புதன், 19 ஆகஸ்ட், 2015

ஆண்களே இல்லாத அபூர்வ கிராமம்...

ஆண்களே இல்லாத அபூர்வ கிராமம்... 

கென்யா நாட்டில் ஆண்கள் இல்லாமல் முற்றிலும் பெண்களால் ஆன ஒரு கிராமம் இருக் கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..
கென்ய நாட்டின் தலைநகரான நைரோபி நகரிலிருந்து 380 கி.மீட்டர் தொலைவில் உள்ள சம் புரு பகுதியில் தான் இந்த கிராமம் அமைந்துள்ளது.  உமோஜா எனும் இந்த கிராமத்தை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை கள், குழந்தைத் திருமணம், கணவனால் கைவிடப் பட்ட மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப் பட்ட 15 பெண்கள் கூட் டாக இணைந்து 1990-ல் உருவாக்கினர்.
தற்போது  இந்த கிராமத்தில் 47 பெண் கள் மற்றும் 200 குழந்தை கள் வசிக்கின்றனர். ஆண் களே இல்லாத இந்த கிரா மத்திற்கு பிரிட்டன் ராணு வத்தினரால் பாலியல் வன்முறை செய்யப்பட்ட ரெபேக்கா லோலோசோலி என்றப் பெண் கிராமத் தலைவியாக செயல்பட்டு வருகிறார். இந்த கிராமப் பெண்கள் நகை செய்து விற்பதின் மூலமாகவும், இந்தப் பகுதியிலேயே கூடாரங்களால் ஆன ஒரு சிறிய சுற்றுலாத்தலத்தை ஏற்படுத்தியுள்ளதன் மூல மாகவும் இவர்கள் தங்க ளின் வாழ்க்கைச் செலவி னங்களை எதிர்கொள்கின் றனர்.
பெண்கள் மட்டுமே இருக்கும் கிராமம் என்ப தால் அக்கம்பக்கத்து கிரா மங்களில் உள்ள ஆண்கள் அவ்வப்போது அத்துமீறி செயல்படுவதுண்டு. எனி னும், அனைத்து தடைக ளையும் தைரியமாக எதிர் கொண்டு, இந்த 247 பேரும் பத்து குடும்பங்களாக ஒற் றுமையுடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


-விடுதலை,19.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக