சனி, 15 ஆகஸ்ட், 2015

பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு


பெங்களூரு, ஆக.8 பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக மகளி ருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பதற்கு, மகளிர் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2010ஆ-ம் ஆண்டு நடை பெற்ற பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் 198 வார்டுகளைக் கொண்ட மாநகராட்சியில் 64 வார்டுகளில் மகளிர் போட்டியிட அனுமதிக் கப்பட்டனர். அதன்படி பாஜகவில் 31 பேரும், காங்கிரஸில் 22 பேரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் 8 பேரும், சுயேட்சையாக 3 பேரும் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் வருகிற 22-ம் தேதி பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய் யும் பணிகள் தொடங்கி யுள்ளதால், வேட்பாளர் களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சியினர் தீவி ரம் காட்டி வருகின்றனர். இந்த தேர்தலில் 198 வார்டுகளைக் கொண்டு மாநகராட்சியில் 98 வார் டுகள் மகளிருக்கு ஒதுக்கப் பட்டுள்ளன.
எனவே பெண் வாக்கா ளர்களை குறி வைத்து காங்கிரஸ், பாஜக உள் ளிட்ட கட்சியினர் தேர் தல் அறிக்கையை தயா ரித்து வரு கின்றனர். மாநகராட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட் டுள்ளதால் பெங்களூரு வில் உள்ள மகளிர் அமைப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-விடுதலை,8.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக