புதன், 29 மே, 2019

திருநங்கை திருமணம் பதிவு தமிழகத்தில் முதல்முறை



தூத்துக்குடி, மே 22- -தூத்துக்குடியில் சிவன் கோயிலில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற திருநங்கையின் திருமணம் உயர்நீதிமன்ற மதுரைகிளையின் உத்தரவால் பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்த அருண்குமாரும் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த சிறீஜா என்ற திருநங்கை யும் ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் அருண்குமாரும், சிறீஜாவும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2018ஆம் வருடம் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தூத்துக்குடி சிவன்கோவிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கோவில் அலுவலகத்தில் 600 ரூபாய் முன்பணம்செலுத்தி அருண்குமார், சிறீஜா பெயர் பதிவு செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திருமணம் செய்வதற்காக அருண்குமாரும், சிறீஜாவும் உறவினர்களுடன் கோவிலுக்கு வந்தனர். இவர்க ளுக்கு அங்கு திருமணம் நடைபெற்ற நிலையில் அந்த திரு மணத்தை பதிவுசெய்ய முடியாது என கோவில் நிர்வாகம் மறுத்ததால்தம்பதியினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குரைஞர் சந்திரசேகரன் மூலம் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதி சுவாமிநாதன் திருநங்கை திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில்தூத்துக்குடி பதிவாளர் அலுவலகத்தில் திருமண பதிவாளர் ஜெயகாந்தன், அருண்குமார் சிறீஜா திருமணத்தை பதிவு செய்தார். நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு நீதி மன்ற உத்தரவின் பேரில் தங்கள் திருமணம் பதிவு செய்யப் பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், தான் அரசு வேலைக்கு செல்வேன் என்றும், எனது கணவருக்கு குழந்தை பெற்று தருவேன் என்றும் சிறீஜா தெரிவித்தார். தமிழகத்தி லேயே திருநங்கை திருமணம் சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப் பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு 22. 5 .2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக