புதன், 29 மே, 2019

ஆஸ்திரேலியா அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்



கான்பெர்ரா, மே 27- 151 இடங்களைக் கொண்ட ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான தொழிற்கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புக்களை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில், பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமை யிலான புதிய அமைச்சரவையில் அந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சராக லின்டா ரெய்னால்ட்ஸ், வெளியுறவுத்துறை மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சராக மரிசே பய்னே உள்பட மொத்தம் 7 பெண்களுக்கு அமைச் சர்களாக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களின் மூலம் அரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்றடையும் என்று நம்புவதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

-  விடுதலை நாளேடு 27. 5 .2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக