ஞாயிறு, 14 டிசம்பர், 2014

மரண தண்டனையிலிருந்து காக்க போராடும் தாய்



டெஹ்ரான், அக். 18- ரெய்னா ஜபாரி என்னும் இளம்பெண்ணின் தாய் 6.10.2014 அன்று மனித உரிமை ஆர்வலர்களுக்கு, தன் மகளை மரணதண்ட னையிலிருந்து காக்க வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
அடுத்த நாள் காலை யில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் கடைசி நிமிடத்தில் தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. ரெய்னாவுக்காக பன்னாட்டளவில் குரல் ஒலிக்கத் தொடங்கியதா லேயே தற்காலிகமாக தண்டனை நிறுத்தி வைக் கப்பட்டுள்ளதாக கூறப் பட்டுள்ளது. அவருடைய தாயார் தண்டனையை நிரந்தரமாக நிறுத்திவிட அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.
26 வயது உள்ள ரெய்னா கடந்த 7 ஆண்டுகளாக சிறைவாசத்தில் உள்ளார். 19 வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அவளை பாலியல் வன்முறை செய்ய முயன்றவனைக் கொலை செய்துள்ளதாக வழக்கு. தன்னைப் பாலியல் வன் முறைக்கு உள்ளாக்க முயன்ற அவனைத் தாக் கியதென்னவோ உண்மை தான். ஆனால், கொலை யில் தொடர்புடையவர் வேறொருவர் என்று ரெய்னா கூறுகிறார்.
இதன்மூலம் அக் கொலை வழக்கு முறையாக விசாரிக்கப்பட வில்லை என்று தெரிகிறது.
பன்னாட்டு மன்னிப்பு சபையுடன் இணைந்து மனித உரிமை ஆர்வலர் களும் ரெய்னாவை மீட் கும் முயற்சியில் அவரு டைய தாயுடன் சேர்ந்து களமிறங்கியுள்ளனர்.

18-10-2014 விடுதலை நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக