வியாழன், 14 டிசம்பர், 2017

வங்காளதேசம்: பெண்கள் வயல் வேலைக்கு செல்ல தடை விதித்த மதத் தலைவர்கள் கைது


டாக்கா, டிச. 14- இசுலாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை யில் இருக்கும் வங்காளம் தேசம் நாட்டில் முன்னர் பெண்கள் கொத்தடிமைகள் போல் நடத் தப்பட்டு வந்தனர். வீடுகளுக் குள்ளே முடங்கி கிடந்த அவர் கள் பிற்காலத்தில் மெல்ல, மெல்ல ஆண்களுக்கு நிகராக வெளி வேலைகளுக்கு செல்ல தொடங்கினர்.

தற்போது அந்நாட்டில் உள்ள 40 லட்சம் தொழிலாளர் களில் சுமார் 80 சதவீதம் பேர் பெண்களாக காணப்படுகின்ற னர். நாடு முழுவதும் உள்ள சுமார் 4500 ஜவுளி தொழிற் சாலைகளில் இவர்கள் பணி யாற்றி வருகின்றனர். இந்நிலை யில், வங்காளதேசம் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள குமர் காலி நகரில் உள்ள மசூதி ஒலி பெருக்கியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜும்மா தொழுகைக்கு பின்னர் ஒரு மத அறிவிப்பு (பத்வா) வெளியானது.
அப்பகுதியில் உள்ள பெண் களில் யாரும் இன்று முதல் வயல் வேலைகளுக்கு செல்லக் கூடாது என்று

உத்தரவாக வெளி யான அறிவிப்பு அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.

மதத் தலைவர்கள் இது போன்ற பொது அறிவிப்பு களை (பத்வா) வெளியிடுவ தற்கு கடந்த 2001ஆ-ம் ஆண்டு அந்நாட்டு அரசு தடை விதித் திருந்தது. பின்னர், இந்த உத்த ரவை எதிர்த்து உச்சநீதிமன்றத் தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த தடையை நீக்கி உத்தர விடப்பட்டது.

மதம் சார்ந்த விவகாரங்க ளில் உடலுக்கு காயம் விளை விக்காத உத்தரவுகளை இமாம் கள் பிறப்பிக்க அனுமதி அளிக் கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பெண்களில் யாரும் வயல் வேலைகளுக்கு செல்ல கூடாது என்று மத உத்தரவு (பத்வா) பிறப்பித்த குமர்காலி பகுதி மதத் தலைவர் மற்றும் அங்குள்ள 5 மசூதி களின் இமாம்களை காவல் துறையினர் கைது செய்துள்ள னர். இவர்கள் 6 பேரின் மீதும் ராணுவ காலத்து சிறப்பு அதி கார சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
- விடுதலை நாளேடு, 14.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக