செவ்வாய், 3 ஜூலை, 2018

இந்தியாவிலேயே முதல் திருநங்கை வழக்குரைஞர்



 


சென்னை, ஜூலை 2- ராமநாத புரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினார்கோ விலை சேர்ந்த ஒரு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் உதயக் குமார். பரமக்குடியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 வரை படித்து, அங்குள்ள கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித் தார். பின்னர் சட்டம் படிக்க விரும்பிய அவர், சேலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் சேர்ந்து 3 ஆண்டு சட்டப்படிப்பை 2007 ஆ-ம் ஆண்டு நிறைவு செய்தார்.

சட்டக்கல்லூரியில் படித் துக் கொண்டிருந்தபோதே திரு நங்கையாக மாறிய அவர், தனது பெயரை சத்யசிறீ என்று மாற்றிக்கொண்டார். இதைத் தொடர்ந்து தனது சொந்த விருப்பத்தின்படி பெற்றோரை பிரிந்துவிட்டார்.

சட்டப் படிப்பை முடித்த தும் அவர் செங்கல்பட்டு நட ராஜ நகரில் தங்கியிருந்து மற் றொரு திருநங்கையான சர்மி ளாவுடன் இணைந்து சமூக சேவை செய்துவந்தார்.

சர்மிளா அவருக்கு ஆதர வாக இருந்ததால் தனது பெயரு டன் சர்மிளா பெயரையும் சத்யசிறீ சேர்த்துக்கொண்டார். இவர், சட்டப்படிப்பை முடித்தபோது திருநங்கை என்ற பாலினத்தின் அடிப்படையில் வழக்குரைஞ ராக பதிவு செய்ய இயலாது என்ற நிலை இருந்தது. திரு நங்கைகளை 3-ஆம் பாலினத் தவர் என்ற அங்கீகாரத்துடன் வழக்குரைஞராக பதிவு செய் யும் அனுமதிக்காக காத்திருந் தார்.

இந்த நிலையில், அவருக்கு வழக்குரைஞராக பதிவு செய்ய இந்திய பார் கவுன்சில் அனு மதி அளித்தது.

இதைத்தொடர்ந்து சத்யசிறீ சர்மிளா வழக்குரைஞராக பதிவு செய்ய தமிழ்நாடு பார் கவுன் சிலுக்கு விண்ணப்பித்தார். அவ ரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு பார் கவுன்சில் வழக்குரைஞராக பதிவு செய்ய அவருக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பார் கவுன்சிலில் நேற்று முன்தினம் நடந்த பதிவு நிகழ்ச்சியில் சத்யசிறீ சர்மிளா கலந்துகொண்டு வழக்குரைஞ ராக தனது பெயரை பதிவு செய் தார். இதன்மூலம் இந்தியாவி லேயே முதன்முறையாக திரு நங்கையான சத்யசிறீ சர்மிளா வழக்குரைஞராகியுள்ளார்.

அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எம்.கோவிந்தராஜ், அகில இந்திய பார் கவுன்சில் இணை தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு பார் கவுன்சில் செயலாளர் ராஜ்குமார் மற்றும் வழக்குரைஞர்கள், திருநங்கை கள் பாராட்டு தெரிவித்தனர். வழக்குரைஞர் தொழிலை சிறப் பாக மேற்கொண்டு நீதிபதியாக வரவேண்டும் என்று அவரை நீதிபதிகள் பாராட்டினர்.

திருநங்கைகள் மட்டுமன்றி ஏழை, எளிய மக்களுக்கு சட்ட உதவி கிடைக்க பாடுபடுவேன் என்று சத்யசிறீ சர்மிளா செய்தி யாளர்களிடம் கூறினார்.

கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த திருநங்கையான பிரித் திகா யாஷினி இந்தியாவின் முதல் பெண் உதவி ஆய்வா ளராக சென்னையில் பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 2.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக