புதன், 21 பிப்ரவரி, 2018

பெண்களுக்கு முதுகலை படிப்பு வரை இலவச கல்வி கருநாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு


பெங்களூரு, பிப்.20 கருநாடகா வில் பெண்களுக்கு தொடக்கக் கல்வி முதல் முது கலை படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என அம் மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கருநாடக முதல்வர் சித்த ராமையா 17ஆம் தேதி சட்டப் பேரவையில் 2018-  -  2019-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். 
அப்போது அவர் தனது உரையில், கருநாடகாவில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 2017- 2018-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் 1-ஆம் வகுப்பு முதல் இளங்கலை படிப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு அந்த திட்டம், அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரி களுக்கும் விரிவுபடுத்தப்படு கிறது.

மேலும் பெண்கள் உயர் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.95 கோடி செலவில் முதுகலை படிப்பு வரை அவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 3.75 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள். மொத்தமாக பெண்களின் கல்வி மற்றும் கல்வி நிலையங்களின் மேம்பாட்டிற்காக ரூ.4514 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

சித்தராமையாவின் இந்த அறிவிப்புக்கு கர்நாடகாவில் உள்ள மகளிர் அமைப்பினரும், சமூக நல அமைப்பினரும் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மகளிர் அமைப்பினர், கர்நாடக அரசின் இந்த அறிவிப்பால் மாநிலத்தில் பெண்களின் கல்வி நிலை உயரும்.

பெண்கள் அனைத்து துறை களிலும் முன்னேற்றம் அடைய, இந்த திட்டம் பெரிதும் உதவும். பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கியதற்காக முதல்வர் சித்த ராமையா வரலாற்றில் போற்றப் படுவார் என பாராட்டு தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 20.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக