ஞாயிறு, 6 நவம்பர், 2016

ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் தெரிந்திருக்க வேண்டிய சட்டங்களும் உரிமைகளும்

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஆண், பெண் விகிதாச்சாரம் 943. அதாவது ஜனத்தொகை அடிப்படையில், இந்தியா வில் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் எதிராக 943 பெண்கள் இருக்கிறார்கள். ஆகையினால், பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கான ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் எதிராக நீதிமுறை சட்டங்கள் இயற்ற வேண்டும்.
உலகின் மிகப் பெரிய இந்திய நியாய அமைப்புக்கு, இந்த பிரச்சினையைத் தீர்க்க பல சட்டங்கள் உள்ளன. மக் களின் அறியாமையினால், இந்த சட்டங் கள் செயல்படாமல் தோற்றுவிட்டன.
சர்வதேச களத்தில், நாம் பொரு ளாதாரம் அரசியலில் சக்தியடைந்து வருவதால், நம்முடைய அரசியல் சட்டத் தில் நம் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட உரிமைகள் வாய்ப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இதற்குக் கூடுதலாக பெண்கள் சிறிது சிறிதாக மத்திய அரங்கத்தை எடுத்துக் கொண்டு ஒரு தொழில் திறனுடன் கூடிய பணிபுரியும் சக்தியாக மாறிவருகிறார்கள். இருந்த போதிலும், மனது. உடல், பாலியல் வன்முறை, பெண்கள் மீதான வெறுப்பு ஆண் பெண் ஏற்றத்தாழ்வு முதலியன பெரும்பாலானோரின் வாழ்வில் தொடர்கிறது. இந்த சூழலால் இந்திய சட்டத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணை சட்ட உரிமைகள் குறித்த அவர்களுடைய உணர்திறன் வளர வேண்டியது முக்கியத் துவம் பெறுகிறது.
முக்கியமாக பெண்களுக்கு எதிராக இங்கு அடிக்கடி நடைபெறும் பலவித மான அநீதிகள், அவர்களுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் குறித்த விளக்கம் மற்றும் பாதுகாப்பு இதோ...
பெண்களிடம் செய்யும் கேலி: இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294, 509 எந்த ஒரு தனி நபரோ மக்கள் கூட்டமோ எந்த வயதைச் சேர்ந்த பெண்ணுக்கு எதிராகவும் எந்த வித வன்மையான பேச்சோ அல்லது குறும்புச் செயலோ செய்வதைத் தடுக்கிறது.
பால்ய விவாகம்: இது பெண்களுக்கு மாத்திரம் அல்ல. இருந்தபோதிலும், நடைபெறும் நிகழ்வுகள் வயதுக்கு வராத பெண்களையே குறிக்கிறது. குழந்தைத் திருமணத் தடை சட்டம் 1929, 18 வயதைத் தாண்டாத பெண்ணுக்கு (இந்து திருமண சட்டத்தில் வரையறுக்கப்பட் டுள்ள வயது) திருமணம் செய்வதைத் தடை செய்கிறது.
முறையற்ற காவல்துறை செயல் முறை: உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தலைமைக் காவலர் பதவிக்குக் குறையாத ஒரு பெண் அதிகாரி எல்லா சமயங்களி லும் இருக்க வேண்டும். எந்தவித  வன்முறைக்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட நபருக்கும் காவல்துறை ஆலோசனை உதவி புரிய வேண்டும். பாதிக்கப்பட்ட வரின் நலனுக்கும் உதவ வேண்டும். அல் லது, ஒரு பெண் ஒரு பெண் அதிகாரி யால் மாத்திரமே சோதனை செய்யப்பட லாம். ஒரு பெண் அதிகாரி முன்னா லேயே கைது செய்யப்படலாம். சூரிய உதயத்துக்கு முன்போ சூரிய அஸ்த மனத்துக்குப் பின்போ ஒரு பெண்ணைக் கைது செய்ய இயலாது. இருந்தபோதிலும் நீதியரசரின் உத்தரவின் கீழ் இதற்கு விதிவிலக்கு அளிக்கலாம்.
குறைந்த பட்ச கூலி: குறைந்த பட்ச கூலிகள் சட்டம் 1948ன் படி இந்திய அரசாங்கம் தேர்ந்த பயிற்சியுடைய, பகுதி பயிற்சியுடைய பயிற்சியற்ற ஒவ்வொரு பிரிவுத் தொழிலையும் சேர்ந்த தொழி லாளர்களுக்கும் குறைந்த பட்ச கூலிகள் நிர்ணயித்துள்ளது. ஆணாக இருந்தா லும் பெண்ணாக இருந்தாலும், டில்லி யில் குறைந்த பட்ச கூலி ரூபாய் 423/ ஆகும்.
சொத்துக்கு வாரிசு: இந்து வாரிசு சட்டம், 1956, ஆண் பெண் யாராக இருந்தாலும் மூதாதையர் சொத்துக்கு சம பங்கீடு வாரிசாக இருக்கும் தகுதி உண்டு என அனுமதிக்கிறது. இதன் மூலம் புதிய விதிமுறைகளையும் நிபந் தனைகளையும் நிர்ணயிக்கிறது.
வரதட்சனை: வரதட்சணை தடுப்பு சட்டம், 1961 கூறுவது என்னவென்றால் எந்த ஒருவரும் கொடுத்தாலோ, பெற் றாலோ, இந்தப் பரிமாற்றத்துக்கு உதவி னாலோ கூட அய்ந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான காலத்துக்கு சிறைத் தண்டனை அல்லாது ரூபாய் 15,000 அல்லது வரதட்சணைத் தொகை, இதில் எது அதிகமோ அந்தத் தொகை அபராதமாக விதிக்கப்படும்.
குடும்ப வன்முறை: இது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498இன் கீழ் வருகிறது. இந்த சட்டம் முக்கியமாக ஒரு மனைவி ஒன்றாக வசிக்கும் பெண் இணை அல்லது குடும்பத்தில் ஒரு தாயாராக ஒரு சகோதரியாக இருப்ப வருக்குக் கணவரால் ஆண் இணையால் அல்லது உறவினர்களால் ஏற்படும் குடும்ப வன்முறையிலிருந்து காப்பாற்று வதற்கானது. அவரோ அவருக்கு பதிலாக வேறு எவரோ அவருக்காக புகார் தாக்கல் செய்யலாம்.
இரக்கமற்ற துஷ்பிரச்சாரம்: பெண்கள் குறித்து பண்பற்ற வர்ணனை (தடை) சட்டம், 1986, எந்த ஒரு நபரோ அமைப்போ எந்த விதமான பண்பற்றது எனக் கருதப்படும் பெண்கள் குறித்த வர்ணனையைப் பிரசுரிக்க, பிரசுரிக்க உதவ பதிப்பிக்க, வெளிக்காட்ட அல்லது விளம்பரப்படுத்த, இணைய தளத்திலோ,     .அதற்கு வெளியிலோ செய்ய தடை விதிக்கிறது.
சமமான ஊதிய உரிமை: சம ஊதிய சட்டத்தின் கீழான ஷரத்துக்களின்படி, சம்பளம் அல்லது கூலிக்கு ஒருவரை ஆணா பெண்ணா பேதம் பார்த்து பாகுபடுத்த இயலாது.
பணியில் உளைச்சலுக்கு எதிரான உரிமை: பணிபுரியும் இடத்தில் பெண் களுக்கு நேரும் பாலியல் வன்முறைக்கு  எதிராக இயற்றப்பட்ட சட்டம் உங் களுக்கு பாலியல் வன்முறைக்கு எதிராக ஒரு புகார் தாக்கல் செய்ய உரிமை கொடுக்கிறது.
பெயர் குறிப்பிடாதிருக்கும் உரிமை: மானபங்கத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு பெயர் குறிப்பிடாதிருக்கும் உரிமை உண்டு. அவருடைய அந்தரங்கம் பாதுகாக்கப்படுவதற்காக, வழக்கு விசாரணையில் இருக்கும்போது பாலியல் வன்முறை செய்யப்பட்ட ஒரு பெண் அவர் மாத்திரம் அவருடைய வாக்கு மூலத்தை மாவட்ட விசாரணை நீதியரசர் முன் அல்லது ஒரு பெண் காவல்துறை அதிகாரி முன்பு கொடுக்கலாம்.
பிரசவம் சம்பந்தப்பட்ட ஆதாயங் களுக்கான உரிமை: பிரசவ ஆதாயங்கள், வேலை பார்க்கும் பெண்ணின் ஒரு சாதாரணமான சலுகை மாத்திரம் இல்லை. அவர்களுடைய உரிமை. பிரசவ ஆதாய சட்டம், ஒரு புதிய தாய்க்கு அவருடைய பிரசவத்துக்கு பன்னிரண்டு வாரங்களுக்குப் பின்னர் அவரை வேலை யில் திரும்பச் சேர அனுமதிப்பதன் மூலம் அவருக்கு வருமானத்தில் எந்த நஷ்டமும் இருக்காது.
பெண் குழந்தை கருச்சிதைவுக்கு எதிராக உரிமை: எல்லா உரிமைகளி லும் முக்கியமான அடிப்படை உரிமை யான ஒரு பெண்ணை வாழ்ந்து அனுப விக்க விடுவது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமையாக சுமத்தப்பட்டி ருக்கிறது. பிறக்கும் முன்பாக அறியும் வழிமுறைகள் குறித்த எண்ணம் (ஆணா பெண்ணா எனத் தேர்வு செய்யப்படுதல் தடை) சட்டம்  அவருக்கு பெண் குழந்தை கருச்சிதைவுக்கு எதிராக உரிமையை உறுதி செய்கிறது.
இலவச சட்ட உதவிக்கு உரிமை: சட்ட சேவைகள் அமைப்பு சட்டத்தின் கீழ் பாலியல் வன்முறையில் பாதிக்கப் பட்ட எல்லா பெண்களுக்கும் இலவச சட்ட உதவி பெற உரிமை உண்டு. சட்ட சேவைகள் அமைப்புக்கு காவல் நிலைய தலைமை அலுவலர் தகவல் கொடுத்து அவர்கள் மூலம் வழக்குரைஞர் ஏற்பாடு செய்வது கட்டாயமாகும்.
கண்ணியம், நடத்தை ஒழுங்கு உரிமை: குற்றம் சுமத்தப்பட்டவர் ஒரு பெண்ணாக இருந்தால் எந்த மருத்துவ பரிசோதனை செயல்முறையும் ஒரு பெண் ணால் அல்லது மற்றொரு பெண்ணின் முன்னிலையில் நடத்த வேண்டும்.
-விடுதலை ஞா.ம.,9.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக