ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

சாதனைப் பெண்கள

ஓட்டு போட வைத்த  எம்மிலின் பாங்குர்ஸ்ட் (1858 - 1928)
இங்கிலாந்தில் பெண்களுக்கான வாக்குரிமை போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் எம்மிலின் பாங்குர்ஸ்ட். மிகுந்த அறிவாளி. படிப்பாளி. 14  வயதிலேயே பெண்கள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டார். பெண்கள் உரிமைகளுக்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர் பாங்குர்ஸ்டை மணம்  செய்துகொண்டார்.
அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் தொடர்ந்து மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார். பலமுறை சிறை சென்றார். பட்டினிப் போராட்டம் நடத்தினார். தொடர்ச்சியான கடும் போராட்டங் களின் பலனாக 1918இல் இங்கிலாந்தில் ஓட்டு உரிமை கிடைத்தது.
இருபதாம் நூற்றாண்டின் மிக  முக்கிய மனிதர்களில் ஒருவராக எம்மிலின் பாங்குர்ஸ்ட் போற்றப் படுகிறார். எம்மிலினின் பெண்களும் போராட்டங்களில் தீவிரம் காட்டினார்கள்.
இயக்கம் தொடங்கிய கேத்தரின் ஹெலன் ஸ்பென்ஸ் (1825 - 1910)
1902இல் ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாட்டில் பெண்கள் இயக்கத்தை வழிநடத்திச் சென்றவர்களில்  முக்கியமானவர் கேத்தரின் ஹெலன் ஸ்பென்ஸ். ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை யாளர், அரசியல்வாதி என்று பல சிறப்புகளைப் பெற்றவர்.
பெண்களுக்கான இயக்கங்களில் நேரடியாகவும், பத்திரிகை, புத்தகங்கள் வாயிலாகவும் தொடர்ந்து போராடினார். இன்று மிகச்சிறந்த ஆஸ்திரேலிய  பெண்களில் ஒருவராக அந்த நாடே கொண்டாடுகிறது. கரன்ஸியில் அவருடைய உருவத்தைப் பொறித்துப் பெருமைப்படுத்தியிருக்கிறது.
பன்முகத் தன்மை கொண்ட ரோசா லுக்சம்பர்க் (1871 - 1919)
ரஷ்யாவில் பிறந்த ரோசா லுக்சம்பர்க், மார்க்ஸியவாதி... தத்துவஞானி... பொருளாதார வல்லுநர்... பெண்ணுரிமைப் போராளி... சமூக  விடுதலைக்காகப் போராடிய புரட்சியாளர்.
விடாது போராடிய கிளாரா ஜெட்கின் (1857 - 1933)
ஜெர்மனியில் பிறந்தவர் கிளாரா. பெண் உரிமைகளுக் காகப் போராடியவர்களில் மிக முக்கியமானவர். பெண்கள் போராட்ட வரலாற்றின்  நெடும்பயணத்தில் இவரின் பங்களிப்பு சுமார் 60 ஆண்டுகள். முற்போக்கான தொலை தூர சிந்தனையும் துணிச்சலும் இவருடைய சிறப்புக் குணங்கள்.
கல்விக்காக வாழ்ந்த மேரி மெக்லியோட் பெத்யூன் (1875 - 1955)
உனக்குப் படிக்கத் தெரியாது என்று சொன்னதும் துடிதுடித்துப் போனார் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கரான மேரி. தாங்கள் ஏன் அடிமையாக இருக்கிறோம்  என்று யோசித்தவர், கல்வி ஒன்று மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்று நம்பினார். படிக்க ஆரம்பித்தார். பல இன்னல்களைக் கடந்தார்.
தன்னைப் போன்ற அமெரிக்க வாழ் ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு கல்வியளித்தார். பள்ளி, கல்லூரி ஆரம்பித்தார். அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்  இவரிடம் ஆலோசனை கேட்கும் அளவுக்கு உயர்ந்தார்.
கொடி கட்டிய  எமிலி டேவிசன்(1872 - 1913)
இங்கிலாந்தின் பெண்கள் இயக்கப் போராட்டக்காரர் எமிலி டேவிசன். 1913இல் பெண்கள் இயக்கத்தின் கொடியைக் கட்டி, போராட்ட போஸ்டரை  ஒட்டுவதற்காக அய்ந்தாம் ஜார்ஜ் மன்னரின் குதிரைக்கு அருகில் சென்றார். எதிர்பாராவிதமாக குதிரை தாக்கியதில் 4 நாள்களுக்குப் பிறகு இறந்து  போனார். ஜூன் 4ஆம் தேதியை எமிலி டேவிசன் நாளாக கடைபிடிக்கிறார்கள்.
பெண்களைக் காத்த மேரி ஸ்டோப்ஸ் (1880 - 1958)
மருத்துவரான மேரி ஸ்டோப்ஸ் பெண்கள் இயக்கப் போராட்டக்காரரும் கூட. ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஏழெட்டு குழந்தைகளைப் பெற்று  வறுமையில் வாடிக்கொண்டிருந்தனர். குடும்பம் பெருகாமல் இருப் பதற்காக, சுயமாக கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் மூலம் ஏராளமான  பெண்கள் மரணம் அடைந்தனர். இதனைக் கண்ட மேரி ஸ்டோப்ஸ், குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்தினார். மருத்துவமனைகளை ஆரம்பித்து  ஏழைத்தாய்களுக்கு இலவசமாக குடும்பக்கட்டுப்பாடு, பாதுகாப்பான கருக்கலைப்பு போன்றவற்றைச் செய்தார்.
அடிமைத்தனத்தை எதிர்த்த சோஜோர்னர் ட்ரூத் (1797-1883)
அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கரான சோஜோர்னர் ட்ரூத் அடிமைத்தன ஒழிப்புப் போராட்டங்களிலும் பெண்ணுரிமைப் போராட்டங்களிலும் மிகச்சிறந்த  பங்களிப்பைச் செய்தவர். 1851இல் பெண்கள் உரிமை மாநாட்டில் நான் ஒரு பெண் ணல்லவா? என்ற இவரது உரை மிகவும் புகழ்பெற்றது.
பெண்களுக்காக முழங்கிய சூசன் பி.அந்தோணி (1820 - 1906)
அமெரிக்கப் பெண்ணுரிமைப் போராளி.   பெண் களுக்கான இயக்கத்தையும் பத்திரிகையையும்  ஆரம்பித் தவர்களில் ஒருவர். அமெரிக்க அய்க்கிய நாடுகளிலும் அய்ரோப்பாவிலும் சுற்றுப்பயணம் செய்து, பெண்ணுரி மையை வலியுறுத்தி பேசியவர்.
ஆண்டுக்கு சுமார் 100 மேடைகளில் முழங்கியிருக்கிறார். அமெரிக்க குடியுரிமைப் போராட்டங்களிலும் முக்கியப் பங்காற்றியவர்.
-விடுதலை,3.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக