சனி, 5 செப்டம்பர், 2015

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு


பாலியல் புகார்களை விசாரிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக ஒரு பெண் இருப்பார். அந்நிறுவனத்தில் பெண் அதிகாரி இல்லையென்றால், வேறு நிறுவனத்தின் பெண் அதிகாரி குழுவின் தலைவராக அமர்த்தப்படுவார். குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களும் பெண்ணாக இருப்பர்.
பாதிக்கப்பட்ட பெண்களை வேறு இடத்திற்கு மாற்றப் பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அதிகாரம் உண்டு.
பாலியல் பாதிப்புக்காளான 3 மாதத்திற்குள் புகார் அளிக்க வேண்டும். குற்றவாளியின் ஊதியத்தை நிறுத்தி வைக்கப் பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அதிகாரம் உண்டு. குற்றவாளி சாட்சிகளை மிரட்டியும், ஆதாரங்களை அழித்தும் செயல்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வன்புணர்ச்சிக்கு ஆளாகிப் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஊதியத்துடன் மூன்று மாத விடுப்பு வழங்கப்படும் என்று மத்தய அரசு அறிவித்துள்ளது.
-உண்மை,1-15.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக