ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

வாடகைத்தாயாக மாறிய பாசமிகு அம்மா

மகளிர் நாள் சிறப்புச் செய்தி: மகனின் குழந்தை ஆசையை நிறைவேற்ற வாடகைத்தாயாக மாறிய பாசமிகு அம்மா
லண்டன், மார்ச் 8-_ பெண், ஆணை அண்டி வாழ் பவள் என்ற கற்பித்ததற்கு நேர் மாறாக ஆண்தான், வாழ்வின் ஆதி முதல் அந் தம் வரை தாய், சகோதரி, மனைவி, மகள், மருமகள் என்று, வாழ்வில் உறவு களாக வரும் பெண்க ளைப் பற்றிக் கொண்டே வாழ்கிறான். அப்படி ஒரு ஆண் _ பெண்ணைப் பற் றிய கதை இது.
இங்கிலாந்தைச் சேர்ந்த கைல் செசானுக்கு(27) குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் அவரால் ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியாது. காரணம் கைல் ஒரு திருநங்கை. தன்னால் ஒரு பெண்ணுடன் உட லுறவு கொள்ள முடியாது என்றாலும் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற எண்ணம் கைலை வாட்டி வதைத்தது.
தொடக்கத்தில் குழந் தையை தத்தெடுக்கலாம் என்று நினைத்த கைலுக்கு செயற்கை கருத்தரிப்பைப் பற்றி தெரிய வந்தது. உடனே ஒரு செயற்கை கருத்தரிப்பு மய்யத்தை தொடர்பு கொண்டார். அவர்கள், தன்னார்வலரி டமிருந்து கருமுட்டையை பெற்று கைலின் விந்தணு வுடன் அதை உருமாற்றி வாடகைத்தாயின் கருப் பையில் வைத்து குழந்தை பெறும் முறை பற்றி விவ ரித்தனர்.
அவர்களின் அடுத்த கேள்வி உங்களுக் காக வாடகைத் தாயாக இருக்கப்போவது யார்? கைல் தனக்கான வாட கைத்தாயை தீவிரமாக தேட ஆரம்பித்தார். முத லில் தன்னுடைய உற வுக்காரப் பெண்களிடம் கேட்டார். தொடக்கத்தில் இசைவு தெரிவித்த அவர் கள் தங்கள் சகோதரனின் மகனை எப்படி சுமப்பது என்று யோசித்து முடியா தென்று மறுத்து விட்ட னர்.
பலரைச் சந்தித்தும் எந்தப் பலனுமில்லாத நிலையில், இனி தன் ஆசை நிறைவேறாதென்று முடிவு செய்த கைல் வாழ் வின் இறுதி நம்பிக்கையாக தனது அம்மாவிடம் தன் குழந்தைக்கு வாடகைத் தாயாக இருக்க முடியுமா? என்று கேட்டுள்ளார். தன் மகனின் குழந்தை ஆசையை நன்கு அறிந்த அம்மா மேரி ஒரு கணம் கூட யோசிக்காமல் சம்மதித் தார். தன் கணவரின் ஒப் புதலுடன் கருத்தரித்தார்.
தனது 47-ஆவது வயதில் கைலை சுமந்த அதே கருப்பையில் அவனது மக னையும் சுமந்தார். கடந்த ஆண்டு முழு வளர்ச்சிய டைந்த நிலையில் பிறந்த அந்த குழந்தைக்கு தற் போது எட்டு மாதமாகிறது.
தன் குழந்தைக்கு மைல்ஸ் என்று பெயர் வைத்த கைல் தனது தகப்பனாகும் ஆசைக்காக சட்ட ரீதியாகவும், பொரு ளாதார ரீதியாகவும் (சிகிச்சை செலவு சுமார் 15 லட்சம்) பல சிக்கல் களை எதிர்கொண்டார். அந்த போராட்டங்களில் வெற்றி பெற்ற பின்னும் பல விமர்சனங்களை எதிர் கொண்டார்.
மைல்ஸ், மேரியை எப்படிக் கூப்பிடு வான் அம்மாவா இல்லை பாட்டியா? என்று பல குரூரமான கேள்விகளால் கைல் மன வேதனைக்கு ஆளானார். இதுகுறித்து கைல் கூறுகையில்: நான் செய்த காரியத்தை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியா தென்று எனக்கு புரிகிறது. நான் ஆசைப்பட்டு திரு நங்கையாக இருக்க வில்லை. நான் திருநங்கை யாகத்தான் பிறந்தேன்.
பாலினத்தை வைத்து நான் தந்தையாவதை இந்த சமூகம் தடுக்க முடி யுமென்று நான் நம்ப வில்லை. எனக்கு ஒரு வீடு இருக்கிறது. அதேபோல் எனக்கென்று ஒரு உறவு வேண்டும்.
நான் பொது மக்கள் வரிப்பணத்தில் ஒன்றும் இதைச் செய்ய வில்லை. சூப்பர் மார்க் கெட்டில் கஷ்டப்பட்டு வேலை செய்து கிடைத்த பணத்தில்தான் இதை செய்கிறேன். இதில் மற்ற வர்களுக்கு என்ன பிரச் சினை என்று எனக்குப் புரியவில்லை. என்கிறார்.
இங்கிலாந்து நாட்டில் தனி ஆளாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற முதல் ஆண் கைல் தான். ஆனால் இந்த சாத னைக்குக் பின்னால் இருந் தது மேரி என்ற பெண். எல்லா சாதனைகளுக்கும் பின்னால் மட்டுமே இருக்கும் பெண்....
-விடுதலை,8.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக