாகரத்து நோக்கிய பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வை நாடவோ இச்சட்டத்தின் படி முறையாக பதிவு செய்தால்தான் மண முறிவு கிடைக்கும். இச்சட்டத்தின்படி திருமணம் செய்ய விரும்புவோர் திருமணப் பதிவு அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பித்தபின் மணம் செய்ய விரும்புவோரின் பெயர்கள் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருக்கும். ஒரு மாதத்திற்குப் பின் திருமணம் முறையாக பதிவு செய்யப்படும்.

வரதட்சணை தடுப்புச் சட்டம்,1961 
வரதட்சணை என்பது காலம் காலமாக நம் சமூகத்தில் வேரூன்றியிருக்கும் கொடிய விஷம். வரதட்சணை கொடுக் காததற்காக கணவர் வீட்டில் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களுக்கு பெண்கள் ஆளாகின்றனர். வரதட்சணைக்காக மனைவியை உயிருடன் எரித்த சம்பவங்களும் நாம் அறிந்ததுதான். வரதட்சணை வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் எனக் கூறுகிறது இச்சட்டம். வரதட்சணை கேட்பவர்கள் மீதும் கொடுப்பவர்கள் மீதும் இச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம். இச்சட்டத்தின்படி பலர் தண்டனை பெற்றுள்ளனர்.

இந்திய  விவாகரத்துச் சட்டம், 1969

திருமண வாழ்வில் திருப்தியின்மை, வெறுமை, கட்டாயம் போன்ற பல காரணங்களால் இருவரும் மனமொத்தோ அல்லது இணையர்களில் ஒருவரோ விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு நடத்தப்பட்டு, விவாகரத்து வழங்கப்படும்.

பிரசவகால பலன்கள் சட்டம், 1861 
பிரசவ காலத்தின்போது பணிபுரியும் பெண்ணுக்கு அந்நிறுவனம் 80 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையும், மருத்துவ செலவையும் வழங்க வேண்டும் எனக்கூறுகிறது இச்சட்டம். இச்சட்டம் பெண்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய சட்டம். பொருளாதாரரீதியாக பெண்களுக்கு உதவவும், வேலையை உறுதி செய்யவும் இச்சட்டம் உதவுகிறது.

மருத்துவரீதியிலான கருக்கலைப்புச் சட்டம், 1971
கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா?  என்பதைத் தெரிந்து கொண்டு, கருக்கலைப்பு செய்வதற்கு எதிராக இச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றும் பல நகரங்களில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் பெண் ஆணா பெண்ணா என்று அறிந்துகொள்ளும் வசதியை ரகசியமாக தரும் இடங்களும் செயல்படுகின்றன என்பது உண்மைதான்.

பணியிடங்களில் பெண்களின் மேல் பாலியல் கொடுமை தடுப்புச் சட்டம் 2013  
பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளை தடுப்பதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. 36 சதவீத இந்திய நிறுவனங்களும், 25 சதவீத பன்னாட்டு நிறுவனங்களும் தங்களது நிறுவனங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நடப்பதில்லை என உறுதிப்படுத்தியிருக்கின்றன. பணியிடங்களில் பாலியல் தொந்தரவு, நெருக்கமாக அணுகுதல், பாலியல்ரீதியிலான சீண்டல் ஆகியவற்றுக்கெதிராக இச்சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தர முடியும்.

பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் தடைச் சட்டம், 1986 
எழுத்து, ஓவியம், விளம்பரங்கள் மற்றும் இன்ன பிற ஊடகங்களில் பெண்களை தவறாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டம் இது. குறிப்பிட்ட ஒரு பெண்ணை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பெண் சமூகம் பற்றிய தவறான சித்தரிப்புக்கும் இதன் மூலம் தண்டனை பெற்றுத் தர முடியும். ஆனால் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறைவாகவே உள்ளது.

தேசிய மகளிர் ஆணையச் சட்டம், 1990  
இச்சட்டத்தின்படி லலிதா குமாரமங்கலம் தலைமையில் மகளிர் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. பெண்களின் உரிமைகளுக்காகவும், அவர்களுக்கு எதிராக நடக்கக் கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கிறது. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பொருளாதார ரீதியில் வலுவுடையவர்களாக்குவதற்கான முன்னெடுப்புகளை இந்த ஆணையம் மேற்கொள்கிறது.

சம ஊதியச் சட்டம், 1976
எந்தப் பணியிலும் ஆண்-பெண் இருபாலினருக்கும் சமமான அளவிலான வாய்ப்பும், ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது. எந்தப் பணியிடமாக இருந்தாலும் பெண் என்கிற காரணத்தால் ஊதியம் மறுக்கப்படக் கூடாது அல்லது குறைக்கப்படக்கூடாது. ஆண்கள் கற்றுக்கொள்ளும், மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் மேற்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது.
-விடுதலை,1.8.17