புதன், 9 நவம்பர், 2016

ஆஸ்திரேலியாவில் சாதித்த உப்மா


நம் நாட்டில் பலருக்கும் ஒவ்வொரு நாளும் தேநீருடன்தான் தொடங்குகிறது. புத்துணர்ச்சி பெறுவது முதல் எடை குறைப்புவரை ஒவ் வொரு வீட்டிலும் ஒவ்வொரு பரிமாணத்துடன் இடம் பெற்று விடுகிறது தேநீர்.

தேநீரைத் தன் உற்சாகத்துக்கு மட்டு மல்ல, வியாபாரத்துக்கான உத்தியாகவும் பயன்படுத்தி வருகிறார் உப்மா. ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் நகரில் வசிக்கும் உப்மா விரதியின் அடையாளம் விதவிதமான சுவைகளில் தயா ராகும் தேநீர் வகைகள்!

சண்டிகரைச் சேர்ந்த உப்மா, தேநீர் தயாரிப்பதற்காக ஆர்ட் ஆஃப் சாய் வகுப்புகளை ஆன்லைனில் நடத்தி வருகிறார். அத்துடன் தேயிலை கலவைகளை ஆன்லைனில் விற் பனையும் செய்து வருகிறார். இந்தியக் கலாச் சாரத்தில் தேநீர் குடிப்பதற்காக மக்கள் எப் போதும் ஒன்று கூட விரும்புவார்கள். இங்கே மகிழ்ச்சியான நேரங்களிலும் கடினமான நேரங் களிலும் தேநீர் தவறாமல் இடம்பெறுகிறது.

ஆஸ்திரேலிய ஹோட்டல்களில் நான் எவ்வளவோ தேடிப் பார்த்தும் ஒரு டீயைக் குடிக்க முடியவில்லை. அப்போதுதான் டீத்தூள் கலவை தயாரிக்கும் அய்டியா பிறந்தது என்று சொல்லும் இவர், முதலில் இந்தத் தொழிலைத் தன் குடும்ப உறவுகள், நண்பர்களிடமிருந்து தொடங்கியிருக்கிறார்.  பின்னர், அருகிலுள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடை களில் தேயிலைக் கலவையை விற்பனைக்கு வைத்தி ருக்கிறார். இன்று நிற்கக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டு இருக்கிறார்.

வழக்குரைஞராகத் தன் பணியைத் தொட ரும் உப்மாவுக்கு, அவருடைய தாத்தா தான், மூலிகைகள், வாசனை மசாலாக்களைக் கெண்டு ஆயுர்வேத தேநீர் போடக் கற்றுத்தந்திருக்கிறார். மெல்போர்னில் சாய்வாலி (பெண் டீ விற்பனை யாளர்) என்ற பெயரில் ஆன்லைனில் தேயிலை கலவையை விற்பனை செய்து வருகிறார்.

அருமையான மணமும் சுவையும் ஆஸ்தி ரேலியர்களின் ருசியுணர்வைத் தூண்ட 26 வயதில் உப்மா, வெற்றிபெற்ற தொழில் முனை வோராக மாறியிருக்கிறார். இந்த ஆண்டுக்கான இந்திய ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் சமூக விருது வழங்கும் விழாவில், சிறந்த பெண் தொழிலதிபர் விருதை கடந்த வாரம் சிட்னியில் பெற்றிருக்கிறார்.  விருதைப் பெற்ற உப்மா, ஆஸ்திரேலிய மக்கள் காபிக்கு மாற்று ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தனர்.

இதுவே சரியான நேரம் என்று தேயிலை விற் பனைத் தொழிலைக் கையில் எடுத்தேன். ஆஸ்திரேலிய சமூகத்துக்கு, தேயிலை மூலம் இந்தியக் கலாச்சாரத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் என்னு டைய குறிக் கோள் என்று சொல்லியிருக்கிறார்.
-விடுதலை,8.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக