செவ்வாய், 14 நவம்பர், 2017

நாசாவுக்குச் சென்ற கிராமத்து மாணவி


விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை முன்னோடியாக நினைத்து, விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வுகூடத்துக்கு செல்ல வேண்டுமென்று கனவு கண்ட ஆஷ்னா சுதாகர் (27) அண்மையில் தன்னுடைய ஆசையை நிறை வேற்றியுள்ளார்.

கோழிக்கோடு, கொடுவேலி கிராமத்தைச் சேர்ந்த ஆஷ்னாவின் பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சிறுவயது முதலே கல்வியில் ஆர்வமாக இருந்தாலும், ஆஷ்னாவுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் அதிக ஈடுபாடு. 

2008-ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவுடன் நைனிதாலில் உள்ள ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வி.எஸ்.எஸ்.சி. மூலம் அமெரிக்காவில் உள்ள நாசாவில் குறிப்பிட்ட எல்லைக்குள் வசிக்கும் உரிமை அடிப்படையில் பயிற்சி பெற விண்ணப்பித்தார்.

கடுமையான நேர்முகத் தேர்வுக்குப் பின்னர் இவரது ஆய்வுக் கட்டுரைகளைப் பரிசீலித்து, மகாராஷ் டிரத்தில் உள்ள நாசா விண்வெளி பள்ளியில் 15 நாள் பயிற்சிக்கு அனுமதியளிக்கப்பட்டது. தொடர்ந்து “இன்டர்ன்சிப்’ அனுமதியின் பேரில் நாசாவுக்கு மூன்று மாத காலம் பயிற்சிக்குச் சென்று கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பியுள்ளார். 

தன்னுடைய கனவு நனவானது குறித்து மகிழ்ச்சி யடைந்துள்ள ஆஷ்னா, மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள மீண்டும் நாசா செல்ல வுள்ளார். தற்போது செங்கனாச்சேரி என்.எஸ்.எஸ். இந்து கல்லூரியில் முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்து வரும் ஆஷ்னா, எழுதுவதிலும் நடனத்திலும் கூட ஆர்வமிக்கவர். 
- விடுதலை நாளேடு 14.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக