ஞாயிறு, 25 ஜூலை, 2021

மெக்காவில் பாதுகாப்பு பணியில் பெண்கள்

 

மெக்காஜூலை 23- மேற்காசிய நாடானசவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில்முதல் முறை யாக பாதுகாப்புப் பணியில்ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்துலட்சக்கணக்கான முஸ்லிம்கள்  புனித யாத்திரை மேற் கொள்வர்கரோனா வைரஸ் பரவல் காரணமாககடந்தாண் டைப் போலவேஇந்தாண்டும்வெளிநாட்டவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளைபட்டத்து இளவரசர்முகமது பின் சல்மான் மேற்கொண்டு வருகிறார்முஸ்லிம் பழைமைவாத கொள்கைகளை மாற்றி வருகிறார்.

பெண்களுக்கு அதிக அதிகாரம்சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.ராணுவத்திலும் பெண்கள் அதிகள வில் சேர்ந்து வருகின்றனர்.இந்த நிலையில்மெக்கா மற்றும் மதீனாவில்பாதுகாப்புப் பணியில்ராணுவத் தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்தஏப்ரலில் இருந்து இவர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக