செவ்வாய், 3 ஜூலை, 2018

முதல் பார்வையற்ற பெண் அய்.ஏ.எஸ். அதிகாரி துணை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பு



புதுடில்லி, ஜூலை 2- மகாராஷ் டிரா மாநிலம் உஹான்ஸ்நகரைச் சேர்ந்தவர் பிரன்ஞால் பாடில். சிறு வயதில் கண்பார்வையை இழந்த இவர் தனது தன்னம் பிக்கையை கைவிடவில்லை.

பெற்றோரின் உதவியுடன் தனது பட்டப்படிப்பை முடித் தார். 2014ஆம் ஆண்டு சிவில் சர்விஸ் தேர்வு எழுதினார். அதில் 773ஆவது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றார். இருப்பினும் அவரால் மாவட்ட ஆட்சியராக முடியவில்லை. இதையடுத்து 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று அய்.ஏ.எஸ். அதிகாரியானார். பின்னர் லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு துணை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள் ளார். இரண்டு கண் பார்வையையும் இழந்த பெண் அய்.ஏ.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் இந்தியாவின் முதல் பெண் பார்வையற்ற பெண் அய்.ஏ.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. விடா முயற்சியால் உயரத்தை தொட்ட இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

- விடுதலை நாளேடு, 2.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக