செவ்வாய், 18 அக்டோபர், 2016

தன் உடலையே சோதனைக் களமாக  மாற்றிய ஆராய்ச்சியாளர்

திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக, மருத்துவ குணமுள்ள தாவரங்கள் குறித்த ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த வி.மஞ்சுளா.  தற்போது வரை 90 வகையான செடிகளை ஆய்வு செய்துள்ள இவர், அவற்றின் மூலம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் பாதிக்கப்பட்டு வரும் பல்வேறு நோய்களை தீர்க்க முடியும் என்பதை கண்டறிந்துள்ளார்.

நோய் தீர்க்கக் கூடிய மருந்துக்கான செடிகளை தேடி காடு, மலைகளில் இவர் சுற்றித் திரியவில்லை. ஆனால், குடியிருப்புகளைச் சுற்றிலும், குப்பை மேடுகளிலும் சாதாரணமாக வளர்ந்து நிற்கும் தாவரங்களிலிருந்தே பல்வேறு நோய்களுக்கும் தீர்வு கண்டுள்ளார்.

செடியின் ஒவ்வொரு உறுப்பையும் எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் என்ற தேடலையும் தொடங்கியுள்ள இவர், மாரடைப்புக்கு (நெஞ்சு வலி) முக்கிய காரணமான கொழுப்பை கட்டுப்படுத்துவ தற்கான ஆராய்ச்சிக்கு தன் உடலையே பரி சோதனைக் களமாக மாற்றி, அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டவை: “எங்களது குடும்பம் பாரம்பரிய முறையில் தாவரங்களை பயன்படுத்தி வைத்தியம் செய்து வரும் குடும்பம். எனது தாத்தா, தந்தை ஆகியோரின் வழியில் எனக்கும் அதில் நாட்டம் ஏற்பட்டது.

திருமணத்திற்கு பின், மருத்துவத் துறையில் இணை இயக்குநராக பொறுப்பு வகித்த எனது மாமனார் எஸ்.சுப்பிரமணியனும் எனது முயற்சி களுக்கு ஊக்கமாக இருந்தார். ஆங்கில மருத் துவத்தில் (அலோபதி) பல நோய்களுக்கு மருந்து இல்லை, அதுபோன்ற நோய்களுக்கு பாரம்பரிய முறையில் மட்டுமே தீர்வு காண முடியும் ” என கூறி எனது நம்பிக்கைக்கு வலு சேர்த்தார்.

அதன் பின்னரே, அதற்கான முயற்சியில் தீவிரமாக களம் இறங்கினேன். நம் உடம்பில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமாக விளங்குவது கல்லீரல். இதன் செயல்பாடு பாதிக்கப் படும் போது, ஒவ்வொரு உறுப்புகளும் தன் பணியை முறையாகச் செய்வதில்லை. இதன் காரணமாகவே நோய் தாக்குதல் ஏற்படுகிறது.

மனிதனின் ஆயுளுக்கு திடீர் முற்றுப்புள்ளி வைக்க கூடிய நெஞ்சுவலிக்கு முக்கிய காரணம் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதே. இந்த பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என திட்டமிட்டு, எனது உடலையே பரிசோதனை களமாக்க முடிவு செய்தேன்.

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை 400 மி.கிராம் வரை உயர்த்தினேன். இதனால் படபடப்பு, மூச்சு திணறல், தோள்பட்டைகளில் வலி, தலைவலி, கண் தெளிவின்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட பின், மருத்துவ பரிசோதனைக்குச் சென்றேன்.

பரிசோதனை முடிவுகள் வந்தபோது, உடனடியாக அறுவை சிகிச்சை  செய்யாவிடில், உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள்(அலோபதி) எச்சரித்தனர். ஆனால், பதட்டமின்றி வீடு திரும்பிய நான், ஏற்கெனவே கண்டறிந்த 3 தாவரங்களை சாப்பிடத் தொடங்கினேன்.

3 நாள்களில் மூச்சுத் திணறல், வலி உள்ளிட்ட பாதிப்புகள் சீராகத் தொடங்கின. பயணம் செய்யக் கூடாது என்ற மருத்துவர்களின் ஆலோசனைகளை கடந்து, என்னால் பேருந்தில் எளிதாக பயணிக்க முடிந்தது.

2 மாதங்களுக்கு பின், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு 180 மி.கிராமாக குறைந்தது. 3 வேளையிலும் இனிப்பு சாப்பிட்ட போதும், சர்க்கரையின் அளவு அதிகரிக்கவில்லை. இதனை அறிவியல் பூர்வமாக விரைவில் நிரூபித்துக் காட்டி, குறிப்பிட்ட 3 தாவரங்களில் உள்ள மருத்துவப் பொருள்களை பிரித்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளேன்.

சளி, காய்ச்சல், இருமல், பல் வலி, கண் வலி, தோல் வியாதிகள் உள்ளிட்ட பாதிப்புகள் தொடங்கி, சர்க்கரை நோய், கல்லீரல், சிறுநீரகம், பெண் களுக்கான எலும்பு தேய்மானம் மற்றும் கர்ப்பப்பை பிரச்சினை, எலும்பு முறிவு, மூட்டுவலி, மஞ்சள் காமாலை, மலச்சிக்கல்  உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கும், நம் வீட்டைச் சுற்றி வளரும் தாவரங்களின் மூலம் குணப்படுத்த முடியும்‘’  என்றார்
_விடுதலை,18.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக