வியாழன், 14 பிப்ரவரி, 2019

பிரபல வரலாற்றாளர் இராமச்சந்திர குகாவின் 82 வயது தாயாரை பெண்ணியவாதியாக்கிய பெரியார்!

ஆய்வறிஞர் ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களின் ஆன்றவிந்த அரிய படைப்புகள் குறித்த இருநாள் விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் (8, 9.2.2019) இரு நாள்களிலும் நடைபெற்றது.

ஆய்வாளர்கள் பலரும் பங்குகொண்ட அக்கூட்டத் தில் பிரபல வரலாற்றாளர் இராமச்சந்திர குகா அவர்கள் உரைத்ததாவது:

தன்னுடைய மேக்கர்ஸ் ஆஃப் இந்தியா' நூலில் வெங்கடாசலபதியின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். புத்தகத்தில் சேர்ப்பதற்காக பெரியாரின் எழுத்துகளைத் தானே தேர்ந்தெடுத்து, மொழி பெயர்த்துக் கொடுத்தார். இத்தகைய பெருந்தன்மை ஆய்வாளர்களுக்கிடையே மிகமிக அரிதானது. வெங்கடாசலபதி மொழி பெயர்த்துத் தந்த பெரியாரின் எழுத்துகளை என் 82 வயது அம்மா படித்துவிட்டு, பெண்ணியவாதி ஆகிவிட்டார்'' என்றார்.

('இந்து தமிழ்' நாளிதழ், 12.2.2019, பக்கம் 7)
- விடுதலை நாளேடு, 14.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக