புதன், 24 ஜனவரி, 2024

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” தொடக்கம்!


விடுதலை நாளேடு,
Published July 24, 2023

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.7.2023) தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட”ப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்து, விண்ணப்பம் செய்ய வந்த மகளிருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கே.என். நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் 

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வளர்ச்சி ஆணையர்,  முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம்,  தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

(செய்தி விவரம்: 2 ஆம் பக்கம் காண்க)

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக