வெள்ளி, 13 நவம்பர், 2015

நேபாள நாடாளுமன்றத் தலைவராக முதல் முறையாக பெண் தேர்வு



நேபாள், அக். 17_ நேபாள நாடாளுமன்றத் தின் தலைவராக முதல் முறையாக பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ளதை அடுத்து, நாடாளுமன்றத் தலைவராக நேபாள மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அன்சாரி கர்தி மகர் (37), வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
தங்களது கட்சி சார் பில் நிறுத்தப்பட்ட அனு ராதா தபா மகரின் வேட்பு மனுவை நேபாள தொழிலா ளர்கள் மற்றும் விவசாயி கள் கட்சி திரும்பப் பெற் றுக்கொண்டதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் களால் அன்சாரி கர்தி மகர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு முன்பு, நாடா ளுமன்றத்தின் துணைத் தலைவராக அன்சாரி கர்தி மகர் பதவி வகித்து உள்ளார். இதேபோல, நாடாளுமன்ற துணைத் தலைவராக கங்கா பிர சாத் யாதவ் என்ற பெண் ஒருமனதாக வெள்ளிக் கிழமை தேர்வு செய்யப் பட்டார்.
புதிய அரச மைப்பு பிரகடனப்படுத்தப் பட்டதை அடுத்து, நேபா ளத்துக்கான அரசியல் சாசனத்தை எழுதுவதற் காக இருந்த அரசியல் நிர்ணய சபை, நாடாளு மன்றமாக மாற்றப்பட்டது. அதையடுத்து, நேபா ளத்துக்கு புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,17.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக