ஞாயிறு, 14 டிசம்பர், 2014

பெண்கள் தினம் எப்போது வந்தது?


ஆண்டுதோறும், மார்ச் 8ஆம் தேதி பன்னாட்டு பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளா தாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பல வகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண் களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர் கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந் தவர்கள் அல்லர் என்ற நிலையை உருவாக்கு வதற்காகவுமே பன்னாட்டு பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதன் முதலில் 1909இல் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் சோஷலிச கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை பார்லிமென்ட் ஏற்று, தேசிய பெண்கள் தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிப்.,28ஆம் தேதி பெண்கள் தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.
பிறகு, கோபன்ஹேகனில் 1910இல் நடந்த பன்னாட்டு மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி விரிவாக பேசப்பட்டது. அப்போது, பன்னாட்டு பெண்கள் தினம் கொண்டாடும் பல நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.
இந்த வேண்டுகோளின்படி, பல நாடுகள் 1911இல் மீண்டும் விவாதித்தன. முதன் முறையாக, பன்னாட்டு பெண்கள் தினம் மார்ச் 19ஆம் தேதி கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.
அதன்பின், மேற்கத்திய, அய்ரோப்பிய நாடுகள் 1913இல் ஒன்று கூடி, மார்ச் 8ஆம் தேதியை பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி அய்.நா., சபையில் விவாதிக்கப்பட்டு, பன்னாட்டு பெண்கள் தினம் மார்ச் 8ஆம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
அதன் பின்னரும் பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கு உரிய உரிமை, சலுகை எதுவும் கிடைக்கவில்லை. 1946இல் தான் பெண்கள் ஓரளவு உரிமை பெற துவங்கியுள்ளனர் என்று அங்கீகரித்து, அது முதல் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி, பன்னாட்டு பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விடுதலை28.9.10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக