வியாழன், 3 செப்டம்பர், 2015

பெண்கள் கருக்கலைப்பு ஏற்றுக்கொள்ளலாம்-போப் பிரான்சீஸ்

காலமாற்றம் - கருத்துமாற்றம்?
மதத்தில் மாற்றம்: பெண்கள் கருக்கலைப்பு ஏற்றுக்கொள்ளலாம்-போப் பிரான்சீஸ்
வாடிகன், செப். 2_ நேற்று (1.9.2015) கருக்கலைப்பை பாவமற்றதாக கருதி மன்னித்துவிட வேண்டும் என்று கிறித்தவர்களின் தலைமை மதத் தலைவ ராக உள்ள போப் பிரான் சீஸ் குறிப்பிட்டுள்ளார். கத் தோலிக்கப் பழமைவாதி களை பின்னுக்குத் தள்ளி, கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்கள், கருக்கலைப்பு செய்கின்ற மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரையும் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
போப் பிரான்சீஸ் புனிதப்பார்வை (Holy See) இதழில் 8.12.2015 முதல் 20.11.2016 முடிய Ôகருணை ஆண்டாகÕ கத் தோலிக்கக் கிறித்தவர்கள் அனுசரிக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த கருணைக்காலத் தில் மூன்று கோடி மக்கள் பாவமன்னிப்பு கோரி புனித யாத்திரையாக உல கெங்கிலும் இருந்து வாடி கனுக்கு வருகிறார்களாம்.
போப் குறிப்பிடுகை யில், “முரண்பாடுகளுடன் உள்ள எதனுடனும் பிடி வாதமாக இருப்பதில்லை என்று நான் முடிவெடுத் துள்ளேன். விருப்பத்து டன் கருக்கலைப்பு செய்து கொள்பவர்களின் செயலை, பாவம் எனக் கொள்ளா மல், கருக்கலைப்பை செய்து கொண்டு மனப்பூர்வமாக மன்னிப்பைக் கோருபவர் களுக்கு மன்னிப்பை வழங்க வேண்டும் என்று எதிர்வரும் அய்ம்பதாம் ஆண்டில் அனைத்து கிறித் துவ மத குருக்களையும்
கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அய்ம்பதாம் ஆண்டு விழாவையொட்டி போப் பிரான்சீஸ் அளித்துள்ள செய்தியாக கருக்கலைப்பு செய்பவர்களை
மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண் டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
அர்ஜெண்டினா மதக் குரு ஒருவர் குறிப்பிடு கையில், “அதிகப்படியான விழிப்புணர்வின் காரண மாகவே கருக்கலைப்பு குறித்த முடிவு ஏற்பட்டு உள்ளது.
பலரும், கருக் கலைப்புக்கு மாற்றாக வேறு எதுவும் இல்லை என்றே நம்புகின்றனர். அழுத்தங்களின் காரண மாகவே பெண்களில் சிலர் கருக்கலைப்புக்கு உடன்படுகிறார்கள். கருக் கலைப்பு செய்து கொண்டு, மதக்கருத்துகளுக்கு விரோதமாக, வருத்தமான முடிவுகளை எடுத்து, இதயத்தில் மாறாத வடுக் களுடன் உள்ள பல பெண் களை சந்தித்திருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
மருத்துவரீதியாக கருக் கலைப்பு செய்து கொள்ள வேண்டிய அவசியத்துக்கு ஆளாகும் பெண்கள், தங் களைக் காத்துக்கொள்வ தற்காக கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்பினாலும், பிற்போக்கான மதக்கருத் துகளின் காரணமாக சில நாடுகள் இன்னமும் கருக் கலைப்புக்கு எதிரான சட்டங்களைக் கொண் டுள்ளன. இதனால் பெண் கள் அவதிப்படுவதும், உயிரிழப்பதுமான நிலை இருந்து வருகிறது.
1928, 1929, 1930ஆம் ஆண்டுகளில்  குடும்ப கட்டுப்பாடு, கருக்கலைப்பு,  பெண்கள் பிள்ளை பெறுவதில் அவர்களுக்கு உள்ள உரிமைகுறித்து    தந்தை பெரியார் Ôகுடி அரசுÕ இதழ்களில் எழுதி, கர்ப்ப ஆட்சி என்கிற பெயரில் தனி நூலாகவே வெளிவந்தது.
தந்தை பெரியார் கூறியபோது கத்தோலிக்க கிறித்தவம் உள்ளிட்ட பிற்போக்கு மதவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
இப்போதோ, போப் கருக்கலைப்பை பாவகர மானது என்று எண்ணா மல் மன்னிக்கலாம் என்று கூறியுள்ளதன்மூலம், பழை மைவாதம் பேசுகின்ற  மதம் மாற்றத்துக்கு உள் ளாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பெரியார் உலக மயமா கிறார்.
-விடுதலை,2.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக