புதன், 19 ஆகஸ்ட், 2015

அமெரிக்க அதிபர் மாளிகை அதிகாரியாக திருநங்கை நியமனம்


அமெரிக்க அதிபர் மாளிகையின் பணியாளர் தேர்வு இயக்குநராக ரஃபி பிரீட்மேன்-குர்ஸ்பேன் என்ற திருநங்கை செவ்வாய்க்கிழமை நியமிக்கப் பட்டார். அமெரிக்க அதிபர் மாளிகையில் அதிகாரி யாக நியமிக்கப்பட்டுள்ள முதல் திருங்கை இவரே ஆவார். ரஃபி, இதற்கு முன்பு திருநங்கைகளின் சமத் துவத்துக்கான தேசிய மய்ய ஆலோசராக பணியாற்றி வந்தார்.
"ரஃபி பிரீட்மேன்-குர்ஸ்பேனின் நியமனம், மூன்றாம் பாலின சமூகத்திற்கு ஒரு முக்கிய நிகழ்வு என்றும், அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கை களையும் அரசு நிறைவேற்றுகிறது என்பதை உறு திப்படுத்தும் விதமாக உள்ளது என்றும் வழக்கு ரைஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திருநங்கை களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக, ரஃபி பிரீட் மேன்-குர்ஸ்பேன் உறுதி பூண்டிருப்பதற்கு ஒபாமா அரசு மதிப்பளிக்கிறது என்பதை இந்த நியமனம் பிரதிபலிக்கிறது என்று வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் வலேரி ஜாரெட் கூறினார்.


.-விடுதலை,19.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக