வியாழன், 20 ஆகஸ்ட், 2015

கருநாகப்பாம்பின் ரத்தத்தை குடித்த ராணுவ வீராங்கனை

கருநாகப்பாம்பின் ரத்தத்தை குடித்து
பயிற்சியை நிறைவு செய்த
அமெரிக்க ராணுவ வீராங்கனை
வாஷிங்டன், ஆக. 20 யுத்தகளத்தில் முன்ன ணியில் நின்று போர் புரிவதில் ஆண்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கி வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பாக பெண் களுக்கும் சம வாய்ப்பு வழங்க அமெரிக்க ராணு வம் முடிவு செய்தது.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 381 ஆண்கள் மற்றும் 19 பெண்களுடன், ராணுவ ரேஞ்ஜர்களுக்கான தலைமைப் பயிற்சி ப்ளோரிடா மாகாணத்தில் தொடங்கியது. இந்த பயிற்சி தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது.
இந்த பயிற்சியின் போது, வன விலங்குகள் மற்றும் அதிக நச்சுத் தன்மையுள்ள பாம்புகளை அடித்துக் கொல்வது, பேரிடரில் சிக்கித் தவிக்கும் ராணுவ வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, காடு களில் மறைந்திருந்தபடி பல நாட்கள் உயிர் வாழ்வது எப்படி? என்பன உள் ளிட்ட பல்வேறு போர் பயிற்சி முறைகள் பயிற்று விக்கப்பட்டன.
49 புஷ்-அப், 59 சிட்-அப், 6 சின்-அப் இவ்வளவையும் செய்து விட்டு 8 கிலோ மீட்டர் தூரம் ஓடுவதுதான் இந்த பயிற்சியின் முக்கிய அம்சமே இத்தனையையும் வெறும் 40 நிமிடங் களுக்குள் செய்து முடித்தாக வேண்டும். இது தவிர, 3 மணி நேரத்தில் 19 கிலோ மீட்டர் நடப்பது, மலை யேற்றப் பயிற்சி, நீச்சல் பயிற்சி என்று ஒவ்வொன் றும் ஒருவரை சிறந்த ராணுவ வீரராக உரு மாற்றக்கூடியது.
இந்த பயிற்சியின் ஒரு கட்டமாக மிகக் கடுமை யான நச்சுத் தன்மையுள்ள கருநாகங்களை வேட்டை யாடும் கலை பற்றி கற்றுத் தரப்பட்டது. மேலும், உணவு ஏதும் கிடைக்காத நிலையில், ஒரு கருநாகத் தின் ரத்தத்தை குடித்து,  உயிரை காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தாய்லாந்து நாட்டின் காட்டுப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களி டையே கருநாகத்தின் ரத்தத்தை குடிக்கும் வழக்கம் நிலவி வருகிறது. பாலுணர்வு எழுச்சியை தூண்டுவதில் முதன்மை மருந்தாக கருதப்படும் கருநாகத்தின் ரத்தம் கிழக்கு ஆசியா பகுதியில் உள்ள பல நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில், பயிற்சி யின் ஒருபகுதியாக பிடி பட்ட கருநாகத்தின் ரத்தத் தை குடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். வீரர்கள் பலர் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் ஒரு வீராங்கனை மட்டும் துணிச்சலுடன் கருநாகத்தை கொன்று வெட்டப்பட்ட பாம்பின் தலைப்பகுதியை வாய்க்குள் வைத்து ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தார்.
இதைக் கண்டு அனைவரும் வியந் தனர். இந்த கடும் பயிற்சி யில் 2 பெண்கள் உட்பட 94 பேர் தேர்ச்சியடைந் துள்ளனர்.  இவர்கள் பயிற் சியில் தேர்ச்சி பெற்றதற் கான விழா வருகிற வெள்ளிக்கிழமை போர்ட் பென்னிங் ராணுவ மய்யத் தில் நடைபெறுகிறது.
-விடுதலை,20.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக