வியாழன், 7 அக்டோபர், 2021

ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பதவி

 

ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்துக்கு பெருமை சேர்த்த மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக(விளையாட்டுநியமித்து முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டார்.

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வெல்வதற்கு முன்புவரை ரயில்வே துறையில் பயணச்சீட்டு ஆய்வாளராகத்தான் மீராபாய் சானு பணியாற்றி வந்தார்இந்தியாவுக்கு திரும்பும்போதுசானுவுக்கு இன்பஅதிர்ச்சி கொடுப்பேன் என்று முதல்வர் பிரேன்சிங் தெரிவித்த நிலையில் விளையாட்டுப்பிரிவில் காவல்கண்காணிப்பாளராக நியமித்துள்ளார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றனமகளிருக்கான 49-கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டில் கர்னம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்றபின் தற்போது பளுதூக்குதலில் 2ஆவது வீராங்கனையாக சானு பதக்கம் வென்றுள்ளார்அதுமட்டுமல்லமல் ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனையும் சானு என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு புதிய வரலாறு படைத்துள்ளதையடுத்துஅவருக்கு ரூ.ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று மணிப்பூர் முதல்வர் என்பிரேன் சிங் அறிவித்துள்ளார்இந்நிலையில் டோக்கியோவிலிருந்து மீராபாய் சானு நேற்று (26.7.2021) தாயகம் திரும்பினார்மணிப்பூர் சென்ற சானுவுக்கு அந்த மாநில மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்அதோடு முதல்வர் பிரேன் சிங்கும் சானுவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.

அதில்,  மீராபாய் சானு தற்போது செய்துவரும் ரயில்வே துறையில் இருக்கும் பணியிலிருந்து விடுவித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்அவருக்கு மணிப்பூர் அரசு சார்பில் காவல் துறையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக (விளையாட்டுக்கோட்டாபணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சானு இனிமேல் மணிப்பூர் காவல் துறையில் இணைந்து பணியாற்றலாம்அடுத்த ஒலிம்பிக் போட்டிக்குத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு தங்கப்பதக்கம் வெல்ல முயற்சிக்கலாம்எனத் தெரிவித்தார்.

இது மட்டும்லாமல் மணிப்பூரைச் சேர்ந்த ஜூடோ பிரிவில் 2014ஆம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற லிமாபாம் சுஷிலா தேவி காவலராக பணியாற்றி வந்தார்அவரை காவல் உதவி ஆய்வாளராக பதவி உயர்த்தி முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டார்மேலும்மணிப்பூர் சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற 5 வீரர்களுக்கும் தலா ரூ.25 லட்சம்வழங்கப்படும் எனவும் மணிப்பூர் அரசு அறிவித்தது

இது தவிர ரயில்வே துறை சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்வன் ரூ.2 கோடி பரிசு அறிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சர் வைஷ்னவ் சுட்டுரையில் பதிவிட்ட கருத்தில்  இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த ரயில்வே வீராங்கனை மீராபாய் சானுவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறதுஅவரை கவுரப்படுத்தும் விதமாக ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும்அவருக்கு பதவி உயர்வும் வழங்கப்படும்அவரின் திறமையால் உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக