திங்கள், 4 டிசம்பர், 2017

வனத்தைக் காக்கும் பெண்கள்




ஜார்க்கண்டில் வன மாஃபி யாக்களிடமிருந்து குங்கிலிய வனத்தை 60 பெண்கள், வன சுரக்சா சமிதி அமைப்பின் மூலம் காத்துவருகின்றனர். இதன் தலைவியான ஜமுனா குன்ட், தங்கள் பகுதியில் உள்ள வனத் தைப் பாதுகாப்பதற்காக இருபது ஆண்டுகளாகப் பெண்களை இணைத்துப் போராடிவருகிறார். ஆரம்பத்தில் ஆண்களை எதிர்த்துப் போராடத் தயங்கிய பெண்களிடம், தங்கள் முதன்மை வாழ்வாதாரமான வனம் கொள்ளையர்களால் சாராயத்துக்காகக் கொள்ளையடிக்கப் படுவதை விளக்கியுள்ளார்.

இந்த அமைப்பினர் தினசரி மூன்று முறை ரோந்து செல்கின்றனர். வில், அம்பு, கம்பு, ஈட்டிகள்தாம் கொள்ளை யர்களை விரட்டுவதற்கான ஆயுதங்கள். நாய்களும் இவர் களுக்கு உதவுகின்றன. இவர்களின் முயற்சியால் அய்ம்பது ஹெக்டேர் வனப்பகுதி தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுவருகிறது. மாஃபியாக்களின் கல் எறிதல் உள்ளிட்ட தாக்குதல்களையும் ஜமுனாவின் படையினர் சந்தித்துப் போராடி வருகின்றனர்.

விடுதலை நாளேடு,21.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக