சனி, 12 டிசம்பர், 2015

முதன்முறையாக சவுதியில் பெண்கள் ஓட்டுப்போட அனுமதி

 

ரியாத், டிச. 12_ நகராட்சி தேர்தலில் சவுதி அரேபியாவில் பெண்கள் ஓட்டுப்போட முதன் முறையாக அனுமதி வழங் கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமை யான கட்டுப்பாடுகள் உள் ளன. இங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக் கப்பட்டுள்ளது. அதே போன்று அங்கு நடை பெறும் தேர்தல்களில் பெண்கள் போட்டியிட முடியாது. ஓட்டு போட வும் தடை விதிக்கப்பட் டிருந்தது.
இவற்றை எதிர்த்து பல ஆண்டுகளாக அங்குள்ள பெண்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் தேர்தலில் பெண்கள் போட்டியி டவும், வாக்களிக்கவும் தற்போதைய மன்னர் சல்மான் அனுமதி அளித் தார். இந்த நிலையில் அங்கு நாளை (12ஆம் தேதி) நகராட்சித் தேர் தல் நடக்கிறது.
அதில், தங்கள் உரி மைகளுக்காகப் போரா டிய பெண்கள் தங்கள் வாழ்நாளில் முதன் முறை யாக ஓட்டு போடுகிறார் கள். அதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் பெண்கள் தீவிர பிரசாரத் தில் ஈடுபட்டனர். அங்கு அவர்கள் ஆண்களிடம் நேருக்கு நேராக முகத்தை பார்த்து பேசக்கூடாது. ஏதாவது தடுப்புக்கு பின் னால் நின்றே பேச வேண் டும். அல்லது அவர்களது ஆண் உறவினர்கள் உடன் இருக்க வேண்டும்.
தேர்தல் பிரசாரத்துக்கு வாகனங்கள் மற்றும் விளம் பரப் பலகைகள் மற்றும் சமூக வலைத் தளங்களை பயன்படுத்தக் கூடாது. தொலைக்காட்சியில் தோன்றி பிரசாரம் செய் யக்கூடாது. அது போன்று ஆண் வேட்பாளர்களும் பெண்களிடம் நேருக்கு நேராக பேசி ஓட்டு கேட் கவும் தடை செய்யப்பட்டு உள்ளது. எது எப்படி இருந்தாலும் நாளை நடை பெறும் தேர்தல் மூலம் சவுதி அரேபிய பெண்கள் ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கின்றனர். ஒன்று தேர்த லில் போட்டியிடும் வாய்ப்பு, மற்றொன்று தேர் தலில் ஓட்டு போடுவதாகும்.
-விடுதலை,12.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக