புதன், 29 மே, 2019

குழந்தைகளைத் தாக்கும் வைரஸ் நோய்க் கிருமிகளை அழிப்பது குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற்ற பெண்மணி



மருத்துவ துறையில் விஞ்ஞானியாகவும் ஆளுமை யாளராகவும் விளங்கும் மருத்துவர் ககன்தீப் காங் இந்தியாவிற்கு ஒரு புதிய பெருமையை சென்ற வாரம் சேர்த்திருக்கிறார்.

இந்தியக் குடிமகளாக தனது அறிவியல் பங்களிப் பால் இந்தப் பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார்.

மனித குல பயன்பாட்டிற் காக, பாதுகாப்பிற்காக, உடல் நலத்திற்காக புதிய கண்டுபிடிப்புகள் காலத்தின் கட்டாயங்களாகின்றன.

பல்வேறு கால கட்டங் களில் விஞ்ஞான தேடல் கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு களை மனித சமுதாயத்திற்கு அன் பளிப்பு செய்துவரும் விஞ்ஞானிகளை 360 ஆண்டு களாக கவுரவித்து வருகிறது லண்டன் நகரில் செயல்பட்டு வரும் ராயல் சொஸைட்டி.

சர்வதேச அறிஞர் பெரு மக்களால் பெரிதும் மதிக்கப் படும் இந்த அமைப்பின் உறுப்பினராக இந்த ஆண்டு டாக்டர் ககன்தீப் காங் தேர்ந் தெடுக்கப் பட்டுள்ளார்.

இந்தப் பெருமையைப் பெரும் முதல் இந்திய பெண் மணி, டாக்டர் ககன்தீப் காங் ஆவார்.

இந்த ஆண்டு (2019) பல நாடுகளை சேர்ந்த 51 விஞ்ஞானிகளை அடையாளம் கண்டு மனித குலத்திற்கு அவர்கள் செய்த அரிய பங்களிப்பிற்காக ராயல் சொ சைட்டியின் உறுப்பினர் களாக தெரிவு செய்யப்பட் டுள்ளனர்.

மருத் துவர் ககன்தீப் தவிர அய்ந்து இந்திய விஞ்ஞானிகளும் இந்த பட்டி யலில் உள்ளனர்.

இந்தப் பெருமை பெரும் இந்தியர்களில் மருத்துவர் ககன்தீப் மட்டுமே பெண் மணி. மற்ற இந்தியர்கள் ஆண் விஞ்ஞானிகள்.

ராயல் சொசைட்டியில் அங்கீகாரம் கிடைப்பது.. கவுரவிக்கப்படுவது கனவி லும் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று என்பது உலக அரங்கில் புகழ் பெற்றிருக்கும் விஞ்ஞானிகள் அனைவருக்கும் தெரியும்.

அந்தக் காலத்து விஞ்ஞானிகளான அய்சக் நியூட் டன், சார்லஸ் டார்வின், மைக்கேல் ஃபாரடே, அல் பெர்ட் அய்ன் ஸ்டைன் போன்ற அறிவியல் ஜாம் பவான்கள் ராயல் சொ சைட்டியின் உறுப்பின ராகத் தெரிவு செய்யப்பட்ட வர்கள்.

கவுரவிக்கப்பட்ட வர்கள். அந்த வரிசையில் இந்திய பெண்மணி ஒருவருக்கு முதன்முதலாக இடம் கிடைத்திருப்பது சாதாரண விஷய மில்லை. , ராயல் சொஸைட்டி கி. பி 1660-இல் தொடங்கப்பட் டாலும், இந்த அமைப்பின் உறுப்பினர் ஆகும் தகுதியைப் பெற்ற முதல் இந்தியர் அர்தஷீர் கர்செட்ஜீ வாடியா. 1841-இல் தான் இவருக்கு இந்தப் பெருமை வழங்கப் பட்டது.


பிறகு இந்தப் பெருமை ஒரு சில இந்தியர்களுக்கே கிடைத்தது. விரல் விட்டு எண்ணி விடலாம்.

கணித மேதை சிறீனிவாச ராமானுஜத்துக்கு 1918லும், சுப்ர மணியன் சந்திரசேகருக்கு 1944லும், வெங்கடராமன் ராமகிருஷ்ணனுக்கு 2003- லும், அஜய் குமார் சூடுக்கு 2015-லும், சுபாஷ் காட்டுக்கு 2017-லும் ராயல் சொசைட்டியில் "ஃபெல்லோ' கெரவம் வந்து சேர்ந்தது.

ஆனால் இந்தப் பெருமை பெற்றவர்களில் இந்திய பெண்மணி ஒருவர் கூட இல்லை என்பது மிகவும் ஏமாற்றத்தை தந்து வந்தது. அந்த குறையை டாக்டர் ககன்தீப் தீர்த்து வைத்திருக் கிறார்.

மருத்துவர் ககன்தீப் யார் ?

மத்திய அரசுக்கு சொந் தமான ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் நிர் வாக இயக்குனராக டாக்டர் ககன்தீப் பணியாற்றி வரு கிறார். இந்த ஆராய்ச்சி நிலையம் ஃபரிதாபாத்தில் உள்ளது.

மருத்துவ துறையில் பிரபல விஞ்ஞானியாக இருக்கும் ககன்தீப், குழந்தை களைத் தாக்கும் ரோட்டா வைரஸ் போன்ற கிருமிகளை எப்படி ஒழிப்பது என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருபவர். ககன்தீப் எழுதிய முன்னூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் சர்வதேச அறிவியல் இதழ் களில் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் பல்வேறு குழுக்களில் டாக்டர் ககன்தீப் அங்கம் வகிக்கிறார்.

இந்தியாவில் பத்து தர மான நிறு வனங்கள் டாக்டர் ககன்தீபிற்கு விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன.

டாக்டர் ககன்தீப் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல் லூரியில் 1982 முதல் 1991 வரை படித்தவர்.

1998 இல் மருத்துவ ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஹூஸ்டனில் சில காலம் ஆராய்ச்சியில் செலவு செய்த ககன்தீப் இந்தியா திரும் பினார்.

சிஎம்சி மருத்துவ கல் லூரியில் வயிறு-குடல் துறை யின் தலை வராகவும், நுண்ணுயிரியல் பேராசிரிய ராகவும் பணியாற்றியுள்ளார்.


குழந்தைகளைத் தாக்கும் வைரஸ் நோய் கிருமிகளை அழிப்பது குறித்து ஆராய்ச்சி களில் ஈடுபட்டு வெற்றி கண்டார்.

குழந்தைகள் நலனுக்காக ககன் தீப்பின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு ராயல் சொ சைட்டியின் அங்கத்துவம் வழங்கப்பட் டுள்ளது.
-  விடுதலை நாளேடு, 28.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக