வெள்ளி, 18 மே, 2018

வானில் “அனிதா” துணைக்கோள் தமிழக மாணவி சாதனை



கைக்குள் அடங்கும் “கலாம்” துணைக்கோளைத் தொடர்ந்து  இதோ  “அனிதா” துணைக் கோள் - உருவாக்கி யிருப்பவர் வில்லெட் ஓவியா. திருச்சி ஆர். எஸ். கே பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவி. வயது பதினேழு.

பிளஸ் டூ தேர்வுகள் எழுதிவிட்டு காத்திருக்கும் வில்லெட் ஓவியா, தான் உருவாக்கிய துணைக் கோள் பற்றி கூறியதாவது:

“சில ஆண்டுகளுக்கு முன், விவசாயத்திற்கு நவீன முறையில் சிக்கனமாக நீர்ப்பாசனம் எப்படி செய்யலாம் என்பது குறித்த திட்டத்தை டாக்டர் கலாம் அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதை கலாம் சார் பாராட்டினார். தூர்தர்ஷன் பொதிகை சானலில் “ஏழாம் அறிவு’ என்ற அறிவியல் போட்டித் தொடர் நடைபெற்றது. அதில் நானும் பங்கு பெற்றேன். நிகழ்ச்சியின் முடிவில் முதல் ஏழு பேர்களில் ஒருத்தியாக என்னால் வர முடிந்தது . அந்த நிகழ்ச்சிதான் என்னை துணைக் கோள் குறித்து சிந்திக்கச் செய்தது. அதன் காரணமாக மின்னணுவியல், மின்னியல் தொடர்பாக படிக்க ஆரம்பித்தேன்.

சுற்றுப்புறச் சூழலால் காற்றில் மாசு நாளுக்கு நாள் அதிகமாகிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசுகள் அதிகமாவதால் பல நோய்க்கு காரணம் தெரியாமலேயே இரையாகிறோம் . “காற்றில் மாசுகள்’ குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த துணைக்கோளை வடிவமைத்தேன். பூமியைச் சுற்றியிருக்கும் வாயு மண்டலம் பூமி வெப்பம் அடைவதால் எப்படியெல்லாம் மாற்றம் அடைகிறது... தாக்கத்திற்கு உள்ளாகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக ஒரு துணைக் கோள் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தேன். வாயு மண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, ஆக்சிஜன் மற்றும் இதர வாயுக்களின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை அறிய துணைக்கோள் உதவும். “நீட்’ தேர்வு காரணமாக உயிரிழந்த அனிதாவின் நினைவாக எனது துணைக் கோளுக்கு “அனிதா - சாட்” என்று பெயரிட்டேன்.

இந்த துணைக்கோளைத் தயாரிக்க மூன்று ஆண்டுகள் பிடித்தது. “அனிதா’ துணைக்கோள் ஆறு அங்குல நீளம், அகலம், உயரம் கொண்டு கன சதுர வடிவில் இருக்கும். எடை சுமார் நானூறு கிராம். இந்த துணைக் கோளைத் தயாரிப்பதில் எல்லா வகையிலும் உதவியவர் அக்னீஷ்வர் ஜெயப்ரகாஷ். சென்னை மற்றும் “அக்னி ஃபவுண் டேஷன்” அமைப்புகளின் தலைவர். துணைக்கோளுக்கு தேவையான பாகங்களை வாங்கவும், அதை எப்படி கையாள வேண்டும் என்பதை சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் உதவியது.

இந்த துணைக் கோளை கூம்பு வடிவில் இருக்கும் கருவியில் வைக்கப் பட்டு ஹீலியம் பலூன் மூலம் பறக்க விடப்படும். இந்த நிகழ்வு வரும் மே 6ஆம் தேதி மெக்சிகோவில் நடை பெற்றது.

இந்த துணைக் கோளை உருவாக்க சுமார் ஒன்றே கால் லட்சம் செலவானது. அதனையும், துணைக் கோள் விண்வெளியில் செலுத்தப்படும் செலவையும் அக்னீஷ் வர் ஜெயப்ரகாஷ் சார் ஏற்றுக் கொண்டுள்ளார்.

புவியிலிருந்து வான் நோக்கி சுமார் அய்ம்பது கி.மீ தூரம் வரை வாயு அல்லது வளி மண்டலம் பரவியுள்ளது. துணைக் கோளில் வளி மண்டலத்தின் வெப்பம், அங்கி ருக்கும் காற்று அழுத்தம், மண்டலத்தில் (பூமியிலிருந்து சுமார் பதினைந்து கி. மீ தூரத்தில்) குடி கொண்டிருக்கும் வாயுக்கள், அதன் அளவு, அங்கே காற்றின் தூய்மையின் அளவு குறித்த புள்ளிவிவரங்களைப் பதிவு செய்ய சென் சர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பூமியிலிருந்து துணைக் கோளின் வான் நோக்கிய பயணத்தை படம் பிடித்து நேரடியாக அனுப்பத் தேவையான கேமராவும் துணைக் கோளில் உண்டு. பதிவு செய்யப்படும் புள்ளிவிவரங்கள் உடனுக்குடன் மெக்சிகோ நகரில் இருக்கும் அஸ்ட்ரா ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். வாயு மண்டலம் நிலைமை குறித்து தெரிந்து கொண்டு அதை பாதுகாக்கும் நடவடிக்கைள் எடுக்க உதவியாக இருக்கும். ஹீலியம் பலூன் அதிகபட்சம் அய்ம்பது கி. மீ உயரம் வரை போகும். அங்கு போனதும் சூரிய ஒளியின் வெப்பம் காரணமாக வெடித்து விடும். அப்போது துணைக் கோள் வைக்கப்பட் டிருக்கும் கருவி கீழே விழத்தொடங்கும். அது பத்திரமாக வந்து சேர பாராசூட் விரிந்து உதவும். அநேகமாக கடலில் வந்து இறங்க வாய்ப்புள்ளது. அதை மீட்டு ஆய்வு செய்வார்கள்.  இந்தத் திட்டம் குறித்து அறிந்ததும் தமிழக முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் நேரில் அழைத்துப் பாராட்டினார்கள்.

சிறு வயதிலிருந்து மருத்து வராக வேண்டும் என்ற லட்சி யத்துடன் படித்து வந்தேன். அதனால் “பிளஸ் ஒன்” னில் பயோ பாடங்களை எடுத்தி ருந்தேன்.

துணைக் கோள் குறித்து சிந்திக்கத் தொடங்கியதும் மின்னணுவியல், மின்னியல் தொடர்பான புத்தகங்களை ஆழமாகப் படிக்கத் தொடங்கினேன்.

தொடர்ந்து அந்த பாதையில் போகலாம் என்றாலும், “மருத்துவராக வேண்டும்” என்ற நீண்ட நாள் கனவை நனவாக்க தேர்வுகளுக்கு என்னைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.

மே 6 ஆம்தேதி எனது துணைக் கோள் வளிமண்டலம் நோக்கி அனுப்பப்பட்டது. மே 6ஆம் தேதி  தேர்வு எழுத வேண்டும் என்று சென்றதால் , எனது துணைக் கோளின் விண் பயணத்தை நான் பார்க்க முடியவில்லை. அதுதான் கொஞ்சம் வருத்தத்தைத் தருகிறது” என்கிறார் வில்லெட் ஓவியா.

- விடுதலை நாளேடு, 15.5.18

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

பெண்கள் உண்மை விடுதலையடைய வேண்டுமானால் ஆண்மை அழிய வேண்டும்

12.08.1928- குடிஅரசிலிருந்து...

பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில், அநேக சங்கங்களும் முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம் முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சி யால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண் களுக்கு உண்மையான விடு தலையை அளிக்கமுடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காக பெண்மக்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல் மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளைப் பலப் படுத்திக்கொண்டே போகும் என்பது நமது அபிப் பிராயம். எதுபோலவென்றால், இந்திய பொதுமக்கள் விடுதலைக்கு வெள்ளைக்காரரும் பார்ப்பனரும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்து வருவதின் பலனாக எப்படி நாளுக்கு நாள் இந்திய மக்களுக்கு அடிமைத் தனம் விடுதலை பெற முடியாதபடி பலப்பட்டு என்றென்றைக்கும் கட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றதோ அதுபோலவும், சமுகசீர்திருத்தம், சமத்துவம் என்பதாக வேஷம் போட்டுக் கொண்டு பார்ப்பனர்களும் புராணக்காரர்களும் சீர்திருத்தத்தில் பிரவேசித்து வருவதன் பலனாக எப்படி சமுகக் கொடுமைகளும் உயர்வு தாழ்வுகளும் சட்டத்தினாலும், மதத்தினாலும் நிலைபெற்று பலப்பட்டு வருகின் றதோ அது போலவுமே என்று சொல்லலாம்.

அன்றியும் ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாகுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளரு வதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டு கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும் பெண்கள் விடுதலைக்காக பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்கு செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டா குமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளி களுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள் ளைக்காரர்களால் இந்தியர்களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல் லாதாரர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாய் விட்டாலுங்கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில் ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது அந்த ஆண்மை உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை யென்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உலகத்தில் ஆண்மை நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்க பட்டாலல்லாது பெண்மை விடுதலை யில்லையென்பது உறுதி. ஆண்மையால்தான் பெண்கள் அடிமையாக் கப்பட்டி ருக்கின்றார்கள்.

சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ஆண்மைக்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டது, ஏன்? ஆண்மைக்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண்மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை மாத்திரம் பெண்கள் நன்றாய் உணர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகின்றோம்.

எனவே பெண்மக்கள் அடிமையானது ஆண் மக்களாலேயேதான் ஏற்பட்டது என்பதும், அதுவும் ஆண்மையும் பெண் அடிமையும் கடவுளா ளேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும், அதோடு பெண் மக்களும், இதை உண்மை என்றே நினைத்துக் கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால் பெண் அடிமைக்கு  பலம் அதிகம் ஏற்பட்டிருக்கின்றதென்பதும், நடுநிலைமைப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் யோசித்துப்பார்த்தால் விளங்காமல் போகாது. பொது மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு ஒழிய வேண்டுமானால், எப்படி கடவுளாலேயே மக்களுக்கு பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டிருக்கின்றது என்ற இந்துமதக் கொள்கையைச் சுட்டுப் பொசுக்க வேண்டியது அவசி யமோ அதுபோலவே பெண்மக்கள் உண்மை விடு தலை பெற்று உண்மை சுதந்திரம் பெற வேண்டுமானால் ஆண்மையும் பெண் அடிமையும் கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாயுள்ள கடவுள் தன்மையும் ஒழிந்தாக வேண்டும்.

பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாயிருக்கின்றார்கள். ஏனெனில் இன்னமும்  பெண்களுக்கு தாங்கள் முழு விடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்ற வில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் வரவின் தன்மையையே தங்களை ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப் பதின் அறிகுறி களாய்க் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். எப்படியெனில் பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம். ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமானால், பெண் களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப் பதால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருஜூப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கின்றார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின் றார்கள். அன்றியும் அப்பிள்ளை பெறும் தொல்லையால் தங்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாய்விடுகின்றது.

எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மைவிடுதலை அடைந்து விட முடியாது என்றே சொல்லுவோம். இம்மாதிரி இதுவரை வேறு யாரும் சொன்னதாகக் காணப்படா விட்டாலும் நாம் இதைச் சொல்வது பெரிதும் முட்டாள் தனமோ என்பதாகப் பொதுமக்கள் கருதுவார்கள் என்று இருந்தாலும் இந்த மார்க்கத்தைத் தவிர - அதாவது பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர - வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கிற முடிவு நமக்குக் கல்லுப் போன்ற உறுதி உடையதாய் இருக்கின்றது சிலர் இதை இயற்கைக்கு விரோதம் என்று சொல்லலாம் உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள், ஜீவப்பிராணிகள் முதலியவை இயற்கை வாழ்வு நடத்தும்போது மானிட வாழ்க்கையில் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாகவே அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு நடத்தி வரு  கின்றபோது, இந்த விஷயத்திலும் இயற்கைக்கு விரோத மாய் நடைபெறுவதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது.

தவிர பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால் உலகம் விர்த்தியா காது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள் உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண் களுக்கு என்ன நஷ்டம்? மானிட வர்க்கம் பெருகா விட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்தத் தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாய் விடும் என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரையில் பெருகிக் கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் மானிட வர்க்கத்திற்கு  ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை.

- விடுதலை நாளேடு, 21.4.18

வெள்ளி, 2 மார்ச், 2018

பெண்களிடம் அவசியமாய் இருக்க வேண்டிய அவசர உதவி எண்கள்


♦    தமிழக அரசின் பெண்கள் அவசர உதவி எண்:1091. திடீர் ஆபத்துகள் வரும் பொழுது பெண்கள் இந்த எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். எங்கே ஓர் இடத்தில் தனித்து விடப்பட்டாலும் அல்லது தங்க இடமில்லாதபோதும் இந்த எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். 1091 என்ற இலவச அழைப்பு எண் எடுக்கப்படவில்லை என்றால் 044-_23452365 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். பெண் குழந்தை என்றால் 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

♦    குடும்பத்தில் கணவன் மூலம் வன்கொடுமைக்கு ஆளானாலோ அல்லது வேலை செய்யுமிடத்தில் ஆண்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாலோ 044_28551155 என்ற தமிழ்நாடு மகளிர் ஆணையம் எண்ணைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெற்றுக் கொள்வதோடு புகாரும் கொடுத்து உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வையும் காண முடியும்.

♦    மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களையோ ஆதரவற்ற பெண்களையோ கொண்டுபோய் பாதுகாப்பாய் வைக்க வேண்டுமென்றால் 044_26530504, 044_26530599 இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இது, சென்னை முகப்பேரிலுள்ள விழுதுகள் தொண்டு நிறுவனத்தின் எண்ணாகும். மத்திய அரசின் நிதியுதவியுடன் இது செயல்படுகிறது.

♦    வாடகைத் தாய்களாகப் போய் புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள், “உலக வாடகைத் தாய்களின் உரிமைகள் அமைப்பு’’ எண்ணான 044_26184392, 91713 133424 என்ற இரு எண்களைத் தொடர்பு கொண்டு வாடகைத் தாய் என்றால் என்ன? எப்படிச் செல்ல வேண்டும்? எப்படி ஏமாறக் கூடாது என்ற விழிப்புணர்வை அடைய முடியும்.

♦    ரயிலில் செல்லும்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டாலோ அல்லது ரயில் சம்பந்தப்பட்ட தகவல்களை தெரிந்து கொள்ளவோ 044_25353999 மற்றும் 9003161710, 9962500500 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

♦    சென்னை கல்லூரிகளில் மாணவர்களால் கேலி, கிண்டல் செய்து பரிகாசம் செய்யப்பட்டால் 9500099100 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி கொடுத்தால் போதும், உடனடியாக காவல் துறையால் நடவடிக்கை எடுக்கப்படும்.

♦    பள்ளிக் குழந்தைகளை வாகனங்களில் அளவுக்கு அதிகமாய் ஏற்றிச் சென்றாலோ, அதி வேகமாய் வாகனத்தை ஓட்டிச் சென்றாலோ 044_24749002 மற்றும் 044_26744445 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    நாம் வாங்கும் பொருட்களின் தரம் மற்றும் எடை குறைவாக இருந்தாலோ, ஏமாற்றப்படுகிறீர்கள் என்று உணர்ந்தாலோ மாநில நுகர்வோர் புகார்களுக்காகவே தொடங்கப்பட்டிருக்கும் இலவச அழைப்பு எண்: 180011440 மற்றும் 9445464748, 7299998002, 7200018001, 044_28592828 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் கொடுப்பதோடு ஆலோசனைகளையும் பெறலாம்.

♦    பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது. நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது, குடித்துவிட்டோ, அலைபேசி பேசிக்கொண்டோ ஓட்டுநர் வாகனத்தை இயக்குவது போன்ற புகார்களுக்கு 9383337639 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி மற்றும் புகார் அளிக்கலாம்.

    நீங்கள் காவல் நிலையத்தில் கொடுக்கும் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத காவலர் மீதே புகார் கொடுக்க 044_25615086 என்ற எண்ணைப் பயன்படுத்தலாம்.

- இந்துமதி, சென்னை


 - உண்மை இதழ், 1-15.11.17


பெரும் பளு தூக்க பெண்ணால் முடியும்! 70 கிலோ தூக்கி 8 தங்கப் பதக்கம்!


காமன்வெல்த் போட்டியில் சேலம் மாணவி சாதனை!

நிவேதா படித்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த, இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில், பேண்டு வாத்தியங்கள் முழங்க, கழுத்தில் தொங்கிய தங்கப் பதக்கங்களுடன், வழிநெடுகிலும் மக்களின் உற்சாக வரவேற்பைப் பெற்றபடி சேலம் நகரை கம்பீரமாக வலம் வந்தார் நிவேதா.

பிளஸ்_டூ மாணவியான நிவேதா, சென்ற ஆண்டு ராஜஸ்தான் உதய்பூர் நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் 19 வயதுக்குரிய பிரிவில் 4 தங்கப் பதக்கங்களை வென்றே காமன்வெல்த்துக்குத் தகுதிபெற்றார்.

20 நாடுகள் கலந்துகொண்ட இந்தப் போட்டிகள் இந்த வருடம் செப்டம்பர் 10 முதல் 17ஆம் தேதிவரை தென்ஆப்பிரிக்காவின் பாட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடந்தது. இதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான (சப்_ஜூனியர்) பளு தூக்கும் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரே வீராங்கனை நிவேதா மட்டுமே. அந்தப் போட்டிகளில் எக்யுப்டு பிரிவில் 4 தங்கங்களையும், அன் எக்யுப்டு பிரிவில் 4 பதக்கங்களையும் வென்றதுடன், அன் எக்யுப்டு பிரிவில் டெட் லிப்ட்டில் 95 கிலோ எடையும் பெஞ்ச் பிரிவில் 45 கிலோ எடையும் மற்றும் ஸ்குவாடில் 70 கிலோ எடையும் தூக்கி இதற்கு முந்தைய காமன்வெல்த் சாதனைகளை முறியடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறார்.

“என் அப்பாதான் என் ரோல் மாடல். மூன்றாம் வகுப்பு முதலே இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு பல போட்டிகளில் பங்கேற்று மாவட்டம், மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் பல பரிசுகளையும் வென்றேன். இப்போது, பெருமைக்குரிய காமன்வெல்த் போட்டிகளிலும் இந்தியாவின் சார்பில் பதக்கங்களை வென்றதுடன், புதிய சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளேன். நான் படிக்கும் பள்ளியான விநாயகா வித்யாலயாவின் நிர்வாகமும் என் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருந்ததைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.’’

இவரது தந்தை வெங்கடேஸ்வரன் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில், பொறுப்பாளராக, குறைவான வருமானமே ஈட்டி வருகிறார். பளு தூக்குவதில் சிறு வயதில் ஏற்பட்ட ஈர்ப்பினாலும், வாய்ப்புகளின்றி தன்னால் சாதிக்க முடியாததைத் தன் பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் வீட்டிலேயே சொந்தமாக உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்) அமைத்து, தம் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பயிற்சி தந்து வருகிறார். எட்டாம் வகுப்பு படிக்கும் இவரது தங்கை சோனா லட்சுமியும் பளு தூக்குவதில் சாதித்து வருகிறார்.உலகப் போட்டியிலும் அவர் சாதனை படைக்க நமது வாழ்த்துகள்!

- உண்மை இதழ், 1-15.11.17

பெரும் பளு தூக்க பெண்ணால் முடியும்! 70 கிலோ தூக்கி 8 தங்கப் பதக்கம்!


காமன்வெல்த் போட்டியில் சேலம் மாணவி சாதனை!

நிவேதா படித்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த, இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில், பேண்டு வாத்தியங்கள் முழங்க, கழுத்தில் தொங்கிய தங்கப் பதக்கங்களுடன், வழிநெடுகிலும் மக்களின் உற்சாக வரவேற்பைப் பெற்றபடி சேலம் நகரை கம்பீரமாக வலம் வந்தார் நிவேதா.

பிளஸ்_டூ மாணவியான நிவேதா, சென்ற ஆண்டு ராஜஸ்தான் உதய்பூர் நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் 19 வயதுக்குரிய பிரிவில் 4 தங்கப் பதக்கங்களை வென்றே காமன்வெல்த்துக்குத் தகுதிபெற்றார்.

20 நாடுகள் கலந்துகொண்ட இந்தப் போட்டிகள் இந்த வருடம் செப்டம்பர் 10 முதல் 17ஆம் தேதிவரை தென்ஆப்பிரிக்காவின் பாட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடந்தது. இதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான (சப்_ஜூனியர்) பளு தூக்கும் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரே வீராங்கனை நிவேதா மட்டுமே. அந்தப் போட்டிகளில் எக்யுப்டு பிரிவில் 4 தங்கங்களையும், அன் எக்யுப்டு பிரிவில் 4 பதக்கங்களையும் வென்றதுடன், அன் எக்யுப்டு பிரிவில் டெட் லிப்ட்டில் 95 கிலோ எடையும் பெஞ்ச் பிரிவில் 45 கிலோ எடையும் மற்றும் ஸ்குவாடில் 70 கிலோ எடையும் தூக்கி இதற்கு முந்தைய காமன்வெல்த் சாதனைகளை முறியடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறார்.

“என் அப்பாதான் என் ரோல் மாடல். மூன்றாம் வகுப்பு முதலே இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு பல போட்டிகளில் பங்கேற்று மாவட்டம், மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் பல பரிசுகளையும் வென்றேன். இப்போது, பெருமைக்குரிய காமன்வெல்த் போட்டிகளிலும் இந்தியாவின் சார்பில் பதக்கங்களை வென்றதுடன், புதிய சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளேன். நான் படிக்கும் பள்ளியான விநாயகா வித்யாலயாவின் நிர்வாகமும் என் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருந்ததைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.’’

இவரது தந்தை வெங்கடேஸ்வரன் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில், பொறுப்பாளராக, குறைவான வருமானமே ஈட்டி வருகிறார். பளு தூக்குவதில் சிறு வயதில் ஏற்பட்ட ஈர்ப்பினாலும், வாய்ப்புகளின்றி தன்னால் சாதிக்க முடியாததைத் தன் பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் வீட்டிலேயே சொந்தமாக உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்) அமைத்து, தம் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பயிற்சி தந்து வருகிறார். எட்டாம் வகுப்பு படிக்கும் இவரது தங்கை சோனா லட்சுமியும் பளு தூக்குவதில் சாதித்து வருகிறார்.உலகப் போட்டியிலும் அவர் சாதனை படைக்க நமது வாழ்த்துகள்!

- உண்மை இதழ், 1-15.11.17

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரியார் விரும்பிய புரட்சிப் பெண்



2013ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்ட ஊர்களில் ஒன்று டியோலி வானிகிராம். இந்த ஊர் கேதார்நாத்திலிருந்து 75 கி.மீ. தூரத்தில் உள்ளது. அந்த வெள்ளத்தில் இந்த ஊரைச் சேர்ந்த 34 ஆண்கள் உயிரிழந்து விட்டனர். அதனால் அவர்களின் மனைவியர் விதவைகளாகி விட்டனர். அவர்களில் ஒருவர்தான் வினிதா தேவி என்கிற 20 வயதுப் பெண்.

அவள் அவர்களுடைய சம்பிரதாயப்படி விதவைக் கோலத்தில் வாழ்ந்து வந்தாள். கணவன் இறந்த இரண்டே மாதங்களில் தான் புகுந்த இல்லத்தை விட்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். உடல்நலமில்லாத தாய்க்கு உதவியாய் வாழ்ந்தார். அப்போது இந்தச் சமூகத்தில் விதவையாக இருப்பது எவ்வளவு கொடுமை என்பதை உணர்ந்தார். அவளிடம் மற்றவர்கள் பேசக்கூடத் தயாராக இல்லை.

இந்த நிலையில்தான் ராகேஷ் என்ற இளைஞரைச் சந்திக்கிறார். அதே கிராமத்தில் வசித்த தன் பாட்டியைச் சந்திப்பதற்காக ராகேஷ் அடிக்கடி அங்கு வந்துகொண்டிருந்தார். ஓர் 20 வயதுப் பெண் வெள்ளைச் சேலையில் இருப்பதைப் பார்த்ததும் அவளை மணந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் உண்டாயிற்று. அவருடைய பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் மகனின் பிடிவாதத்தால் ஒத்துக்கொண்டனர்.

ராகேஷ்_வினிதா தேவியின் பெற்றோரைச் சந்தித்து அவர்களுடைய அரைமனச் சம்மதத்துன் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கணவன் மனைவியாக வாழும் நிலையில், இவர்கள் கேவலமாகப் பேசப்பட்டனர்.

மரபுப்படி செய்யப்பட்ட விதவைத் திருமணம்!

அந்த இளம் உள்ளங்கள் வருந்தியதோடு இதை எப்படிச் சமாளிப்பது என்று திட்டமிட்டனர். இறுதியில் நாம் மரபுப்படியே அனைத்து சம்பிரதாய சடங்குகளுடன் மீண்டும் மணம் புரிந்து விதவை மறுமணம் செய்ய முடியும். அது தவறல்ல என்று காட்ட வேண்டும் என்று விரும்பினர்.
அதன்படி, 16.07.2017 அன்று மரபு மணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணத்தில் பல நூற்றுக்கணக்கான விதவைகள் உற்சாகத்தோடு பங்கு கொண்டனர்! இத்திருமணம் தங்களுக்கெல்லாம் வாழ்வில் ஒரு நம்பிக்கையைத் தந்துள்ளது என்று கூறினர்.

20 வயதில் மரபுகளையும், சமுதாயக் கட்டுப்பாடுகளையும் தகர்த்து தன்னை விரும்பிய ஆணை மறுமணம் செய்துகொண்ட அந்த விதவைப் பெண் பெரியார் விரும்பிய புரட்சிப் பெண் ஆவார்!


- பெரியார் பித்தன்

- உண்மை இதழ், 1-15.11.17

பாரதமாதாவில் மாதரசிகள்?


2017ஆம் ஆண்டில் அரசியலில் பெண்கள் எனும் தலைப்பில் இன்டர் பார்லிமெண்டரி யூனியன் மற்றும்  அய்.நா.பெண்கள் அமைப்பின் சார்பில் பெண்கள் பிரதிநிதித்துவமின்மைகுறித்து ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகையில் சரி பகுதியளவில்   பெண்கள் உள்ளனர். பெண் களின் பிரதிநிதித்துவம் உரிய அளவில் இல்லாத நிலையே  தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

9 விழுக்காடு பெண்கள் புள்ளிவிவரம் வெளியீடு

நாடுமுழுவதும் உள்ள சட்டமன்ற உறப்பினர்கள் 4,118 பேரில் பெண்கள் 9 விழுக்காட்டளவில்தான் உள்ளனர்.

பீகார், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 14 விழுக்காடும், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் 13 விழுக்காடும், பஞ்சாப் மாநிலத்தில் 12 விழுக் காடும் பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

நாடாளுமன்ற இரு அவைகளில் பெண்கள் எண்ணிக்கை

2017ஆம் ஆண்டில் அரசியலில் பெண் கள் எனும் தலைப்பில் இன்டர் பார்லி மெண்டரி யூனியன் மற்றும்  அய்.நா. பெண்கள் அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 542 பேரில் 64 பேர் பெண்கள் உள்ளனர். மாநிலங்களவையில் நாடாளு மன்ற உறுப்பினர்கள் 245பேரில் 27பேர் பெண்கள் உள்ளனர். அரசு நிறுவனங்கள் மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்ட 227 நாடுகளின் பட்டியலில் இந்தியா 148ஆம் இடத்தில் உள்ளது.

பெண்களின் உரிமைகளை அரசு ஆதரிக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான புள்ளிவிவரப் பட்டியல் கொண்ட பிங்க் நிறத்தில் அட்டை கொண்ட ஏட்டை  பொரு ளாதார முதன்மை ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் வெளியிட்டார்.
அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கு தற்கான முற்போக்கு சமுதாயத்தை கட்டிய மைத்திட பெண்களுக்கு உரிமைகள் அளிக் கப்பட வேண்டும் என்பதை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

முத்தலாக் சட்டம் பெண்உரிமை என்றால் பெண்களுக்கான இடஒதுக்கீடு நிலுவை ஏன்?

சமூக ஆய்வு மய்ய இயக்குநர் ரஞ்சனா குமாரி கூறியதாவது:

பாலின பிரச்சினைகளில் அரசியல் ரீதியில் மட்டுமே அரசு அணுகி வருகிறது. முத்தலாக் பிரச்சினையில்  பாலின உரிமை களுக்கானதுதான் அரசின் முடிவு என்றால், பெண்களுக்கான இடஒதுக்கீட்டு சட்டம் ஏன் இன்னமும் நிலுவையில் இருந்துவருகிறது? என்று கேள்வி எழுப் பினார்

- விடுதலை ஞாயிறு மலர், 24.2.18